சினிமாவில் ஒரு நடிகரின் மார்க்கெட் எகிறி விட்டால், அந்த நடிகர்களை சமாளிப்பதை விட அவர்களின் மேனேஜர்களை சமாளிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். காரணம், ஒரு கட்டத்தில் அவர்கள் சமபந்தப்பட்ட நடிகர்கள் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே இவர்களாகி விடுகிறது. அவர்களாகப்பார்த்து கால்சீட் கொடுக்கும்போதுதான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதால் இவர்களைத்தான் படாதிபதிகள் கைக்குள் போட்டுக்கொள்வார்கள். அதற்காக நடிகரின் சம்பளத்துக்கு மேலாக இவர்களுக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார்கள்.
அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கி வரும் ஹரி, சந்தானத்தின் கால்சீட்டுக்காக முதலில் அவரது மேனேஜர் புஜ்ஜிபாபு என்பவரைத்தான் அணுகியிருக்கிறார். ஆனால் தனக்கும் லஞ்சமாக ஒரு தொகையை எதிர்பார்த்த அவர், ஹரி கேட்டபடி கால்சீட் தராமல் இதோ அதோவென்று அலைய விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான டைரக்டர் ஹரி, இது சம்பந்தமாக சந்தானத்திடம் புகார் அளித்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானம், மேனேஜரின் செயலுக்காக ஹரியிடம் மன்னிப்பு கேட்டதோடு, உடனடியாக மேனேஜரையே டிஸ்மிஸ் செய்து விட்டார். இனி என் சமபந்தப்பட்ட கால்சீட், சம்பளம் என அனைத்து டீலிங்கையும் நானே பார்த்துககொள்ளப்போகிறேன் என்றும அறிவித்திருக்கிறார்.
No comments:
Post a Comment