Thursday, 29 November 2012

ரஜினியின் ஆலோசனையை பின்பற்றும் அஜீத்!

Ajith following rajini adviceரஜினியை ஆன்மீகம் தொடங்கி பல விசயங்களிலும் பின்பற்றி வருபவர் அஜீத். அந்த வகையில், ரஜினி சொன்ன ஒரு ஆலோசனையையும் தற்போது கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் அவர். அது என்னவென்றால், பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினி, இன்றைய நடிகர்கள் ஒரு படத்தை முடித்து அது வெளியான பிறகே அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்கள். அது சரியானதல்ல. காரணம், அந்த படம் ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால், அதன்பிறகு அவரை வைத்து படம் பண்ண படாதிபதிகள் தயங்குவார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வந்தால், அதில் இரண்டு படம் தோல்வி என்றாலும், மூன்றாவதாக ஒரு படம் வெற்றி பெற்று காப்பாற்றி விடும். இதைத்தான் நான் முன்பு கடைபிடித்து வந்தேன். அதனால் இன்றைய நடிகர்களும் அதுபோன்று ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பு என்று பேசினார்.

அவரது வார்த்தைகளையும், அனுபவத்தையும் வேதவாக்காகக் கொண்டு சில நடிகர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அதில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். பில்லா-2 வுக்கு முன்பு வரை ஒரு படம் முடிந்து திரைக்கு வந்த பிறகே அடுத்த படத்தில் நடித்து வந்தவர், இப்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்துக்கொண்டே, சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார். இதில் நடித்தபடியே அதற்கடுத்த படத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக, ரஜினியின் அறிவுரையை முழுசாக பின்பற்றும் நடிகராக இருக்கிறார் அஜீத்.

No comments:

Post a Comment