விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கெளதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் தோல்வியடைந்து விட்டதால், அடுத்தபடியாக தான் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் பட விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறார் கெளதம். ஏற்கனவே ஜீவா நடித்த முகமூடி தோல்வியடைந்து அவரது மார்க்கெட்டும் சரிந்திருப்பதால், தான் இந்த படத்தை வெளியிடும் நேரத்தில் போட்டி ஏதும்இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். அதற்காக போட்டி இல்லாத களமாக டிசம்பர் 14-ம் தேதியை தேர்ந்தெடுத்திருந்தார்.
ஆனால் இப்போது பார்த்தால், நீதானே என் பொன்வசந்தம் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவெடுத்துள்ள அதே 14-ம் தேதியில் கும்கி படத்தையும் வெளியிடுகிறார்களாம். மைனா பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் என்பதோடு, இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் இருப்பதால், எங்கு இந்த படத்தினால் தனது படம் தோற்று விடுமோ என்று பயப்படுகிறார் அவர். ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடலாமா? என்று யோசித்தாலும், கும்கிக்காக தான் பின்வாங்கினால், தனது படத்தை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திக திக் மனநிலையுடன் இருந்து வருகிறார் கெளதம்.
ஆனால் இப்போது பார்த்தால், நீதானே என் பொன்வசந்தம் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவெடுத்துள்ள அதே 14-ம் தேதியில் கும்கி படத்தையும் வெளியிடுகிறார்களாம். மைனா பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் என்பதோடு, இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் இருப்பதால், எங்கு இந்த படத்தினால் தனது படம் தோற்று விடுமோ என்று பயப்படுகிறார் அவர். ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடலாமா? என்று யோசித்தாலும், கும்கிக்காக தான் பின்வாங்கினால், தனது படத்தை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திக திக் மனநிலையுடன் இருந்து வருகிறார் கெளதம்.
No comments:
Post a Comment