Saturday 16 June 2012

எனக்கு கோவில் கட்டுவதை அனுமதிக்க மாட்டேன் : ஹன்சிகா!

       ரசிகர்கள் எனக்கு கோவில் கட்டுவதை கண்டிப்பாக நான் அனுமதிக்க மாட்டேன் என்று நடிகை ஹன்சிகா‌ மோத்வானி கூறியுள்ளார். சினிமாவில் வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு அவர்கள் மனதில் குடி கொண்டு இருக்கிறார் ஹன்சிகா. சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகாவிற்கு மதுரை அருகே ரசிகர்கள் கோவில் கட்டட தயாராகி வருகிறார்கள். இதற்காக இடமெல்லாம் பார்த்து, கோவில் கட்ட நன்கொடையும் கூட வசூலித்து வருகின்றனர். கோவிலுக்குள் ஹன்சிகாவின் உருவச்சிலை மற்றும் அவரது படங்களை வைக்க உள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஹன்சிகா கூறும்போது, ஒரு சில மாதங்களுக்கு முன் மதுரை ரசிகர்கள் என்னை சந்தித்து கோவில் கட்ட அனுமதி கேட்டனர். இப்படி அவர்கள் சொன்னதும் என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு புரிந்தது. ஆனால் அதற்காக கோவில் எல்லாம் கட்ட நான் அனுமதிக்க மாட்டேன். அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மனிதனை கடவுளுக்கு சமமாக ஒப்படுவது தவறான செயல் என்று கூறியுள்ளார்.

ஹீரோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஹீரோ!

  நேரில் பார்க்கும்போது மாப்ளே... மச்சான் என்று கூறி கட்டியணைத்து, பாசமழை பொழிந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் விரல் நடிகரும், ஜீவமான நடிகரும் இப்போதெல்லாம் நேரில் மட்டுமல்ல... போனில் கூட பேசுவதில்லையாம். இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் பத்திரிகை போட்டோகிராபர் கேரக்டரில் ஜீவ நடிகர் நடித்ததுதானாம். இந்த கதையில் முதலில் ஒப்பந்தமானவர் விரல் பார்ட்டி. அவருக்கும், அப்பட டைரக்டருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் படத்தில் இருந்து தூக்கப்பட்ட வீரல், அன்றிலிருந்து ஜீவ நடிகர் மீது கோபத்தில் இருக்கிறார். படத்தையும், ஹீரோவையும் நக்கல் அடித்து ட்விட்டர் தளத்தில் எழுதுவது, சினிமா புள்ளிகளிடம் படத்தைப் பற்றி அவதூறு சொல்வது என காலம் தள்ளிக் கொண்டிருந்த விரல் ஹீரோ, இப்போது ஒருபடி மேலே போய், ஜீவத்தின் அடுத்த படத்திற்கு தடைக்கல்லாக நிற்கிறாராம்.

ஆம்! ஜீவம் அடுத்து நடிக்கவிருக்கும் படமொன்றை தடுத்து நிறுத்தும் பணியில் இறங்கியிருக்கும் விரல் வம்பு நடிகர், அப்பட தயாரிப்பாளருக்கே போன் போட்டு அவரை தூக்குங்க... என்று கூறியிருக்கிறாராம். இந்த படத்தில் யாரை வேண்டுமானாலும் ஹீரோவா போடுங்க... அவர் மட்டும் வேண்டாம் என்பதுதான் வம்புவின் வாதம். சினிமாவுல இதெல்லாம் சகஜம்தானே என்கிறார்கள் விவரமரிந்த சினிமாக்காரர்கள். ஆனால் ரசிகர்களோ... முட்டிக் கொள்ள தயாராகி வருகிறார்கள். என்னத்த சொல்ல...?

ஜீவா கேரியரில் முகமூடி பெரிய பட்ஜெட் படம் : மிஷ்கின்





இந்த முகமூடி சாதாரண மிடில் கிளாஸ் பையனோட கதை. நிறைய இழப்புக்கள், நிறைய இறப்புகளென்று சில கறுப்பு பக்கங்கள், வெள்ளை பக்கத்தில் ரோஜாப்பூ வைத்த மாதிரியான சில காட்சிகளென்று கடந்து உச்சத்தை அடைவது தான் கதை.

காதல், வீரம், சோகம், நகைச்சுவைன்னு எல்லாவற்றையும் சம அளவில் கலந்து குழந்தைகளோட குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் ஒரு படமாக இருக்கும் என்கிறார்கள்.

முகமூடி பற்றி மிஷ்கின் இப்படி சொல்கிறார்

இதுவரை நான் ஜீவாவை தள்ளி நின்னே பார்த்தவன், ஜீவாவும் என்னை அப்படித்தான் பார்த்திருக்கிறார். இணைந்து பணியாற்ற தொடங்கிய போது தான் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். இந்த புரிதல் தான் படத்திற்கு 'ஜெல்' ஆக அமைஞ்சிருக்கு ஜீவா தவிர இந்த படத்திற்கு வேறு யாரும் சரியா வந்திருக்க மாட்டாங்கன்னு படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்.




ஹாலிவூட் படங்களில் வில்லன் என்பவன் ஹீரோவை விட பலசாலியாகவோ, சமமானவனாகவோ இருப்பான். முகமூடி வில்லன் நரேனும் அப்படியான பவர்ஃபுல் கேரக்டரில் நடிச்சிருக்கிறார். அப்புறம் ஆடியன்ஸின் விழியில் விழுந்து இதயம் நுழையும் அளவிற்கு அழகுப்பியல் பூஜா ஹெக்டேவை நடிக்க வைச்சிருக்கிறேன். நாசா சார் போலிஸ் ஆபிசரா வர்றார். சத்யா இசையில் மூன்று பாடல்கள் இந்த வருஷத்தின் சூப்பர் ஹிட்டாக அமையும்.

ஜீவாவோட கெட்டப்பிற்காக நாலு நாடுகளில் அலைந்து, கடைசியா ஹாங்காங்கில் கபரில்லா வில்கிங் கேள்விப்பட்டு போனேன். ஐந்து மாதங்கள் மெனக்கெட்டு அவர் வடிவமைத்து கொடுத்த சூப்பர் மேன் காஸ்டியூம் ரசிகர்களுக்கு விருந்தா அமையும். 6 மெட்டீரியல் கலந்து அந்த உடை தயாரிக்கப்பட்டது. அந்த உடையை போட்டு கொண்டு பத்து நிமிஷம் கூட இருக்க முடியாது.

அவ்வளவு ஹிட்டாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை போட்டு கழற்றும் போது ஜீவாவின் கண்ணெல்லாம் மிளகாயை அரைத்து ஊற்றியது மாதிரி சிவந்து போயிருக்கும். ஆனா கேரக்டரில் இருந்த ஈடுபாட்டால் ஜீவா அந்த சிரமங்களையெல்லாம் தாங்கிக்கிறார்.

எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ் லீயுடன் கண்டை போட டோனி லுங் என்ற பெரிய மாஸ்டரை வைத்து தான் சண்டை காட்சிகளை உருவாக்கி வருகிறோம். குங்ஃபூ கலையில் 40 வருட அனுபவம் உள்ளார் அவர். 59 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. 30 வயசுக்கான தோற்றமும் சுறுசுறுப்பும் உள்ளவர். படத்திற்கு இவருடைய பங்கு பெரிய பலமாக அமைச்சிருச்சு. ஜீவா கேரியலும் என்னோட கேரியரிலும் முகமூடி பெரிய பட்ஜெட் படமாக உருவாகியிருக்கு.

6-ஆவது விஜய் அவார்ட்ஸ்-வென்றவர்கள் விபரம்

விஜய் டிவி-ன் ஆறாவது விஜய் அவார்ட்ஸ் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் விருதுப் பெற்றவர்களின் பட்டியல்...

சிறந்த நடிகருக்கான ஆண்: விக்ரம் (தெய்வத் திருமகள்)
சிறந்த நடிகருக்கான பெண்: அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)
சிறந்த வில்லன்: அஜித் (மங்காத்தா)
சிறந்த நகைச்சுவை நடிகர்: சந்தானம் (சிறுத்தை)
சிறந்த துணை நடிகருக்கான ஆண்: சரத்குமார் (காஞ்சனா)
சிறந்த துணை நடிகருக்கான பெண்: உமா ரியாஸ் (மொளன குரு)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர்: தனுஷ் (மொத்த நடிப்புக்கான)
சிறந்த இசையமைப்பாளர்:  ஜி.வி.பிரகாஷ்(ஆடுகளம்)
சிறந்த பாடல்: யாத்தே யாத்தே (ஆடுகளம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (வாகை சூட வா - சாரா சாரா)
சிறந்த பெண் பாடகர்: சின்மயி ( வாகை சூட  வா - சாரா சாரா)
சிறந்த ஆண் பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியன் (ஆடுகளம் - அய்யய்யோ)
ஆண்டின் சிறந்த தேடல்: ஜிப்ரான் ( வாகை சூட  வா)
சிறந்த அறிமுக நடிகர்: நானி (வெப்பம்)
ஆண்டின் சிறந்த குழு: ஆடுகளம்
சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் ( ஆடுகளம் )
சிறந்த திரைப்படம்: எங்கேயும் எப்போதும்
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்: தியாகராஜன் குமாரராஜா(ஆரண்யகாண்டம்)
சிறந்த வசனகர்த்தா: சமுத்திரக்கனி (போராளி)
சிறந்த நடன அமைப்பு: சுசித்ரா (அவன் இவன் - தியா தியா டோல்)
சிறந்த கலை இயக்குநர்: சீனு ( வாகை சூட  வா)
சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்: திலீப் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த ஒளிப்பதிவாளர்: P.S.வினோத் ( ஆரண்யகாண்டம் )
சிறந்த எடிட்டர்: கிஷோர் ( எங்கேயும் எப்போதும் )
சிறந்த ஒப்பனை கலைஞர்:கோதண்டபானி(7-ஆம் அறிவு)
சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: அணுவர்தன்& மூர்த்தி ( 7-ஆம் அறிவு )

மக்களின் அபிமான (FAVORITE) விருதுகள்...

ஆண்டின் Fav பாடல்: என்னமோ ஏதோ(கோ)
ஆண்டின் Fav திரைப்பட: கோ
ஆண்டின் Fav ஹீரோ: அஜித் ( மங்காத்தா )
ஆண்டின் Fav இயக்குனர்: வெங்கட் பிரபு ( மங்காத்தா )

சிறப்பு விருதுகள்: 

சிறந்த பின்னனி இசை: யுவன் சங்கர் ராஜா( ஆரண்யகாண்டம் )
செவாலியே சிவாஜி கணேசன் விருது: எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
ஜூரி நகைச்சுவை விருது: கோவை சரளா (காஞ்சனா)
ஜூரி விருது: சாரா ( தெய்வத் திருமகள் )



விஜய் வருத்தப்படுவார்-சீமான்

  பகலவன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய், காரணம் சொல்லாமலேயே பின் வாங்கிவிட்டார். ஆனால் பின்னாளில் இந்தப் படத்தில் ஏன் நடிக்காமல் போனோம் என வருத்தப்படுவார், என்று இயக்குநரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறினார்.
விஜய்யும் சீமானும் இணைந்து படம் எடுப்பது குறித்து கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.
விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.
பகலவன் என தலைப்பிடப்பட்ட அந்த படத்தில் பல அரசியல் விஷயங்கள் இருக்கும் என்றார் சீமான். வேலூர் சிறையிலிருந்தபடி இந்தப் படத்தின் ஸ்கிரிப்டை எழுதி முடித்தார்.
கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்தப் படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.
இந்த நிலையில், சீமானும் வேறு நாயகர்களைத் தேட ஆரம்பித்தார். இப்போது ஜீவா நடிப்பார் என்று தெரிகிறது.
பகலவன் படத்தை பற்றி சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில், "தண்ணீரால் நனைய வேண்டிய பூமி கண்ணீராலும் ரத்தத்தாலும் நனைகிறது. மக்கள் அனுபவிக்கும் துயரங்களை அடிப்படையாகக்கொண்டு தான் நான் பகலவன் கதையை எழுதினேன்.
நடிகர் விஜய் நடிப்பதாக இருந்த இந்த படத்தில் இபோது அவர் நடிக்கவில்லை. ஏன் பின்வாங்கினார் என்ற காரணமும் சொல்லவில்லை. நடிகர் ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் கண்டிப்பாக நடிப்பார். படம் வெளியாகும் போது, இந்தப் படத்தை தவறவிட்டது தவறு என்பதை தவறவிட்டவர்கள் உணர்வார்கள்," என்றார்.
ஏற்கெனவே சீமான் இயக்கி பெரும் வெற்றி பெற்ற தம்பி படத்தில் விக்ரம்தான் முதலில் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பின் வாங்கியதால், அதில் மாதவன் நடித்து தனி மரியாதையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

அமலாவின் காதல்கள் அசராத தேடல்கள்...

    ஒரு நடிகை லிப்ஸ்ட்டிக் வாங்குனா கூட, 'யாரும்மா ஸ்பான்சர்?'னு கேட்கிற அளவுக்கு சந்தேகத்தை முழுங்கி சங்கடத்தை வாந்தியெடுக்கிற ஏரியா இது. அடையார் பகுதியில் மூன்று கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியிருக்கிறார் அமலா பால். சும்மா விடுவார்களா?
ஒரு 'குமார' தயாரிப்பாளரின் கடைக்கண் புண்ணியம்தான் இது என்று கடைவாய் பல்லில் விஷத்தை நனைத்து வில்லங்கத்தை கக்குகிறார்கள். இதையெல்லாம் கண்டும் காணாதது போல தானுண்டு தன் பங்களா உண்டு என்று ரசிக்க ஆரம்பித்திருக்கிறார் அமலா.
டைரக்டர் விஜய்க்கும் இவருக்கும் காதல் என்று வெளிவந்த கிசுகிசுக்களுக்கும் ஒரு முடிவு கட்டியிருக்கிறது இந்த இல்லம். கோடம்பாக்கத்திற்கே தெரிந்த இந்த கள்ளவீடு ரகசியம், விஜய்க்கு தெரியாமலா இருக்கும்? கோபத்தில் அவர் குறுகுறுக்க, நாளைக்கு கிடைக்கிற பண்ணையை விட, இன்னைக்கு கிடைக்கிற திண்ணை மேல் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் அமலா.
ஆகமொத்தம், லவ்வு அவுட்!

கதை கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்ட நயன்தாரா

 
கதை கேட்காமல் தமிழ் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நயன்தாரா.பிரபுதேவாவுடனான பிரிவுக்கு பிறகு தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷீட் கொடுத்து வருகிறார் நயன்தாரா.

ஒவ்வொரு படம் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்னும் படத்தின் திரைக்கதையை முழுமையாக கேட்பதுடன் தனது வேடத்தின் தன்மையையும் கேட்டறிவது வழக்கம்.

இயக்குனர் மணிரத்னம் தற்போது கடல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் புதுமுகம் கவுதம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் கால்ஷீட் பிரச்னை மற்றும் இயக்குனர் மணிரத்னத்துக்கு அவரது தோற்றத்தில் திருப்தி ஏற்படாததால் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

தற்போது முன்னாள் நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய வேடமொன்றிற்காக பிரபல கதாநாயகியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர்.

நயன்தாரா மீண்டும் நடிக்க வந்ததால் அவரை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தார். இதுபற்றி நயன்தாராவிடம் அவர் கூறிய போது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

கதையை கூறுவதாக மணிரத்னம் தெரிவித்த போது, உங்கள் திரைக்கதை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கதை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.

தமிழ் நடிகைகள் தான் அதிகம் மது, சிகரெட்டுக்கு அடிமையானவர்கள்! – நடிகை சானாகான் சீண்டல்!

    தமிழ் நடிகைகள் பலர் மது அருந்திவிட்டு மப்பில் தள்ளாடிக்கொண்டு போவதை தான் பலதடவை பார்த்திருப்பதாக சானாகான் தெரிவித்துள்ளார். அண்மையில் விபச்சார வழக்கில் கைதுசெய்யப்பட்டதாக வதந்தி பரவி பரபரக்கப்பட்டவர் தான் சானா கான்.

தற்போது டேர்ட்டி பிக்சர் தமிழ் வேர்சனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த சானா கான் பத்திரிகையாளர் மத்தியில் பேசினார்.

அதன்போது அவர்…நான் மும்பை பெண்ணாக இருந்தாலும், எனக்கு ஒரு பாய் பிரண்ட் கூட கிடையாது. தினமும் 5 வேளை தொழுகை நடத்துகிறேன். வருடத்தில் 30 நாட்கள் விரதம் இருக்கிறேன். எனக்கு சிகரெட் பழக்கம் கிடையாது. குடிபழக்கமும் இல்லை.

பொதுவாகவே இந்தி நடிகைகளிடம்தான் சிகரெட்-மது பழக்கம் அதிகமாக இருக்கிறது என்று கருதுகிறார்கள். இந்தி நடிகைகளைவிட, தென்னிந்திய நடிகைகளுக்கு சிகரெட், மது பழக்கம் அதிகமாக இருக்கிறது. குடித்துவிட்டு தள்ளாடிக்கொண்டே போவதை நான் என் கண்களால் பார்த்திருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளியில் தெரிவதில்லை. மறைத்துவிடுகிறார்கள். என்றார்.

இவரது இப் பேட்டி கோடம்பாக்கத்தில் நடிகைகளை கடுப்பாக்கியுள்ளது.

ஆர்யா நடிக்கும் 'சேட்டை' EXCLUSIVE ஆல்பம்!




















சகுனி-'போட்டது பத்தல' பாடல் வீடியோ

    22ம் தேதி வெளிவர இருக்கும் 'சகுனி' படத்தில் இருந்து 'போட்டது பத்தல' பாடல் வீடியோ வடிவில்...


Friday 15 June 2012

மன்மதராசா நடிகை காதல் திருமணாம்!

  நடிகர் தனுஷுடன் திருடா திருடி திரைப்படத்தில் நடித்து, அத்திரைப்படத்தில் வரும் மன்மதராசா பாடல் மூலம் பிரபலமாகியவர் சாய சிங்.

விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் ‘கும்பிடப் போன தெய்வம்’ பாடலுக்கு இவர் ஆடிய நடனமும் சிறப்பாக பேசப்பட்டது.
தமிழ் தெலுங்கு கன்னடம் உள்பட 25 படங்களில் நடித்துள்ள சாயா சிங், தன்னுடன் ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் கிருஷ்ணாவிடம் கேட்டதற்கு ”பெங்களூரில் எங்களது திருமணம் நடைபெற்றது. ஆனந்தபுரத்து வீடு படத்தில் இருவரும் இணைந்து நடித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டோம்.” என்றார்

திருமணமான இந்த நட்சத்திர தம்பதிகள் இல்வாழ்வில் இணைந்து பல்லாண்டு வாழ்கவென்று மாலைமலர் இணையதளம் அதன் ரசிகர்கள் சார்பில் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

பிரியாமணிக்கு சவால் விடும் படம்!






பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப் பட்டு, அமீரின் பருத்திவீரன் படத்தில் முத்தழகியாக வாழ்ந்து, அகில இந்தியாவிலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அள்ளிக் கொண்டவர் ப்ரியாமணி!


சென்னனையில் பிறந்து வளர்ந்த இந்த தமிழ்ப்பெண்ணை ஏனோ தமிழ், ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக, தெலுங்கு மலையாளம், கன்னடம் என்று பெரிய வட்டமடித்து கடைசியாக ஆரம்பித்த இடத்துகே வந்திருகிறார். எஸ்! நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் மற்றும் கன்னடத்தில் நேரடியாகத் தயாராகும் ‘சாருலதா’ படத்தில் சவாலான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார்.

சவலான பாத்திரம் என்றால் பிரியாமணிக்கு அல்வா சாப்பிடுகிறமாதிரி! ஆனால் சாருலதாவில் கொஞ்ச நஞ்ச சவால் அல்ல! இரட்டைச் சவால்! அதிலும் ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளாக நடிக்க வேண்டும் என்றால் சும்மாவா? டூயல் ரோலில் நடித்து விடலாம். ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகளாக நடிக்க திறமை இருந்தால் மட்டுமே முக்கியம்! இதுபற்றி ப்ரியாமணியிடமே கேட்டுவிடலாம் என்று போனப் போட்டால் “ ரொம்ப சந்தோஷமா ஃபீல் பன்றேன் சார். நல்ல கதாபாத்திரங்களுக்காக ஏங்கிக்கொண்டிருந்த நேரத்தில் சாருலாதா வாய்ப்பு வந்திருக்கு. இதுலா சாரு, லதா என்கிற இரண்டு ஒட்டிபிறந்த இரட்டைச் சகோதரிகளா நடிக்கிறேன். முதல் இரண்டு ஷெட்யூல் முடிஞ்சுது. ஆனால் முதல் ஷெட்யூல் முழுக்க எந்தப் படத்துக்கு சந்திக்காத கஷ்டத்தை இந்தப் படத்துகான விரும்பி ஏற்றுக் கொண்டேன்.



இந்தமாதிரி ஒட்டிப்பிறந்த இரட்டை பிறவிகளைப் பற்றி வரும் செய்திகளை படித்து ஆச்சர்யப்படும் நாம், அவர்கள் வாழ்க்கை எத்தனை கஷ்டமாக இருக்கும் என்பதை பற்றி நாம் நினைப்பதில்லை. அவர்கள் ஒட்டிப் பிறந்து இருந்தாலும் அவர்கள் வேவ்வேறு சிந்தனை , வெவ்வெறு ரசனையுடன் வளர்கிறார்கள். இது எனக்கு உண்மையிலேயே எனக்கு சவாலான ரோல்!




இந்தப் படத்துக்காக நிஜத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகளாக உள்ள எந்த பெண்களையும் நான் சந்திக்க வில்லை.ஆனால் அவர்களைப் பற்றிய புத்தகங்களை நிறைய படித்து அவர்களைப் பற்றி புரிந்து கொண்டேன்” என்கிறார். படத்தின் முதல் பாதியில் சாருலாதா என்ற ஒட்டிப்பிறந்த இரட்டைச்சகோதரிகளாகவும், இரண்டாவது பாதியில் அறுவை சிகிச்சை மூலம் பிரிந்து விடும் சகோதரிகளாகவும் நடித்து அசத்தியிருக்கிறாராம் பிரியாமணி! இந்தப் படம் ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்ற தகவலும் நம் காதுகளை எட்டுகிறது! இவை எல்லாவற்றையும் விட மிகமுக்கியமான தகவல், இந்தப் படத்தில் பிரியாமணிக்கு ஜோடியே கிடையாது! படத்தை அறிமுக இயக்குனர் பொன்.குமரன் இயக்குகிறார்!

கேப்டன், மகனுக்கு ஹன்ஷிகா, கஜால் என வலைவீசி அட்டகாசம்! தாங்குமா தமிழ் சினிமா?

 கேப்டன் தனது இளைய மகனை சினிமாவில் அறிமுகப்படுத்தயிருக்கிறார். மகனுக்கு சூப்பட் டூப்பராக அறிமுகம் கொடுப்பதற்கு பிளான் பண்ணியிருக்கிறார்.


முதற்கட்டமாக இயக்குனர் முருகதாஸை அழைத்து தனது மகனை வைத்து படம் எடுக்குமாறு கேட்டிருக்கிறார்.”துப்பாக்கி” முடித்து பொலிவூட்…. கோலிவூட் என பறப்பதற்கு தயாராக இருக்கும் முருகதாஸிடம் இப்படி ஒரு குண்டை போட்டால் எப்படி இருக்கும். மனுஷன் தலை தெறிக்க ஓடியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க மகனுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா, காஜல், சமந்தா என்று வலைவீசியிருக்கிறார்கள்.பாவம் அம்மணிகள், கிலி பிடித்து போயுள்ளனராம்…!

கேப்டன் நீங்க கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்…!

“சுருட்டு ” புகைக்க ஆசைப்பட்ட நமிதா!! புதிய பரபரப்புத் தகவல்.

நம்ம நமீதாவுக்கு விநோத ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. ஒரு முறை நமீதா மதுரைப் பக்கம் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி புகைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாராம்.


ஆனால் அது பீடியோ சிகரெட்டோ இல்லை. வண்டியை நிறுத்திவிட்டு, அந்த பாட்டியிடம் போய், நீங்கள் குடிப்பது என்ன? என்று கேட்க, அவரோ, “இது சுருட்டு தாயீ.. ஒரு இழுப்பு இழுக்கிறியா?” என்று கேட்டாராம்.

“சுருட்டுன்னா என்னா’ உதவியாளரைக் கேட்டிருக்கிறார் நமீதா. அவர் ‘சிகார்’ என்று கூறியதும், அப்போதைக்கு வேண்டாம் என்று கூறி வந்துவிட்டாராம்.

ஆனால் அங்கிருந்து வந்த பிறகு, அந்த சுருட்டை ஒரு முறை பிடித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது நமீதாவுக்கு…! நல்ல ஆசை…!

'MY NAME IS NANI' PROMO பாடல்!

  ராஜமெளலி இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'ஈகா' படத்தின் 'MY NAME IS NANI' PROMO பாடல்!
 இப்படம் தான் தமிழில் 'நான் ஈ' என்னும் பெயரில் வெளிவர இருக்கிறது!


பிரபு தேவாவுக்கு மயக்கம் தெளிய வேண்டும்!

   ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் ஆண்டனி எட்வர்டு தயாரிக்கும் 'ஏன் இந்த மயக்கம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் பிரபுதேவா கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த கே.பாக்யராஜ் கலகலப்பாகப் பேசி அனைவரையும் கவர்ந்தார்.

கே.பாக்யராஜ் : "முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி எட்வர்டு நன்றிக்குரியவர். இந்தக் காலத்தில் யார் நடித்தால் படம் வியாபாரமாகும் என்று படத்துக்கு உத்தரவாதம் பார்ப்பார்கள்.புதுமுகங்களை வைத்து உருவாகும் இப்படிப்பட்ட படத்துக்கு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம். இப்படிப்பட்ட தயாரிப்பாளர் வரும்போது, கொடுத்த வாய்ப்பை இயக்குநரும் மற்றவர்களும் காப்பாற்ற வேண்டும். அந்த நம்பிக்கையை காப்பாற்றிக் கொடுத்தால்தான் இன்றும் இவரைப் போல நிறைய பேர் வருவார்கள்.

இதை இயக்கும் ஷக்தி வசந்த பிரபு இயக்குநர் பிரபு தேவாவிடம் பணியாற்றியவர் என்பதை அறிந்து சந்தோஷம். இவ்வளவு பிஸியான நேரத்தில் பிரவு தேவா தன் உதவியாளருக்காக இங்கு வந்திருப்பதிலிருந்து எந்த அளவுக்கு ஷக்தி வசந்த பிரபு தன் இயக்குநரிடம் பெயர் வாங்கியிருக்கிறார் என்பது புரியும்.

படத்தின் தலைப்பைப் பார்த்ததும் பிரபுதேவாவிடம் கேட்க வேண்டும் போலிருந்தது. பிரபுதேவா இன்னும் பத்து வருஷம் தமிழ்நாட்டு பக்கம் வரமாட்டார் என்று சொல்கிறார்கள். அவரது மயக்கம் தெளிய வேண்டும். அவரது இயக்கத்தில் தமிழில் வருஷம் இரண்டு படங்கள் வரவேண்டும் " 

பிரபுதேவா : " இந்த ஷக்தி வசந்த பிரபுவின் பெயர் என்னைப் பொறுத்த வரை கலை என்பதுதான். கலை... கலை என்றுதான் நான் கூப்பிடுவேன். இவர் பயங்கர உழைப்பாளி. இரவு பகல் என்று பார்க்காமல் கடுமையாக உழைப்பவர். அதை நேரில் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர் படமெடுத்திருக்கிறார். நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். அவருக்கு என் வாழ்த்துகள். மீண்டும் இப்படத்தின் வெற்றி விழாவில் சந்திப்பேன் என்று நம்புகிறேன் "

கதாசிரியர் பிரபாகர் : " இன்று புதுமுகங்களை வைத்துப் படமெடுக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். அப்படி படமெடுப்பது பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து குதிப்பது போல... அப்படிப்பட்ட அசாத்திய துணிச்சல் கொண்டவர் இந்தப்படத்தின் தயாரிப்பாளர்."

தயாரிப்பாளர் அந்தோணி எட்வர்டு : " இப்படத்தை எடுப்பதே எங்கள் குடும்பத்தினருக்கு ரொம்ப நாள் கழித்து தான் தெரியும். இயக்குநரையே நீண்ட நாள் கழித்துதான் பார்த்தனர். நான் எப்போதாவது தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சென்றிருக்கிறேன்."

இயக்குநர் ஷக்தி வசந்த பிரபு பேசும் போது பேச வார்த்தை கிடைக்காத மனநிலையில் இருந்தார். "எப்படி பேசுவது என்ன பேசுவது என்றே தெரியவில்லை" என்றவர், வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும், வந்து வாழ்த்திய பிரபு தேவாவுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

பில்லா 2 - A !

  அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கு ஒரு வழியாக சென்சார் முடிந்து விட்டது. ஆனால் படம் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

'பில்லா 2' படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. படம் ஜுன் 22ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் இன்னும் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.

படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி படத்தில் ஒரு சில இடங்களை நீக்க சொல்லி இருக்கிறார்கள். A சான்றிதழ் இருந்தால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. இதைப்பற்றி எல்லாம் தயாரிப்பாளர் கவலைப்படவில்லை.

இன்று மாலைக்குள் படம் எப்போது வெளிவரும் என்பது தெரியவரும். படத்தின் படப்பெட்டிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும். 

பணிகள் எதுவும் தொய்வு இல்லையென்றால் படம் 21ம் தேதி கண்டிப்பாக வெளியாகும். தொய்வு ஏற்பட்டால் படம் 28ம் தேதி தான் வெளியீடு என்று கூறுகிறது படக்குழு.

சிம்பு இயக்க.. ரஹ்மான் இசைக்க.. மன்மதன் 2!



'மன்மதன் 2' படத்தை தானே இயக்கி வெளியிடுவேன் என்று சிம்பு அறிவித்ததில் இருந்தே பல்வேறு கிசுகிசுக்கள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இறுதியாக கிடைத்த தகவலின் படி 'மன்மதன் 2' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என அனைத்து பணிகளையும் பார்க்க போகிறவர் சிம்புவே தான்!

'மன்மதன்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார் சிம்பு. அப்படத்தினை அவரே இயக்கினாலும், அதில் இயக்குனர் என்ற இடத்தில் ஏ.ஜே.முருகன் என்று வெளிவந்தது என்றும் தகவல்கள் வெளியாகின.

டி.ராஜேந்தரிடமும் கீ போர்ட் ப்ளேயராக பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அவரது மகன் இயக்கி நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

பில்லா 2 EXCLUSIVE ஆல்பம்

















































Thursday 14 June 2012

'நான் ஈ' திரைப்படம் -ஜுலை 6

    ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நான் ஈ' திரைப்படம் ஜுலை 6ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது!