Thursday, 12 July 2012

இரட்டை வேடத்தில் நடிக்க விஷேச பயிற்சி எடுத்து நடித்தேன். ப்ரியாமணி



      நடிகை பிரியாமணி 'சாருலதா' என்ற படத்தில் இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார். இந்திய சினிமாக்களில் இதற்கு முன் இது போன்ற கேரக்டர் வந்ததில்லை என்கின்றனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தது மறக்க முடியாதது என்றார் பிரியாமணி. இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
இரட்டையர் வேடம் அமைவது அபூர்வமானது. தாய்லாந்து படத்தின் பாதிப்பில் இருந்து தான் இந்த படத்தின் கதை உருவானது. நான் ஒவ்வொரு நாளும் இதில் நடிப்பதற்காக படப்பிடிப்புக்கு செல்லும் முன் விசேஷ பயிற்சி எடுத்தேன்.
இரட்டையர்களில் ஒவ்வொருவர் தோற்றமும் வெவ்வேறு மாதிரி இருக்கும். குண நலன்களும் வித்தியாசமாக இருக்கும். அதையெல்லாம் புரிந்து நடித்தேன். வழக்கமாக நான் நடிக்கும் படங்களை விட இது வித்தியாசமானது. இது போன்ற வாய்ப்பு அமைவதை எந்த நடிகையும் இழக்க மாட்டார்.

No comments:

Post a Comment