Sunday, 24 June 2012

விக்ரமின் கரிகாலன் டைரக்டர் மாற்றம்!


Vikrams karikalan director changed   விக்ரம் நடிக்க இருக்கும் கரிகாலன் படத்தின் டைரக்டர் கண்ணன் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெய்வத்திருமகள் படத்திற்கு பிறகு விக்ரம் ஒப்புக்கொண்ட படம் கரிகாலன். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விக்ரமுடன் ஜரின்கான், அஞ்சலி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகினர். எல்.ஐ.கண்ணன் இப்படத்திற்கான டைரக்ஷ்ன் பொறுப்பை ஏற்று இருந்தார். படம் தொடங்கிய சிறிது காலத்திலேயே படத்தின் தலைப்பும், கதையும் என்னுடையது என்று ராஜசேகரன் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்படவே விக்ரம் தாண்டவம், டேவிட், ஐ என்று அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவிட்டார். இந்நிலையில் படத்திற்கு சிக்கல் எல்லாம் தீர்ந்து துவங்க இருந்த நிலையில், இப்போது டைரக்டரை மாற்றிவிட்டார்களாம். கண்ணனுக்கு பதிலாக ஏற்கனவே படத்திற்கு கதை, வசனம் எழுதி வரும் காந்தி கிருஷ்ணாவே படத்திற்கான டைரக்ஷ்ன் ‌பொறுப்பையும் ஏற்று இருப்பதாக கூறப்படுகிறது.

ஹன்சிகாவுக்கு போட்டியாக மிஸ் குஜராத் அழகி!


monal gajjar to competitive with hansika  கிருஷ்ணா நடித்து வரும் படம், "வானவராயன் வல்லவராயன்! ராஜமோகன் இயக்கும் இந்த படத்தில், மோனல் கஜர் என்ற மிஸ் குஜராத் பட்டம் பெற்ற அழகி, தமிழில் அறிமுகமாகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டதாக சொல்லும் மோனல் கஜர், தமிழில் கிருஷ்ணாவுடன் நடிக்கும் படத்தை அடுத்து, ஜீவா, விமல் போன்ற ஹீரோக்களுடன் நடிப்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார். அவரிடம், "தமிழில் உங்களது பிரவேசம் எந்த மாதிரி இருக்கும்? எனக் கேட்டால், ஹன்சிகா மோத்வானிக்கும், எனக்குமிடையே தெலுங்கில் நடித்த போதே, போட்டி துவங்கி விட்டது. இப்போது நானும் தமிழுக்கு வந்திருப்பதால், எங்களுக்கு இடையிலான போட்டி, இன்னும் அதிகமாக இருக்கும். அதனால், தெலுங்கில் நடித்ததை விட, அதிரடி புயலாக உருவெடுத்து மார்க்கெட்டில் ஹன்சிகாவை முந்திச் செல்வேன் என்கிறார் மோனல் கஜர்.

குடிமகன்களுக்கு மிஷ்கின் புத்திமதி!

Mysskin advice to druggers

   தனது படங்களில், "வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம், கத்தால கண்ணால குத்தாதே, கன்னித்தீவு பொண்ணா என்று குத்துப் பாடல்களை வைத்து, ரசிகர்களை குஷிபடுத்திய டைரக்டர் மிஷ்கின், தற்போது இயக்கி வரும், "முகமூடி படத்தில், ஒரு பாடலில் குடிமகன்களுக்கு புத்திமதி சொல்லி இருக்கிறார். "நாட்டுல நம்ம நாட்டுல, பாட்டிலுக்குள்ள மாட்டிக் கிட்டோம் என்று தொடங்கும் அந்த பாடலை, தானே எழுதியதோடு மட்டுமின்றி, பின்னணியும் பாடியுள்ளார் மிஷ்கின்.

ஐஸ்வர்யாவின் அடுத்தப்படம்? திரளும் மழலைப்பட்டாளம்


Aishwarya     விநியோகஸ்தர்களை பொறுத்தவரை கொடூர சிந்தாமணிதான் ஐஸ்வர்யா. ஆனால்அவர் இயக்கிய 3 திரைப்படம், விளைச்சல்தான் பழுது, விதை பழுதில்லை என்கிற ரகம். அதன்பின் தனுஷுக்கும் இவருக்குமே கூட பிரச்சனை என்று புகைச்சல் கிளப்புகிறது கோடம்பாக்கம்.

பீட்சா பைக்கும் ஆம்புலன்ஸ் வேனும் மெதுவா போனதா சரித்திரமே இல்லை. அப்படிதான் ஐஸ்வர்யாவின் ஆசைகளுக்கும் அணை போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது அவரது குடும்பம். இதோ- மீண்டும் தனது கொள்ளாத ஆசையுடன் களத்தில் குதிக்கப்போகிறார் ஐஸ்வர்யா.

விரைவில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம். இப்படத்தில் யார் ஹீரோ? யார் ஹீரோயின்? என்று தெரிந்துகொள்ள ஆசை ஊறுகிறதல்லவா? சத்தியமாக தனுஷ் இல்லை. குழந்தைகளுக்கான படத்தைதான் எடுக்கப் போகிறார் ஐஸ். எனவே ஏகப்பட்ட மழலை பட்டாளங்களை கூட்டி வரச்செய்து நடிப்பு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தை பற்றிய அறிவிப்பு வரும். தயாரிப்பாளர் என்கிற இடத்தில் மாமனார் இருக்கப்போவதில்லை. அங்கும் ஐஸ்வர்யாவின் பெயரேதான் இருக்கும் என்பதுதான் சுவாரஸ்யமான இன்னொரு தகவல்.

ஆன்ட்ரியா பதில் இயக்குனர்கள் அதிர்ச்சி


Andreya    பசிச்சாதான் இரையெடுக்குமாம் சிங்கம். அந்த சிங்கத்துக்கே பத்து பக்கத்துக்கு டிப்ஸ் கொடுப்பார் போலிருக்கிறது நடிகை ஆன்ட்ரியா.

ஏனென்றால் அவர் செலக்ட் பண்ணி ஒப்புக் கொள்ளும் படங்களின் எண்ணிக்கைநிலவரம் ரொம்பவே கொஞ்சம். தமிழ்சினிமாவில் நிலவும் ஹீரோயின்கள் பஞ்சத்தை கருத்தில் கொண்டு ஆன்ட்ரியாவை அணுகும் ஏராளமான டைரக்டர்கள் முகத்தை தொங்க போட்டுக் கொண்டுதான் திரும்புகிறார்கள். அவர் வைக்கும் கண்டிஷன்கள் அப்படி.

செல்வராகவன், கவுதம் மேனன் என்று சற்று மேல்மட்ட இயக்குனர்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் இவரது கால்ஷீட் இப்போது இன்னும் கொஞ்சம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்க காரணம், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்துக் கொண்டிருப்பதுதான்.

அடையார் கேட் ஓட்டல் டிக்காஷன், நாயர் கடை பாலில் ஒருபோதும் கலக்காது, விட்டுத் தள்ளுங்கப்பா..

வெங்கட்பிரபுவின் ஹீரோயின் வேட்டை


Venkat prabhus heroine search   "மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்து இயக்கும் படம், "பிரியாணி! இந்த படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்காக, கடந்த சில மாதங்களாகவே அவர், ஹீரோயின் வேட்டை நடத்தி வருகிறார். கடைசியாக கிடைத்த தகவல்படி, சமந்தாவை, "புக் பண்ணி விட்டதாக கூறப்பட்டது. சமந்தாவிடம் பேசி இருக்கிறோம். ஆனால், கால்ஷீட் தருவது பற்றி இன்னும் எந்த முடிவும் அவர் சொல்லவில்லை. "அதனால், அனுஷ்கா, காஜல் அகர்வால் தவிர, வேறு சில முன்னணி நடிகைகளிடமும் கால்ஷீட் கேட்டு வருகிறோம். விரைவில் யார் என்பது முடிவாகும் என்றார். "பிரியாணி சாப்பிட்டால் எப்படி திருப்தியாக இருக்குமோ, அதேமாதிரி இந்த படம், படம் பார்ப்பவர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கும். அந்த அளவுக்கு காதல் - காமெடி - ஆக்ஷன் என, அனைத்தும் கலந்த கலவையாக உருவாகிறது என்கிறார்.

என் கேரியரில் முக்கிய படம் நிமிர்ந்து நில் - சமுத்திரகனி


Nimirndhu nil is important in carrier says samuthirakani   சமுத்திரக்கனி இயக்கும் படம், "நிமிர்ந்து நில்! ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில், அமலா பால், மேக்னாராஜ் இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த படம் பற்றி, சமுத்திரக்கனி கூறியதாவது: வாழ்க்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், இந்த படம் உருவாகிறது. இதில், 25 மற்றும் 48 வயது என, இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். வேறு மாநிலத்தை சேர்ந்த, வெவ்வேறு மொழி பேசக்கூடிய, ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும்... என்னென்ன நிகழும் என்பதைத் தான், புதிய கோணத்தில் சொல்லப் போகிறேன். "இந்த படத்துக்காக, மூன்று படத்துக்கான கடின உழைப்பை தரப் போகிறேன். காரணம், இது என் கேரியரில் மிக முக்கிய படம்.