Saturday 9 June 2012

தனுஷால் கலக்கமடையும் இயக்குனர்கள்?

       நண்பர்களை கைவிடாத ஒரே ஹீரோ என்று பெயரெடுத்தவர் தனுஷ்! வெற்றிமாறன், பூபதி பாண்டியன், மித்ரன் ஜவஹர் என்று ஒரே இயக்குனர்களோடு தனுஷ் திரும்பத்திரும்ப படம் பண்ணுவதற்குக் காரணம் இவர்கள் அனைவருமே தனுஷுக்கு நெருக்கமான நண்பர்கள்.

   குறிப்பாக வெற்றிமாறனும் தனுஷும் அவ்வளவு நெருக்கம் என்பதால் தான் தனுஷ் சொன்னதை கேட்டு வடசென்னை படத்தில் இருந்து சிம்புவை கழற்றி விட்டார் வெற்றிமாறன் என்கிறார்கள்.

தற்போது சிம்புவுக்கு தயார் செய்த அதே வடசென்னைக் கதையைத்தான் தனுஷுக்கு தலைப்பு மாற்றி எடுக்க இருக்கிறார்கள். வடசென்னை இல்லை என்று ஆனதற்கு, அந்தப் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பதாக இருந்த தெலுங்கு நடிகர் ராணா கடைசிநேரத்தில் கழண்று கொண்டதும் முக்கிய காரணமாம்! தற்போது ராணா விலகிக் கொண்டதிலும் ரஜினியின் தலையீடு இருந்தது என்கின்றன கோலிவுட் பட்சிகள்!

தனுஷின் சைலண்ட் ஆட்டத்தில் வடசென்னை கதைதான் இப்படி ஆனது என்றால், தற்போது இயக்குனர் சிம்புதேவனை தொங்க விட்டதுதான் அந்தோ பரிதாபம் என்கிறார்கள். முதலில் சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற ப்ரீயட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் தனுஷ்! ஆனால் பரத் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்புகொண்ட ‘ மரியான்’ படத்துக்குப் பிறகு நாம் படப்பிடிப்புக்கு கிளம்பலாம்!

மாரீசன், மரியான் ஆகிய தலைப்புகள் ஒன்று போலவே இருப்பதால் தலைப்பை மற்றும் மாற்றிக்கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்புவோம் என்றாராம். ஆனால் கடைசிநேரத்தில் நான் பீரியட் படம் பண்ண இது தருணம் இல்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள் அதனால் எனக்கு வேறு நல்ல ஸ்கிரிப்ட் வரும்போது சொல்லுங்கள், அடுத்த ஆண்டு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்றாராம்!

இதனால் சிம்புதேவன் தனுஷ் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு, தனுஷ் பட இயக்குனர் என்ற கம்பீரத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்ததில் மண்னை அள்ளி போட்டு விட்டாராம்! இதனால் தற்போது சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேஷியின் இரண்டாம் பாகத்தை நம்பி இருகிறார் என்கிறார்கள்!

தற்போது தனுஷ் நடித்து வரும் ‘ராஞ்சனா’ ஹிந்தி படத்தைத் தொடர்ந்து அனுராக் காஷ்யாப் கம்பெனிக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷ் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, விக்ரம்!

        ஆனந்தம் படத்தின் மூலம் தரமான ஜனரஞ்சக இயக்குனர் என்று பெயர் பெற்ற லிங்குசாமி, இரண்டாவதாக இயக்கிய ரன் திரைப்படத்தின் மூலம் மாஸ் மசாலா இயக்குனர் ஆனார்! அவரது ரன் திரைப்படம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, பெங்காளி ஆகிய மொழிகளில் ரிமேக் செய்யப்பட்டது. லிங்குசாமி சில தோல்விகளை கொடுத்தாலும், ஃபாக்ஸ் ஆபீசில் வசூல் ரெக்கார்ட் பிரேக் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது சண்டைக்கொழி! லிங்குசாமிக்கு ஆக்‌ஷன் மசாலா அற்புதமாக வருகிறது என்று பெயர் பெற்றாதால், ஆனந்தம் போல தரமான படங்களை திரும்பவும் இயக்க முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்க இளம் ஹீரோக்கள் துடியாகத் துடித்தாலும், லிங்குசாமியோ மாஸ் ஹீரோகளை இலக்காக வைத்து காய்களை நகர்த்தி வருகிறார். வேட்டையை ஹிந்தியில் ரீமேக் செய்யலாம் என்ற அவரது முயற்சி தொய்வு அடைந்திருக்கும் இந்த நேரத்தில் இரண்டு மாஸ் ஹீரோக்களை அடுத்தடுத்து இயக்கும் வாய்ப்பை தனது கதை சொல்லும் திறன் மூலம் பெற்று இருக்கிறார்.
லிங்குசாமி முதலில் இயக்க இருக்கும் ஹீரோ சூர்யா! இயக்குனர் ஹரி இயக்க இருக்கும் சிங்கம் இரண்டாம் பாகம் படத்தில் நடித்துக் கொடுத்து விட்டு லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கும் சூர்யா, அடுத்து மௌனகுரு இயக்குனர் சாந்தகுமாரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைக்கிறது. தற்போது தாண்டவம் படத்தில் நடித்து வரும் விக்ரம், அந்தப் படம் முடிந்ததும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். இதுவும் நண்பன் போல குறுகிய காலத்தில் தயாராகும் ஒரு படம்! இந்தப் படத்துக்குப் பிறகு லிங்குசாமியின் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்! இவர்களது கூட்டணியில் பீமா தோல்விபடமாக அமைந்தாலும் அடுத்த படம் நிச்சயம் வெற்றி என்று தனது நட்பு வட்டத்தில் சொல்லி வருகிறாராம் விக்ரம்.

மீண்டும் இணையும் பாலா – விஷால்!

     அவன் இவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலாவும் விஷாலும் மீண்டும் இணைகிறார்கள்.
நடிகர் விஷாலை ஒரு நல்ல நடிகராக ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை பாலாவுக்கு உண்டு.அவன் இவன் படத்தில் ஒன்றரைக் கண்ணுடன் பன்முக பரிமானத்தை அவர் காட்டியிருந்தார்.இப்போது ‘சமர்’, ‘மத கத ராஜா’ என இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால், இப்படங்கள் முடிவடைந்த பிறகு பாலாவுடன் இணைகிறார்.இயக்குனர் பாலா தற்போது அதர்வா முரளியை வைத்து ‘பரதேசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த பின் விஷாலுக்கான படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
இந்தப் புதிய படம், விஷாலுக்கு தேசிய விருதைப் பெற்றுத் தரும் அளவுக்கு அமையும் என பாலா கூறி வருகிறாராம்!

பில்லா-2 Vs சகுனி !

'பில்லா 2' படத்திற்கும் 'சகுனி' படத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

'பில்லா 2' ஜுன் 22ம் தேதியும், 'சகுனி' ஜுலை 6ம் தேதியும் வெளியாகும் என செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி 'சகுனி' ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது.

'சகுனி' இன்று சென்சார் செய்யப்பட்டு, ஜுன் 22ம் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டு, தியேட்டர் ஒப்பந்தம் செய்வதை தொடங்கி விட்டார்கள்.

ஆனால் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் 'பில்லா 2' இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. இதனால் படம் எப்போதும் வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

'பில்லா 2', சகுனி இரண்டுமே ஒரே நாட்களில் வெளியாகி போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விநியோகஸ்தர்கள் மத்தியில் இரண்டு படங்களுமே ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

நீண்ட நாட்கள் கழித்து ஒரு பெரிய ஓப்பனிங் இருக்கும் நாயகர்களின் படங்கள் வெளிவருவதால் எந்த படம் வெளிவந்தாலும் விநியோகஸ்தர்கள் காட்டில் பண மழை தான்.. தியேட்டர்காரர்களுக்கு சந்தோஷம் தான்.!

சிங்கப்பூர் IIFA விழாவில் கமல் அறிமுகப்படுத்திய 'விஸ்வரூபம்' வீடியோ வடிவில்...


ரஜினியின் சிறந்த பண்புக்கு இன்னொரு உதாரணம் .. அண்மையில் நடைபெற்ற உண்மைச்சம்பவம் !


    கார்த்திக் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயது முதலே ரஜினி மீது தீவிர ஈடுபாடுள்ள கார்த்திக் தனது வாழ்கையில் எதிர்பாராத விதமாக புற்றுநோய் தாக்கத்திற்கு உள்ளானார். இந்த விஷயம் ரஜினியிடம் அறிவிக்கப்பட்டது. மேலும் கார்த்திக் சூப்பர் ஸ்டாரை பார்க்க விரும்புவதாகவும் கார்த்திக்கின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். அப்போது கார்த்திக் ஹாஸ்பிட்டலில் இருந்ததால் தான் அங்கு வந்து பார்ப்பதாக ரஜினி தெரிவித்தார்.

ஆனால் கார்த்திக்கின் அங்கிளும், அவரது பெற்றோர்களும் ரஜினிக்கு அறிவித்து விட்டு ரஜினியின் ஆபீஸிற்கே சென்று அவரை காண தீர்மானித்தார்கள்.

அவர்களுக்காக காத்திருந்த ரஜினி அவர்கள் வந்த காருக்கு அருகே சென்று அவர்களை வரவேற்றார். மகிழ்ந்து போனார் கார்த்திக். கார்த்திக்கை கட்டி அணைத்து கொண்டு ஆபிஸிற்குள் சென்ற ரஜினி கார்த்திக்கை கட்டி அணைத்தும், கார்திக்கோடு அன்பாக பேசியும், கையெழுத்து போட்டு கொடுத்தும், ரஜினியின் ஞாபகார்த்தமாக ஒரு மொமெண்டோ வழங்கியும் (சிவாஜி த பாஸ் மொமெண்டோ) கார்த்திக்கை மகிழ்வித்தார். தங்களுடைய மகன் தன்னுடைய இறுதி நாட்களில் அடைந்த மகிழ்ச்சியை கண்டு கண் கலங்கி போயினர் பெற்றோர்..

ரஜினிக்கு நன்றி செலுத்தி விட்டு மறுபடியும் காருக்குள் ஏறும் போது தான் நேசித்த ஒருவரை கடைசியாக கண்டு விட்டோம் என்ற பார்வையோடு கார்த்திக்கும், உயிருக்கு உயிராக அன்பு வாய்த்த ரசிகனை இழக்க போகுறோம் என்ற பார்வையோடு ரஜினியும் சந்திப்பை முடித்து கொண்டனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன் அந்த கார்த்திக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்..

அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட போட்டோஸ்..

Friday 8 June 2012

நயன்தாரா -ஆர்யா “கிசு கிசு ”


        ஆர்யா – நயன் பற்றிய கிசுகிசு தான் தற்போதைய தமிழ் திரையுலகின் ஹாட் டாக். இதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்னுமோர் செய்தி தற்போது உலா வருகிறது.

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லி புதிதாக படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேசி வருகிறார்கள்.

இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க இருக்கிறார். ‘சேட்டை’, ‘இரண்டாம் உலகம்’, அஜீத்துடன் ஆர்யா நடிக்கும் இயக்குனர் விஷ்ணுவர்தன் படம் என அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்தவுடன் தான் இப்படம் துவங்குகிறது.

இதில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேசி வருகிறார்கள். நயன்தாரா பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால் எப்படியாவது இப்படத்திற்கு தேதிகள் ஒதுக்கி தருமாறு நச்சரித்து வருகிறார்களாம்.

‘பாஸ் (எ) பாஸ்கரன்’ வெற்றிக் கூட்டணி என்பதாலும், ஏற்கனவே இருவரையும் பற்றி கிசுகிசுக்கள் வலம் வருவதால் படத்திற்கு விளம்பரமாக அமையும் என்பதால் தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறதாம் படக்குழு.