Thursday 10 January 2013

அஜித் - விஜய் வருவார்களா? காத்திருக்கும் இயக்குனர்கள்!



     முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தான் முன்னணி இயக்குனர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என ஒரு லிஸ்டையே சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸுக்கு முதல் படத்தில் நடித்து மாபெரும் வெற்றி தேடிக்கொடுத்த அஜித்துடன் மறுபடியும் இணைய வேண்டும் என்பது தான் ஆசை. ’கதையை எப்போதோ தயார் செய்துவிட்டேன்’ என முருகதாஸ் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அஜித் சம்மதம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார்.கௌதம் மேனன் அஜித், விஜய், சூர்யா என மூவரிடமும் கதை சொல்லிவிட்டார் ஆனால் அவர்களும் சம்மதம் தெரிவிக்காமலேயே இருக்கின்றனர். கௌதம் மேனன் சூர்யாவை வைத்து எடுத்த காக்க காக்க மிகப்பெரிய வெற்றி பெற்று சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் “ நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல இயக்குனர்கள் விஜய், அஜித் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    சசிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பல இயக்குனர்கள் விஜய், அஜித்திற்காக கதை வைத்திருக்கின்றனர். மேலும் எத்தனையோ இயக்குனர்கள் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் ஒப்புக்கொள்வதும், ஒப்புக்கொள்ளாததும் அவர்கள் இருவர் கையில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார். கௌதம் மேனன் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம் எதிபார்த்த ரிசல்ட் தரவில்லை.

     முன்னணி நடிகர்களை வைத்து ஒரு முழுநீள ஆக்‌ஷன் படம் எடுக்க கதையுடன் காத்துக்கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதால் அடுத்து அஜித்தின் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இரு இயக்குனர்களும் தமிழில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் அஜித்-விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment