Tuesday, 25 September 2012

கும்கியில் ஒரு பாடலுக்காக 8 மாதம் காத்திருந்து படமாக்கினேன்: நெகிழ்கிறார் பிரபுசாலமன்!

Prabhu solomons kumki experienceலீ, லாடம், கொக்கி போன்ற படங்களை டைரக்டர் பிரபுசாலமன் இயக்கி இருந்தாலும் மைனா படம் தான் அவ‌ரை அடையாளம் காட்டியது. அதில் நடித்த அமலாபால் இப்போது எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார். மைனாவுக்கு அடுத்து பிரபுசாலமன் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கும்கி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார் பிரபுசாலமன். அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து வந்தவரை, அழுக்கு சட்டையுடன் யானை வளர்க்கும் பாகனாக சேற்றில் புரட்டி எடுத்திருக்கிறார் இயக்குநர். முதல்படம் என்று சொல்ல முடியாதபடி அத்தனை நேர்த்தியாக நடித்து கொடுத்திருக்கிறார் விக்ரம். கும்கி படத்தை வெயில், காற்று, மழை, குளிர் என நான்கு காலங்களிலும் எடுத்துள்ளார்.

கும்கி படம் காதல் பற்றி பேசும் படமாக இருந்தாலும், மாணிக்கம் என்ற யானையும் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறது. மைனா லொகேஷன் போல கும்கியிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல்வேறு இடங்களில் படமாக்கி இருக்கிறார் பிரபுசாலமன். அதிலும் ஒரு பாட்டுக்காக கிட்டத்தட்ட எட்டுமாத காலம் காத்திருந்து ஜோக் நீர்வீழ்ச்சியில் பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கிறார். திரையில் இந்த பாடலை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கும்கி படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக பேசப்படும் என்று உறுதிபட கூறுகிறார் பிரபுசாலமன்.

மீண்டும் தனுஷூக்கு ஜோடியாகும் ஹன்சிகா...!


Hansika with dhanush againமாப்பிள்ளை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வாகை சூடவா படத்திற்கு பிறகு சற்குணம் இயக்க உள்ள படம் சொட்ட வாளகுட்டி. கும்பகோணத்தில் குத்துவிளக்கு விற்கும் ஒருவரின் கதை இது. இப்படத்தில் தனுஷூ ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது இந்தபடம் தொடங்கும் என்று சற்குணத்திடம் கேட்டால், தனுஷ், இப்போது இந்தி படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்தப்படத்தை முடித்து எங்களது படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். நவம்பர் மாதம் கும்பகோணத்தில் சொட்டவாள குட்டி ஆரம்பமாக இருக்கிறது. தற்போது படத்திற்கான பாடல் கம்போசிங், ஜிப்ரானின் இசையில் தீவிரமாக நடந்து வருகிறது. அறிவுமதி, நா.முத்துகுமார், ‌தேவேந்திரன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர் என்றார்.

மனிதநேயம் சொல்லும் ஜெயம் ரவி


jayam ravis humanity"சாக்லேட் ஹீரோ என்ற "இமேஜில் இருந்து விடுபடும் முயற்சியில் இறங்கியுள்ள ஜெயம் ரவி, "தான் நடித்துள்ள, "ஆதிபகவன், பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், கண்டிப்பாக என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார். இதில், "பூலோகம் படத்தில், "பாக்சராக நடித்திருக்கும் ரவி, அன்பு, காதல், நட்பு, நல்லிணக்கம், மனிதநேயம் சொல்லும், மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். "படத்தின் துவக்கத்தில், ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் நான், பின், தொப்பை வைத்த கெட்டப்பில் நடித்துள்ளேன். இதற்காக, இரண்டு மாதங்களாக, உணவுக் கட்டுப்பாட்டை தவிர்த்து, உடலை பெருக்க வைத்து நடித்தேன் என்கிறார் ரவி.

சீனாவில் "டூயட் பாடும் விக்ரம் - எமி

Vikram-Amy to duet in china

"தாண்டவம் படத்திற்காக அமெரிக்காவில் "டூயட் பாடிவிட்டு திரும்பியுள்ள விக்ரம் - எமி ஜாக்சன் ஜோடி, இப்போது ஷங்கரின், "ஐ படத்துக்காக, சீனாவில் "டூயட் பாட செல்கிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்திய ஷங்கர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை, சீனாவில் நடத்துகிறார். அங்கு, விக்ரம் - எமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமின்றி, சந்தானம் நடிக்கும், "காமெடி காட்சிகளும் படமாகின்றன. அதனால், யூனிட்டோடு, சந்தானத்தையும் கையோடு கூட்டிச் செல்கிறார் ஷங்கர்.

விஜய்யின் துப்பாக்கி சரவெடியாகிறது

Thuppaki to change as saravedi     துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்னை முடிந்தபாடில்லை. கோர்ட் வரை சென்று இழுத்தடித்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி படத்தை தயாரிப்பது சின்ன நிறுவனமாக இருந்தாலும், துப்பாக்கி யூனிட் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயன்றதால் நிலைமை கட்டுமீறி போய்விட்டது. இனியும் கோர்ட், வழக்கு என்று அலைந்தால் படம் இன்னும் தாமதமாகும். அதனால் படத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சந்தித்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அனேகமாக படத்தின் பெயர் சரவெடி அல்லது மும்பை தமிழன் என்று மாறலாம்.

நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்


Amala Pauls No-1 dreamமலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் வெற்றிக்குப் பிறகு அமலாபால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் ஜோடி போடுகிறார். இப்போதுள்ள இளம் நடிகைகளில் எதையும் திட்டமிட்டு சரியாக செய்கிறவர் என்ற பெயர் அமலாபாலுக்கு உண்டு. அவரது டிரஸ்சிங் சென்ஸ் பற்றி மற்ற நடிகைகள் அரண்டு போயிருக்கிறார்கள். தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார். ஆக தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இப்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கேரக்டருக்கும் அவர் பொருந்த மாட்டார். ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள்.

நடனத் திறமையை மெருகேற்ற தனியாக ஒரு மாஸ்டரை நியமித்து கற்று வருகிறார். மேக்அப் மேன், டயட்டீசியன், பேஷன் டிசைனர், தமிழ் வாத்தியார் என தனி டீமே அமலா பாலுவுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் ஹீரோயின் என்று இப்போதே பேச்சு இருக்கிறது. எல்லாவற்றையும் விட யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால்.

விஸ்வரூபம் தள்ளிப்போவது ஏன்?


Why vishwaroopam release delayingகமல், பூஜாகுமார், ஆன்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம் கமலே இயக்கி உள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டநிலையிலும் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் அன்றுதான் வெளிவரும் என்று இப்போது கூறப்படுகிறது.

விஸ்வரூபம் தள்ளிப்போவதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படகிறது. ஒன்று படத்தில் ஆரோ 3டி என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை கமல் பயன்படுத்த விரும்புகிறார். இது ரெட் டெய்ல்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தை படத்தில் இணைக்க 100 நாட்கள் தேவைப்படுமாம்.

இரண்டாவது காரணம். படத்தில் கிளைமாக்ஸ் கிடையாதாம். கிளைமாக்ஸ் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று கார்டு போடுகிறார்களாம். இது சரியாக வருமா? ஒரு கிளைமாக்சை எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் கிளைமாக்சை இணைத்து விடலாமா? என்பதில் கமல் குழம்பி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

மூன்றாவது காரணம். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லை. அதனால் சொந்தமாகவே வெளியிட்டு விடலாமா? அல்லது லாபத்தை பார்க்காமல் விற்று விடலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று காரணங்களில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது.