Sunday, 24 June 2012

தனுஷை வாழ்த்திய நடிகர் சிம்பு.










     நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விடயம் நடிகர்கள் சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்குமிடையேயான போட்டி. நீண்டகாலமாக இது குறித்து அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தாலும்,அண்மையில் நடிகர் தனுஷ் பாடி உலகம் முழுவதும் பிரபலமான கொலைவெறி பாடல் நடிகர் தனுஷை ஒரே இரவில் உலகப் பிரபலம் ஆக்கியது இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் சிம்பு இதே போல் ஒரு பாடல் மூலம் பிரபலமாக வேண்டும் என நினைத்து முழு முயற்சியில் ஈடுபட்டு, காதலுக்கான கீதம் என்ற ஒன்றை உருவாக்கினார்.இதன் மூலம் நடிகர் தனுஷுடன் நேரடியாக தன்னுடைய போட்டியை நிரூப்பித்திருந்தார் நடிகர் சிம்பு.

ஆனால் இது குறித்து நேரடியாக எதுவும் கூறாமல் மௌனம் சாதித்து வந்த இருவரும், அண்மையில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இருவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டபோது ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார்கள்.

இதிலும், நடிகர் சிம்பு ஒரு படி முன்னேறி, துபாயில் தானும் நடிகர் தனுஷும் நீண்ட நேரம் பொழுதை கழித்தது தனக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாக கூறியிருந்தார்.

No comments:

Post a Comment