இந்த படத்தின் பெயரே, வித்தியாசமாக இருக்கும்போது, கதையும் வித்தியாசமாகத் தானே இருக்கும். இன்றைய இளைய தலைமுறையின், ஒவ்வொரு அசைவுகளையும், பிலிம் ரோலில் "சூட் செய்து, "கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் படத்தை, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர். "பாம்பே படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, ஹிருதயராஜ் தான், இந்த படத்தின் ஹீரோ. அதிதி என்பவர், ஹீரோயினாக நடித்துள்ளார். குறும் படங்கள், ஆவணப் படங்கள், விளம்பர படங்களை இயக்கிய அனுபவமுள்ள வெங்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். பனி கல்யாண் என்பவர், இசை அமைத்துள்ளார். "காபி ஷாப்பில் பூக்கும் அழகான காதலை, ரசனையுடன் விவரிக்கும் இந்த படம், நிச்சயம், வெற்றி பெறும் என, பெருமிதத்துடன் கூறுகிறார், இயக்குனர் வெங்கி. இந்த வார இறுதியில் படம் வெளியாகிறது.
Wednesday 5 December 2012
சசிகுமாரின் சென்டிமென்ட் தொடருகிறது
சசிகுமார் நடித்த படங்களில், "சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் ஆகியவை, அவருக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்கள். இந்த மூன்று படங்களுக்குமே, ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது, சசிகுமாரை சுற்றி, நான்கு நண்பர்களும் படம் முழுக்க வருவர். அதனால், இந்த நண்பர்கள் சென்டிமென்ட்டை, தான் புதிதாக நடித்து வரும், "குட்டிபுலி படத்திலும் பின்பற்றி வருகிறார் சசிகுமார். மேலும், நண்பர் கேரக்டரில் நடிப்பவர்களை, புது முகங்களாக இல்லாமல், சுந்தரபாண்டியனில் நடிக்க வைத்தது போல், ஏற்கனவே பரிட்சயமான நடிகர்களை நடிக்க வைக்கிறார். இதையடுத்தும், சசிகுமாரின் இந்த, நான்கு நண்பர்கள் சென்டிமென்ட் தொடருமாம்.
மேனேஜரை டிஸ்மிஸ் செய்த சந்தானம்!
சினிமாவில் ஒரு நடிகரின் மார்க்கெட் எகிறி விட்டால், அந்த நடிகர்களை சமாளிப்பதை விட அவர்களின் மேனேஜர்களை சமாளிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். காரணம், ஒரு கட்டத்தில் அவர்கள் சமபந்தப்பட்ட நடிகர்கள் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே இவர்களாகி விடுகிறது. அவர்களாகப்பார்த்து கால்சீட் கொடுக்கும்போதுதான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதால் இவர்களைத்தான் படாதிபதிகள் கைக்குள் போட்டுக்கொள்வார்கள். அதற்காக நடிகரின் சம்பளத்துக்கு மேலாக இவர்களுக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார்கள்.
அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கி வரும் ஹரி, சந்தானத்தின் கால்சீட்டுக்காக முதலில் அவரது மேனேஜர் புஜ்ஜிபாபு என்பவரைத்தான் அணுகியிருக்கிறார். ஆனால் தனக்கும் லஞ்சமாக ஒரு தொகையை எதிர்பார்த்த அவர், ஹரி கேட்டபடி கால்சீட் தராமல் இதோ அதோவென்று அலைய விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான டைரக்டர் ஹரி, இது சம்பந்தமாக சந்தானத்திடம் புகார் அளித்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானம், மேனேஜரின் செயலுக்காக ஹரியிடம் மன்னிப்பு கேட்டதோடு, உடனடியாக மேனேஜரையே டிஸ்மிஸ் செய்து விட்டார். இனி என் சமபந்தப்பட்ட கால்சீட், சம்பளம் என அனைத்து டீலிங்கையும் நானே பார்த்துககொள்ளப்போகிறேன் என்றும அறிவித்திருக்கிறார்.
ஷங்கரின் ஐ படம் ஒலிம்பிக் கதையாம்!
அந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஐ. ஐ படத்தில், ஒலிம்பிக்கை மையமாக வைத்து, கதை தயார் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு வேலையை கவனிக்கிறார். தற்போது படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2013ம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.
காஜல் பின்னால் ஒரு கூட்டம்!!
காஜல் அகர்வால், ஒரு படப்பிடிப்பு தளத்துக்குள் என்ட்ரி ஆனாலே, அவர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு வருகிறது. இவர்களெல்லாம் யார் என்று விசாரித்தால், அத்தனை பேரும், அவரது உதவியாளர்கள் என்கின்றனர். பல மொழிகளிலும், பரவலாக நடிப்பதால், ஓடியாடி வேலை செய்ய குறைந்தது எட்டு பேராவது காஜலுக்கு தேவைப்படுவதாக கூறி, கூடவே அழைத்து வந்து விடுகிறார்.
அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கருக்கரிவாள்!
அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கருக்கரிவாள்!
இனி முன்னணி இயக்குனர்களுடன் மட்டும் தான்...! அதர்வா முடிவு
பாலாவின், பரதேசி படத்தில் நடிப்பதற்கு முன் வரை, புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த அதர்வாவும், இப்போது மாறிவிட்டார். அடுத்தடுத்து, "முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்... என்று கூறும் அவர், சில டைரக்டர்களை சந்தித்து, தனக்காக கதை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், இயக்குனர்களோ, "பரதேசியில் உங்களது பர்பாமென்சைப் பார்த்துவிட்டு, எந்த மாதிரி கதை ரெடி செய்யலாம் என்பதை முடிவு செய்வோம்... என்று, பரதேசி படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர்.
ஹன்சிகாவை விடாது துரத்தும் தனுஷ்!
தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம்தான் தமிழுக்கு என்ட்ரி ஆனார். அதனால் அவரது முதல் தமிழ் ஹீரோ தனுஷ் என்பதால் இப்போதுவரை அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. ஹன்சிகாவே தன்னை மறந்தாலும் அவரை மறக்க விடுவதாக இல்லை தனுஷ். அவ்வப்போது போனில் கடலை போடுவதை வாடிக்கையாகச் செய்து வருகிறார். நேரம் கெட்ட நேரங்களில் அவர் போன் போட்டு வறுத்தாலும்கூட வேறு வழியில்லாமல் அவருக்கு போனில் கம்பெனி கொடுப்பதை தொடர்ந்து வருகிறார் ஹன்சிகா.
இந்த நிலையில், களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து தான் இயக்கும் சொட்டவாளக்குட்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியபோது, முதலில் கால்சீட் தருகிறேன் என்று சொன்ன ஹன்சிகா, பின்னர் தனுஷ் படத்தின் நாயகன் என்றதும், சும்மாவே கடலை போடுவார், பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் அவருடன் நடித்தால் அடிக்கடி அல்வா கொடுக்கும் வேலையிலும் இறங்கி விடுவார் என்று அப்படத்தை தவிர்க்க வெவ்வேறு காரணங்களை சொல்லி நழுவிக்கொண்டு வருகிறார் ஹன்சிகா.
இந்த சேதி தனுசின் காதுகளுக்கு சென்றபோது, எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? என் படத்துக்குள்ள நீ முதல்ல கால்சீட் தரனும் என்று அம்மணியை செல்லமாக கடிந்து கொண்ட தனுஷ், நீ கால்சீட் தருவதாக சொன்னபிறகுதான் படப்பிடிப்பு தேதியே முடிவு செய்வோம். அதுவரைக்கும் டீல்தான் என்று ஹன்சிகாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம். இதனால் தனுசிடம் மீண்டும் சிக்கவா? வேண்டாமா? என்ற பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.
இந்த நிலையில், களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து தான் இயக்கும் சொட்டவாளக்குட்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியபோது, முதலில் கால்சீட் தருகிறேன் என்று சொன்ன ஹன்சிகா, பின்னர் தனுஷ் படத்தின் நாயகன் என்றதும், சும்மாவே கடலை போடுவார், பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் அவருடன் நடித்தால் அடிக்கடி அல்வா கொடுக்கும் வேலையிலும் இறங்கி விடுவார் என்று அப்படத்தை தவிர்க்க வெவ்வேறு காரணங்களை சொல்லி நழுவிக்கொண்டு வருகிறார் ஹன்சிகா.
இந்த சேதி தனுசின் காதுகளுக்கு சென்றபோது, எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? என் படத்துக்குள்ள நீ முதல்ல கால்சீட் தரனும் என்று அம்மணியை செல்லமாக கடிந்து கொண்ட தனுஷ், நீ கால்சீட் தருவதாக சொன்னபிறகுதான் படப்பிடிப்பு தேதியே முடிவு செய்வோம். அதுவரைக்கும் டீல்தான் என்று ஹன்சிகாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம். இதனால் தனுசிடம் மீண்டும் சிக்கவா? வேண்டாமா? என்ற பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.
என் இமேஜை சீனுராமசாமி மாற்றி விட்டார்- சுனைனா
நீர்ப்பறவை படத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்தவர் சுனைனா. இப்படத்துக்கு சற்று முன்புதான் பரத்துடன் படுகவர்ச்சியாக சுனைனா நடித்த திருத்தணி படம் வெளியானது. அதைப்பார்த்து மேலும் சில கமர்சியல் படாதிபதிகள் சுனைனாவை மேலும் தோலுரிக்கும் நோக்கத்துடன் அணுகினர். ஆனால் டைட்டீல் கார்டு தொடங்கி என்ட் கார்டை வரைக்கும் ஒரு டயலாக் விடாமல் கதைகளைக்கேட்ட சுனைனா, சொல்லி அனுப்புகிறேன் என்று படாதிபதிகளை அனுப்பி வைத்தவர்தானாம். அதன்பிறகு எந்த பதிலும் அவரிடமிருந்து வரவில்லையாம்.
இதையடுத்து, என்னாச்சு அம்மணி? ஒரு பதிலையும் காணோமே? என்று கேட்டவர்களிடம், நீர்ப்பறவை படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல நடிகை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது இமேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராமசாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச காலமும் இதுமாதிரி தெறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆக்டு கொடுக்க ஆசைப்படுறேன் என்று டபாய்த்து விட்டாராம் நடிகை. இதனால் சுனைனாவை நம்பி மோசம்போன படாதிபதிகள் இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து, என்னாச்சு அம்மணி? ஒரு பதிலையும் காணோமே? என்று கேட்டவர்களிடம், நீர்ப்பறவை படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல நடிகை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது இமேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராமசாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச காலமும் இதுமாதிரி தெறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆக்டு கொடுக்க ஆசைப்படுறேன் என்று டபாய்த்து விட்டாராம் நடிகை. இதனால் சுனைனாவை நம்பி மோசம்போன படாதிபதிகள் இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்!
ஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்கு நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும், சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்காக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால் நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள் முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்று பேசினார்.
நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
நடிகை சங்கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிதாமகன், உயிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. இவருக்கும் பிரபல பாடகர் கிரிஷ்க்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சங்கீதா கர்ப்பமானார். இதையடுத்து சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டார். டி.வி. நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்நிலையில் சங்கீதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி எடுக்கவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். சங்கீதா-கிரிஷ் தம்பதியருக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
"பிரியாணி கதை செம டேஸ்ட் : ஹன்சிகா
ஹன்சிகா மோத்வானி, "பிரியாணி படத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இயக்குனர் கேட்டதுமே, உடனடியாக கால்ஷீட் கொடுத்த, ஹன்சிகா, இந்த படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக வெளியான செய்தியால், அதிர்ந்து போனார். இதுகுறித்து, இயக்குனரை தொடர்பு கொண்டு, ஹன்சிகா கேட்டபோது, "நீங்கள் தான் ஹீரோயின். மற்றொரு நடிகை, பாடல் காட்சிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என, உறுதி அளித்தாராம்.
இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு... தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.
இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு... தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.
"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி மேனன்
"சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன், அடுத்ததாக, சசிகுமாருடன் "குட்டிப்புலி படத்தில் நடித்து வருகிறார். "கும்கி படத்தில், உடன் நடித்த யானையின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறாரார், லட்சுமி மேனன். இதனால், அந்த யானையின் புகைப்படத்தை, தன் வீட்டில், பிரேம் போட்டு மாட்டியுள்ளாராம். படப்பிடிப்பில், சில நேரம், துதிக்கையை பிரியமாக வருடும் போது, அது தலையை ஆட்டி, சிநேகம் தெரிவிக்குமாம். யானையுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, இயக்குனரிடம் கேட்டு வாங்கி வைத்துள்ளார். லட்சுமி மேனன் கூறுகையில்,"கும்கி கிளைமாக்சில், யானை தொடர்பான காட்சிகள், 10 நிமிடங்கள் இருக்கும். இந்த காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும்... நெஞ்சை நெகிழ வைக்கும்... அழவைக்கும்... ஆச்சரியப்படவைக்கும் என்றவர், "கிளைமாக்ஸ் காட்சி பற்றிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் என, காதை கடித்தார்.
விஜய்யின் 25வது பாடல்
இயக்குனர் விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் நடிப்பில், புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு, மும்பையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில், மற்றொரு ஹைலைட்டான விஷயமும் உள்ளது. இதில், நடிகர் விஜய், ஒரு பாடலை, பாடப் போகிறார். இந்த பாடல், அவர் சொந்த குரலில் பாடும், 25வது பாடல். ஜி.வி.பிரகாஷ் தான், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில், ஐந்து பாடல்களாம். இதுவரை, இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களில், ஜி.வி.பிரகாசும், விஜய்யும், தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். விஜய்யின், 25 வது பாடல், பட்டையை கிளப்புமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரியாணிக்கு ஆசைப்பட்டு..!
வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'பிரியாணி' கமகமவென தயாராகிறது.
இதுவரை 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு, எல்லா படங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும்.
'சரோஜா', 'மங்காத்தா' இரண்டு படங்களுமே த்ரில்லர் வகையில் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் தான். பிரியாணி படத்தினையும் அதே பாணியில் இயக்கி வருகிறாராம்.
கதைப்படி கார்த்தி, பிரேம்ஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாம். இருவரும் 'பிரியாணி' பிரியர்களாம். அதுவும் ஆம்பூர் பிரியாணி என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.
'பிரியாணி'க்கு பேர் போன ஆம்பூருக்கு போய், பிரியாணி சாப்பிட திட்டமிட்டு அங்கே போகிறார்கள். போன இடத்தில் ஒரு கொலை நடந்து, அந்த பழி கார்த்தி, பிரேம்ஜி இருவர் மீதும் விழுகிறது.
பிரியாணிக்கு ஆசைப்பட்டு, கொலை கேஸில் சிக்கிய இருவரும் அந்த பிரச்னையை சமாளித்தார்கள் என்பதையும், கொலை செய்தது யார் என்பதையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
மேலும் இரண்டு 'பிரியாணி' ஸ்பெஷல் ' தகவல்கள் :
'பிரியாணி படத்தின் முதல் பாடலை கார்த்தி, பிரேம்ஜி இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்.
'செந்தூரப்பூவே' புகழ் ராம்கி, பிரியாணி மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்!
'ச்சும்மா அதிரும்' சிவாஜி 3D !
'சிவாஜி' படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "ச்சும்மா அதிருதுல்ல!". 3D-யில் 'சிவாஜி' படம் பார்க்கும் பொழுது, இந்த வசனத்தை போலவே தியேட்டரே சும்மா அதிருகிறது. படத்தில் வரும் 'வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி' மற்றும் 'சஹானா சாரல் தூவுதோ' ஆகிய பாடல்களையும், ஒரு சண்டைக் காட்சியையும் பத்திரிகையாளர்களுக்காக சென்னை சத்யம் தியேட்டரில்,3D-யில் நேற்று (03 டிசம்பர் ) திரையிட்டு காண்பித்தார்கள்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென திரையில் 3D-யில் தோன்றிய ரஜினி "நான் வெளியூர்ல இருக்கேன். 'சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபா செலவுல மிக பிரமாண்டமா தயாரிச்சு ரிலீஸ் பண்ணாங்க.. இப்ப படத்தை அதைவிட ரெண்டு மடங்கு செலவு செஞ்சு 3D படமா மாத்திருக்காங்க. இந்த செலவுல, 2 பிரமாண்ட படங்களே எடுத்திருக்கலாம்.. ஆனா என் பிறந்தநாள் பரிசா ரசிகர்களுக்கு இந்த 3D படத்தை ஏவி.எம். குடுத்திருக்காங்க.. இந்த படத்தை நான் 3Dல பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. நீங்களும் பாருங்க" என்றார்.
இயக்குனர் ஷங்கர் " சிவாஜியை 3Dல பண்ண என்ன இருக்கு.. 'எந்திரன்'லயாவது 3D பண்ண நிறைய ஸ்கோப் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சிவாஜி படம் 3D-ல பிராமாதமா வந்திருக்கு. நான் பாத்த ஆங்கில படங்களை விட சிவாஜி பிரமாதமா இருக்கு. 3Dல படம் பார்த்தா ஏதாவது கண்ணுகிட்ட வந்து குத்தற மாதிரியே இருக்கும். ஆனா 'சிவாஜி'ல Petals ( பூ இதழ்கள் ) கண் முன்னாடி வருவது ரொம்ப அழகா இருந்தது. இதுக்கு முதல்ல பாராட்ட வேண்டியது கே.வி.ஆனந்த்தை தான். 3D பண்ண மாதிரியே பண்ணியிருக்கிறார். நான் டைரக்டராக பார்க்காம ஒரு பார்வையாளராக தான் பார்த்தேன். படம் பிரமாண்டமா வந்திருக்கு" என்றார்.
வைரமுத்து "ரசிகர்கள் 'சிவாஜி' படத்தை கொண்டாடுவார்கள். பழைய தொழில்நுட்பத்தில் தூரத்தில் இருந்த ரஜினி புதிய தொழில் நுட்பத்தால் நம் அருகில் வந்து மேலும் நெருக்கமாகிறார். ரஜினி இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார். இந்த படம் தான் ரஜினியின் பிறந்தநாள் பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு! " என்றார்.
Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படம் 'சிவாஜி 3D' தான்.
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென திரையில் 3D-யில் தோன்றிய ரஜினி "நான் வெளியூர்ல இருக்கேன். 'சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபா செலவுல மிக பிரமாண்டமா தயாரிச்சு ரிலீஸ் பண்ணாங்க.. இப்ப படத்தை அதைவிட ரெண்டு மடங்கு செலவு செஞ்சு 3D படமா மாத்திருக்காங்க. இந்த செலவுல, 2 பிரமாண்ட படங்களே எடுத்திருக்கலாம்.. ஆனா என் பிறந்தநாள் பரிசா ரசிகர்களுக்கு இந்த 3D படத்தை ஏவி.எம். குடுத்திருக்காங்க.. இந்த படத்தை நான் 3Dல பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. நீங்களும் பாருங்க" என்றார்.
இயக்குனர் ஷங்கர் " சிவாஜியை 3Dல பண்ண என்ன இருக்கு.. 'எந்திரன்'லயாவது 3D பண்ண நிறைய ஸ்கோப் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சிவாஜி படம் 3D-ல பிராமாதமா வந்திருக்கு. நான் பாத்த ஆங்கில படங்களை விட சிவாஜி பிரமாதமா இருக்கு. 3Dல படம் பார்த்தா ஏதாவது கண்ணுகிட்ட வந்து குத்தற மாதிரியே இருக்கும். ஆனா 'சிவாஜி'ல Petals ( பூ இதழ்கள் ) கண் முன்னாடி வருவது ரொம்ப அழகா இருந்தது. இதுக்கு முதல்ல பாராட்ட வேண்டியது கே.வி.ஆனந்த்தை தான். 3D பண்ண மாதிரியே பண்ணியிருக்கிறார். நான் டைரக்டராக பார்க்காம ஒரு பார்வையாளராக தான் பார்த்தேன். படம் பிரமாண்டமா வந்திருக்கு" என்றார்.
வைரமுத்து "ரசிகர்கள் 'சிவாஜி' படத்தை கொண்டாடுவார்கள். பழைய தொழில்நுட்பத்தில் தூரத்தில் இருந்த ரஜினி புதிய தொழில் நுட்பத்தால் நம் அருகில் வந்து மேலும் நெருக்கமாகிறார். ரஜினி இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார். இந்த படம் தான் ரஜினியின் பிறந்தநாள் பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு! " என்றார்.
Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படம் 'சிவாஜி 3D' தான்.
லட்டு ரிலீஸ் : ஷங்கர்.. சிம்பு.. சந்தானம் !
தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் சந்தானம், முதன் முறையாக தயாரிக்கும் படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'.
சந்தானம், பவர் ஸ்டார், சேது, விஷாகா மற்றும் பலர் நடித்து இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தினை ராமநாராயணன் வெளியிட இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9ம் தேதி நடக்க இருக்கிறது. பாடல்களை இயக்குனர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக் கொள்கிறார்.,
'பரதேசி', 'சமர்' ஆகிய படங்களுடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.
சந்தானம், பவர் ஸ்டார், சேது, விஷாகா மற்றும் பலர் நடித்து இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தினை ராமநாராயணன் வெளியிட இருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9ம் தேதி நடக்க இருக்கிறது. பாடல்களை இயக்குனர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக் கொள்கிறார்.,
'பரதேசி', 'சமர்' ஆகிய படங்களுடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)