Monday, 18 June 2012

ஒரு பாட்டுக்கு ஒரு கோடியா?


 
 இயக்குனராக அறிமுகமாகி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யமான நடிகர், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீயூசிக்கை மையமாக வைத்து படமொன்றை இயக்கி வருகிறார். இதில் இவர் நடிக்கவும், இசையமைக்கவும் செய்கிறார். இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட மும்பையில் பிரபலமான ‘சயிபீனா’ ஜோடியின் நாயகியை அணுகினாராம். அவரும் இதற்கு இசைந்து, பாடலின் மெட்டை அனுப்புமாறு இயக்குனரிடம் கேட்டுக் கொண்டுள்ளாராம். இந்த ஒரு பாட்டுக்கு நடனமாட ஒரு கோடிக்கும் மேல் அந்த நடிகை கேட்டுக் கொண்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  16 வயசு படத்தில் நடித்து பிரபலமான மூன்றெழுத்து நடிகை, கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று அங்கும் வெற்றிக் கொடி நாட்டினார். அங்குள்ள ஒரு சினிமா தயாரிப்பாளருக்கு இரண்டாவது மனைவியானவர், படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆங்கிலம் தாங்கிலம் என்பது போன்ற தலைப்பிலான படத்தில் மீண்டும் நடிக்க வருகிறாராம்.

No comments:

Post a Comment