Saturday 1 December 2012

சினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- பூர்ணா

I will never marry an actor says poornaபரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தவர், கோடம்பாக்கம் கைவிரித்ததால் ஆந்திராவில் மையம் கொண்டார். போன வேகத்தில் துகிலுரிந்து படு சூடுகாட்டி நடித்து சில படங்களை கைப்பற்றினார். ஆனால் ஓரிரு படங்களிலேயே பூர்ணாவை துவைத்து பிழிந்து காய போட்டனர் ஆந்திரவாலாக்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் பூர்ணா.

தற்போது ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நடிப்பவர், தமிழ் நாட்டில் தன்னை நல்ல புள்ளையாக காட்டிக்கொள்வதற்காக மீண்டும் போர்த்திக்கொண்டே நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதி, நகுல் போன்ற நடிகர்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா, மீண்டும் அவர்களுடனான நட்பை புதுப்பித்திருப்பதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால் இந்த செய்தியை பூர்ணாவின் காதோரம் கொண்டு சென்றால், எந்த நடிகர்களுடன் நான் நட்பு கொள்ளவில்லை என்கிறார். தமிழைப்போலவே நான் தெலுங்குக்கு சென்றபோதும் ஒரு நடிகருடன் எனக்கு காதல் இருப்பதாகவும், அவரையே நான் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த நடிகருடன் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. அதோடு நடிகர்களை நான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்ததுமில்லை. காரணம், நடிகர்களை திருமணம் செய்து கொண்டு நிம்மதியிழுந்த பல நடிகைகளின் வாழ்க்கையை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் நடிகர்களை திருமணம் செய்து கொண்டு என் நிம்மதியை எந்த காரணம் கொண்டும் நான் கெடுத்துக்கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில், சினிமா வாசணையே இல்லாத பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மட்டும் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் பூர்ணா.

No comments:

Post a Comment