Saturday 30 June 2012

யாருடனும் போட்டி வேண்டாம் - ரஜினி அட்வைஸ்


   

ரஜினி நடித்துக்கொண்டிருக்கும் கோச்சடையான் படம் ஷூட்டிங் முடிந்து கடைசிகட்ட பணியில் இருக்கிறது. கோச்சடையான் படத்தை முடிக்க டெக்னீஷியன்கள் இரவு-பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்களாம். வருகிற தீபாவளியன்று ரிலீஸாக இருந்த கோச்சடையான் திடீரென தள்ளிப்போனது.

கோச்சடையான் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரிலீஸாக இருந்தது. இந்தியில் ஷாருக்கான் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘டான்-2’ தீபாவளிக்கு ரிலீஸாவதால் போட்டி வேண்டாம் என கருதிய ரஜினி, ரிலீஸுக்கான வேலைகளை பொருமையாக செய்யுங்கள் என கூறிவிட்டாராம்.

கோச்சடையான் படத்தின் கதைப்படி ரஜினி தந்தை-மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தந்தை ரஜினிகாந்த், ஜாக்கி ஷரோஃப், நாசர் ஆகியவர்கள் நாட்டை ஆளும் ராஜாக்கள். மகன் ரஜினி தனது நாட்டின் (தந்தை ரஜினியின் நாட்டின்) இளவரசனாகவும், நடிகர் ஆதி ஜாக்கி ஷரோஃப் நாட்டின் தளபதியாகவும் நடிக்கின்றனர். ஜாக்கி ஷரோஃப் ரஜினியின் நாட்டின் மீது படையெடுத்து வந்து வெற்றியடைகிறாரா? இல்லையா? என்பது தான் கதையாம்.

படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டபடியால் கடைசிகட்ட பணிகளை 120 டெக்னீஷியன்களுடன் கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார். கோச்சடையான் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா அஸ்வின் கொடைக்கானல் டூர், ஹீரோ ரஜினி கோயம்பத்தூர் விசிட் என ஓய்வில் இருக்கின்றனர்.

பானுவுக்கு உயிர்கொடுக்கும் இயக்குனர்!


தமிழ்சினிமாவின் அதிரடி மசாலா இயக்குனர் ஹரி! ஹீரோயின்களை கவர்ச்சியாக உடை உடுத்த இவர் நிர்பந்திக்க மாட்டார் என்றாலும் எக்குத்தப்பான பாடல் வரிகளைக் கொண்ட குத்து டுயட்களில் ஆட விட்டு, அவர்களை கமர்ஷியல் கலரில் நனைத்து எடுத்து விடுவார்.
அப்படித்தான் நயந்தாராவை ‘ஐயா படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார் ஹரி. அவர் இன்று வரை தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டேட் கதாநாயகியாக இருக்கிறார். நயந்தாராவை விட இளமையும், அழகும் கொழித்த பானுவை தாமிரபரணி படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் பாவம் தாமிரபரனி தோல்விப்படமானது பானு காணாமல் போனார். இன்னொரு பக்கம் பானுவின் அப்பா கேட்ட அதிகப்படியான சம்பளத்தில் வாய்ப்புகளை எல்லாம் இழந்தார். இடையில் அப்பாவின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஒன்றிரண்டு படங்களில் உப்புக்கு சப்பாணி கதாபாத்திரங்களில் தலை காட்டியது பொண்ணு! ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை!
என்ன ஆச்சு இந்த அழகு மயிலுக்கு என்று போனைப் போட்டால், “ நீங்க போன் பண்ணின மூகூர்த்தமோ என்னவோ...என்னை அறிமுகப்படுத்தின ஹரி சாரே எனக்கு மறுபடியும் வாய்ப்புக் கொடுக்க சம்மதிச்சுருக்கார். இந்த முறை ஹரி சாரோட அசிஸ்டெண்ட் பாலாஜி இயக்க இருக்க படத்தை ஹரிசார்தான் தயாரிக்கப் போறார்.
    அந்தப் படத்துல நான்தான் ஹீரோயின்னு சொல்லிட்டார். ஹீரோக்கள்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி கிட்டு இருக்காங்க. யார் ஹீரோன்னு நான் சொல்ல முடியாது. அப்புறம் கௌதம் மேனன் சார் அசிஸ்டெண்ட் நாகராஜ் இயக்கப் போற அவரோட முதல் படத்துலயும் நான் தான் ஹீரோயின். இதுல அறிமுக ஹீரோதான். ஆனால் கதைதான் நிஜ ஹீரோ. விட்ட இடத்தை நிச்சயமா பிடிபேன்கிற நம்பிக்கை இருக்கு சார்” என்றவர் “நான் கொஞ்சம் தாமதாமா நடிக்க வந்திருக்கலாமோன்ணு இப்போ நினைக்கிறேன்.

    தாமிரபரணியில அறிமுகம் ஆகும்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். எனக்கு அப்போ வழிகாட்ட ஆளே இல்லை. அந்த நேரத்தில்தான் என்னோட அப்பா தாறுமாறா சம்பளம் கேட்டு வந்த வாய்ப்பையெல்லாம் லூஸ் பண்ணிட்டார். அதுக்கு அப்புறம் வந்த வாய்ப்புகளும் கவர்ச்சியா இருந்தது. பட்டினி கிடந்தாலும் கிடப்பேனே தவிர, அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டேன்.
    ரொம்ப நாள் கழிச்சு, ஆர்.கே.சார் அழகர் மலையில் நடிக்கிற வாய்ப்பு கொடுத்தார். அப்புறம் எஸ்.ஏ.சி சார் வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் அது எதுவும் ஹீரோயின் ரொல்ஸ் கிடையாது. இந்த முறை நிச்சயமா நான் ஜெயிப்பேன்! ஏன் இப்போ ரொம்ப அடிப்பட்டுட்டேன்" என்று உண்மையை உடைக்கிறார் பானு! பானுவுக்கு தன்னோட அசிஸ்டெண்ட் இயக்குற படத்துல வாய்ப்பு வாங்கிக் கொடுத்த ஹரி, சிங்கம் 2ல சூர்யாவுக்கு ஜோடியா போட்டார் குறைஞ்சா போயிருவார்!?

    நான் யாரையும் காதலிக்கவில்‌லை! - ஓவியா


    Oviya denies love with kerala business man     தன்னை பற்றி வரும் காதல் கிசுகிசுகளை நம்ப வேண்டாம் என்றும், தான் யாரையும் காதலிக்கவில்லை என்றும் நடிகை ஓவியா கூறியுள்ளார். களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து மன்மதன் அம்பு, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தமிழில் சில்லுன்னு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களிலும், தமிழ் தவிர வேறு மொழியிலும் பிஸியாக நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்தவரான இவருக்கும் அங்குள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் என்றும், அவரை ஓவியா திருமணம் செய்ய இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் இதனை ஓவியா முழுவதுமாக மறுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, சினிமாவில் இப்போது தான் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அதற்குள் நான் காதல் வயப்பட்டுள்ளேன் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் என்னிடம் இல்லை. அவ்வளவு பிஸியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறேன். இப்போதைக்கு எனது சிந்தனையெல்லாம் சினிமா பற்றியது தான். திருமணத்தை பற்றி யோசித்து கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.

    குண்டு பூசணிக்காய் பட்டம் வாங்கிய நடிகை ஹனிஷ்கா


          மாப்பிள்ளை படத்தின் கதாநாயகி தற்போது விரல்வித்தை நடிகருடன் இரண்டெழுத்து படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    இப்படத்தின் படப்பிடிப்பில் இந்த நாயகியை எல்லோரும் குண்டு பூசணிக்காய் என்று கிண்டலடித்து சிரித்தார்களாம். மொழி தெரியாத இந்நடிகையும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தாராம்.
    கள்ளங்கபடமில்லா நடிகையா இருக்குதே என்று அவருக்காக வருத்தப்பட்ட ஒருவர், குண்டு பூசணிக்காய் என்றால் என்ன அர்த்தம் என்பதை எடுத்துச் சொல்ல, கோபத்தின் உச்சிக்குப் போன ‘மாப்பிள்ளை’ நடிகை ஒரே மாதத்தில் 6 கிலோ எடையைக் குறைத்துள்ளாராம்.

    தெலுங்குல மட்டும் 100 கோடி!

    முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் என இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் 'நான் ஈ'.

    பெரிய நாயகர்கள் யாருமின்றி ஒரு படம் இவ்வளவு எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருப்பது இதுவே முதல் முறை எனலாம். காரணம் இயக்குனர் ராஜமெளலி.

    தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு கதைக்களத்தினை தேர்ந்தெடுக்கும் ராஜமெளலி இம்முறை ஒரு ஈயை நம்பி களம் இறங்குகிறார்.

    'மஹாதீரா', 'மரியாதை ராமண்ணா' என்று வசூலில் இவரது படங்களின் சாதனை நான் ஈ படம் கண்டிப்பாக முறியடிக்கும் என்பது வல்லுனர்களின் கணக்கு.

    அதற்கு அவர்கள் கூறும் காரணம் " படத்தின் டிரெய்லர், உருவான விதம் இந்த வீடியோக்களின் மூலமே ஒரு பெரிய ஒப்பனிங் இப்படத்திற்கு இருக்கும். கண்டிப்பாக அனைத்து தெலுங்கு படங்களின் வசூலையும் இப்படம் முறியடிக்கும் " என்கிறார்கள்.

    பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா " ஈகா படம் கண்டிப்பாக தெலுங்கு திரையுலகில் 100 கோடி வசூல் செய்யும் என்று நினைக்கிறேன். நான் கூறுவது தெலுங்கு திரையுலகில் மட்டும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

    இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் U/A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். படத்தில் சில புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதால் தான் U/A சான்றிதழாம், மற்றபடி சென்சார் அதிகாரிகள் ஒரு காட்சியைக் கூட கட் பண்ணச் சொல்லவில்லையாம்.

    ' ஈ'  ஜுலை 6ம் தேதி வெள்ளித்திரையில் பறக்க இருக்கிறது.

    விக்ரம் நடிக்காத 'கரிகாலன்' !

    'விக்ரம் நடிக்கும் கரிகாலன்' என்ற பிரம்மாண்டமான போஸ்டர்கள் சென்னை எங்கும் மின்னியது. ராஜா கெட்டப்பில் விக்ரம் கம்பீரமாக காட்சியளித்தார். ஆனால் ஷூட்டிங் நடக்குமா என்ற நிலையில் இருக்கிறது 'கரிகாலன்'.

    விக்ரம், ஷரின் கான், அஞ்சலி நடிப்பில் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருந்த 'கரிகாலன்' படத்தினை 'சில்வர் லைன் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்தது.

    இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அப்படப்பிடிப்பில் டிரெய்லர் மற்றும் போட்டோ ஷுட் மட்டுமே எடுத்தார்களாம். படத்திற்காக என்று இதுவரை ஒரு காட்சி கூட எடுக்கவில்லை.

    இதனால் இயக்குனர் கண்ணன் நீக்கப்பட்டு, காந்தி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமானார். ஆனால், இப்போது அதுவும் இல்லை என்றாகிவிடும் போலிருக்கிறது.

    விக்ரம் தனது அடுத்தடுத்த படப்பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 'தாண்டவம்' படத்தினை முடித்து இருக்கும் விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்திற்காக தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.

    விக்ரம் கால்ஷீட் தேதிகள் ஒதுக்கினால் மட்டுமே 'கரிகாலன்' படத்தை துவக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

    'கரிகாலன்' வருவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்கிறது கோலிவுட்.

    முகமூடி மாமா!


    ஹாலிவுட் சினிமாவுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் புதிதல்ல! ஆனால் தமிழ் சினிமாவுக்கு புதிது.
    யுத்தம் செய் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் படம்தான் முகமுடி! குங்பூ தற்காப்புக் கலையை கதைக்களமாக்கி, அதன் பின்னனியில் ஒரு சூப்பர் ஹீரோ கதையை ஜனரஞ்சகமாக படமாக்கியிருக்கிறார் மிஷ்கின்.
    இந்தப் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்திருப்பவர் ஜீவா! சூப்பர் ஹீரோ படமென்றால் ஹாலிவுட்டில் வெளியான ‘சூப்பர் மேன்’ ஸ்பைடர் மேன், ‘எக்ஸ் மேன்’ உட்பட பல படங்கள், உலக சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்! இந்தப் படங்களில் எல்லாம், ஹீரோ உடலில், இடுப்புக்கு கீழே அணியும் உள்ளாடையை மட்டும் அணிய வைத்து, பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் என்ற பொருளை குழைத்து, உடல் முழுவதும் இரண்டு அங்குல அடர்த்திக்குப் பூசி, அது காய்ந்த சில நிமிடங்களில், ஹீரோவின் உடல் அமைப்பை அப்படியே துல்லியமாக மோல்ட் செய்வார்கள். பிறகு உடலோடு ஒட்டியது போல, கிடைத்த மோல்ட் அளவுக்கு, சூப்பர் மேன் உடையை டிசைன் செய்வார்கள். இந்த தொழில் நுட்பத்தை அப்படியே பின்பற்றி முகமூடி படத்தில் ஜீவாவுக்கும் சூப்பர் மேன் கதாபாத்திரத்திரதுக்கான உடையை இதே வழியில் சீன நாட்டின் கலைஞர்களை வைத்து டிசைன் செய்திருகிறார்கள்.
    அதேபோல படத்தில் இடம்பெரும் குங்பூ சண்டைக்காட்களை ‘ எண்டர் தி டிராகன்’ படத்தில் புருஸ் லீயுடன் சண்றை போட்ட ‘டோனி லுங்’ என்ற ஹாலிவுட் சண்டைக் கலைஞரை வைத்து சண்டைக்காட்சிகளை அமைத்து இருக்கிறார்கள்! ஜீவாவின் திரைவாழ்க்கையில் இது முற்றிலும் புதிய பரிமாணம். “இந்தப் படத்துக்குப் பிறகு என்னை எல்லா குழந்தைகளும் முகமூடி மாமா என்றுதான் கூப்பிடப் போகிறார்கள்” என்று குஷியாகச் சொல்லும் ஜீவாவுக்கு, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மிக முக்கியமான நாளாக அமையப் போகிறது! காரணம் அன்று உலகம் முழுவதும் ‘முகமூடி’ ரிலீஸ்!

    இரண்டு கதைகள் தயார்... விரைவில் அடுத்த பட அறிவிப்பு - ஐஸ்வர்யா

    கொலவெறி புகழ் 3 படத்துக்குப் பிறகு, அடுத்த படத்தை இயக்குவதில் மும்முரமாக உள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

    முதல் படம் 3-ன் பாடல்கள் பெருமளவு ஹிட்டடித்தாலும், அந்தப் படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பில்லை. ஆனால் ஐஸ்வர்யாவுக்கு சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது கிடைத்தது. அமெரிக்காவில் பாராட்டு விழாவும் நடந்தது.

    அந்த உற்சாகத்துடன் மீண்டும் படம் இயக்க தயாராகிறார் ஐஸ்வர்யா.

    இந்த முறை அவர் குழந்தைகளுக்கான படத்தை எடுக்கப்போவதாக கூறுகிறார்கள். இன்னொரு படத்துக்கான கதையையும் தயார் செய்துள்ளாராம்.

    இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளேன். இரண்டு கதைகள் எழுதி உள்ளேன். ஒன்று பெரிய நடிகர்களை வைத்து எடுக்கபோகிற படத்துக்கானது. இன்னொன்று குழந்தைகளுக்கானது.

    இதில் எந்த படத்தை முதலில் எடுப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை. குழந்தை நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களிடம் பேசி வருகிறோம். இந்தப் படத்தை நானே தயாரிக்கப் போகிறேன்," என்றார்.

    பில்லா-2வின் புத்தம் புதிய டிரைலர் ஜூலை 2-ல் பிரம்மாண்டமாய் வெளியீடு...!


    Billa 2 second trailer Grand launch on July 2அஜித் நடித்துள்ள பில்லா-2 படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், இன்னொரு புத்தம் புதிய டிரைலரை ஜூலை 2ம் தேதி பிரம்மாண்ட விழா எடுத்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அஜித்தின் பில்லா ‌வெற்றியை தொடர்ந்து அதன் 2ம் பாகமாக உருவாகியிருக்கும் படம் பில்லா-2. பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா, வித்யூத் ஜம்வால் என ஏகப்பட்ட நட்சத்திரங்களின் நடிப்பில், சக்ரி டோல்ட்டியின் இயக்கத்தில், யுவனின் மிரட்டல் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

    இந்நிலையில் புதிதாக ஒரு டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் முதல் முன்‌னோட்டம் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா போன்றவைகளை எந்த ஒரு விழாவும் வைக்காமல் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். ஆகையால் இந்த 2வது டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, அதற்காக வருகிற ஜூலை 2ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு விழா அரங்கில் விழாவுக்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் நடிகைகள் பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா உள்ளிட்ட படத்தில் நடித்த அத்தனை பேரும் பங்கேற்க உள்ளனர். அதேசமயம் இந்த விழாவில் நடிகர் அஜித் பங்கேற்பது உறுதி செய்யப்படவில்லை.

    ஜூலை 13ம் தேதி பில்லா-2 உலகம் முழுக்க ரிலீஸ் ஆக உள்ளது.

    எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை. ஓவியா


     
    களவாணி படம் மூலம் பிரபலமான ஓவியா, முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளார். பாண்டிராஜின் “மெரினாவில் வந்தார். சுந்தர் .சி-யின் கலகலப்பு படத்திலும், கமலின் “மன்மதன் அம்பு” படத்திலும் முக்கிய வேடமேற்று ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

    ஓவியா கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கிசு கிசுக்கள் பரவின. ஏற்கனவே கேரளாவில் இருந்து ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அனன்யாவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
    அதுபோல் ஓவியாவும் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போவதாக கூறப்பட்டது. இது குறித்து ஓவியாவிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:- 

    நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு காதல் செய்வதற்கு நேரமே இல்லை. சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். என் முழுக்கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. திருமணம் நடக்கும்போது நடக்கும். இப்போது அதற்கு அவசரப் படவில்லை. 

    இவ்வாறு ஓவியா கூறினார்.

    ஒழுக்கம் தான் நம்மை காப்பாற்றும்: நடிகர் சிவக்குமார் பேச்சு


    கோவையை அடுத்த சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சூலூர் ஒன்றிய பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் திருவேங்கடசாமி நூற்றாண்டு விழா நடந்தது.

    விழாவில் முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவரும், நடிகருமான சிவக்குமார் பேசியதாவது:-

    ஏழையாக கிராமத்தில் பிறப்பது பாவம் இல்லை, சாபம் இல்லை. மாணவர்கள் கிராமத்தில் பிறந்து விட்டதாக தாழ்மையாக எண்ணக்கூடாது. மேதை ஆவதற்கு கிராமத்தில் பிறக்க வேண்டும் என எண்ணிக்கொள்ள வேண்டும். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. அனைவருக்கும் ஒரு திறமை இருக்கிறது. நீங்கள் முயற்சி செய்தால் அந்த திறமையை வளர்த்து வாழ்க்கையில் முன்னேற முடியும். அனைத்து துறையிலும் கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஒழுக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். ஒழுக்கம் ஒன்று தான் அனைவரையும் காப்பாற்றும். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் வாழ்நாள் முழுவதும் மறக்கக் கூடாது.

    மேற்கண்டவாறு நடிகர் சிவக்குமார் பேசினார்.

    இயக்குனராகிறார் பிரபல ஒளிப்பதிவாளரான ரவி. கே சந்திரன்



    சினிமா உலகில் ஒளிப்பதிவாளர்களாக இருந்து இயக்குனர்களான பாலுமகேந்திரா, தங்கர் பச்சான் வரிசையில் ரவி. கே சந்திரனும் தற்போது இணைந்துள்ளார். 
    மணிரத்னம், பிரியதர்ஷன் ஆகியோர்களின் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி.கே சந்திரன் விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தயாராக இருக்கிறது.

    'கோ' படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா நடிக்க இருக்கிறார்.

    ஆஸ்கர் விருது பெற்ற ஒலி இயக்குனரான ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்தில் பணியாற்ற இருக்கின்றனர். இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிறநடிகர் நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்களாம்.

    லண்டன் ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஜெய் ஹோ பாடல்.



    லண்டனில் வரும் ஜூலை மாதம் 29ம் தேதி துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சியில் பல உலக நாட்டு இசைகள் இசைக்கப்பட உள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளின் இசைப் பாடல்கள் தொகுக்கப்பட்டு வருகிறது. 
    இதில், ஏற்கனவே இளையராஜா இசையமைத்த 'நான்தான் ஒங்கப்பன்டா' எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ள ஒரு திரைப்பட பாடலும் இடம்பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


    'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படத்தில், ஆஸ்கார் விருது பெற காரணமாக அமைந்த 'ஜெய் ஹோ...' பாடல் அது என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் ஒலிம்பிக்கில் இடம்பெறுவது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.

    நயன்தாராவிற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்க தயார். மணிரத்னம்



    தாடிக்கார இயக்குனரை காதலித்த நயன்தாரா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவருக்கு காதல் கசந்து போனது. இதனால் நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 
    இவருக்காக தற்போது மூத்த இயக்குனர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். விவகாரமாக ஏதும் நினைக்க வேண்டாம். தனது படத்தில் நயன்தாரா நடித்தல் சிறப்பாக இருக்கும் என்று அந்த மூத்த இயக்குனர் கருதுகிறார்.

    அவர் வேறு யாருமல்ல பிரபல இயக்குனரான மணிரத்னம்தான் அந்த மூத்த இயக்குனர். 'ராவணன்' படத்தை அடுத்து இவர் இயக்கும் படம் 'கடல்'. இப்படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

    இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்த மணிரத்னம், நயன்தாராவை தன் படத்தில் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை நயன்தாரா நாசூக்காக மறுத்து விட்டாராம். தான் ஏற்கனவே நிறைய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதால் புதிய படங்களை ஒப்புக் கொள்ள முடியாது என்று கைவிரித்துவிட்டாராம்.

    ஆனால், இந்த கதாபாத்திரத்துக்கு நயன்தாராதான் சரியாக இருப்பார் என்றும், அவருக்காக காத்திருக்கத் தயார் என்றும் மணிரத்னம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.

    கோச்சடையானில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி.


    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாகவும், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாகவும் நடித்து வரும் படம் 'கோச்சடையான்'. ஷங்கரின் 'எந்திரன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் இதுவாகும். 
    ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா இயக்கிவரும் இப்படம் சென்னை, ஹாங்காங், லண்டன் என மூன்று இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மெருகேற்றப்பட்டு வருகிறது.

    இப்படம் கடவுளைப் பற்றிய படம் இல்லை. அரசர் காலத்து படம் போல் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினி காந்த் நடித்து வருகிறார்.

    ரஜினி (அப்பா), நாசர், ஜாக்கி ஷெராப் என மூன்று மன்னர்கள். அவர்களின் வாரிசுகள்தான் ரஜினி (மகன்), சரத்குமார், ஆதி ஆகியோர். மூத்த ரஜினியோடு ஜாக்கி மோத, மகன் ரஜினியோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி. இதில் மகன் ரஜினிக்கு ஜோடியாகத்தான் தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.

    அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர்கள், பேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தால், முந்தைய படங்களைக் காட்டிலும் இப்படத்தில் மிகவும் இளமையாக இருக்கிறாராம் ரஜினி.

    அநேகமாய் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 -ல் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

    Friday 29 June 2012

    அப்பவும் இப்படித்தான் சொன்னாரு!



    'எங்கேயும் காதல்' படத்தினை அடுத்து தனது நடிப்பில் அடுத்த படம் வர இவ்வளவு காலதாமதம் ஆகும் என்று நினைத்து இருக்க மாட்டார் ஜெயம் ரவி.

    அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் படம் 'ஆதிபகவன்'. ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடம் திருநங்கை வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவாவில் நடைபெற்ற 'ஆதிபகவன்' படப்பிடிப்பில் நாயகி நீது சந்திராவால் கலந்து கொள்ள முடியவில்லை. வெவ்வேறு படங்களில் நடித்து வந்ததால் அவரால் கலந்து கொள்ள முடியவில்லையாம்.

    இந்நிலையில் தற்போது க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மற்றும் ஜெயம் ரவி, நீது சந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜெய்ப்பூரில் காட்சிப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார் அமீர். ஜுலை மாதம் முதல் வாரத்தில் இப்படப்பிடிப்பு துவங்குகிறது.

    இதோடு 'ஆதிபகவன்' படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று தெரிவித்து இருக்கிறாராம் அமீர். ஆனால் படக்குழுவினரோ "இப்படிதான் போன படப்பிடிப்பிலும் சொன்னார்" என்று புலம்பி தள்ளுகிறார்களாம்.

    தற்போது 'ஆதிபகவன்' படப்பிடிப்பிற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்ந்து இருக்கிறது. தமிழ் திரையுலகில் 7.1 டிஜிட்டர் சவுண்ட்டில் வெளிவரும் முதல் படம் 'ஆதிபகவன்' தான்.

    படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.

    ஏ.ஆர்.ரஹ்மானின் ஏ.எம் ஸ்டூடியோ மிக்ஸ் இதற்கான பணிகளை மேற்கொள்ள இருக்கிறது

    மாற்..றான்...!



    விஜய்க்கு 'துப்பாக்கி', அஜீத்திற்கு 'பில்லா 2' படத்தினைப் போலவே சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'மாற்றான்'.

    சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் 'மாற்றான்'  படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிசில் சூர்யா படங்கள் வசூலை குவித்து வருவதால், 'மாற்றான்' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 'அயன்' பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது கூடுதல் காரணம்.

    தற்போது இப்படத்தினை 80 கோடிக்கு விலை பேசி வருகிறார்களாம். அதுமட்டுமன்றி ஜெமினி நிறுவனம் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை சுமார் 12 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

    வெளிநாட்டு உரிமை 12 கோடி என்பது விஜய், அஜீத் படங்களை விட மிகவும் அதிகம். படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஜுலை மாத இறுதியில் 'மாற்றான்' படத்தின் இசை வெளியீடு இருக்கும். படத்தினை ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது படக்குழு.

    ஆனால், இன்னும் முழுமையாக படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை என்பதாலும், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் ஆகஸ்ட் 15 படம் வெளிவருது சந்தேகம் தான் என்கிறார்கள்.

    பாப்பா.. தள்ளிப் போய் விளையாடு!



    விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது. பூனேவில் 'துப்பாக்கி' படப்பிடிப்பு நடந்து வருகிறது.

    ஜுன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த விஜய், தற்போது பூனேவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பூனேவில் லோனாவாலா இடத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து விட்ட நிலையில், பரபரப்பாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று பாடல்கள் மட்டுமே காட்சிபடுத்த வேண்டியிருக்கிறதாம்.

    ஜுலை மாதத்தில் 'துப்பாக்கி' படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு "இந்த ஆண்டை 'மாற்றான்' ஆளப் போகிறது.. மற்றவர்கள் தள்ளி இருங்கள்.. SURIYA = CLASS + MASS"  என்று டிவிட்டர் இணையத்தில் ஒருவர் தெரிவிக்க, அதற்கு முருகாதஸின் பதில் " பாப்பா தள்ளி போய் விளையாடு!" என்பது தான்!

    தடதட வேகத்தில் 'தாண்டவம்'

    'தெய்வத்திருமகள்' படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படம்' தாண்டவம்'. 'தெய்வத்திருமகள்'  போல இல்லாமல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் 'தாண்டவம்' தயாராகிறது. 

    அப்படி என்ன தான் கதையாம்?  "பல பேரின் சுயநலத்தினால் ஒருவன் பாதிக்கப்படுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான், மீண்டு வந்தவன் அவர்களை எப்படி பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. இது வெறும் கோபம் பழிவாங்கும் உணர்வுகளை மட்டும் வெளிப்படத்தும் படமல்ல. பல உணர்ச்சிகரமான விஷயங்களையும்  உள்ளடக்கிய படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் விஜய். 

    "விக்ரம் தேசிய அளவில் சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்குவது பலருக்கும் ஒரு கனவாகும் 'தெய்வதிருமகள்' மூலம் அக்கனவு எனக்கு நிஜமானது. அந்தப்பட அனுபவத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது. அந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மரியாதையை தேடித்தந்தது. மீண்டும் இணைய விரும்பினோம். அதுதான் ‘தாண்டவம்’. தெய்வத்திருமகளைத் தாண்டி இப்படம் சிறப்பாக வர வேண்டும் என்று உழைத்து வருகிறோம்." என்கிறார்.

    'தெய்வதிருமகள்' போலவே இதிலும் இரண்டு நாயகிகள். ஒருவர் ஆந்திரத்து அல்வா அனுஷ்கா. இன்னொருவர் வெளிநாட்டு ஸ்ட்ராபெரி எமி ஜாக்சன். இந்த இரண்டு நாயகிகளும் சத்திவாய்ந்த அழுத்தமான பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள் 

    கதையின் 70 % வெளிநாட்டில் பயணிக்கிறது,  30% இந்தியாவில் நிகழும். லண்டனில் தொடர்ச்சியாக 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து இருக்கிறார்கள். குறிப்பாக சண்டை காட்சிகளை நிறைய சிரமப்பட்டு எடுத்து இருக்கிறார்கள். லண்டன் டவர் பிரிட்ஜ்  பாலத்தில் எடுக்கப்பட்டுள்ள துரத்தல் மற்றும் சண்டை காட்சிகள் சிலிர்க்கவைக்கும் சினிமா அனுபவமாக இருக்கும். லண்டன் தொடர்புடைய காட்சிகளில் அங்குள்ள பல நடிகர் நடிகைகளை நடிக்க வைத்துள்ளனர். சண்டை காட்சிகளில் அந்த நாட்டு சண்டைக் கலை நிபுணர்களை  பங்கேற்க வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

    விஸ்வரூபம் 2 !

               இந்தியாவில் வெளியான படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் 'விஸ்வரூபம்'. கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இருக்கிறார்.

    கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில்  நடித்து இருக்கிறார்கள். இப்படத்தின் FIRST LOOK-ஐ கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் கமல்.

    இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் எல்லாம் நடிக்கவில்லையாம். விஸ்வநாத் (எ) விஸ் என்ற பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். விஸ்வநாத் பாத்திரத்தில் கதக் நடன கலைஞராகவும், விஸ் பாத்திரத்தில் FBI ஏஜெண்டாகவும் நடித்து இருக்கிறார்.

    'விஸ்வரூபம்' படத்திற்காக இதுவரை எடுத்த காட்சிகள் மிகவும் அதிகமாக இருப்பதால் அதில் சில காட்சிகளை பயன்படுத்தி 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பயன்படுத்த இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியாகின.

    இச்செய்தி குறித்து கமல் தெரிவித்து இருப்பது " விஸ்வரூபம் படத்தினைத் துவங்கும் போதே, இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெறும் என்று பரிபூரணமாக நம்பி தான் துவக்கினோம். இரண்டாம் பாகமும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40 % முடிவடைந்துவிட்டது. 

    இந்திய திரையுலகில் இதுவரை விஸ்வரூபம் மாதிரியான கதைகள் வந்தது இல்லை. தேசிய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து இப்படத்தில் கையாண்டுள்ளோம் " என்று தெரிவித்து இருக்கிறார். 

    டபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்! கோச்சடையான் அப்டேட்


             இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ரஜினியின் 'கோச்சடையான்’ கதை... மதுரைக்கு அருகில் இருக்கும் 'கோச்சடையான்’ சாமியின் கதை அல்ல!   படம் முழுக்க முழுக்க ரஜினிக்குத் தீனி போடும் விறுவிறு... திகுதிகு திரைக்கதை... அதுவும் இரண்டு ரஜினி!
      கடவுள் கதை இல்லையே தவிர, முழுக்கவே ஃபேன்டஸி கதை. அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினிக்கு. சீனியர் ரஜினி, நாசர், ஜாக்கி ஷெராஃப் என மூன்று மன்னர்கள். அவர் களின் வாரிசுகள்தான் ஜூனியர் ரஜினி, சரத்குமார், ஆதி ஆகியோர். சீனியர் ரஜினியோடு ஜாக்கி மோத, ஜூனியரோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி. இதுவரை படம் பிடித்த காட்சிகளைத் திரையில் பார்த்த ரஜினி வெரி ஹேப்பி. அனிமேஷன் ரஜினி வருவார் என்ற யூகத் துக்கு இடம் இல்லை. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர் கள், ஃபேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சி களைப் போட்டுப் பார்த்தால், 'சிவாஜி’, 'எந்திரன்’ படங்களைக் காட்டிலும் கோச் சடையானில் பொலிவாக இருக்கிறாராம் ரஜினி.
    படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஹாங்காங், லண்டன், சென்னை என மூன்று இடங்களில் படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் மூலம் மிரட்டல் திகில் சேர்த்துவருகிறார்கள். கிட்டத்தட்ட 120 டெக்னீஷியன்கள் தினமும் இரவு பகலாக கோச்சடையானைச் செதுக்கும் பணியில் இருக்கிறார்கள். தீபாவளி தாண்டி 2012-ன் இறுதியில்தான் படம் திரையைத் தொடுமாம்!

    சிக்கலில் சிக்கித்தவிக்கும் விஜய் படம்!




           ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் ’துப்பாக்கி’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். துப்பாக்கி என்ற பெயரை எங்கு கேட்டாலும் இந்த படத்தின் பெயர் தான் ரசிகர்களின் நினைவிற்கு வருகிறது. ரசிகர்களிடையே அவ்வளவு பாப்புலராகிவிட்ட ’துப்பாக்கி’ என்ற பெயருக்குத் தான் இப்போது பிரச்சனை வந்திருக்கிறது.

    தயாரிப்பாளர் சி.ரவிதேவன் தயாரிப்பில் உருவாகி ரிலீஸுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் படம் ‘கள்ளத்துப்பாக்கி’. சி.ரவிதேவன் 2009-ஆம் ஆண்டு இந்த படத்தை துவங்கும் போதே ‘கள்ளத்துப்பாக்கி’ என்ற பட டைட்டிலையும், துப்பாக்கிக்கு மேல் ’கள்ளத்துப்பாக்கி’ என்ற பெயர் வருவது போன்ற பட விளம்பர லோகோவையும் தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு துப்பாக்கி படத்தின் ஷூட்டிங்கை துவங்கிய ஏ.ஆர்.முருகதாஸும் தனது படத்திற்கு அதே போன்ற லோகோவையும் பெயரையும் வைத்துள்ளதால், சென்னை சிவில் கோர்ட்டில் ’கள்ளத்துப்பாக்கி’ படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி துப்பாக்கி படத்தை ஜூலை 16-ஆம் தேதி வரை ரிலீஸ் செய்யக் கூடாது என்ரு தீர்ப்பளித்து துப்பாக்கி படக்குழுவின் தரப்பிலிருந்து தக்க விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் வெளியிட்ட போது, தங்களது போஸ்டர்களையும் துப்பாக்கி பட போஸ்டரின் அருகில் எச்சரிக்கை செய்யும் விதத்தில் ஒட்டினர் ‘கள்ளத்துப்பாக்கி’ படக்குழுவினர்.

    ’துப்பாக்கி’ என்ற பெயரை பொதுவாக கொண்ட இரு படங்களுமே அண்டர்கிரவுண்ட் தாதாக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் தானாம். ’துப்பாக்கி’ படத்தில் நடிகர் விஜய் துப்பாக்கியை கையில் எடுக்கிறார், ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் துப்பாக்கியை கையில் எடுக்கிறார்கள்.

    இந்த பிரச்சனையில் வெடிக்கப்போவது துப்பாக்கியா கள்ளத்துப்பாக்கியா என்பது கேள்விக்குறி.

    தாண்டவம் - இலங்கையில் ஷூட்டிங்!



    ’தெய்வத்திருமகள்’ படத்தில் இணைந்த ஜோடி இப்போது ‘தாண்டவம்’ ஆடிக்கொண்டிருக்கிறது. விக்ரம்-அனுஷ்கா என நீங்கள் நினைக்கலாம்! அதுதான் இல்லை, நடிகர் விக்ரமும், இயக்குனர் விஜய்யும். தான் அந்த ஜோடி! அட, ஆமாங்க... இப்படித் தான் சொல்லிக்கொள்கிறார் இயக்குனர் விஜய்.


    இது பற்றி பேசுகையில் இயக்குனர் விஜய் “ தேசிய விருது பெற்ற நடிகர்களை வைத்து படம் இயக்குவது வளர்ந்து வரும் ஒவ்வொரு இயக்குனரின் கனவாகும். அந்த வகையில் தெய்வத்திருமகள் படத்திலேயே என் கனவு நனவாக, அந்த படத்தின் வெற்றிக்கு போனஸாக கிடைத்திருப்பது தான் ‘தாண்டவம்’ வாய்ப்பு. விக்ரமுடனான முதல் பட அனுபவத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது. அந்த புரிதலினால் ‘தாண்டவம்’ மிகச் சிறப்பாக வளர்ந்து கொண்டிருக்கிறது” என சிலாகித்தார்.


    சமூகத்தின் சுயநலத்தினால் பாதிக்கப்படும் தனி மனிதனின் பழி வாங்கும் உணர்ச்சிகரகமான கதை என்றாலும், ஆந்திரத்து அல்வாவான அனுஷ்காவும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி ஏமி ஜாக்சனும் கலர்ஃபுல் ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.


    ஆனாலும் இரண்டு கதாநாயகிகளும் சும்மா வந்து போகும் கதாபாத்திரங்கள் அல்ல. படத்தின் கதையில் திருப்பம் ஏற்படுத்தும் அளவிற்கு சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை ஏற்றுள்ளனர். ஹீரோ விக்ரம், ஹீரோயின் அனுஷ்கா, தெய்வத்திருமகள் படத்தில் முக்கிய ரோல்களில் நடித்த நாசர், சந்தானம் ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.


    லண்டனில் உள்ள ’டவர் பிரிட்ஜில்’ எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி, ரசிகர்கள் படம் பார்க்கும் போது அவர்களது இருக்கையையே மறக்க வைக்கும்படி இருக்குமாம். தாண்டவம் படத்தின் 30% படம் தான் இந்தியாவில் நடக்கிறதாம். மற்ற காட்சிகள் இலங்கையிலிருந்து விமானத்தில் நேராக லண்டன் செல்வதுதான்.

    கமர்சியல் பார்முலாவை உடைக்கிறேன்

    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
          சென்னை, : ஏ.வெங்கடேஷ் இயக்கும் படம் ‘எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி’. தேஜஸ், உத்ரா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் பற்றி ஏ.வெங்கடேஷ் கூறியதாவது: இதுவரை கமர்சியல் பார்முலாவிலேயே படம் பண்ணியுள்ளேன். முதன் முறையாக, அதை உடைத்து கமர்சியல் சினிமா எடுக்க முடியும் என்பதை சவாலாக ஏற்று இதை உருவாக்குகிறேன். 20 வயது ஹீரோவுக்கு நாற்பதை தாண்டிய நான், தம்பி ராமையா, சிங்கம்புலி நண்பர்கள். ஹீரோ ஒரு பெண்ணை காதலிப்பார். அதை தடுப்பதும், கெடுப்பதும்தான் எங்கள் வேலை. அது ஏன் என்பது திரைக்கதை.

    காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி

    kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
    மும்பை, : காதலரும் இந்தி நடிகருமான பிரதீக்கை தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி ஜாக்சன்.
    ‘மதராசபட்டனம்’ படத்தில் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். அடுத்து விக்ரம் ஜோடியாக ‘தாண்டவம்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘ஏக் தீவானா தா’ படத்தில் பிரதீக் பப்பருடன் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் பிரதீக்கை லண்டன் அழைத்து சென்ற எமி, அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துள்ளார்.

    இதுபற்றி எமி கூறியதாவது: பிரதீக் என் நண்பர். அவருக்கும் எனக்குமான நட்பு ஸ்பெஷலானது. லண்டனில் உள்ள என் பெற்றோருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் பிரதீக்கை அறிமுகப்படுத்தினேன். என்னை விட என் சகோதரிகளுக்கு பிரதீக்கை அதிகம் பிடித்திருக்கிறது. என் பெற்றோருக்கும் அவரை பிடித்திருக்கிறது. இந்தி பட உலகில் இனவாத பிரச்னையை நான் சந்தித்ததாக லண்டன் மீடியாவில் வெளியான செய்தி தவறானது. அதை கிசு கிசு பகுதியில் எழுதியிருந்தார்கள். அது திரித்து எழுதப்பட்ட செய்தி. மும்பையில் வசிப்பதை என் சொந்த ஊரில் இருப்பது போல இருக்கிறேன். அதனால்தான் மீண்டும் இங்கு நடிக்க வந்துள்ளேன்.
    இவ்வாறு எமி கூறினார்.

    சிம்புவின் வட சென்னை தள்ளிப்போனது ஏன்? : இயக்குனர் வெற்றிமாறன்




    சிம்புவை வைத்து, வெற்றிமாறன் இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக வெளியான செய்திகளை அடுத்து, அதை மறுத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

    சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும், நிச்சயம் வடசென்னை திரைப்படத்தை இயக்குவேன் என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.

    பொல்லாதவன், ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தனுஷை வைத்து இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் சிம்புவை வைத்து இயக்குவதாக இருந்த வடசென்னை திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள்ளாகவே முடிந்து போனதாக தகவல்கள் வெளியாயின. அதற்கு பதில் அளித்துப் பேசிய வெற்றிமாறன், "ஆடுகளம் படம் வெளியாவதற்கு முன்பே, வடசென்னை படம் பண்ணலாம் என்று முடுவு எடுத்திருந்தேன்.

    வட சென்னை படத்தின் கதை எனக்கு ரொம்ப அன்யோன்யமாக வந்திருந்தது. உடனே படம் இயக்க முடிவு செய்து, ஆரம்பித்தும் விட்டோம். ஆனால், சில தொழில் நுட்ப பிரச்சனைகள் காரணமாக இப்போது வடசென்னை படத்தை இயக்க முடியாத நிலையில் இருக்கிறோம். தொழில் நுட்ப பிரச்சனைகள் சரியாவதற்குள், தனுஷ் அவர்களை வைத்து ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும், வடசென்னை படத்தைக் கையில் எடுப்பேன். நிச்சயம் சிம்புதான் கதாநாயகன்" என்று கூறிய வெற்றிமாறன்,


    "நடிகர் நகுல் நடிக்கும் பிருந்தாவனத்தில் ராஜகுமாரன் என்னும் திரைப் படத்திற்கு வசனம் எழுதுகிறேன். இந்த படத்தை இயக்குபவர் டைரக்டர் அர்ஜூனுடைய உதவி இயக்குனர். அவர் என்னிடம் இந்த ஸ்கிரிப்டைப் படித்துப் பாருங்கள் என்றார். படித்தவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே நான் வசனம் எழுதுகிறேன் என்றேன். நீங்கள் எழுதினால் எனக்கும் சரிதான் என்றார் அவர். இப்படித்தான், நான் பிருந்தாவனத்தில் ராஜகுமாரன் திரைப் படத்திற்கு வசனகர்த்தாவானேன்" என்கிறார் வெற்றிமாறன்.

    ஜெய்க்கு செட்டாகாத அபிநயா - ரிச்சா!

    Richa - Abinaya is not set to Jai     கவுதம்மேனன் தயாரிப்பில், ஜெய் நடித்து வரும் படம், "தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும்! இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடிக்க, முதலில் அபிநயாவிடம் பேசினார். ஆனால், ஜனவரியில் தான் கால்ஷீட் தர முடியும் என, அவர் சொல்லிவிட்டார். இதனால், "மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்த ரிச்சாவிடம், கால்ஷீட் பெறப்பட்டபோதும், போட்டோசெஷன் பார்த்தபோது, ஜெய்யைவிட மெச்சூரிட்டியாக தெரிந்திருக்கிறார் ரிச்சா. அதனால், இப்போது, ஜெய்க்கு பொருத்தமான வேறு நடிகையை தேடி வருகின்றனர்.

    சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில சீன்களை எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டதாக சொல்லும் ஜெய், "இந்தப் படம், நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்வதால், அவர் இயக்கத்தில் நடிப்பது போலவே உள்ளது என்கிறார்.

    ”விஸ்வரூபம்”-2ஆவது டிரைலர்...(வீடியோ இணைப்பு)


    ”விஸ்வரூபம்”-உருவானவிதம்...(வீடியோ இணைப்பு)


    கோச்சடையானில் 42 ஓவியக்கல்லூரி மாணவர்கள்!


       'ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து மீடியா ஒன் குளோபல் என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தியாவின் முதல் 3டி ஃபெர்பாமென்ஸ் கேப்சரிங் படம்தான் கோச்சடையான்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, சரத்குமார், ஜாக்கி ஷ்ராஃப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மினி ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஃபெர்பாமென்ஸ் கேப்சரிங் முழுவதுமாக முடிந்து விட்டது! தற்போது கம்பாசிட்டிங் மற்றும் 2டி வேலைகளும் நடிந்து வருகின்றன

    இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கம் மேற்பார்வை செய்ய சௌந்தர்யா சு. அஸ்வின் இயக்கும் இந்தப் படத்துக்கு 2டி அனிமேஷன் ஓவியங்களை(கதாபாத்திரங்களை தேவையான போர்ஷன்களுக்கு வரைய)

    சென்னை எழும்பூரில் உள்ள புகழ்பெற்ற தமிழ்நாடு அரசு கவின்கலைக்கலூரியில்(காலேஜ் ஆஃப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரி)படிக்கும் முதுகலை ஓவிய மாணவர்களை இயக்குனர் சௌந்தர்யா.எஸ் அஸ்வின் தேர்ந்தெடுத்துள்ளார். இவர்களை கலை இயக்குனர் வேலுவின் கீழ் 42 மாணவர்கள் மிக ஆர்வமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடன் கும்பகோணம் காலேஜ் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் கல்லூயில் படைத்த முன்னாள் ஓவிய மாணவர்கள், தற்போது பல்வேறு பன்னாட்டு அனிமேஷன் கம்பெனிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் 50 பேரையும் தேர்வு செய்து அனிமேஷன் வேலைகளை துரித்தப்படுத்தியிருகிறாராம்!

    இது தவிர Concept artiste ஆக 60 நபர்கள் பணியாற்றிவருகிறார்கள் என்ற தகவல் அதிகார பூர்வமாக நமக்குக் கிடைக்கிரது

    "விஸ்வரூபம்"-புதிய டிரைலர்......

    விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட "விஸ்வரூபம்" படத்தின் புதிய டிரைலர்......  




    கவுதம் மேனன் தயாரிக்கும் புதிய படம்!



       இயக்குனர் கெளதம்மேனன் பங்குதாரராக இருக்கும் ஃபோட்டான் கதாஸ் புரடெக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இரு மொழி படங்களை தயாரித்து வருகிறது. இசை ஞானி இளையராஜா இசையில் உருவாகும் “நீதானே என் பொன்வசந்தம்” தெலுங்கில் “எட்டோ வெல்லி போயிந்தே மனசு” என்ற பெயரில் தயாராவதும் தெரிந்ததே.

    தமிழில் பெரும் வெற்றி பெற்ற “விண்ணை தாண்டி வருவாயா” தெலுங்கில் “ஏய் மாயா சேசாவே” என்ற பெயரில் மாபெரும் வெற்றி பெற்றததும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக இப்போது இயக்குனர் பிரபுதேவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கும் புதிய படம் “தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்”. இதே படம் தெலுங்கில் “courier boy kalyaan” என்ற பெயரிலும் தாயராகிறது.

    இந்தப்ப்படத்தின் மைய கரு எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையோ, மொழியையோ சார்ந்தது அல்ல, ஒரு நல்ல ஜனரஞ்சகமான நகைச்சுவை, காதல், ஆக்ஷன், என்ற கலவையுடன் பின்னபட்ட திரைக்கதையுடன் கூடியதாகும். “இக்கதையை நான் கேட்ட போது பல இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமபட்டேன்” என்கிறார் கெளதம்மேனன்.

    ஜெய், சந்தானம், வி.டி.வி. கணேஷ், நடிக்க உள்ள தமிழ் படம். தெலுங்கில் “இஷ்க்” என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்த நிதின் கதாநாயகராக நடிக்க அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார் ராஜேஷ். காக்க காக்க, வாரணம் ஆயிரம்(அஞ்சல அஞ்சல) விண்ணைதாண்டி வருவாயா பாடல்களை பாடிய பிரபல பாடகர் கார்த்திக் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முன்று மாதங்களுக்கு ஹைதராபாத் நகரில் தொடர்ந்து நடைபெறும் என தயாரிப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

    ஒரு நல்ல படமும், கெட்ட படமும்... சினிமா ஏரியாவிலும் நித்தி?


    Sathyanandha Movie Stills

             கர்நாடகாவை பொருத்தவரை நித்யானந்தாவின் ஆட்டம் குளோஸ் என்றே நினைக்கிறார்கள் அவரது லீலைகளை தொடர்கதை போல படித்து ரசிக்கும் ரசிகர்கள். இந்த நிலையில் அவரை தாறுமாறாக கிழித்துப் போடும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட சத்யானந்தா என்ற திரைப்படத்தை எப்படியாவது வெளியிட்டுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் அங்கே.

    இப்படி ஒரு படம் வெளிவரப்போகிற விஷயம் தெரிந்ததுமே, அப்படத்தை வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே வாங்கிவிட்டார் நித்தி. அதிலிருந்து படத்தை மீட்டு வெளியிட்டு விட வேண்டும் என்று நினைத்த தயாரிப்பு தரப்புக்கு தொடர்ந்து முட்டுக்கட்டையே நிலவியது. இப்போது அந்த கட்டைகள் தானாக தகர்ந்து கொண்டிருக்கிறதாம்.

    இதற்கிடையில், நித்தியை கடவுளின் அவதாரமாகவே காட்ட முன் வந்திருக்கிறார் ஒரு தெலுங்கு இயக்குனர். முழுவதும் நித்திக்கு ஆதரவாக இந்த படத்தை எடுக்க துடிக்கிறாராம் அவர். இதில் ரஞ்சிதாவுக்கும் முக்கிய ரோல் தரப்படவிருக்கிறதாம்.

    இந்த புதிய படத்திற்கு ரஞ்சிதாவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், விஷயத்தை (ஆ)சாமியிடம் கொண்டு செல்கிற வேலையிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.

    'முடியலே சார்...' முகமூடி ஜீவாவின் தவிப்பு


    Mugamoodiதியேட்டர்களின் கார் பார்க்கிங் போலவே அங்கிருக்கும் மேடைகளும் 'ஆள் பார்க்கிங்'ஆகி விடும் சில நேரங்களில். மிஷ்கினின் 'முகமூடி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விழாவும் கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. சத்யம் தியேட்டர் மேடையில் அமர்ந்திருந்த விஐபிகளை இடமிருந்து வலமாக எண்ணி முடிப்பதற்குள் விழாவே முடிந்து போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது கூட்டம். (அவ்வளவு கூட்டத்திலும் நாம் தேடிய படத்தின் நாயகி மிஸ்சிங், ஏனுங்க மிஷ்கின்?) அத்தனை பேரையும் விடாமல் அழைத்து பேச வைத்தார்களே, அதுதான் இன்னொரு அதிர்ச்சி.
    நல்லவேளையாக எல்லாருமே சூழ்நிலை உணர்ந்து நாலு வார்த்தைகளுக்கு மிகாமல் தங்கள் பிரமிப்பை வெளிப்படுத்தினார்கள். சூர்யா மற்றும் கவுதம்மேனன் கைகளால் இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 'இந்த படத்தை மிஷ்கின் எப்படி மனசுக்குள் சுமந்துகிட்டிருந்தார்னு எனக்கு நல்லா தெரியும். அற்புதமான கிரியேட்டர் அவர். அதே மாதிரிதான் ஜீவாவும். எல்லா கேரக்டர்களையும் ரொம்ப டெடிக்கேட்டிவா பண்றார். இந்த டீம் ஜெயிக்கணும்' என்று வாழ்த்தி நடுவிலேயே விடை பெற்றார் சூர்யா. (ஷுட்டிங் போகணுமாம்...)
    தலைப்புதான் 'முகமூடி'. ஆனால் ஜீவாவின் முகத்தை மட்டுமல்ல, முக்கால்வாசிMugamoodiஉடம்புக்கும் சேர்த்தே மூடி தயாரித்திருப்பார்கள் போலிருக்கிறது. நாசர் பேசும்போது ஜீவாவை கொண்டாடி தீர்த்தார். 'அவனை சின்ன வயசுலேர்ந்து பார்க்குறேன். ஒருநாள், சார் தாங்க முடியல என்றான். வெயில் காலத்துல முகத்தையும் உடம்பையும் மூடிகிட்டு நடிக்கறது எவ்வளவு கஷ்டம்? ஆனால் இந்த அவஸ்தை ரொம்ப சுகமா இருக்கு சார்னு சொன்னான். ஒரு நடிகனுக்கு அது ரொம்ப முக்கியம். ஜீவாவை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு' என்றார் நாசர்.
    'மிஷ்கின் வெளிப்படையா பேசுறதை குறைச்சுக்கணும். அவர் பேசுற சில விஷயங்களால் அவரது கிரியேட்டிவிடி மறைஞ்சு போய் அவரது பேச்சுதான் முன்னாடி நிக்குது. ஒரு நண்பன்ங்கிற முறையில என்னோட அட்வைஸ் இது' என்று ஜெயம் ராஜா சொல்ல, தனது அடர்ந்த கூலிங் கிளாசுக்குள்ளிருந்து ராஜாவை லுக்கினார் மிஷ்கின்.
    அப்படியே பட்ஜெட்டோட பட்ஜெட்டா மிஷ்கினோட வாய்க்கும் ஒரு மூடி தயார் பண்றதுதானே?

    மிஷ்கின் இயக்கும் முகமூடி – ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!


            ஜீவா நடிக்க, மிஷ்கின் இயக்கி வரும் சூப்பர் ஹீரோ கதையான முகமூடி படத்தின் முன்னோட்டக் காட்சியை இன்று நடிகர் சூர்யா, இயக்குநர் கவுதம் மேனன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
    ‘முகமூடி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. டப்பிங், பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் காட்சிகள் இன்று சத்யம் சினிமாவில் வெளியிடப்பட்டன.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா, கேவி ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். ட்ரைலரை சூர்யா வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார்.

    தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் கலைப்புலி தாணு, படத்தின் ஹீரோ ஜீவா, முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் நரேன், செல்வா, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினர்.

    தீபாவளி அன்று ரிலீஸாகும் ரஜினி, அஜீத், சிம்பு படங்கள்…




    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான், விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து எடுத்துக் கொண்டிருக்கும் படம் மற்றும் சிம்புவின் வாலு ஆகிய படங்கள் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகின்றன என்று கூறப்படுகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த பிறகு வரும் படம் கோச்சடையான். ஏற்கனவே மக்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கோச்சடையானைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி ஜப்பானிய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவிருக்கிறதாம்.

    இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினிகாந்தின் மனம் கவர்ந்த அஜீத் குமார் விஷ்ணுவர்த்தனின் படத்தில் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி உள்ளிட்டோருடன் நடித்துக் கொண்டிருக்கும் பெயரிடப்படாத படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் ஆகிறது.

    அடுத்ததாக நான் ஒரு அஜீத் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் சிம்புவின் வாலு படமும் தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகிறது. ஆக தீபாவளி அன்று 3 படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகிறது.

    ரஜினி, அஜீத், சிம்புவுக்கு உள்ள ஒற்றுமை என்னவென்றால் ரஜினியின் ரசிகர்கள் தற்போது அஜீத்தின் ரசிகர்களாகவும் உள்ளனர். அஜீத்தின் ரசிகர்களில் பலர் சிம்புவின் ரசிகர்களாக உள்ளனர்.

    பம்பாய் படத்தில் அரவிந்தசாமி மகனாக நடித்த சிறுவன் ஹீரோவானார்.




    ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் டெல்லி ஹீரோயின் நடிக்கிறார். ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் வெங்கி கூறியதாவது: அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பல்வேறு தத்துவங்களையும் கூறியிருக்கிறார்.
    வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கிறதோ அவை முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்துகுறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்னும் நிலவுகிறது. இந்த கருத்தை மையமாக வைத்து ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். இதில் காதலையும் சேர்த்திருக்கிறேன். வழக்கமாக தமிழில் முக்கோண காதல் கதை, ஆக்ஷன் கதை என்றுதான் படங்கள் வருகிறது.
    அதுபோல் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவம் தரும் படமாக இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது. ‘பம்பாய்’ படத்தில் அரவிந்த்சாமியின் மகன்களாக வரும் இரண்டு சிறுவர்களில் ஒருவரான ஹிருதய் ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
    டெல்லி மாடல் அழகி அதித்தி செங்கப்பா ஹீரோயின். இப்படத்துக்காக 600 பேரை ஆடிஷன் செய்ததில் தேர்வானவர்தான் அதித்தி. ஒளிப்பதிவு டி.எஸ்.வாசன். இசை ப்ஹனி கல்யாண். வசனம் சித்ரா.

    வெயில் படக்கூடாது என்பதற்காக ஷங்கர் படத்திலிருந்து விலகும் சமந்தா.




    மணிரத்னம் படத்தில் இருந்து விலகியதுபோல் ஷங்கர் படத்தில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளார் சமந்தா. மணிரத்னம் இயக்கும் படம் ‘கடல்’. இதில் கார்த்திக் மகன் கவுதம் ராம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடியாக சமந்தா தேர்வானார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அப்படத்தில் இருந்து சமந்தா விலகினார். தொடர்ச்சியாக கால்ஷீட் தர முடியாததால் விலகியதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டது.
     ஆனால் கவுதம் ராமைவிட சமந்தா மூத்த தோற்றத்தில் தெரிவதால் அவரை இயக்குனர் மாற்றியதாக பட குழு தரப்பு தெரிவிக்கிறது. இதற்கிடையில் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க சமந்தா தேர்வானார். இப்போது அப்படத்தில் இருந்தும் அவர் விலகுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா தற்போது தோல் சிகிச்சை டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவருகிறார். 

    இதனால் வெயில் மற்றும் அதிகபட்ச வெளிச்சம் உள்ள லைட் வரும் 3 மாதத்துக்கு தோல் மீது படக்கூடாது என்று டாக்டர் அறிவுரை வழங்கி உள்ளாராம். ஆனால் ‘ஐ’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாலும், 30 நாள் கால்ஷீட் ஒட்டுமொத்தமாக தர வேண்டி உள்ளதாலும் தற்போது பெற்றுவரும் தோல் சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகிறார்.
    இதையடுத்தே அவர் ‘ஐ’ படத்தில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது. ‘ஐ’ படத்தின் லொகேஷன் தேர்வுக்காக ஷங்கர் சீனா நாட்டுக்கு சென்றிருக்கிறார். எனவே அவரிடம் இதுபற்றி கருத்து கேட்கமுடியவில்லை. ஆனாலும் தனது படத்துக்கு புதிய பாலிவுட் ஹீரோயினை அவர் தேடி வருவதாக தெரிகிறது.

    13 வருடங்களுக்குப் பின் மீண்டும் தமிழ்ப்படத்தில் ந்டிக்கும் லாரா தத்தா.




    தமிழ் படத்தில் நடிக்க லாரா தத்தா விதித்த நிபந்தனையை இயக்குனர் ஏற்றார். பாலிவுட் ஹீரோயின் லாரா தத்தா. ‘அரசாட்சி’ என்ற படத்தில் தமிழில் நடித்தார். 13 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் ‘டேவிட்’ என்ற படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார்.
    விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க லாரா தத்தாவிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் லாரா தத்தாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அதிகமாக இருப்பதால் பட வாய்ப்பை ஏற்க தயங்கினார். ‘குழந்தையை கவனித்த நேரம் போக மீதி நேரத்தில் கால்ஷீட் தருகிறேன். இதை ஏற்றுக்கொண்டால் நடிக்க தயார்’ என்று லாரா கூறினார். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார்.

    இதுபற்றி பிஜாய் நம்பியார் கூறும்போது,‘‘இது லாராவுக்கு சிறப்பான வேடமாக அமையும். சமீபத்தில் அவரை சந்தித்து இதுகுறித்து பேசினேன். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றேன். அப்போது குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை இருப்பதால் நடிக்க தயங்கினார். பின்னர் அவர் ஓய்வு நேரத்தில் நடித்துக்கொடுக்க தயார் என்றார். அதை ஏற்றுக்கொண்டேன். நாசர், ரோகிணி ஹட்டாங்காடி, தபு, இஷா  ஷர்வானி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்’’ என்றார்.

    தங்கை நடிகை ஆவதால் கார்த்திகா நடுக்கம்



    மணிரத்னம் படம் மூலம் என் தங்கை நடிகையாக அறிமுகமாவதால் எனக்கு கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது என்றார் கார்த்திகா.
    இதுபற்றி ‘கோÕ கார்த்திகா கூறியதாவது:
    என் தங்கை துளசி 10ம் வகுப்பு படிக்கிறார். இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘கடல்Õ படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம், இந்த வருடத்துக்கான சிறந்த நடிகை பட்டத் தை அவருக்கு பெற்றுத்தரும். இதேபோல் 10வகுப்பு தேர்விலும் அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகையின் கனவு.  
    அந்த வாய்ப்பு தேடி வரும்போது யார்தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்? அதுவும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது சென்னையில் இருக்கும் துளசி நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். ஏற்கனவே நடனம், நாடகம், நடிப்பில் பயிற்சி பெற்றிருந்தாலும் வசன உச்சரிப்பில் பயிற்சி அவசியம்  தேவைப்பட்டது. மணிரத்னம், சுஹாசினி இருவரும் தங்கள் மகள்போல் துளசியை கவனித்துக்கொள்கிறார்கள்.
    எனவே படம் வெற்றி பெறுமா, இல்லையா? என்பது பற்றியும், துளசியைப்  பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. அதேநேரம், பெரிய படத்தில் நடிப்பதால் அவள் எப்படி நடிப்பாளோ என எனக்கு நடுக்கமாக உள்ளது. நான் நடிக்க வரும்போது எந்த பயிற்சி யும் பெறவில்லை. எனது அம்மாவும் நடிப்பு பற்றி அப்போது சொல்லித்தரவில்லை.
    என்னுடைய இயற்கையான பாவனைகளுடன் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். அதில்  வெற்றி பெற்றேன். அதேவெற்றி துளசிக்கும் அமைய வேண்டும்.

    விஜய்,அஜீத் படங்களைவிட அதிக தொகைக்கு விற்பனையான மாற்றான்.




    விஜய்க்கு 'துப்பாக்கி', அஜீத்திற்கு 'பில்லா 2' படத்தினைப் போலவே சூர்யா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் 'மாற்றான்'.

    சூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் 'மாற்றான்'  படத்தினை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

    தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிசில் சூர்யா படங்கள் வசூலை குவித்து வருவதால், 'மாற்றான்' படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. 'அயன்' பட வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைவது கூடுதல் காரணம்.

    தற்போது இப்படத்தினை 80 கோடிக்கு விலை பேசி வருகிறார்களாம். அதுமட்டுமன்றி ஜெமினி நிறுவனம் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை சுமார் 12 கோடிக்கு வாங்கி இருக்கிறது.

    வெளிநாட்டு உரிமை 12 கோடி என்பது விஜய், அஜீத் படங்களை விட மிகவும் அதிகம். படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஜுலை மாத இறுதியில் 'மாற்றான்' படத்தின் இசை வெளியீடு இருக்கும். படத்தினை ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது படக்குழு.

    ஆனால், இன்னும் முழுமையாக படப்பிடிப்பு நிறைவு பெறவில்லை என்பதாலும், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் ஆகஸ்ட் 15 படம் வெளிவருது சந்தேகம் தான் என்கிறார்கள்.

    தாண்டவம் படத்திற்காக லண்டன் டவர் பிரிட்ஜ்ஜில் மெய்சிலிர்க்கும் சண்டைக்காட்சி.



    தெய்வத்திருமகள்' படக்குழு மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் படம்' தாண்டவம்'. 'தெய்வத்திருமகள்'  போல இல்லாமல் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் 'தாண்டவம்' தயாராகிறது. 

    அப்படி என்ன தான் கதையாம்?  "பல பேரின் சுயநலத்தினால் ஒருவன் பாதிக்கப்படுகிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான், மீண்டு வந்தவன் அவர்களை எப்படி பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. இது வெறும் கோபம் பழிவாங்கும் உணர்வுகளை மட்டும் வெளிப்படத்தும் படமல்ல. பல உணர்ச்சிகரமான விஷயங்களையும்  உள்ளடக்கிய படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் விஜய். 

    "விக்ரம் தேசிய அளவில் சிறந்த நடிகர். அவரை வைத்து இயக்குவது பலருக்கும் ஒரு கனவாகும் 'தெய்வதிருமகள்' மூலம் அக்கனவு எனக்கு நிஜமானது. அந்தப்பட அனுபவத்தில் எங்களுக்குள் நல்ல புரிதல் வந்தது. அந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் மரியாதையை தேடித்தந்தது. மீண்டும் இணைய விரும்பினோம். அதுதான் ‘தாண்டவம்’. தெய்வத்திருமகளைத் தாண்டி இப்படம் சிறப்பாக வர வேண்டும் என்று உழைத்து வருகிறோம்." என்கிறார்.

    'தெய்வதிருமகள்' போலவே இதிலும் இரண்டு நாயகிகள். ஒருவர் ஆந்திரத்து அல்வா அனுஷ்கா. இன்னொருவர் வெளிநாட்டு ஸ்ட்ராபெரி எமி ஜாக்சன். இந்த இரண்டு நாயகிகளும் சத்திவாய்ந்த அழுத்தமான பாத்திரம் ஏற்றிருக்கிறார்கள் 

    கதையின் 70 % வெளிநாட்டில் பயணிக்கிறது,  30% இந்தியாவில் நிகழும். லண்டனில் தொடர்ச்சியாக 70 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து இருக்கிறார்கள். குறிப்பாக சண்டை காட்சிகளை நிறைய சிரமப்பட்டு எடுத்து இருக்கிறார்கள். லண்டன் டவர் பிரிட்ஜ்  பாலத்தில் எடுக்கப்பட்டுள்ள துரத்தல் மற்றும் சண்டை காட்சிகள் சிலிர்க்கவைக்கும் சினிமா அனுபவமாக இருக்கும். லண்டன் தொடர்புடைய காட்சிகளில் அங்குள்ள பல நடிகர் நடிகைகளை நடிக்க வைத்துள்ளனர். சண்டை காட்சிகளில் அந்த நாட்டு சண்டைக் கலை நிபுணர்களை  பங்கேற்க வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது