Saturday, 7 July 2012

ஜெயம் ரவியின் நிமிர்ந்து நில் படத்தின் கதை!


Jayam ravis Nimirnthu nil story  ஜெயம்ரவி - அமலாபால் இணைந்து நடிக்கும் புதிய படம் நிமிர்ந்து நில். போராளி படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக மேக்னா ராஜ் நடிக்கிறார். வாசன் விஷூவல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தபடத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

படத்தின் கதை குறித்து இயக்குனர் சமுத்திரகனி கூறுகையில் "ஒழுக்கம்தான் தனக்கு கற்பு மாதிரி என்று சொல்லி தலை நிமிர்ந்து வாழும் ஒரு சாதாரண குடும்பத்து இளைஞனின் கதை இது. தினமும் வீட்டை விட்டு கிளம்பும்போது, எதிர் கொள்ளும் பிரச்சினைகள்தான் இந்தப் படம். உன்னை நீ சரி செய்து கொள்... உலகம் தானாக சரியாகிவிடும் என்பது ஒன்லைன்," என்றார்.

ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரேநேரத்தில் தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் ஹீரோ நானி. ஹீரோயின்கள் மாற்றமில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

No comments:

Post a Comment