"சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன், அடுத்ததாக, சசிகுமாருடன் "குட்டிப்புலி படத்தில் நடித்து வருகிறார். "கும்கி படத்தில், உடன் நடித்த யானையின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறாரார், லட்சுமி மேனன். இதனால், அந்த யானையின் புகைப்படத்தை, தன் வீட்டில், பிரேம் போட்டு மாட்டியுள்ளாராம். படப்பிடிப்பில், சில நேரம், துதிக்கையை பிரியமாக வருடும் போது, அது தலையை ஆட்டி, சிநேகம் தெரிவிக்குமாம். யானையுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, இயக்குனரிடம் கேட்டு வாங்கி வைத்துள்ளார். லட்சுமி மேனன் கூறுகையில்,"கும்கி கிளைமாக்சில், யானை தொடர்பான காட்சிகள், 10 நிமிடங்கள் இருக்கும். இந்த காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும்... நெஞ்சை நெகிழ வைக்கும்... அழவைக்கும்... ஆச்சரியப்படவைக்கும் என்றவர், "கிளைமாக்ஸ் காட்சி பற்றிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் என, காதை கடித்தார்.
No comments:
Post a Comment