Wednesday 5 December 2012

பிரியாணிக்கு ஆசைப்பட்டு..!



வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'பிரியாணி' கமகமவென தயாராகிறது.

இதுவரை 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு, எல்லா படங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும்.

'சரோஜா', 'மங்காத்தா' இரண்டு படங்களுமே த்ரில்லர் வகையில் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் தான். பிரியாணி படத்தினையும் அதே பாணியில் இயக்கி வருகிறாராம்.

கதைப்படி கார்த்தி, பிரேம்ஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாம். இருவரும் 'பிரியாணி' பிரியர்களாம். அதுவும் ஆம்பூர் பிரியாணி என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

'பிரியாணி'க்கு பேர் போன ஆம்பூருக்கு போய், பிரியாணி சாப்பிட திட்டமிட்டு அங்கே போகிறார்கள். போன இடத்தில் ஒரு கொலை நடந்து, அந்த பழி கார்த்தி, பிரேம்ஜி இருவர் மீதும் விழுகிறது.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு, கொலை கேஸில் சிக்கிய இருவரும் அந்த பிரச்னையை சமாளித்தார்கள் என்பதையும், கொலை செய்தது யார் என்பதையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

மேலும் இரண்டு 'பிரியாணி' ஸ்பெஷல் ' தகவல்கள் :

'பிரியாணி படத்தின் முதல் பாடலை கார்த்தி, பிரேம்ஜி இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

'செந்தூரப்பூவே' புகழ் ராம்கி, பிரியாணி மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்!

No comments:

Post a Comment