Thursday 10 January 2013

நடிகர்களை வறுத்தெடுக்கும் இயக்குனர் பாலாவையே தடுமாற வைத்த இரண்டு முன்னணி நடிகர்கள்

www.thedipaar.com
டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கே சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு அவர்களுக்கு மற்ற இயக்குனர்களும் அவர்களை நம்பி அதிரடியான கதைகளுக்கு புக் பண்ணினர். ஆனால் பாலா படத்தில் நடித்த பிறகு மீண்டும் நடிப்பதற்கு சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முயற்சி எடுக்கவில்லை. அவரிடம் சிக்கினால் ஒரு வருடத்துக்கு மேலாக வேகாத வெயிலில் போட்டு வறுத்து எடுத்து விடுவார் என்கிற பயம்தான் காரணம்.

ஆனால் விக்ரம், விஷால் ஆகிய இருவரும் மீண்டும் பாலாவின் அடுத்தடுத்து படங்களில் நடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர். என்னதான் அவர் கஷ்டப்படுத்தினாலும் அது நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே என்று நினைக்கிறார்கள்.

அதனால் தற்போது அதர்வாவைக்கொண்டு பரதேசி படத்தை இயக்கி முடித்துள்ள பாலா, அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற முடிவு எடுக்காததால், மேற்படி நடிகர்கள் இருவருமே முண்டியடித்து வருகிறார்கள். இருவருமே வேண்டப்பட்ட நடிகர்களாகி விட்டதால், அடுத்த படத்தில் யாருக்கு சான்ஸ் கொடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் பாலா.

No comments:

Post a Comment