Saturday 28 July 2012

நடிகைகளிடம் தர்ம அடி வாங்கிய சூர்யாவின் தம்பி.



    தன்னை பிரபல நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் தம்பி என்று சொல்லிக் கொண்டு திரிந்த சரவணன் என்ற இளைஞருக்கு நடிகைகளிடம் தர்ம அடி கிடைத்துள்ளது.

நடிகைகள் சோனியா அகர்வால் மற்றும் சோனாவிடம்தான் இந்த இளைஞர் சிக்கி அடி வாங்கியுள்ளார்.

இந்த இளைஞர் முதலில் பிரபல மால் ஒன்றில் வேலை பார்த்தவராம். எப்படியோ அவர் சூர்யா- கார்த்தி அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்துவிட்டார்.

சூர்யா, கார்த்தி பெயரைச் சொல்லி திரையுலகில் இருப்பவர்களின் கைபேசி எண், சமூக வலைதளங்களில் நட்பு எனப் பெற்று அதை தவறாக பயன்படுத்தி வந்தாராம்.

'என்ன பாக்கனும்னா என் அண்ணனுங்க அலுவலகத்துக்கு வாங்க. நான் அங்க தான் இருப்பேன்' என்று கூறி அனைவரையும் நம்ப வைத்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கு அருகில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் சோனியா அகர்வாலை பார்ட்டியில் தற்செயலாக சந்தித்த சரவணன், அவரிடம் ஏதோ தவறாகக் கூறியிருக்கிறார். அவர் தமிழில் பேசியதால் புரிந்து கொள்ளாத சோனியா, அதை சக நடிகை சோனாவிடம் அதை அப்படியே ஒப்பிக்க, சோனாவோ டென்ஷனாகி சரவணனை போட்டு அடித்ததாகக் கூறப்படுகிறது.

சரவணன் கூறியதன் அர்த்தத்தை சோனா விளக்க சோனியா அகர்வாலும், அவரது தம்பியும் ஹோட்டலில் அனைவர் முன்னிலையிலும் சரவணனை புரட்டியெடுத்துவிட்டார்களாம்.

ஹோட்டல் ஊழியர்கள் வந்து தடுத்து சூர்யா, கார்த்திக்கு தகவல் சொன்ன பிறகு, கொஞ்ச நேரத்தில் சண்டை சமாதானமானதாம்.

பாலிவுட்டில் கரீனா கபூருக்கு அடுத்த இடத்தில் அசின்?



       அசின் தற்போது மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ‘போல்பச்சன்’ படம் ஹிட்டானதே இந்த சந்தோஷத்துக்கு காரணமாம். வெற்றிப் படங்கள் அமைந்தது அசினுக்கு புதிதல்ல என்றாலும் ‘போல்பச்சன்’ படம் அவருக்கு புது அந்தஸ்தை பெற்று கொடுத்துள்ளது.
100 கோடி ரூபாய் வசூல் சாதனை படங்களில் நடிப்பதை இந்தி நடிகைகள் கவுரவமாக பார்க்கிறார்கள். இதில் கரீனா கபூர் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்த ‘கோல்மால் 3’, ‘திரி இடியட்ஸ்’, ‘பாடிகார்டு’, ‘ரா ஒன்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கரீனா கபூருக்கு அடுத்த இடத்துக்கு அசின் உயர்ந்துள்ளார். அசின் ஏற்கனவே நடித்த ‘கஜினி‘, ‘ரெடி’, ‘ஹவுஸ்புல்’ படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தன. தற்போது ‘போல்பச்சன்’ படம் 100 கோடி வசூல் சாதனையை தாண்டி விட்டது. இதனால் கரீனாவுக்கு போட்டியாக அசின் உயர்ந்து விட்டார்.

இதுகுறித்து அசின் கூறும்போது “நான் இந்தி திரையுலகில் நுழைந்து இன்னும் ஐந்து ஆண்டுகள்கூட ஆகவில்லை. இவ்வளவு குறைந்த காலத்தில் எனக்கு இதுபோன்ற உயர்ந்ததொரு அந்தஸ்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘போல்பச்சன்’ எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு படமாகும் என்றார்.

தனுஷ் பிறந்தநாள் பார்ட்டியில் சிம்பு. தண்ணிப் பார்ட்டியில் ஐஸ்வர்யா மிஸ்ஸிங்.



ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்!

நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள்.

இருக்கட்டும்.

இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர்.

சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!

ஸ்ரீதேவி படத்தில் அஜித்...!


Ajith to cameo in Sridevis English Vinglishஸ்ரீதேவி நடித்து வரும் இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில், ‌கெஸ்ட் ரோலில் நடிகர் அஜித் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு சினிமாவை கலக்கிய ஸ்ரீதேவி, பின்னர் இந்தி திரையுலகிலும் கால்பதித்து, அங்கும் முத்திரை பதித்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் நடிக்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் அமெரிக்கா செல்லும் ஸ்ரீதேவி, அங்கு மொழி பிரச்னையால், ஆங்கில மொழியை திக்கி திணறி பேசி அங்குள்ளவர்களால் கிண்டல்களுக்கு ஆளாகிறார். பின்னர் அதை சவாலாக ஏற்று முறைப்படி ஆங்கிலத்தை பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். இதுவே இப்படத்தின் கதை. கவுரி ஷிண்டே இயக்கும் இப்படத்தை பால்கி தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் ஸ்டில்லை வெளியிட்டனர் படக்குழுவினர். ஸ்ரீதேவிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் இப்படத்தை தென்னிந்தியாவிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். ஏற்கனவே இந்தி இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் ஒரு முக்கிய கேரக்டரில் தோன்றவுள்ளார். அதேப்போல் தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாக இருக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அமிதாப் நடித்த கேரக்டரில் டாப் ஸ்டார் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது. அதன்படி ஆரம்பத்தில் அமிதாப் ரோலில் ரஜினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. ரஜினியுடன் ஸ்ரீதேவி நிறைய படங்களில் நடித்துள்ளதாக அவர் இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்பது படக்குழுவின் நம்பிக்கை. ஆனால் ரஜினியோ மறுத்துவிட்டாராம்.

இந்நிலையில் ரஜினிக்கு பதில் அந்த கேரக்டரில் இப்போது அஜித்தை நடிக்க பேச்சுவார்ததை நடத்தி வருகி்ன்றனர். இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். டாப்ஸ்டார் ஒருவ‌ரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு நாளில் முடிவாகிவிடும் என்றும், இதற்கான அறிவிப்பு முறைப்படி ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

கமலை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்!


Hollywood director praises kamalhassanகதாநாயகன், வில்லன் என, இரு வேடங்களில் கமல் நடித்த படம், "ஆளவந்தான்! கமல் எழுதிய, "தாயம் என்ற கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் ஒரு சண்டைக் காட்சி, "கிராபிக்ஸ் முறையில், வித்தியாசமாக படமாக்கப் பட்டிருந்தது. இது, "ஹாலிவுட் இயக்குனர் குவென்டைன் டிரன்டினோ என்பவரை மிகவும் கவர்ந்து விட்டது. கமலை வெகுவாக பாராட்டிய அவர், 2014ல் தான் இயக்கவுள்ள படத்தில், ஆளவந்தானில் இடம் பெற்றது போன்ற ஒரு சண்டைக் காட்சியை, அதே பாணியில் உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடரும் விஜய்யின் துப்பாக்கி படத்திற்கான சிக்கல்!!


Continously trouble for vijays thuppaki movieவிஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்து வருவதாகவும், அதனால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 25ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

துப்பாக்கி படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் தொடர்ந்து படதலைப்பு தொடர்பான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படாததால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

யார் சொன்னது சகுனி ப்ளாப் என்று! கார்த்தி கேள்வி...?


Saguni is not flop flim says karthiசகுனி ப்ளாப் படம் என்று யார் சொன்னது, வசூல் ரீதியாக படம் நன்றாக போய் கொண்டு இருக்கிறது என்று அப்படத்தின் நாயகன் கார்த்தி தெரிவித்துள்ளார். புதுமுகம் ஷங்கர் தயாள் கார்த்தி, ப்ரனீதா, சந்தானம், பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சகுனி. இப்படம் சரியா‌க போகவில்லை என்பது தான் அனைத்து தரப்பட்ட ரசிகர்களின் கருத்து. ஆனால் இக்கருத்தை படத்தின் நாயகன் கார்த்தி தவறானது என்று கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கார்த்தியிடம், சகுனி தோல்வி படம் தானே என்று கேட்டுள்ளனர். அதற்கு கார்த்தி, சகுனி தோல்வி படமா...? ‌யார் சொன்னது. இன்று நாட்டில் நடக்கும் அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி சகுனி படத்தை எடுத்துள்ளோம். சகுனி படத்துக்கு கொஞ்சம் அப்படி இப்படி என்று விமர்சனம் வந்தது உண்மைதான். சிலரது எதிர்பார்ப்பை இந்தபடம் பூர்த்தி செய்யவில்லை. அதற்காக படம் ப்ளாப் என்று கூறமுடியாது. வசூல் ரீதியாக படம் நன்றாக போய் உள்ளது. இனி வர என்னுடைய படங்களில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்துவேன் என்றார்.

Friday 27 July 2012

7ஆம் அறிவை போல் மரபணுவை சிண்ட வரும் உயிர்மொழி!


     ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் வழங்க, மானவ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘உயிர்மொழி’. புதுமுகங்கள் ராஜீவ், சசி, சர்தாஜ், கீர்த்தி உட்பட பலர் இத் திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.

படத்தை இயக்கும் ராஜா, கூறியதாவது…

மனிதனின் மரபுப் பண்புகள் உள்ளடங்கியதை டி.என்.ஏ என்கிறோம். இதன் உள்ளடக்கம், செயல்பாடுகள் குறித்து சொல்லும் படம்.

இதை மையப்படுத்திய காதல் கதையில், 5 ஆண்களின் வாழ்க்கையில், பார்வையிழந்த பெண் குறுக்கிடுகிறாள்.

ஐந்து பேருமே ஐந்து ரகம். ஒருவருடன் ஒருவர் தொடர்பின்றி அந்த பெண்ணிடம் பழகுகிறார்கள். அவர்களில் அவள் யாரை விரும்புகிறாள் என்பது கிளைமாக்ஸ்.

ஐந்துபேர் குணாதிசயங்களில் டி.என்.ஏ மூலக்கூறுகள் என்னென்ன மாற்றங்களை செய்கிறது என்பது சுவாரஸ்யமான திரைக்கதை.

ரஞ்சிதாவை தொடர்ந்து கவுசல்யா??


     எத்தனை முறை விபூதி பூசினாலும் மறுபடியும் மறுபடியும் நெற்றியை காட்டுவதில் நமக்கு நிகர் நாம் மட்டுமே. ரஞ்சிதாவை தொடர்ந்து தனது அழகான நெற்றியை நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு அர்ப்பணித்திருக்கிறார் நடிகை கவுசல்யா.

காலமெல்லாம் காதல் வாழ்க, சொல்லாமலே போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் காலிங்பெல்லை விடாமல் அடித்தவர் கவுசல்யா.

வரிக்குதிரை தேய்ந்து வண்ணத்துப்பூச்சி ஆன மாதிரி மார்க்கெட் தேய்ந்து டி.வி ஷோக்களில் கவனம் செலுத்தினாலும் கவுசல்யாவின் சிரிப்பில் மட்டும் அந்த காந்தம் போகவேயில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு தீராத முதுகுவலி வந்து சேர்ந்ததாக தகவல்.

எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் அது தீராததால் தோழிகளில் அட்வைஸ்படி நித்தியானந்தாவின் ஆசிரமத்தை நாடியிருக்கிறார் கவுசல்யா. இவருக்கு ஹீலிங் தெரபி கொடுத்துக் கொண்டிருக்கிறாராம் நித்தி.

துப்பாக்கிக்கு தொடர்கிறது கள்ளதுப்பாக்கி ஏழரை! தீர்வது எப்போ?


இளையதளபதியின் ‘துப்பாக்கி’ திரைப்படம் எமகண்டத்தில் சூட்டிங் தொடங்கியதோ என்னவோ தெரியவில்லை, தொடர்ச்சியாக பிரச்சினைதான்.

பட விளம்பர போஸ்டர்களில் சிகரெட் பாபனை தொடர்பில் தொடங்கிய தலையிடி, பட டைட்டில் வரை தொடர்கிறது.

கள்ளத்துப்பாக்கி என்று ஒருவர் பெயர் வைத்தால் துப்பாக்கி என்று பெயர் வைக்கக் கூடாதா. நான் ஈ மாதி‌ரி நெருப்பு ஈ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

சிங்கம்புலி என்று படம் வந்திருக்கிறது. சிங்கம் என்றும் படம் வந்திருக்கிறது. எனவே துப்பாக்கி மீதான தடையை நீக்க வேண்டும் என்று நேற்று லா‌ஜிக்காகதான் தாணு தரப்பு மனு செய்தது.

மனு விசாரனையில், துப்பாக்கி டைட்டிலுக்கான தடையை 25ஆம் தேதி (இன்று) வரை நீதிபதி நீட்டித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன்படி இன்று இவ் வழக்கு விசாரனைக்கு வந்தபோது…

படங்களின் தலைப்பை பதிவு செய்யும் ஃபிலிம் சேம்பர் தங்கள் தரப்பை விளக்க இன்னும் சற்று அவகாசம் கேட்டுள்ளது. அதனால் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவகாசம் அளித்து, அதுவரை துப்பாக்கி டைட்டிலை பயன்படுத்துவதற்கான தடையை நீட்டித்துள்ளது.

இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்தார் வனிதா விஜயகுமார்.



        தன் இரண்டாவது கணவர் ஆனந்தராஜிடமிருந்து விவாகரத்து கோரி நேற்று மனு செய்தார் நடிகை வனிதா. அவருடன் ஆனந்தராஜும் வந்து கையெழுத்திட்டார்.

நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதாவுக்கும், நடிகர் ஆகாஷூக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜய் ஸ்ரீ ஹரி (வயது 10), ஜோவிகா (7) என்ற குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் வனிதாவுக்கும், ஆகாஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பரஸ்பர விவாகரத்தும் பெற்றுவிட்டனர்.

பின்னர் ஆனந்தராஜன் என்பவரை வனிதா 2-வதாக திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஜெய்னிதா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் விஜய் ஸ்ரீ ஹரி யாருடன் வாழவேண்டும் என்பதில் வனிதாவுக்கும், முதல் கணவர் ஆகாஷுக்கும் பெரும் சண்டையே ஏற்பட்டது. பின்னர் பலத்த போராட்டத்துக்கிடையே அந்த பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்பட்டது. மகனுக்காக வனிதா தன் இரண்டாவது கணவரை உதறவும் முடிவு செய்தார்.

எனவே 2-வது கணவர் ஆனந்தராஜனுடன், வனிதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.

ஆனால் ஜெய்னிதா யாருடன் வாழவேண்டும் என்பது உள்ளிட்ட சில பிரச்சினையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்ததால், பரஸ்பரம் விவாகரத்து கோரும் மனு ஏற்கப்படவில்லை. தற்போது 2 பேரும் சமரசமாகிவிட்டதாகத் தெரிகிறது.

நேற்று மாலை சென்னை குடும்பநல கோர்ட்டுக்கு 2 பேரும் வந்திருந்தனர். பரஸ்பரம் விவாகரத்துகோரும் மனுவில் 2 பேரும் கையெழுத்திட்டு தாக்கல் செய்தனர். இந்த மனு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.

நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம். கும்கி விழாவில் கமல்ஹாசன்


Kamal speaks about Sivaji in Kumki function.
பிரபு மகனை வாழ்த்த, ரஜினி வந்தது ரொம்ப முக்கியமான விஷயம். ரொம்ப நியாயமான மனுஷங்க இந்த ஆளு, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

கும்கி இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது:
"விக்ரம் பிரபு யானையின் இரண்டு தந்தங்களை பிடித்தபடி, அதன் நெற்றியில் முத்தமிடுவதைப் பார்த்து, அந்த யானையை அவர் தாத்தா (சிவாஜி)யுடன் ஒப்பிட்டார்கள். அதே யானையை பிடித்துக்கொண்டுதான் நானும், ரஜினியும் உயரே வந்தோம். எங்களை தூக்கி விட்டது அந்த யானைதான்.
நான் ஒரு தந்தத்தையும், ரஜினி ஒரு தந்தத்தையும் பிடித்துக்கொண்டோம். சிவாஜி குடும்பத்தில் என்னையும் ஒரு மகனாக ஏற்றுக்கொண்டது, அவருடைய பெருமிதம். ராம்குமார், பிரபு இருவரும் என்னை அண்ணனாக ஏற்றுக்கொண்டது, எனக்கு பெருமை. அவர் (சிவாஜி) இல்லாதபோதும் எங்கள் உறவு தொடர்கிறது.
விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து ராம்குமார், பிரபு மட்டுமல்ல, அவருடைய பெரியப்பா நானும் பெருமைப்படுகிறேன். விக்ரம் பிரபு முதல் படியில் அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார் என்றார்கள். அவர் அருவி மீது அழுத்தமாக கால்களை ஊன்றியிருக்கிறார். அந்த அருவியில் இருந்து கொட்டுவது, எங்கள் அன்பு.
இந்த படத்துக்கு மினிமம் கேரண்டி' கொடுக்கலாம். 'கர்ணன்' சாம்பிள் பார்த்தீங்கள்ல...
நியாயமான மனுஷன்...
இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்தது பாக்கியம்.
நான் செய்த மிகப்பெரிய கெட்டிக்காரத்தனம், என் குருநாதர் (சிவாஜி) இருந்தபோதே `தேவர் மகன்' படத்தின் மூலம் அவருக்கு சலாம் போட்டதுதான். அது நான் செய்த இன்னொரு பாக்கியம்,'' என்றார்.

3 படத்தில் விட்டதை வாளக்குட்டியில் பிடித்த அமலாபால்.


      கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

தனுஷை வைத்து சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டியில், அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.

அமலாவுக்கு தமிழில் உள்ள ஒரே படம் நிமிர்ந்து நில். வேறு படங்கள் இல்லாத நிலையில், தான் அமெரிக்கா போய் அழகைக் கூட்டிக் கொண்டு வந்த பெருமையை மீடியாவில் பரபரவென பரவவிட்டார்.

விளைவு, ஏற்கெனவே ஜோடி சேரவிருந்து கடைசியில் கைகூடாமல் போன தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். 3 படத்தில் தனுஷ் ஜோடியாக முதலில் ஒப்பந்தமாகி பிரஸ் மீட்டில் கூட கலந்து கொண்டவர் அமலா பால் என்பது நினைவிருக்கலாம்.

சொட்ட வாளக்குட்டி படத்தை கதிரேசன் தயாரிக்கிறார். இவர் பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தயாரித்தவர். களவாணி, வாகை சூட வா புகழ் சற்குணம் இயக்குகிறார். செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையிலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்தது.

அப்போது பார்த்து, மீடியாவில் இந்த திடீர் அழகி அமலாவின் பேட்டியும் படங்களுமாக நிறைக்க, சரி வரவச்சுத்தான் பார்ப்போமே என அழைத்தாராம் சற்குணம். பேச்சு இப்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் அளவுக்குப் போய்விட்டதாம்!

நான் ஈ இயக்குனர் படத்தில் நான் இல்லை. உதயநிதி ஸ்டாலின்




நான் ஈ' படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இப்போது உலா வரும் செய்திகள் அனைத்திலும் இயக்குனர் ராஜமெளலியின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.


'நான் ஈ' படத்தினை அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நேரடி தமிழ்ப்படம் பண்ண ராஜமெளலி தயாராகி வருவதாகவும், அதில் உதயநிதியே நாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது " இச்செய்தியில் உண்மையில்லை. நான் ராஜமெளலி சாரை பார்த்து ஒரு வருடம் ஆகிறது.

இன்னும் 'நான் ஈ' படத்தினை நான் பார்க்கவே இல்லை. நான் வெளியிட்ட 'மஹாதீரா' படத்தின் டப்பிங் 'மாவீரன்' இசை வெளியீட்டு விழாவின் போது அவரைச் சந்தித்ததோடு சரி, அதற்கு பிறகு நான் அவரை பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சுந்தர்.சி சார் விஷால் படம் முடிந்தவுடன் எங்களது நிறுவனத்திற்கு படம் பண்ண இருக்கிறார்.

அக்கதை எனக்கு பிடித்திருந்தால், அதில் நாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனக்கு சரியாக இருந்தால் மட்டுமே அக்கதையில் நடிப்பேன் இல்லையென்றால் தயாரிக்க மட்டுமே செய்வேன்.

எங்களது நிறுவனம் மூலம் அடுத்து 'நீர்ப்பறவை' வெளிவர இருக்கிறது. அப்படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி, சமுத்திரக்கனி, பிரபு சாலமன் இவர்களது அடுத்த படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. " என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு செய்தி : ராஜமெளலி இயக்கும் அடுத்த தெலுங்கு படத்தின் நாயகன் பிரபாஸ்.

காமெடி பீஸ் மாதிரி இல்லாம ஆவேசமான நங்கையாக நடிக்கும் ஜெயமான ஹீரோ.



        தல ஹீரோ ஜோடியா நடிச்ச ஓமனகுட்ட நடிகய ராசி இல்லாதவருன்னு முத்திரை குத்தறாங்களாம்... குத்தறாங்களாம்... இத கேள்விப்பட்ட அம்மணி நொந்துபோயிட்டாராம். நெறய படங்கள்ல நான் நடிச்சிடல. ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். அதுக்குள்ள ராசி இல்லாத நடிகைன்னு சொல்றத ஏத்துக்க முடியாது. ராசியிலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. அந்த வளையத்துல என்னய சிக்க வெக்காதீங்கன்னு சொல்றாராம்... சொல்றாராம்...
சமந்த ஹீரோயினுக்கு ஸ்கின் பிரச்னை தீராத தொல்லையா இருக்காம்... இருக்காம்... வெண்ணெய் திரண்டு வர்றப்ப தாழி உடைஞ்ச கதயா பெரிய படங்கள்ல சான்ஸ் வரப்ப இப்படியொரு பிரச்னை வரும்னு நெனச்சிகூட பாக்கலயாம். பேஸ்கட்ட வச்சித்தான் இன்டஸ்ரில ‘பேஸ்’ போட முடியும். அந்த பேஸ்கட்லய இப்ப இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காம். ஒருவழியா ஆக்டிங்குக்கு டாட்டா காட்டிடலாமான்னுகூட சில நேரத்துல மனசு வெறுத்துப்போகுதாம்... போகுதாம்...
நாட்டாமை நடிகர், டான்ஸ் ஹீரோ, ஸ்டன்ட் கோழி நடிகரெல்லாம் திருநங்க வேஷத்துல நடிச்சாப்பல ஜெயமான ஹீரோவுக்கும் ‘யோகி’ இயக்கும் ஆதி ஆண்டவன் படத்துல வேஷம் அமைஞ்சிருக்காம்... இருக்காம்... இத சஸ்பென்ஸாவே பட குழு மெயின்டன் பண்றாங்களாம். வழக்கமா படங்கள்ல காட்ற காமெடி பீஸ் மாதிரி இல்லாம ஆவேசமான நங்கயா காட்டணும்னு இயக்கம் முடிவு பண்ணிருக்காராம்... இருக்காராம்...

ஸ்ரீகாந்துக்காக குத்துப்பாட்டு பாடிய சிம்பு!


Kuttuppattu for Srikanths Simbu!தனக்கு மட்டுமன்றி, மற்ற கதாநாயகர்களுக்கும் பின்னணி பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் சிம்பு, "எதிரி எண் - 3 படத்தில் ஸ்ரீகாந்துக்காக, "நச்சுக்கு நச்சுக்குன்னு எனத் துவங்கும் ஒரு குத்துப் பாடலை, தரன் இசையில் பாடியுள்ளார். நாற்பது லட்சம் செலவில், எட்டு விதமான "செட் போடப்பட்டு, ஸ்ரீகாந்த் - பூனம் பாஜ்வா இருவரும், அந்தப் பாடலுக்காக குத்து போட்டுள்ளனர்."இளவட்ட ரசிகர்களை கவரும் பாடலாக இது இருக்கும், என்கிறார், படத்தின் இயக்குனர் ராம்குமார்.

ஹன்சிகாவை விட எனக்கே முக்கியத்துவம்! அஞ்சலி!


Hansika important than myself! Anjali!"சேட்டை படத்தில், இன்னொரு கதாநாயகியாக ஹன்சிகாவும் இருக்கிறாரே? உங்கள் இருவரில், யார் முதன்மை நாயகி என, அஞ்சலியிடம் கேட்டால், "இந்தப் படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் நானே, படத்தின் முக்கிய நாயகி, என்கிறார். பத்திரிகையாளராக நடிக்கும் எனக்கு, கதையிலும் முக்கியத்துவம் தந்துள்ளார் இயக்குனர். "இந்தப் படத்தில் நான், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்தி பரவி உள்ளது. ஆனால், எனக்கு நகைச்சுவை வேடம் கிடையாது. நவீன மங்கையாக நடித்துள்ளேன். அதேசமயம், ரசிகர்களை ரசிக்க வைக்க, மிதமான கவர்ச்சியும் உண்டு, என்கிறார்.

கம்பி மேல் நடந்து சாகசம் செய்த ரோஜா!


Rose to the top wire walking adventure!"மாஜி நடிகை என்ற அடையாளத்தோடு, அரசியல் களத்திலும் புகுந்து சில காலம் கலக்கியவர் ரோஜா.சமீபகாலமாக, அரசியல் பணியை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் கலைச் சேவையாற்ற வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரோஜா நடித்துள்ள படம், "வேட்டையாடு! இதில் ஒரு பாடலில், பாண்டியராஜனுடன் இணைந்து, கழைக்கூத்தாடியாக நடனமாடி உள்ளார். கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை சொல்லும் அந்தப் பாடலில், கம்பி மேல் நடப்பது, ஒற்றை "வீல் சைக்கிள் ஓட்டுவது என்றெல்லாம் சாகசம் செய்கிறார் ரோஜா.

பாடகரான பார்த்திபன்!


Singer Parthiban!ரதன் சந்திரசேகர் இயக்கும் படம், "என் பெயர் குமாரசாமி! புதுமுகங்கள்நடிக்கும் இந்தப் படத்தில், படுக மொழி பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதை, படுக இனத்தின் முதல் பட்டதாரியான சாந்தி தேசிங்கு பாடியுள்ளார். இதே படத்தில், "வனப்புடை மகளிர் சொல்லும் என்றொரு சித்தர் வடிவ பாடலை, நடிகர் பார்த்திபன் பாடி உள்ளார். இது சினிமாவில் அவர் பாடும் முதல் பாடல். பார்த்திபனின் குரலும், தமிழ் உச்சரிப்பும் மிகத் தெளிவாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே, இந்தப் பாடலை அவரை பாட வைத்தேன், எனச் சொல்கிறார் இயக்குனர்.

விக்ரம் தான் எனக்கு பிடிக்கும்! அருந்ததி!!



Vikram likes me! Arundhati
"கூத்து, சரவண பொய்கை படங்களில் நடித்து வரும், "வெளுத்துக்கட்டு அருந்ததி, தமிழ் கதாநாயகர்களில், விக்ரம் தான் தனக்கு பிடித்தமானவர் என்கிறார். "காசி, அந்நியன், தெய்வத்திருமகன் போன்ற படங்களில் விக்ரமின் நடிப்பு, என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. அதிலிருந்து நான், விக்ரமின் ரசிகையாகி விட்டேன் எனச் சொல்லும் அருந்ததிக்கு, விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை. ஒரு ரசிகையாய் இருந்தாலே போதும் என்கிறார். அவரிடத்தில், ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகை என, வெளிப்படையாக சொல்வதால், மற்ற நடிகர்கள் உங்களை கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்றால், "அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என் மனதில் பட்டதை சொன்னேன். மேலும், விக்ரம் நல்ல நடிகர் என்பது, அனைவருக்கும் தெரிந்தது தானே என்றும் சொல்கிறார், அருந்ததி.

Thursday 26 July 2012

சர்வதேச ரசிகர்களுக்காக மகாபாரதம் படம் எடுப்பேன். நான் ஈ இயக்குனர் ராஜமெளலி


ஸ்.எஸ்.ராஜமௌலி... தென்னிந்தியாவையே 'ஈஈஈஈஈ...’ என ரீங்கரிக்கவைத்தவர். 'இயக்கிய ஒன்பது படங்களும் ஹிட்’ என்ற அசாதாரணச் சாதனைக்குச் சொந்தக்காரர். 'ஒரு பேட்டி வேண்டுமே?’ என்று மெசேஜ் அனுப்பினால், 'மாலை ஆறு மணிக்கு ஃப்ரீயா? நானே அழைக்கிறேன்!’ என்று பதில் அனுப்பியவர், சரியாக ஆறு மணிக்கு அழைக்கவும் செய்தார்.
 ''நீங்கள் இயக்கிய ஒன்பது படங்களும் ஹிட். அந்த சக்சஸ் ஃபார்முலா என்ன?''
''அப்படிலாம் எந்த ஃபார்முலாவும் இல்லை. ஒவ்வொரு படம் பண்ணும்போதும், 'இது நல்லபடியா ஓடுமா?’னு டென்ஷன் படபடக்கும். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ முடிஞ்சு ரசிகர்கள் பல்ஸ் ரிசல்ட் தெரிஞ்ச தும்தான் நிம்மதியா இருக்கும். உண்மையில் எந்த சினிமா ஜெயிக்கும்னு இங்கே யாருக்குமே தெரியாது. எனக்கும் தெரியாது. என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுறார். அவருக்கு என்னோட உச்சபட்ச உழைப்பைக் கொடுக்கணும். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். படம் கமிட் ஆகிட்டா, தூங்கி எந்திரிச்சதுல இருந்து, தூங்கப் போற வரைக்கும் மனசு, உடம்பு எல்லாத்தையும் உழைப்புக்குக் கொடுத்திருவேன். அவ்வளவுதான்!''

''உங்க வொர்க்கிங் ஸ்டைல் என்ன?''
''எனக்குப் பிடிக்கிறவரை வேலை பார்ப்பேன். என் மூணாவது படம் 'சை’ (sஹ்மீ). ரக்ஃபி விளையாட்டை மையமாவெச்சு எடுத்த படம். எனக்கு ஒரு கொள்கை உண்டு. ஒரு படத்துக்கு எவ்வளவும் செலவு செய்யலாம். ஆனா, அது அந்தப் படத்தோட பிசினஸுக்குள் இருக்கணும்னு. அந்தப் படத்துக்காக நான் ஷூட் பண்ண ஒரு சீன் எனக்கே பிடிக்கலை. திரும்ப ஷூட் பண்ணா, பட்ஜெட் பிசினஸைத் தாண்டிடும். அதுக்காக அப்படியே அந்த சீனை வைக்கவும் மனசு இல்லை. என்ன பண்றது? தயாரிப்பாளர்கிட்ட போய், '25 லட்ச ரூபாய் கொடுங்க. அந்த சீனைத் திரும்ப எடுத்துடுறேன். அந்தப் பணத்தை என் சம்பளத்துல கழிச்சுக்கோங்க’னு சொன்னேன். அவர், 'உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. இருந்தாலும், அந்தப் பணத்தைக் கடனா தர்றேன். படம் ரிலீஸாகி நான் போட்ட பணத்தைவிட அதிகமா லாபம் எடுத்துச்சுன்னா, அந்த 25 லட்சம் ரூபாயை நான் கழிக்க மாட்டேன். அதை உங்க சம்பளமா கொடுப்பேன்’னு சொன்னார். படம் ரிலீஸாகி மூணாவது நாள் எனக்கு அவர் பேசுன சம்பளத்துல ஒரு பைசா குறைக்காம கொடுத்துட்டார். வொர்க்கிங் ஸ்டைல்னு என்ன... வேலை பார்த்துட்டே இருப்பேன்... வேற எதுவும் தெரியாது.''
''உங்க ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஸ்டைல். இது தானா அமைஞ்சதா... இல்லை அதுக்காகக் கதை தேடுவீங்களா?''
''வித்தியாசமாத்தான் இருக்கணும்னு யோசிக்கிறது இல்லை. நிறைய விஷயங்கள் பேசுவோம். 'அட... இது நல்லா இருக்கே’னு யோசிக்கவெச்சா, அதுதான் என் அடுத்த கதை. அதே மாதிரி ஏற்கெனவே படங்கள் வந்திருந் தாலும் நான் கவலைப்பட மாட்டேன். புத்தம் புதுசா ஒரு லைன் இருந்தாலும், எனக்குப் பிடிக்கலைன்னா அதைத் தொட மாட்டேன். நான் பண்ணின 'சிம்ஹாத்ரி’ (தமிழில் 'கஜேந்திரா’), 'சத்ரபதி’, 'விக்ரமார்குடு’ (தமிழில் 'சிறுத்தை’) இந்த மூணும் கிட்டத்தட்ட ஒரே கதைதான். ஆனா, பிரசன்ட் பண்ண விதம் வேற. ஒரு படம் சத்யம் தியேட்டர்ல உக்காந்து பார்க்குறவங் களுக்கும் பிடிக்கணும். கிராமத்து டாக்கீஸ்ல ரெண்டு மாசமோ, ரெண்டு வருஷமோ கழிச்சு ரிலீஸ் ஆகுறப்பபார்க்குறவங்களுக்கும் பிடிக்கணும். அப்படித்தான் என் ஒவ்வொரு படமும் இருக்கணும்னு ஆசை.''
''உங்க படங்களை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தினு ரீமேக் பண்றாங்க. அதை நீங்களே பண்ணிடலாமே?''
''ரீமேக் ரொம்ப போருங்க. சுடச் சுடச் சாப்பிடுற மாதிரி வராது. ஒரு கதையைப் பிடிச்சதும் அடிச்சுப் பிடிச்சு வேலை பார்க்கிற எக்ஸைட்மென்ட் ரீமேக்ல வராது. அதனால, நான் ரீமேக் பண்றது இல்லை. நல்ல படங்களைப் பார்த்தா, ரொம்ப சந்தோஷப்படுவேன். ரீமேக் பண்ண ஆசைப்பட மாட்டேன். என் சாப்பாட்டை நானே சமைச்சு, நானே பரிமாறணும்.''
''இந்திக்கு உங்களைக் கூப்பிட்டுட்டே இருக்காங்க. ஆனா, ஆந்திரத்தைவிட்டு கிளம்ப மாட்டேங்குறீங்களே?''
''வேணாம். இதுவே வசதியா இருக்கு. தமிழ், தெலுங்கு ரெண்டு ஃபீல்டுமே ஒண்ணுதான். ரசிகர்கள் ரசனை கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும். அதனாலதான் 'நான் ஈ’ தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் ஹிட் ஆச்சு. இந்தி ஃபீல்டு வேற. எனக்கு அது செட் ஆகுமானு தெரியலை. இன்னொரு விஷயம்... கைல இருக்கிற வேலைகளை முடிக்கவே நாலு வருஷம் ஆகும். அப்புறம் பார்த்துக்கலாம்.''
''உங்க கனவுப் படம் என்ன?''
''மகாபாரதத்தைப் பிரமாண்டமா எடுக்கணும். அதுக்கு நிறைய அனுபவம் வேணும். அதைத் தேடித்தான் இப்போ ஒவ்வொரு படத்திலும் உழைச்சுட்டு இருக்கேன். எப்படியும் அடுத்த பத்து வருஷத்துக்குள்ள அந்தப் படத்தை எடுத்திருவேன். ஒண்ணு மட்டும் நிச்சயம்... அந்தப் படமும் நிச்சயமா சூப்பர் ஹிட் ஆகும்; மிஸ் ஆகாது.''
''மகாபாரதக் கதை உலகத்துக்கே தெரியுமே. அதை மாத்தவும் முடியாது. அதுல எப்படி ஸ்கோர் பண்ணுவீங்க?''
''டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்ல பூனை எலியை விரட்டும். எலி கடைசியில் தப்பிச்சிரும். இதுவும்தான் உலகத்துக்கே தெரியும். ஆனா, அதை உட்காந்து கை தட்டி ரசிச்சுப் பார்க்கிறோமே? அதே மேஜிக் மகாபாரதக் கதையிலும் உண்டு.  
ஸ்கூல்ல எத்தனையோ தடவை மகாபாரதக் கதை படிச்சிருப்போம். ஆனா, தூர்தர்ஷன்ல 'மகாபாரதம்’ தொடரைப் பார்த்தப்போ, டி.வி-யையே கோயில் மாதிரி நினைச்சு உட்கார்ந்து பார்த்தோமே? அந்த அளவுக்கு அதுல ஒரு பவர்ப்ளே இருக்கு. நான் எடுக்க ஐடியா பண்ற மகாபாரதம் இந்தியர்களுக்கு இல்லை. அது சர்வதேச சினிமா ரசிகர்களுக்கு.''
''உங்க மனைவி ரமாதான் உங்களுக்குப்  பலம்னு சொல்லியிருக்கீங்களே?''
''அவங்க இல்லைன்னா நான் இல்லை. சினிமா ஒன்பது டு ஆறு மணி வேலை இல்லை. ஷூட்டிங்ல இருக்கும்போது, வீட்டுல உள்ள பிரச்னைகள் எதுவும் மனசுல ஏறாது. அதை மனைவி புரிஞ்சுக்கலைன்னா, வாழ்க்கை நரகம்தான். எனக்கு வீட்டைப் பத்தி எதுவுமே தெரியாது. என் குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் எவ்வளவுனுகூடத் தெரியாது. அவங்க அதெல்லாம் பார்த்துக்கிட்டு, என் சினிமா வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வாங்க. இந்த விஷயத்துல நான் ரொம்பக் கொடுத்துவெச்சவன்.''
''தமிழ்ல பிடிச்ச ஹீரோ யார்?''
''வேற யார்? ரஜினி சார்தான். எனக்கு அவரை ஒரு ரசிகனா சந்திக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஒரு நிகழ்ச்சியில அவரைப் பார்த்தேன். பேசலாம்னு நினைச்சப்ப, அவரைச் சுத்திக் கூட்டம் கூடிருச்சு. தயங்கிப் பின்வாங்கிட்டேன். 'மஹதீரா’ பார்த்துட்டு என்னை போன்ல கூப்பிட்டார். 'ஃபென்டாஸ்டிக் வொர்க் ராஜமௌலி’னு பாராட்டினார். 'நான் ஈ’ பார்த்துட்டு, 'நீங்க வானத்தைத் தொட்டுட்டீங்க’னு தட்டிக்கொடுத்தார். நான் பார்த்துப் பார்த்து சிலாகிக்கிற ஒரு ஆர்ட்டிஸ்ட். அவர் பாராட்டினதுல எனக்குத் தலைகால் புரியலை. இன்னும் வானத்துல மிதந்துட்டுதான் இருக்கேன்.''
''அடுத்த படம்...?''
''அதான் சொன்னேனே... வானத்துல மிதந்துட்டு இருக்கேன்னு. இந்த சந்தோஷத்தைக் கொஞ்ச நாள் அனுபவிச்சுக்கிறேன். தரையில் கால் பட்டதும் அடுத்த கதையை... அடுத்த பயணத்தை ஆரம்பிச்சிட வேண்டி யதுதான்!''

சகுனி நாயகன் படப்பிடிப்பிற்கு மனைவியோடு செல்வது ஏன்?



       சகுனி நாயகர் தன்னை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசு ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு தனது மனைவியையும் அழைத்துச் செல்கிறாராம். இதனால் தனது மனைவியை பிரிந்திருக்கும் நேரம் குறைவு என்பதோடு, தேவையில்லாத கிசுகிசுவிலும் சிக்க வாய்ப்பிலை என விளக்கம் அளிக்கிறார் சகுனி.

      இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதராசப்பட்டின நாயகிக்கு நாய், பூனைகள் மீது அதிக பாசம். சொந்த ஊரில் உள்ள சொந்த வீட்டில் 20 நாய்களையும், 10 பூனைகளையும் வளர்க்கிறாராம். இதுபோக அடிபட்டு கிடக்கும் தெரு நாய்கள், பூனைகளையும் எடுத்து வந்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறாராம்.
அங்கேயும் ஒரு மூணுஷாவா!

கடனை திருப்பிக் கொடுக்காமல் ஓடி ஒளிகின்றேன். படவிழாவில் ரஜினிகாந்த் பேச்சு.




        சிவாஜிகணேசன் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ‘கும்கி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுசாலமன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
நடிகர் கமலஹாசன் விழாவில் பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
நடிகர் பிரபு சில மாதங்களுக்கு முன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது வரஇயலாது என்றுதான் கூறினேன். இயக்குனர் பிரபுசாலமன் எனது வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழை கொடுத்து விழாவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் போதும் என்றார். சிவாஜி வீட்டு விழா என்பதால் நான் வந்து விட்டேன்.
சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார். குணமானதும் கமல் வந்துபோன விஷயத்தை எனது மகள்கள் தெரிவித்தனர். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
ஹாலிவுட் படத்தில் நடிக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார். ரசிகர்கள் பற்றி நான் எதுவும் பேசுவது இல்லை. காரணம் அவர்களுக்கு ஒரு கடன்காரனை போல் நான் இருக்கிறேன். ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் பிரார்த்தனையால்தான் நான் குணம் அடைந்தேன். ஆனால் அவர்களுக்கு நான் எதுவுமே செய்யவில்லை. கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்க முடியாத கடன்காரனை போல் ஓடி ஒளிகிறேன்.
இளைய தலைமுறை நடிகர்கள் வருடத்துக்கு ஒரு படம் மட்டும் நடிப்பது என்று இல்லாமல் இரண்டு, மூன்று படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு படம் நன்றாக போகாவிட்டாலும், மற்றவை கை கொடுக்கும். இவ்வாறு ரஜினி பேசினார்.
விழாவில நடிகர் பிரபு, ராம்குமார், இயக்குனர்கள் லிங்குசாமி, பிரபுசாலமன், சரவணன், கவுரவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விக்ரம்,ஆர்யா,ஜீவாவை வைத்து பொன்னியின் செல்வன் படமெடுக்க செல்வராகவன் ஆர்வம்.


பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்க பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் ஆசை கொள்வதும், பின்னர் ஏதோ காரணங்களுக்காக கைவிடுவதும் வாடிக்கையான செய்தி ஆகிவிட்டது கோடம்பாக்கத்தில்.
     

அமரர் எம்ஜிஆர் இந்தப் படத்தை எடுக்க முயற்சித்தார். அதற்கு இயக்குநர் மகேந்திரனை வைத்து முழுமையாக திரைக்கதை வசனத்தைக் கூட எழுதிவிட்டார்.

ஆனால் அவர் அந்தப் படத்தை எடுக்க ஆரம்பித்தபோது, அரசியலில் மகா பரபரப்பாகிவிட்டார். படம் நின்றது.

பின்னர் கமல்ஹாஸன் முயற்சி செய்வதாகக் கூறினார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

இயக்குநர் மணிரத்னம் இந்த நாவலைக் கையிலெடுத்தார். விஜய், விக்ரம், ஆர்யா, மகேஷ்பாபு என பலர் நடிப்பதாகக் கூறப்பட்டது. மைசூர் லலிதமகாலில் ஷூட்டிங் நடத்த தேதியெல்லாம் குறித்த நிலையில், படத்தைக் கைவிட்டார் மணிரத்னம்.

இந்த நிலையில், அடுத்து செல்வராகவன் இந்தப் படத்தை எடுக்க ஆர்வமாக உள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு, விக்ரம், ஆர்யா மற்றும் ஜீவா போன்றோரை வைத்து இந்தப் படத்தை எடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

'இராஜ இராஜ சோழனாக' விக்ரமும், 'ஆதித்த கரிகாலனாக' ஆர்யாவும், 'வல்லவரையன் வந்திய தேவனாக' ஜீவாவும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாராய்க்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு



Aishwarya Rai to act again for the opportunity
      நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மீண்டும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது . நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.குண்டாகவும் காட்சி அளித்தார். இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகள் வராது என பலரும் கணித்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இந்த படத்தை டேனியல் சில்வா இயக்குகிறார். அவர்தான் ஐஸ்வர்யாவை அழைத்துள்ளார். இதில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை துவங்குகின்றனர். ஏற்கனவே 2004ல் பிரைட் அன்ட் பிரிஜுடிஸ் என்ற ஆங்கில படத்திலும் 2007ல் தலாஸ்ட் லிகெய்ன் என்ற ஆங்கில படத்திலும் நடித்தார். 2009ல் த பிங்க் பாந்தர் 2 என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவலாகும்.

கமல்ஹாசனை கவர்ந்த கும்கி அழைப்பிதழ்!



kamal liked Kumki invitation!
      கும்கி படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் கமல்ஹாசனை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அந்த அழைப்பிதழில் இந்தியாவில் இப்படியெல்லாம் கூட அழகான பிரதேசங்கள் இருக்கின்றவா என்று கேட்க வைக்கும் அளவுக்கு வனப்பகுதிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. படக்குழுவினர் நடிகர் கமல்ஹாஸனை நேரில் சந்தித்து இந்த அழைப்பிதழைக் கொடுத்தபோது, அந்தப் படங்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்த கமல், இயக்குநர் பிரபு சாலமனை பாராட்டியுள்ளார்.
அருகில் அழைத்து தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டவர், படம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம். பின்னர், நடிகர் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

சிவாஜி குடும்பத்திற்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றிய ரஜினி, கமல்!

Rajini, kamal at kumki Audio Launch

      தமிழ் சினிமாவில் இன்று ஒரு சரித்திர நிகழ்வு. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த இன்ப அதிர்ச்சி நடந்தது கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான். மைனா படத்திற்கு பிறகு பிரபு‌சாலமன் இயக்கி இருக்கும் படம் கும்கி. இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் ஹீரோவாக நடிக்க, கேரளத்து வரவு லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட்டார்.

ஆடியோ வெயீட்டிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், முதற்கண் என் அய்யனுக்கு வணக்கம். என்னை சிவாஜியின் ஒரு பிள்ளையாக பாவித்தற்கு நன்றி. நான் இங்கு வந்தது ஒரு கடமை. அவர் இறந்த பிறகும் பிரபு மற்றும் ராம்குமார் என்னை அவர்களது ‌சகோதரனாக பார்க்கிறார்கள். இங்கு சொன்னார்கள் விக்ரம் முதல் அடி நன்றாக வைத்திருக்கிறார் என்று, நான் சொல்கிறேன், முதல்அடியே அவர் அருவியில் வைத்திருக்கிறார்.அதில் அன்பு கொட்டுகிறது. மேலும் இந்த படத்தில் வெற்றியின் சாயல் தெரிகிறது. அதாவது மினிமம் கேரண்டி இந்த படம். இப்போதும் கர்ணன் வெற்றியை பார்த்தால் புரியும் அது மினிமன் கேரண்டி படம். இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்த பாக்கியம். நான் சிவாஜிக்கு சவால் விட்ட படம் தான் தேவர் மகன். இந்த விழாவில் கலந்து கொண்டது தலை குனிந்து, முகம் சுளித்து கலந்து கொண்டதற்காக அல்ல, மனசு நிறைய வாழ்த்த வந்திருக்கோம். விக்ரமுக்கு ‌நிறைய பொறுப்பு இருக்கு. எப்போதும் பயம் கூடாது. தினம் கற்று கொண்டே இரு. நாங்கள் அப்படித்தான் கற்று கொண்டோம். நாங்கள் சிவாஜியிடம் கற்று கொண்டது நிறைய. மேலும் ஒன்று சொல்கிறேன். கலைஞர் எழுதிய வசனம், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற வேண்டாம். உன் பகுத்தறிவை கொண்டு செயல்படு என்று சொல்லி வாழ்த்துகிறேன். மேலும் இந்த படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

ரஜினி பேசும்‌போது, எல்லோருக்கும் வணக்கம். நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள். டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். என்னிடம் ஒரு குறை உள்ளது. எது என்ன வென்றால், ஒரு விஷயத்தில் கமிட் ஆனா அது அப்படியே மைண்ட்டில் ஓடிட்டு இருக்கும். அதைவிட்டு வெளியில் வரமுடியாது. ரசிர்களாகிய உங்களால் தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். மீண்டும் உயிர் பிழைத்து வந்திருக்கேன். உங்களை பார்க்க ‌வெட்கமா இருக்கு. கடன் வாங்கிட்டு, கடன் கொடுத்தவன் வந்தா வேறு பக்கம் போற மாதிரி இருக்கு. உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. மூளை வேலை செய்தாலும், உடம்பு ஒத்துழைக்கணும். நான் சிங்கப்பூரில் மருத்துவமனையில் இருந்தபோது கமல் என்னை பார்க்க விரும்பினார், முடியவில்லை. நான் இந்தியா வந்ததும் முதல் வேலையா அவருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன். ஒரு ஹாலிவுட் நிறுவனம் வந்து கமைல கூப்பிட்டு படம் பன்றாங்கன்னா, அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று ‌எல்லோருக்கும் தெரியும். கமல் இந்த விழாவுக்கு வருவார் என்று தெரியும். ஆனால் பிரபு என்னிடம் வந்து இந்த விழாவில் பங்கேற்கும்படி சொன்னபோது, நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் எனக்கு விழா அழைப்பிதழை கொடுத்துவிட்டு போனார். எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு. பின்னர் காலை பிரபுவுக்கு போன் செய்து நான் விழாவுக்கு வருவதாக சொன்னேன். இந்த விழாவில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விக்ரமிற்கு எதிர்காலம் நல்லா இருக்கு. விக்ரம், எல்லாவற்றுக்கும் நீ பயப்படு, ஆனால் கவலைப்படாதே. பிரபு கவலைப்படுவார். என்னா தாத்தா பெயரை காப்பாற்றனுமே. இந்த படத்திற்காக நீ ரொம்ப உழைத்து இருக்கிறாய். கடவுள் இருக்கார், உன் தாத்தா இருக்கார், கண்டிப்பா நீ நல்லா வருவ. இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லி கொள்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் பண்ணாதீங்க. குறைந்தது 3 படமாவது கையில் வைத்திருங்க. ஏன்னா ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் ரொம்ப கஷ்மா இருக்கும், அதனால் 3 படம் கையில் இருந்தால் ரொம்ப நல்லது. இந்தபடத்தில் உழைத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

முன்னதாக நடிகர் பிரபுவுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Wednesday 25 July 2012

போக்குவரத்து போலீஸாரிடம் அபராதம் கட்டிய விஜய்.


        சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய்.

அங்கு சாலையில் காத்திருந்த போக்குவரத்து போலீஸார் காரை கையை காட்டி நிறுத்தி, அந்த காஸ்ட்லீகாரின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த கறுப்பு பலிம்‌ ரோல்களை அகற்றாமைக்காக அபராதம் போட்டுவிட்டனர்.

நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!

முகமூடியை தோற்கடிக்க பேட்மேன் ஆயுதத்தை எடுத்த உதயநிதி?

       தி டார்க் நைட் ரைசஸ் எனும் பேட்மேன்-3 படத்தை அதிக விலை கொடுத்து வாங்கி தமிழ்படுத்தி உதயநிதிஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் தமிழகம் எங்கும் ரிலீஸ் செய்ய காரணம், உதயநிதி, அடுத்தமாதம் ரிலீஸ் ஆக இருக்கும் பேட்மேனின் டூப்ளிகேட் முகமூடியை விநியோகிக்கும் உரிமையை இயக்குநர் மிஷ்கினிடமும், யு.டி.வி., தனஞ்ஜெயனிடமும் கேட்டாராம். அதற்கு அவர்கள் நோ சொல்லவே பேட்மேன்-3யை பிரமாதமாக தமிழ்படுத்திவிட்டாராம்.


       இதுஒருபுறம் இருக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமூடி படத்தின் ஆடியோ ரிலீ‌ஸை தொடர்ந்து மதியம் 3 மணியளவில் பிரஸ்மீட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது முகமூடி டீம். அதேநாளில் மதியம் 12 மணியளவில் பேட்மேன்-3 படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தார் உதயநிதி. இதனால் முகமூடி பிரஸ்மீட் நிகழ்ச்சியை கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்துள்ளனர். இப்படியாக உதயநிதிக்கும், முகமூடி குழுவுக்கும் ஒரு "கோல்டு வார்" நடந்து வருகிறது.

இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க..புலம்பும் பில்லா 2 நாயகி பார்வதி ஓமனக்குட்டன்




       ஒரு படம்தான் நடிச்சேன். அது சரியா போகாததுக்கு நானா காரணம்... அதுக்குள்ள என்னை ராசியில்லாதவன்னு பேச ஆரம்பிச்சிட்டாங்களே...'

- இப்படி குமுற ஆரம்பித்திருப்பவர், பில்லா 2-ல் அஜீத்துக்கு அக்கா மகளாக நாலைந்து சீன்களில் வந்து பாதியில் செத்துப் போகும் பாத்திரத்தில் நடித்த பார்வதி ஓமணக்குட்டன்தான்!

இந்தப் படத்துக்காக அவர் முதன் முதலில் ஒப்புக் கொண்ட இந்திப் படத்தைக் கூடத் துறந்தாராம்.

ஆனால் பார்வதியின் இந்த 'தியாகத்தை'யெல்லாம் பொருட்படுத்தாமல், அவரை தோல்விப் பட நடிகை என முன்னணி பத்திரிகை எழுதிவிட்டதைத்தான் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லையாம்.

"பில்லா 2 சரியா போகாததுக்கு நான் என்னங்க பண்ண முடியும். என்னால முடிஞ்ச அளவுக்கு நல்லா புரமோட் பண்ணேன். கொடுத்த வேலையைச் செஞ்சேன். நான் என்ன நாலஞ்சி படங்களா நடிச்சிருக்கேன். ஒரே படம்தான். அதுக்குள்ள ராசியில்லாதவன்னு ஒதுக்கிடாதீங்க. நான் எந்த ரோலையும் செய்வேன். இன்னும் சில நல்ல சான்ஸ் கொடுத்துப் பாருங்க," என்று புலம்ப ஆரம்பித்துள்ளார் பார்வதி.

சரிசரி.. அடுத்த படத்திலாவது இன்னும் நாலு சீன் வர்றமாதிரி காட்சி வைக்கச் சொல்லுங்க. நீங்கதான் ஹீரோயின்னு ஜனங்களுக்குத் தெரியும்!

பெல் நடிகையின் படத்தைக் கண்டு அலறும் சூர்ய நடிகரின் படக்குழுவினர்.





        கோலிவுட்ல வில்லனா நடிச்சிட்டிருந்த லால் நடிகரு மல்லுவுட்ல ஹீரோவா நடிக்கறாராம்... நடிக்கறாராம்... ஒரு படம் ஓடுனா பல படம் ஊத்திக்கிதாம். இதெல்லாம் நானா தேடிக்கிட்டதுதான். எனக்கு பிரண்ட்ஸுங்க ஜாஸ்தி. அவங்க வந்து இந்த கேரக்டர்ல நடிச்சா நல்லாயிருக்கும்னு கேக்கறாங்க. அது பொருத்தமா இருக்காதுன்னு தெரிஞ்சும் பிரண்ட்சிப்புக்காக ஒத்துக்கறேன். இதையெல்லாம் கட் பண்ணாதான் உருப்படுவேன்னு புலம்பறாராம்... புலம்பறாராம்...
வம்புக்கு பேர்போன சோன நடிகை கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டிருந்தாராம்... இருந்தாராம்... இப்ப அவரோட எண்ணத்த மாத்திகிட்டாராம். இது பத்தி அவர் தன்னோட டுவிட்டர் பக்கத்துல கண்டிஷனோடு தன் விருப்பத்தை தெரிவிச்சிருக்காராம். விவாகரத்தான அழகான ஆண் சம்மதித்தால் அவர கல்யாணம் பண்ணிக்குவேனு சொல்லி இருக்காராம்... இருக்காராம்... ஆனா தான் சொல்றபடிதான் அவர் நடக்கணும்னு அடுத்த குண்டை தூக்கிப் போட்டிருக்காராம்...
பிரகாச ஹீரோ நடிச்சிருக்கிற டபுள் ஹீரோ படத்தோட வேல ஜரூரா நடக்குதாம்... நடக்குதாம்... நிறுத்தி நிதானமா சீன்கள எடுத்திருந்த குழுவுக்கு திடீர்ன்னு அதிர்ச்சி கொடுத்தாரு பெல் ஹீரோயின். சான்டல்வுட்ல அவர் நடிக்கற ஒரு படமும் இதேபாணில தயாராயிட்டிருக்காம். போட்டி வேகத்துல ரெண்டு தரப்பும் சரமாரியா தகவல்கள லீக் செய்றாங்களாம். பெல் நடிகை பட சாயல் வந்துடக்கூடாதுன்னு பிரகாச படத்துக்கு புதுசா சில காட்சிகளை ஷூட் பண்றாங்களாம்...

காம்பயர் ரம்யாவுக்கு வரும் காதல் கடிதங்கள்.



  


உங்களில் யார் அடுத்த பிரபுதேவா சீசன் 2' நிகழ்ச்சிக்கு வரும் கடிதங்களை விட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி ரம்யாவுக்கு காதல் கடிதங்கள் அதிகமாக வருகிறதாம். காம்பயர் ஆக இருந்தாலும் அவருக்கு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் லட்சியமாம்.

"எதையுமே வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவள் நான். திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு, ஆசை, லட்சியம் எல்லாமே.

கல்லூரியில் படிக்கும்போதே இரண்டு குறும்படங்களை இயக்கியிருக்கிறேன். என்றைக்கு இந்த துறை போதும் என்ற எண்ணம் வருகிறதோ, அன்றைக்கு ஒடிப்போய் சினிமாவில் சாதித்து விடுவேன்' என்கிறார் ரம்யா. காதல் கடிதங்கள் பற்றிக் கேட்டால் வெட்கத்தையே பதிலாகத் தருகிறார் ரம்யா.

Tuesday 24 July 2012

"முகமூடி" படம் உருவான விதம் video...









"முகமூடி" படத்தின் புதிய டிரைலர்...


ராஜமௌலியின் அடுத்த வெற்றிப்படம்!

     சகுனி, பில்லா-2 என சமீபத்தில் ரிலீஸான 2012-ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட படங்களை பின்தள்ளி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை மொய்க்க காரணமாக இருந்த படம் ’நான் ஈ’. பெரிய பெரிய படங்களில் ஈயாடிக்கொண்டிருக்க, ஈயை வைத்து படமெடுத்தவர் ஹிட்டான படம் கொடுத்தது மிகப்பெரிய விஷயம்.

        தெலுங்கில் பெரிய ஹீரோக்களை வைத்து கமெர்ஷியல் படங்களை எடுத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்த இயக்குனர் ராஜமௌலி வித்தியாசமான முயற்சியாக நான் ஈ படத்தை மேற்கொண்டார்.
        ராஜமௌலியின் மாறுபட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளையும் உடனடியாக துவங்கிவிட்டார். ராஜமௌலி 2005-ஆம் ஆண்டு இயக்கிய சத்ரபதி என்ற படத்தை தமிழில் டப்பிங் செய்து ’சந்திரமௌலி’ என்ற பெயரில் வெளியிடுகிறாராம்.
       பிரபாஸ், ஸ்ரேயா நடித்த இந்த படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனராம். இந்தப்படம் தெலுங்கில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?

       அஜித்குமார் நடித்துள்ள பில்லா-2 படம் ரிலீஸாகி சில வாரங்களே ஆகின்ற நிலையில் அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் தெரிந்திருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துவருகிறது.
       மும்பையிலும் பெங்களூரிலும் எடுக்க திட்டமிடப்பட்ட போது மழை குறுக்கிட்டதால் அந்த ஷெடியூலை மாற்றிவிட்டனர். சென்னை ஷூட்டிங் முடிந்த பிறகு விஷ்ணுவர்தன் டீம் மும்பை சென்று 40 நாட்கள் ஷூட்டிங நடத்தவிருக்கிறார்களாம்.
       எப்படியும் அக்டோபரில் ஷூட்டிங் முடிந்து, டிசம்பரில் ரிலீஸாகும் என்பது படக்குழுவின் தகவல். சென்னை ஷூட்டிங்கின் போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் அஜித்துடன் சப்போர்ட் நடிகராக நடிக்க தெலுங்கு நடிகர் ராணாவை படத்தில் சேர்த்திருப்பதாக தெரிகிறது.
      ராணாவின் கதாபாத்திரத்திற்கான ஸ்கிரிப்டையும் விஷ்ணுவர்தன் எழுதி முடித்துவிட்டாராம். இந்த தகவல் விரைவில் அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்படுமாம்.
       அஜித்குமார் நடித்த பில்லா-2 ரிலீஸான சில மாதங்களிலேயே அடுத்த படமும் ரிலீஸாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘சூர்யா...சூர்யா தாண்டா'! மாற்றான் ஸ்பெஷல் ஸ்டோரி!







  ‘மாற்றான்’ அசலா? நகலா?
  ‘சூர்யா...சூர்யா தாண்டா! ஒட்டிப்பிறந்த (cojoined Twins) இரட்டையர் வேஷத்தில் என்னமா அமர்க்களம் பண்ணீருக்கான் அந்தப்பய...’ ’மாற்றான்’ படத்தின் ட்ரெய்லர் பார்த்தவர்களெல்லாம் ஆச்சர்யம் விலகாமல் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்!
    ஒவ்வொரு ஷாட்டிலும் இந்த சூர்யாவாகவும், அந்த சூர்யாவாகவும் மாறி மாறி ரிஸ்க் எடுத்திருக்கிறார் சூர்யா! மற்ற காட்சிகளில் ஒட்டிப்பிறந்தவர்களாக சூர்யா நடித்தது கொஞ்சம் சுலபமாக இருந்திருக்கலாம்! ஆனால் ஆக்‌ஷன் காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டுத்தான் நடித்திருப்பார்!
       இப்படி மாற்றான் படம் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டாக்கியிருக்கும் அதே நேரத்தில் சர்ச்சையையும் சலசலப்பையும் உண்டாக்கியும் இருக்கிறது.தாய்லாந்து நாட்டின் தாய் பாஷையில் தயாரிக்கப்பட்ட ‘அலோன்’ படத்தின் அப்பட்டமான காப்பிதான் ‘மாற்றான்’ என்று பரவலான குற்றாச்சாட்டு!
  ‘அலோன்’ படத்தின் கதை என்ன?
     ஒட்டிப்பிறந்த இரட்டைச் சகோதரிகளில் ‘பிம்’ சாந்தமானவள். ‘பிலாய்’ முசுடு! ‘வீ’ எனும் இளைஞனை இந்த சகோதரிகள் சந்திக்கையில் ‘பிம்’மை அவன் விரும்புகிறான். ‘பிம்’முக்கும் அவனைப் பிடிக்கிறது. ஆனால் ’நானும் அவனை லவ் பண்றேன்’ என பிலாய் பிரச்சனை பண்ண....
ஒரு கட்டத்தில் இருவரும் ஆபரேஷன் மூலம் தனித்தனியே பிரிய முடிவுசெய்கிறார்கள்.


    ஆபரேஷன் மூலம் பிரிக்கிற போது ‘பிலாய்’ இறாந்துவிடுகிறாள். ’பிம்’மும், ’வீ’யும் தாய்லாந்தை விட்டு வெளியேறி தென்கொரியாவில் வசிக்கிறார்கள்.‘உன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை’ என ஒருநாள் பிம்முக்கு போன்வர... ’வீ’யுடன் கிளம்பி வருகிறாள். அம்மாவின் இறுதிச்சடங்குகள் முடிந்து அன்று தன் வீட்டில் பிம் தங்க இறந்து போன பிலாயின் ஆவி பிம்மை துவம்சம் செய்கிறது!
     ’மாற்றான்’ படம் ‘அலோன்’ படத்தின் கதை தானே? என மீடியாக்கள் டைரக்டர் கே.வி.ஆனந்தை கேள்வியால் துளைக்க.... மிகத்தெளிவாகவும், அழுத்தமாகவும் தன் பதிலைச் சொன்னார் கே.வி.ஆனந்த்!
       ”இது ‘அலோன்’ படத்தின் கதை இல்லை. அந்தப்படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இப்படி ஒரு சர்ச்சை கிளம்பிய பிறகு தான் ‘அலோன்’ படத்தை பார்த்தேன். அதற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கு. புத்தகம் ஒன்றில் தாய்லாந்து நாட்டில் பிறந்த கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் பற்றி படித்ததன் பாதிப்பு தான் ’மாற்றான்’” என விளக்கமாகச் சொன்னார் கே.வி.ஆனந்த்.


       “எம்.ஜி.ஆர் படம் மாதிரி புதுமையாகவும், கலகலப்பாகவும் இருக்கும்” என சூர்யாவும் விளக்கம் சொன்னார்.
      ‘நல்லகுணம்’ ‘வில்லக்குணம்’ என இரு மாறுபட்ட வேடங்களில் எம்.ஜி.ஆரின் மானசீக குரு எம்.கே.ராதா நடித்த படம் ‘அபூர்வ சகோதரர்கள்’. அதே படத்தை தனக்கே உரிய மாறுதல்களுடன் ‘நீரும் நெருப்பும்’ என்ற பெயரில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
      ஒட்டிப்பிறந்த சூர்யாக்கள் பிரிக்கப்பட்டதும் மாற்றுக்குணம் உள்ள ’மாற்றான்’களாக மாறிப்போவது போல கே.வி.ஆனந்த் எடுத்திருக்கிறார். அதனால் 2007-ல் வந்த ‘அலோன்’ படம் கிடையாது ‘மாற்றான்’ என்கிற முடிவுக்கு வந்த நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பிவிட்டது.
       2003-ல் வெளியான ஹாலிவுட் படம் ‘ஸ்டக் ஆன் யூ(Stuck on U)’ இதைத்தான் ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என கோஷம் கிளம்புகிறது.



‘ஸ்டக் ஆன் யூ’ என்ன கதை?
     ஒட்டிப்பிறந்த இரட்டையர்களில் ’பாப்’ ஃபார்மல் டைப். ‘வால்ட்’ கேஷுவல் டைப். இருவரும் ரெஸ்டாரண்ட் நடத்திவருகிறார்கள். கஸ்டமர் ஆர்டரை ரெண்டே நிமிஷத்தில் ரெண்டு பேரும் செய்துதரும் ஸ்டைலுக்காகவே இந்தக் கடையில் சாப்பிடக் கூட்டம் கூடும்.
       தன்னுடன் ஒட்டிப்பிறந்த வால்ட் இருப்பதை சொல்லாமலே ’மேபாங்’ என்ற பெண்ணுடன் பேனாநட்பு மூலம் காதலாகிறான் பாப். வால்ட்டுக்கு ஹாலிவுட் சினிமாவில் நடிக்க ஆசை. இதற்கு வேண்டா வெறுப்பாக பாப் சம்மதிக்க கலிபோர்னியாவில் குடியேறுகிறார்கள்.
   பாப்புக்கு கரடி பொம்மை அலங்காரம் பண்ணிக்கொண்டு ஹாலிவுட் வாய்ப்பு தேடுகிறான் வால்ட்.
       ‘புளூஃபிலிமில் நடிக்கிறாயா?’ என ஏராள வாய்ப்புகள் வர அதை ஏற்காமல் முயற்சிக்கிறான். பாப் மண்டைக்காய்வதை பார்த்த வால்ட் பாப்பிற்கு தெரியாமலேயே அவனுடைய காதலியை சர்ப்ரைஸாக வரவைக்கிறான் வால்ட்.
       ஒருநாள் பாப்பும் வால்ட்டும் ஒன்றாக படுக்கையில் இருக்க... ‘நீ ஒரு ஹோமோசெக்ஸ் பேர்வழி’ என சண்டை போட்டுவிட்டு ’ஒட்டிப்பிறந்தவர்கள்’ என்கிற விளக்கத்தை ஏற்காமல் போய்விடுகிறாள்!
      டிவி தொடரில் வால்ட் புகழ்பெறுவதுடன் அவர்கள் கன்ஜாய்ண்டு ட்வின்ஸ் என்கிற செய்தி மீடியாவில் வர உண்மையறிந்த காதலி திரும்பி வந்து ‘நான் உங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறேன்’ என்கிறாள்.‘பிரச்சனை வேண்டாம் இருவரும் ஆபரேஷன் மூலம் தனியாகிவிடுவோம்’ என பாப்பின் எதிர்ப்பை மீறி வால்ட் முடிவுசெய்கிறான்.
       ஆபரேஷன் சக்சஸ். வால்ட் ஹாலிவுட்டில் வாய்ப்புதேட, பாப் ஊர் திரும்பி ரெஸ்டாரெண்ட் நடத்துகிறான்.ஆனால் ஒட்டியிருந்த போது வால்ட்டுக்கு இருந்த நடிப்புத்திறமை இப்போது இல்லை. பாப்பிற்கும் ஓட்டல் வேலையில் சுறுசுறுப்பு இல்லை.
     வால்ட் ஊர்திரும்பி பாப்புடன் ஓட்டலில் பணி செய்கிறான். ஆனால் இரட்டையராக அவர்கள் இருந்தது தான் கஸ்டமர்களை கவர்ந்த விஷயம். அதனால் கூட்டம் குறைய விசேஷ உடை ஒன்றை தயாரித்து அணிந்து கொண்டு ஒட்டிய பிறவிகளாகவே மாறிவிட வாழ்க்கையும் வியாபாரமும் களைகட்டுகிறது.
   நகைச்சுவை உணர்ச்சியோடு எடுக்கப்பட்ட இந்த படத்தைத்தான் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஆக்‌ஷன் ஃபார்முலாவுக்கு ஏற்ப ‘மாற்றான்’ ஆக்கியிருக்கிறார்கள் என்று பேசிக்கிறாங்க. அதில் இரு நடிகர்கள் சோல்டர் ஒட்டியது போல நடித்தார்கள். இதில் சூர்யா ஒருவரே நடித்திருப்பது வியப்பு!
      இந்நிலையில் ஒட்டிப்பிறந்த சகோதரிகளாக பிரியாமணி ‘சாருலதா’ படத்தில் நடித்துவருகிறார். எந்த சர்ச்சையும் இருக்கக்கூடாது என்பதால்... ’இது முறைப்படி ‘அலோன்’ படத்தின் கதை உரிமையை வாங்கி எடுக்கப்படும் படம்’ என ‘சாருலதா’ படத்தின் டைரக்டர் பொன்குமரன் தெரிவித்துள்ளார்.

        ஒரு படத்தின் தாக்கத்திலிருந்து புதிய படைப்பு உருவாவது தான் படைப்புலகின் பரிணாம வளர்ச்சி. ‘இயற்கை’, ‘பேராண்மை’ படங்கள் எந்தப் படைப்பின் பாதிப்பிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை டைட்டிலிலேயே போட்டவர் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன்.
        இண்டர்நெட் மூலம் எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் இளைஞர்கள் அதை... அதாவது படைப்பு உருவாக காரணமான படைப்பு எது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்!
         2003-ல் வந்த ‘ஸ்டக் ஆன் யூ’, 2007-ல் வந்த ‘அலோன்’ படங்கள் எதனுடைய தாக்கம்?      உலகம் முழுக்க கன்ஜாய்ண்டு ட்வின்ஸ்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்கள் லேடன் பிஜானி, லாலே பிஜானி எனும் ஈரான் நாட்டு இரட்டை சகோதரிகள் தான்!

2000-ம் ஆண்டில் விரும்பி பிரிய நினைத்து ஜெர்மன் சென்ற போது ‘பிரிப்பது ரிஸ்க்’ என டாக்டர்கள் மறுத்துவிட்டனர். அப்போதே மேலை நாடுகளின் கவனத்தை ஈர்த்தார்கள் லேடன்-லாலே சகோதரிகள். அப்போதே சினிமாக்காரர்களின் கற்பனை குதிரை ஓட்டம் எடுத்தது.


2002-ல் பிரபுதேவா நடித்த ‘H20' எனும் படம் தமிழில் காவிரி என்ற பெயரில் வந்தது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்த இந்தக கதையின் க்ளைமாக்ஸில் கர்நாடகாவைச் சேர்ந்த இடுப்போடு ஒட்டிப் பிறந்த பிரிக்கவே முடியாத சகோதரிகளை நடிக்க வைத்து ‘கர்நாடகமும், தமிழ்நாடும் ஒட்டிப்பிறந்தது.நதிநீருக்காக பிரச்சனை வேண்டாம்’ என வலியுறுத்தப்பட்டது.
      2003-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் மருத்துவமனையில் ஜூலை 8ந் தேதி லேடன்-லாலே சகோதரிகள் பிரிக்கப்பட்டனர். (தமிழகம் உட்பட உலகமே அவர்களுக்காக பிரார்த்தித்தது). ஆனாலும் சில மணி நேரங்களில் லேடன் இறந்து போனார். அதற்கு காதல், ஆவி முலாம் பூசி ’அலோன்’ ஆக்கினார்கள்.



        எது எப்படியோ ஒரே அலைவரிசை சிந்தனை என்பது படைப்புலகில் நடப்பது தான். ‘மாற்றான்’ சுயம்புவா? ஜெராக்ஸா? என்பதையெல்லாம் மீறி, வியாபார ஏற்ற இறக்கங்களை மீறி இந்தியச் சினிமாவில் ‘மாற்றான்’ என்கிற தமிழ்ப்படம் ஒட்டிப் பிறந்த இரட்டையர் பற்றிய முதல் சினிமா என்பதை அழுத்தமாக பதிவு செய்யும்.
      அதற்காக கே.வி.ஆனந்தையும் சூர்யாவையும் பாராட்டுவோம். அவர்களின் படைப்புத்தன்மையையும், நடிப்புத்தன்மையையும் மட்டும் பார்ப்போம்.

விக்ரம் கண்கட்டு வித்தை!

       நாயகனாக நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கடுமையாக தனது உடம்பை வருத்தி உழைப்பவர் விக்ரம். 'சேது', 'பிதாமகன்', 'அந்நியன்', 'காசி' என இவர் நடித்த பல்வேறு படங்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன.

'தாண்டவம்' படமும் இப்பட்டியலில் சேர்கிறது.

இப்படத்தில் விக்ரம் இருவேறு பரிமாணங்களில் நடித்து இருக்கிறார். 'தாண்டவம்' படத்தில் கண் தெரியாதவராக ஒரு பாத்திரத்தில் நடித்து இருக்கிறாராம் விக்ரம்.

'காசி' படம் போல் அல்லாமல் இப்படத்தில் வித்தியாசமாக தெரிய வேண்டும் என்று மெனக்கெட்டு இருக்கிறார். கண் தெரியாதவராக நடிப்பதில் ஏற்படும் கஷ்டங்களை பெரிது படுத்தாமல், கண் தெரியாதவராக சண்டைக் காட்சிகளில் விக்ரம் ஒரு கண்கட்டு வித்தையே காட்டியிருக்கிறாராம். படக்குழுவினரே அசந்து போகும் வண்ணம் அமைதிருக்கிறதாம் அந்த சண்டைக் காட்சி.

மற்ற படங்கள் எப்படி மக்களிடையே பேசப்பட்டதோ, அது போல 'தாண்டவம்' படத்தில் இந்த உழைப்பும் பெரிதும் பேசப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விக்ரம்.

அடுத்து ஷங்கரின் 'ஐ' படத்திற்காக தற்போதே தயாராகி வருகிறார்.

மீண்டும் கமல் + ரஜினி!

   மீண்டும் ரஜினியும் கமலும் வெள்ளித்திரையில் இணைந்து தோன்ற இருக்கிறார்கள் என்ற செய்தி தான் தற்போதைய ஹாட் நியூஸ்.

ரஜினி, கமல் இணைந்து நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' படம் 1979 ஆண்டு வெளிவந்தது. பாலசந்தர் இப்படத்தினை இயக்கினார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது.

33ம் வருடங்கள் கழித்து இப்படம் மீண்டும் வெளியாகிறது. ரீமேக்காக அல்ல, பழைய படத்தினை டிஜிட்டலில் உருவாக்கி இருக்கிறார்கள்.

சிவாஜி நடித்த 'கர்ணன்' படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 100 நாட்களை கடந்தும் தற்போது வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கிறது.

'நினைத்தாலே இனிக்கும்' படத்தினை தற்போது முழுக்க சினிமாஸ்கோப், DTS தொழில்நுட்பத்தில் தயார்ப்படுத்தி இருக்கிறார்கள்.

ரஜினி, கமல் என இருவரும் சேர்ந்து நடித்த படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்பது தயாரிப்பாளரின் கணக்கு.

அனுஷ்காவால் தாமதமாகும் கார்த்தியின் அலெக்ஸ்பாண்டியன்


             கார்த்தியின் நடிப்பில் உருவாகும் அலெக்ஸ் பாண்டியன் படத்தில், அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கின்றார்.அலெக்ஸ் பாண்டியன் படத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

இதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், அனுஷ்கா இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து அவர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்கு வருவார் என்று எதிர்பாத்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

இரண்டாம் உலகம் படத்துக்கு கூடுதல் நாட்கள் வேண்டும் என்று இயக்குனர் செல்வராகவன் வற்புறுத்தியதால் இங்கு வரமுடியவில்லையாம். இதனால் அலெக்ஸ் பாண்டியன் படக் குழுவினர் அனுஷ்கா மேல் கோபத்தில் உள்ளனர்.

ஆனால் அனுஷ்கா தரப்பில் தாமதத்துக்கு அவர் காரணம் அல்ல என மறுக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே அவர் ஒதுக்கிய திகதிகளை விரயமாக்கி விட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அனுஷ்கா தமிழ், தெலுங்கு மொழிகள் உட்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்கத் தயங்கும் பாலிவுட் கோனே நடிகை.



     
பிரம்மாண்டமான இயக்குனர் இயக்கும் ஓரு எழுத்தை தலைப்பாக கொண்ட படத்தில் நடிக்கும் சீயான் நடிகருக்கு நாயகியாக இங்கிலாந்து நடிகை நடிக்கிறார். இப்படத்தில் ஒரு பாதியில் நடிப்பதற்காக பாலிவுட்டின் கோனே நடிகையை ஒப்பந்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். கோனோ நடிகை உச்ச நடிகரின் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், இப்படத்தில் நடிக்க தனது கால்ஷீட்டை ஒதுக்க தயங்கி வருகிறாராம்.




பவர் ஸ்டார் நடிகர் இப்போது தமிழ் படங்களில் ரொம்பவும் பிசியாக இருக்கிறார். இவர் சந்தன நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட இயக்குனர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்போது விரல் வித்தை நடிகர் நடிக்கும் இரண்டெழுத்து படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.




இந்த மூன்று படங்களிலும் சந்தன நடிகர் நடிப்பதால் அவர்தான் பவர் ஸ்டாரை அனைத்து படங்களிலும் நடிக்க சிபாரிசு செய்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து வருவதால், பழைய காமெடி நடிகர்களான கவுண்டர்-செந்தி ஜோடியை மிஞ்சுவார்களா? என சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு மீண்டும் திடீரென மறுக்கும் சோனா.


எந்த ஒரு பார்ட்டியாக இருந்தாலும் சரி, அங்கு தவறாமல் ஆஜாராகி விடும் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் சோனா.

சமீபத்தில் சோனா - எஸ்.பி.சரண் இருவருக்குமான சண்டை உலகம் அறிந்ததே. அதற்குப் பிறகு வெங்கட்பிரபு, பிரேம்ஜி என இருவருடன் பழகுவதை குறைத்துக் கொண்டார் சோனா. சமீபத்திய சோனாவின் பிறந்த நாள் பார்ட்டியில் பிரேம்ஜி கலந்து கொண்டார்.

பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்ட தனது பிறந்த நாள் பார்ட்டி புகைப்படங்களை தனது பேஸ்ஃபுக் இணையத்தில் வெளியிட்டு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தினார் சோனா.

"எனக்கு ஆண்களோடு வாழப் பிடிக்காது " என முன்னர் தத்துவ மழை பொழிந்தவர், தற்போது தனது பேஸ்புக்கில் அள்ளித் தெளித்திருக்கும் ஸ்டேட்டஸ் மெசேஜ் பலரை இப்போது திக்குமுக்காடச் செய்தது.

ஆம்.. சோனாவுக்கு திருமண ஆசை வந்து விட்டதாம். தனது பேஸ்புக் இணையத்தில் " விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன் " என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது அடுத்த ஸ்டேட்டஸாக " மன்னிக்கவும்... நண்பர்களாக விளையாட்டிற்காக அவ்வாறு செய்து விட்டார்கள். எனக்கு திருமணத்தில் எல்லாம் விருப்பம் இல்லை. வரும் காலத்திலும் திருமணத்தில் எனக்கு அந்த மாதிரி எண்ணம் வராது என்றே நினைக்கிறேன்... ஆகவே மன்னிக்கவும். என்னுடைய பழைய மெசேஜை அழித்து விட்டேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

ம்ம்ம்... பேஸ்புக் இணையத்தில் அப்டேட் செய்யும் போது என்ன மனநிலையில் இருந்தார்களோ?

பஞ்ச் நடிகரை இயக்க ஆசைப்படும் கிரிக்கெட் இயக்குனர்.



        பாக்ய இயக்கம் தலமைல மல்லுவுட் பெஸ்ட் ஆக்டர் செலக்ஷன் நடந்துச்சாம்... நடந்துச்சாம்... அறிவிப்பு வந்த ரெண்டு நாளைக்கப்புறம் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்... பெஸ்ட் ஆக்டர், இயக்கம், படம்னு எதையும் சரியா செலக்ட் பண்ணல. இதைவிட பெஸ்ட் படம், நடிகர், இயக்கமெல்லாம் இருக்காங்கனு அப்ஜெக்ட் பண்றாங்களாம். அதுவும் மூத்த திலக ஆக்டரு இடையில லால் நடிகர் மேல உர்ரா இருந்தாரு. இப்போ பெஸ்ட் ஆக்டர் அவார்டு ஏன் லாலுக்கு கொடுக்கலைனு நேரடியாவே திலக நடிகரு கேக்குறாராம்... கேக்குறாராம்...

தலய இயக்கிய 28 கிரிக்கெட் இயக்கத்துக்கு இப்ப பஞ்ச் நடிகரை இயக்க ஆசை வந்திருக்காம்... வந்திருக்காம்... காட்டன் வீர ஹீரோ படத்த இயக்குறதுல பிஸியா இருந்தாலும் தன்னோட அடுத்த படத்துக்கு பஞ்ச் ஹீரோவை பிக்ஸ் பண்ற முயற்சில இருக்காராம். இந்த விஷயத்த தூதர் மூலமா நடிகர் காதுல போட்ட இயக்கம், இப்போவே ஸ்கிரிப்ட் தயாரிப்புல கவனம் செலுத்துறாராம். ஆனா, பஞ்ச் நடிகரோ இன்னமும் கிரீன் சிக்னல் கொடுக்கலையாம்...

சாலம இயக்கம் எலிபென்ட் கதையை இயக்குறாராம்... இயக்குறாராம்... இது லட்சுமியான ஹீரோயின் அறிமுகமாகுறாரு. சின்ன பசங்கள வச்சி படம் எடுத்த இயக்கம் தன் படத்துக்கு நடிகைகிட்ட டேட் கேட்டாராம்... கேட்டாராம்... இதோ அதோன்னு இழுத்தடிச்சி கடைசில கையை விரிச்சிட்டாராம். இதுக்கு காரணம் சாலம இயக்கம்தானாம். ‘பட ரிலீஸுக்கு பிறகு பெரிய ஸ்டார் படத்துல நடிக்கக்கூட சான்ஸ் வரும். இப்பவே சின்ன படங்கள்ல நடிச்சா அந்த சான்ஸ மிஸ் பண்ண வேண்டி இருக்கும்Õனு காதுல ஓதுனாராம். இதை கேட்டு பசங்க இயக்கத்துக்கு நோ சொல்லிட்டாராம்... நடிகை நோ சொல்லிட்டாராம்... அந்த சின்ன படத்துல நடிச்சா, தன்னோட பட பிசினஸ் பாதிக்கலாம்கிறதால இயக்கம் இப்படி செஞ்சாராம்... செஞ்சாராம்...

ஷூட்டிங் நடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் குப்பை போட தடை விதித்த வசந்த்.



       தமிழ் பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றை கடைகளில் விற்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, குப்பை போடக்கூடாது என்று இயக்குனர் வசந்த் கட்டுப்பாடு வித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: மூன்று பேர் மூன்று காதல் என்ற படம் இயக்கி வருகிறேன். அர்ஜுன், சேரன், விமல் நடிக்கின்றனர். கோவையில் ஷூட்டிங் நடக்கிறது.

எனது படங்களில் சமூக கருத்துக்களை வலியுறுத்தி இருக்கிறேன். சத்தம் போடாதே படத்தில் குடிக்கு அடிமையானவர்களின் பிரச்னை பற்றி கூறினேன். இப்படத்தை தொடங்குவதற்கு முன் போதைக்கு அடிமையானோருக்கான குறை கேட்கும் கூட்டம் ஒன்றில் பங்கேற்றேன். அவர்களின் சோகக் கதைகள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது. இது பற்றி படத்தில் புதிய கருத்தை கூறி இருந்தேன்.

சமூக அக்கறையுடன் படங்கள் எடுக்கும்போது அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். தற்போது எனது பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குப்பை போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறேன்

தாண்டவம் பட இசை வெளியீட்டு விழாவில் டான்ஸ் ஆட விருப்பமா?

      விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் 'தாண்டவம்' படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெற இருக்கிறது.

விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், சந்தானம், ஜகபதி பாபு மற்றும் பலர் நடித்துள்ள 'தாண்டவம்' படத்தினை விஜய் இயக்கி இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.

'முகமூடி' படத்தினைப் போலவே 'தாண்டவம்' படத்தினையும் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறது யுடிவி நிறுவனம்.

'முகமூடி' இசை வெளியீட்டு விழாவை போலவே, இணையத்தில் போட்டிகளை வைத்து ரசிகர்களை அழைக்க யு.டிவி நிறுவனமும், சினிமா விகடன் இணையமும் ஒன்றிணைந்து இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் 'தாண்டவம்' படத்தின் பாடல்களுக்கு நடனமாட ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கி இருக்கிறது யு.டிவி நிறுவனம்.

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடியவர்களாக இருந்தால், உடனே உங்களைப் பற்றிய விவரங்களை thaandavam2012@gmail.com என்ற இமெயிலுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பி வையுங்கள்.

அதில் இருந்து தேர்வாகும் 5 முதல் 6 நபர்களுக்கு 'தாண்டவம்' இசை வெளியீட்டு விழாவில் நடனமாட வாய்ப்பு அளிக்கப்படும்.

இதில் தேர்வாகும் நபர்கள் ஒரு பிரபல நடன இயக்குனாரால் பயிற்றுவிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பிரதானமாக மற்றவர்களுடன் இணைந்து நடனமாடலாம். விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் அந்த நடனத்தை பார்த்து ரசிக்க இருக்கிறார்கள்.

ஈழத்து விதவை பெண்மணியை பிரபாகரன் திருமண நாளில் திருமணம் செய்யும் சீமான்.

          பாஞ்சாலங்குறிச்சி', 'தம்பி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர் சீமான். 'தம்பி' படத்தினைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தொடங்க இருந்த 'பகலவன்' படம் டிராப் ஆகிவிட்டது.

விஜய் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டார். 'பகலவன்', 'கோபம்' என இரண்டு கதைகளை தயாராக வைத்து இருக்கிறார் சீமான்.

பல முன்னணி நடிகர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வரும் சீமான், தனது கதைக்கு ஜீவா பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் ஜீவா 'முகமூடி', 'என்றென்றும் புன்னகை', 'டேவிட்', 'நீதானே என் பொன்வசந்தம்' என மும்முரம் காட்டி வருவதால் சீமான் படத்திற்கு தேதி எப்போது என்பது ஜீவாவுக்கே வெளிச்சம்.

இந்நிலையில் சீமான் விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார் என்பது தான் முக்கிய செய்தி. 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமான் பல முறை அரசுக்கு எதிராக பேசி சிறை சென்று இருக்கிறார்.

பிரபாகன், மதிவதனி திருமணம் செய்துக் கொண்ட அக்டோபர் 1ம் தேதி சீமானின் திருமணம் நடைபெற இருக்கிறது. இது குறித்து சீமான் " ஆம்.. அக்டோபர் ஒன்று எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன். பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண் தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?

இந்த வருடம் அக்டோபர் ஒன்றில் திருமணம் என்பது உறுதி.. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன் " என்று தெரிவித்து இருக்கிறார்.

பெண் யாராக இருக்கும் என்று விசாரித்ததில் " திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதி " என்று அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினரிடமிருந்து தகவல் வருகிறது!