Tuesday, 19 June 2012

ராதாவின் பொறுமையை சோதிக்கும் மணிரத்னம்?


   அம்மா காட்டிய வழி, அதுவே எந்தன் மொழி என்று நாள்தோறும் பாரதிராஜா பஜன் பாடி வரும் கார்த்திகாவுக்கு தங்கையின் திரையுலக பிரவேசம் ஏராளமான சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. மணிரத்னம் படத்தில் சமந்தாவுக்கு பதிலாக தங்கை துளசி நடிக்கவிருப்பதை அ.கொ. கொ.வீ யூனிட்டில் ஆசை ஆசையாக பகிர்ந்து கொள்கிறாராம் இந்த அன்பான அக்கா.
  என்ன இருந்தாலும் துளசியின் படம் ஒரு பத்திரிகையில் கூட வெளிவராமல் போனதில் ராதாவுக்கும் வருத்தம், மீடியாவுக்கும் வருத்தம். இந்த பரஸ்பர வருத்தத்தை போக்கிக் கொள்வதில் என்ன சிரமம்? இடையில் மணி என்ற தடைக்கல் இருக்கிறதே! அதுதான் சிரமம்.
  கோ படத்தில் கார்த்திகா நடிக்கப் போகிறார் என்றதும், மீடியாவை கூட்டி என் பொண்ணை ஆசிர்வாதம் பண்ணுங்கோ என்று முறைப்படி அறிவித்தார் ராதா. இதே மாதிரி தனது இரண்டாவது மகள் துளசியின் பிரவேசத்தையும் மீடியாவுக்கு முன் அறிவித்து ஆசி பெற நினைத்தாராம்.
  'கொஞ்சம் பொறுங்க. அவசரம் வேண்டாம்' என்று கூறிவிட்டாராம் மணி. வரம் கொடுக்கிற சாமிய பகைச்சுகிட்டு வம்படியா காமிக்கிறதுக்கு ராதா என்ன சாதா அனுபவசாலியா? பொறுமை காக்கிறார். அதுக்காக வருஷக்கணக்குல இழுத்திராதீங்க மணி சார்.

No comments:

Post a Comment