Monday 10 December 2012

மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் அஜீத்!

Ajith again in murugadoss filmஅஜீத்தின் தீனா படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜீத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளார். காதல் டிராக்கில் போய் கொண்டு இருந்த நடிகர் அஜீத்தை, ஆக்ஷ்ன் டிராக்கில் களம் இறக்கிவிட்டர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத்-முருகதாஸ் கூட்டணியில், கடந்த 2001ம் ஆண்டு வெளிவந்த படம் தீனா. அதிரடி ஆக்ஷ்ன் படமாக வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்தபடத்தின் மூலம் டைரக்டர் முருகதாஸ்க்கும், அஜீத்துக்கும் ஒரு பெரிய பெயர் கிடைத்தது. அதுமட்டுமல்லாது தீனா படத்திற்கு பிறகு தான் அஜீத்துக்கு தல என்ற அடைமொழியும் சேர்ந்தது.

இந்நிலையில் விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கி, அதையும் வெற்றிபடமாக்கியுள்ள முருகதாஸ் மீண்டும் அஜீத்தை வைத்து படம் இயக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத்தோ விஷ்ணுவர்தன் படம், சிறுத்தை சிவா படம் என்று அடுத்தடுத்த படங்களில் நடிப்பதால் முருகதாஸ்க்கு ஓ.கே., சொல்ல முடியாமல் இருந்து வந்தார். இருந்தாலும் அஜீத்துக்காக தான் காத்திருப்பதாக முருகதாஸ் கூறியதை அடுத்து இப்போது அஜீத்தும், முருகதாஸ் படத்தில் நடிக்க ஓ.கே. சொல்லியிருக்கிறாராம்.

தற்போது முருகாதஸ் அக்ஷ்ய் குமாரை வைத்து இந்தி துப்பாக்கியை ரீ-மேக் பண்ணும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேபோல் அஜீத்தும் விஷ்ணுவர்தன் மற்றும் சிறுத்தை சிவா படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் அவரவர் படங்களை முடித்தபின்னர் தங்களது புதிய படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தை ஐயங்கரன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. அடுத்தாண்டு இவர்களது படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகும் என்றும், விரைவில் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது

திருடனுக்கு 50 சதவீதம் கொடுப்பார்கள்; உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள்! டி.டி.எச்., குறித்து கமல் ஆதங்கம்!!


Kamal statement on Vishwaroopam DTH release விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.,-ல் வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் கமல், திருடனுக்கு 50 சதவீதம் கூட கொடுப்பார்கள் ஆனால் உடையவனுக்கு ஒரு பைசா கொடுக்கமாட்டார்கள் என்று தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை முதலில் உதாசீனம் செய்வதும் ஏளனம் செய்வதும் ஏன்... அவைகளைக் கண்டனம் செய்வதும் கூட உலக வழக்கம். உலகம் உருண்டை வடிவம் என்று சொன்ன விஞ்ஞானி கலீலியோவை எரித்துக் கொல்ல வேண்டும் என்று சொன்ன இஸ்பானிய ராணி முதல் இன்றைய சினிமாத்துறையினர் வரை இம்மனப்பாங்கு நீடிக்கிறது.

ராஜ்கமல் நிறுவனத்தின் டி.டி.எச்., முயற்சியையும் புரிதல் இல்லாததால் புறக்கணிப்போம், புறந்தள்ளுவோம் என்ற பதற்றக்குரல்கள் எழுகின்றன. தேவையற்ற புரளிகளையும் கிளப்புகிறது ஒரு கூட்டம். ஆனால் திரைத்துறையில் ஒரு பெரும் கூட்டம், இது சினிமா வர்த்தகத்தின் புதிய பரிணாம வளர்ச்சி, தமிழ் சினிமாவை ஏன் உலக சினிமாவையே புதிய வருமான எல்லைகளை கடக்க வைக்கும் முயற்சி என்று ‌என்னை பாராட்டுகிறது. இது சந்தோஷமான செய்தி. டி.டி.எச்-ற்கு வெகுவான வரவேற்பு உள்ளது. இது சினிமாவை வலுப்படுத்தும் இன்னொரு வியாபாரக்கிளை. ஆனால் ஒரு சிலர் மட்டும் நாசம் விளைவிக்கும் என்று ஆவேசம் கொள்கிறது.

கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை

இந்த டி.டி.எச். என்பது என்ன எல்லோர் வீட்டிலும் இருக்கும் டி.வி. பெட்டியா என்றால் இல்லை. நல்ல வசதி உள்ளவர்கள், அதிகப் பணம் கட்டி ஒரு கருவியின் மூலம் பல சானல்களையும் சினிமாவையும் பார்க்க உதவும் கருவி. சினிமா அரங்குக்கே செல்ல மறந்த மறுத்த வசதியான கூட்டம் சினிமாவை வீட்டோடு அனுபவிக்க உதவும் ஊடகம் இந்த டி.டி.எச்., இப்படி வீட்டோடு தங்கியவர்களையும் சினிமா பக்கம் ஈர்க்கும் முயற்சியே இது. இதைவிடுத்து படம் சரியாக அமையாததால் கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடப் பார்க்கிறார் கமல் என்று புரளிகள் கிளம்புகிறார்கள். கிடைத்ததை சுருட்டும் பழக்கம் எனக்கில்லை என்பதற்கு என் சினிமா வாழ்வும் நான் எடுத்த சினிமாக்களும் சாட்சி.

இந்தி சினிமா வசூலுக்கு வழிவகுக்கும்

என்படம் முடிந்து 7 மாதங்களாகின்றன. இப்பொழுது என் படத்திற்கு விலை கொடுத்து வாங்க பலர் பெரிய விலைகளை சொல்லியும் விற்காமல் எல்லா ஊடகங்களிலும் படம் நல்ல வசூலை ஈட்ட வழி செய்யவே இந்த முயற்சி. முழுமையாக மக்களின் ஆர்வம் வருமானமாக மாறி படத்தயாரிப்பாளர் கையில் சேர்ந்தால் திரை உலகு மேம்படும். நேர்மையான வியாபாரத்தில் அனைவரும் ஈடுபட்டு நல்லபடி வரிகட்டி அரசிடம் எடுத்து சொல்லி கறுப்பு பண விளையாட்டை குறைத்து கொண்டால் 5 வருடத்தில் தமிழ் சினிமா இந்தி சினிமாவின் வசூலுக்கு நிகராகும்.

இந்தியாவில் அதிக விற்பனையான விஸ்வரூபம் ஆடியோ

ஒரேநாளில் விஸ்வரூபத்தின் இசை, இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்தியாவிலேயே அதிக விற்பனையான இசை தகடாக முதல் இடத்திற்கு விஸ்வரூபம் வரும் என்கிறது வியாபார வட்டாரம். இது ஒரு வர்த்தக சாதனை. ஏற்கனவே உலக வர்த்தகம் இந்திய சினிமாவை நல்ல பொருள் ஈட்டும் களம் என நம்புகிறது. உலகத்துக்கு இருக்கும் நம்பிக்கை உள்ளூரிலும் இருக்க வேண்டாமா?

தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது

டி.டி.எச்-ல் ஒரே ஒரு காட்சி காட்டப்படும். இதை பதிவு செய்ய முடியாது. பிரத்யேகக் காட்சி முடியும் போது படம் டி.டி.எச். கருவியில் தங்காது. ஒரு முறை இப்படத்தைப் பார்க்க 1000 ரூபாய் கட்டணம். தியேட்டர் கட்டணத்தைப் போல் பத்து மடங்கு. காட்சியை வீட்டில் பார்த்த சந்தோஷம் தவிர சினிமா தியேட்டரில் கிடைக்கும் அனுபவம் கண்டிப்பாய் கிடைக்காது. விஸ்வரூபத்தில் ஒலி அமைப்பு இதுவரை இந்திய ரசிகர்கள் கேட்டிராத அளவு அற்புதமாக செய்திருக்கிறோம். ஹாலிவுட் படத்தயாரிப்பில் அதுவும் மேல் தட்டுப் படங்களில் மட்டுமே தென்படும் தரமிது. இத்தனையும் செய்தது டி.வி-ல் காட்டுவதற்கு மட்டும் அல்ல.

திருடனுக்கு கொடுப்பவர்கள் உடையவனுக்கு கொடுக்கமாட்டார்கள்

டி.டி.எச். வசதி தமிழக ஜனத்தொகையில் 3 சதவீதம் வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அதில் நாங்கள் ஒன்றரை சதவீதம் வாடிக்கையாளர்களிடம் மட்டுமே காட்ட முடியும் என்கிறது கணக்கு. 100 பேர் ஒருவனுக்கு பயப்படுவது ஆச்சரியம். 7.5 கோடியில் ஒரு சதவீதம் படம் பார்த்தால் குடியே கெடும் என்பவர்கள் நமது வருமானத்தில் 50 சதவீதத்தை கள்ள டி.வி.டி., வியாபாரி கொண்டு போவ‌தை தடுப்பதற்கு சிறு முயற்சிகளே செய்கிறார்கள். கள்ள டி.வி.டி-க் காரர்களுடன் கூட்டு சேர்ந்து பயிரை மேயும் வேலியை விட்டுவிட்டு நேர்மையான வியாபாரத்தை தடுப்பது கண்டிக்கத்தக்கது.

திருடனுக்கு 50 சதவீதத்தை கொடுத்தாலும் கொடுப்பேன்; உடையவனுக்கு ஒன்று கூட சேரக்கூடாது என்பது நியாயமில்லாத வாதம். இந்த வாதத்தால் தியேட்டரில் வியாபாரம் குறையாது. வீட்டில் பெருமாள் படம் காலண்டரில் தொங்குவதால் யாரும் திருப்பதிக்கு போவதைக் குறைத்து கொண்டதாய் தெரியவில்லை. ரேடியோவில் தன் குரல் கேட்டால் புகழ் குறையும் என்று நினைத்து பாடாமல் இருந்த கர்நாடக பாகவதர்கள் போல் இருப்பது உசிதமல்ல. சமையலறையும், நல்ல சமையலும் பல வீடுகளில் இருப்பதால் ஹோட்டல்களை மூடிவிட்டார்களா என்ன..? பகுத்தறிவாளனாக இருப்பினும் பெரும்பான்மையினர் புரிந்து கொள்ளவே ஒரு சின்ன விளக்கம்.

முஸ்லீம்களை தவறாக சித்தரிக்கவில்லை

முடிவாக இந்தப்படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் படம் என்று சில முஸ்லிம் அமைப்புகள் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் இந்தப்படத்தை பார்த்து மனம் மாறி தேவையில்லாமல் கமல்ஹாசனை சந்தேகப்பட்டுவிட்டோமே என்று மனதிற்குள் வருந்துவர். அவர்கள் வருந்தினால் மட்டும் போதாது, சகோதரனை சந்தேகப்பட்டதற்கு பிராயச்சித்தமாக அந்த முஸ்லீம் சகோதரர்கள் அடுத்த பக்ரீத்துக்கு அண்டா அண்டாவாக பிரியாணி விருந்தளிக்க வாக்களிக்க வேண்டும். அவ்வளவு பிரியா‌ணியையும் நான் ஒரு ஆளாக சாப்பிட முடியாது. ஆதலால் நம் அன்பின் சான்றாக பசித்த ஏழைப் பிள்ளைகளுக்கு அதை விருந்தாக்குங்கள். எப்போதும் போல அக்குழந்தைகளின் சாதி-மதம் பார்க்காமல் அதைச் செய்யுங்கள். அப்பெருவிருந்தில் கலந்து கொள்ள நான் பசியுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கமல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் டி.டி.எச். ரிலீஸ்! கமலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு!!

Producer council supports kamal decision on releasing Vishwaroopam in DTH  விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் வெளியிடும் கமலின் புதிய திட்டத்திற்கு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கமல் நடித்து, இயக்கி, ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பயங்கரவாதத்தை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது ஆரோ 3டி சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சிறப்பு அம்சங்களுடன் ஹாலிவுட் தரத்தில் இப்படம் தயாராகியுள்ளது. இப்படத்தை கமல் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளார். அதற்கு முன்பாக தியேட்டரில் 8 மணி நேரத்திற்கு முன்பாக டி.டி.‌எச்.-ல் வீட்டிலேயே அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கமல் இப்படி செய்வதால் தியேட்டருக்கு வரும் மக்களின் கூட்டம் குறைந்துபோகும் என்றும் இதனால் நாங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவோம் என்றும், இதனால் கமல் இம்முடிவை கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கமலின் இந்த முடிவை வரவேற்பதாக தென்னிந்திய தயாரிப்பாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சம்மேளனத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் அனைவரும், கமலின் புதிய முயற்சியான டி.டி.எச்-ல் படத்தை வெளியிடும் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் திரையரங்கு உரிமையாளர்களுடன் இன்னும் ஓரிரு நாளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இப்பிரச்னைக்கு விரைவில் முடிவு ‌எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கேயார் கூறுகையில், கடந்தாண்டு 129 படங்கள் ரிலீசானது. இந்தாண்டு 148 படங்கள் ரிலீசாகி உள்ளது. இதில் 8 படங்கள் மட்டுமே ஹிட்டாகியுள்ளது. அப்படி ஹிட்டான படங்களும் கூட சிறு முதலீடு படங்கள் தான். இன்றைய சூழலில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்கள் சென்சார் செய்யப்பட்டு தியேட்டர் கிடைக்காமலும், வருவாய் பிரச்னைகளாலும் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அப்படி இருக்கையில் கமலின் இந்த முதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த விஷயத்தில் கமலுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். நேரடியாக ஒருநாளில் படத்தை ரிலீஸ் செய்வதால், தியேட்டர் விநியோகம் பாதிக்காது என்று கூறியுள்ளார்.

பாரதிராஜா கூறும்போது, கமலை வைத்து 16 வயதி‌னிலே படத்தை எடுத்தபோது, அதில் அவரை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். இந்தபடம் எல்லாம் நன்றாக ஓடப்போகிறதா என்று ஏளனம் செய்தார்கள். எப்பவும் சோதனைகளை சாத‌னைகளாக்கி அதில் வெற்றி பெறுபவர் கமல். கமலின் இந்த புதிய முயற்சி வரவேற்கத்தக்கது. இதனால் அனைவரும் பயன்பெறுவர். மேலும் இப்படியொரு முயற்சியால் ரசிகர்களை தியேட்டருக்கும் இழுத்து வர முடியும். பொதுவாக நான் இதுபோன்ற விஷயத்தில் தலையிடுவது இல்லை. ஒரு தயாரிப்பாளராக கமலின் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். ஆரம்பத்தில் எந்த ஒரு திட்டத்திற்கும் எதிர்ப்பு இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு தொலைநோக்கு பார்வையோடு இதனை பார்க்க வேண்டும். தியேட்டர் உரிமையாளர்களும் பெருந்தன்மையோடு கமலின் முடிவை ஆதரிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக மாநில அரசையும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிலிம் சேம்பர் உறுப்பினர் பிரசாத் கூறுகையில், நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக கமலின் முடிவை நாம் வரவேற்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனைவரும் அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டும். ஒருநாளில் ரிலீஸ் செய்வதால் தியேட்டர் உரிமையாளர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

கும்கியைக் கண்டு பயப்படுகிறார் கெளதம்மேனன்!

Gautham menon fear of Kumkiவிண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப்பிறகு கெளதம்மேனன் இயக்கிய நடுநிசி நாய்கள் தோல்வியடைந்து விட்டதால், அடுத்தபடியாக தான் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் பட விசயத்தில் ரொம்ப கவனமாக இருக்கிறார் கெளதம். ஏற்கனவே ஜீவா நடித்த முகமூடி தோல்வியடைந்து அவரது மார்க்கெட்டும் சரிந்திருப்பதால், தான் இந்த படத்தை வெளியிடும் நேரத்தில் போட்டி ஏதும்இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தார் அவர். அதற்காக போட்டி இல்லாத களமாக டிசம்பர் 14-ம் தேதியை தேர்ந்தெடுத்திருந்தார்.

ஆனால் இப்போது பார்த்தால், நீதானே என் பொன்வசந்தம் படத்தை வெளியிட கெளதம்மேனன் முடிவெடுத்துள்ள அதே 14-ம் தேதியில் கும்கி படத்தையும் வெளியிடுகிறார்களாம். மைனா பிரபுசாலமன் இயக்கியுள்ள படம் என்பதோடு, இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகளும் இருப்பதால், எங்கு இந்த படத்தினால் தனது படம் தோற்று விடுமோ என்று பயப்படுகிறார் அவர். ரிலீஸ் தேதியை மாற்றி வைத்து விடலாமா? என்று யோசித்தாலும், கும்கிக்காக தான் பின்வாங்கினால், தனது படத்தை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள் என்று பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் திக திக் மனநிலையுடன் இருந்து வருகிறார் கெளதம்.

பல்லை காட்டிய பவர்ஸ்டார்! டென்ஷன் ஆன ஷங்கர் - கண்ணா லட்டு தின்ன ஆசையா விழா காமெடி!!


Powet star speech: Shankar tensionகாமெடி நடிகர் சந்தானம் கதாநாயகராவும், தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைக்கும் படம் "கண்ணா லட்டு தின்ன ஆசையா". இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வீழா, சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் வெகு விமரிசையாக நடந்தது. படத்திலும் இவ்விழாவிலும் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஒரு நாயராக நடித்து இருக்கும் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கினார் சந்தானம். விழாவில் பேசிய சந்தானம், இப்படத்தை பற்றி சந்தானத்துடன் கூறியபோது அவர் கேட்ட முதல்கேள்வியே எப்போது படத்துக்கான விழா நடைபெறும் என்று தான். ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக அவர் என்னிடம், எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள், குறைந்தது 5000 இன்விடேஷனாவது வேண்டும் என்று கேட்டார். உடனே நான் மொத்தமே 500 இன்விடேஷன் தான் அடித்துள்ளேன் என்று சொல்லி அவருக்கு ஒரு 50 இன்விடேஷன்களை கொடுத்தேன். அவர் ஏன் அப்படி கேட்டார் என்று இப்போது தான் புரிந்தது. இங்கு விழாவுக்கு பவர் ஸ்டார் தன்னுடைய ரசிகர்களை லாரியில் வரவழைத்து அழைத்து வந்துள்ளார். அவருக்காக விழாவுக்கு வந்த அவரது ரசிகர்களுக்கு எனது நன்‌றியை தெரிவித்து கொள்கிறேன் என்று போட்டு தாக்கினார்.

இவ்விழாவில் பேசிய பவர்ஸ்டாரும், சந்தானத்திற்கு சற்றும் சளைத்தவர் இல்லாவதர் மாதிரி சந்தானம் முதல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் வரை தனது ரசிகர்கள் என்று சொல்லி கலாய்த்தது அரங்கத்தையே அதிர செய்தது. ஆனால் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஷங்கர், பவர்ஸ்டாரின் ‌பேச்சால் அப்செட்டாகி இருப்பார் போலும்...தனது ஐ படத்தில் பவர்ஸ்டாருக்கும் ஒரு பாத்திரம் கொடுத்து, தன்னையும் பவரின் ரசிகர் என்று சொல்லி பவர்ஸ்டாரின் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ஷங்கர் (தகவல் உபயம் பவர்ஸ்டார்) பவரின் இதுமாதிரி பேச்சால் அவரைப்பற்றி மேடையில் மறந்தும் மூச்சுவிடவில்லை ஷங்கர். இதில் வருத்தத்திற்குள்ளான பவரின் இரண்டு லாரி ரசிகர்கள் கூட்டம், பவர்ஸ்டாரை பற்றி பவர்ஸ்டாரை பற்றி பேசு... என்று கூச்சலிட்டும், அதுபற்றி அலட்டிக்கொள்ளாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தார் ஷங்கர்.

பவரின் காமெடி பேச்சு ஷங்கரின் "ஐ"-யிலிருந்து அவரை கழட்டி விடாது இருந்தால் சரி!

ஷாம் துணிச்சல்காரன் ! : சுதீப் சர்டிஃபிகேட்

ஷாம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் ' 6 '. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

படத்தின் இசையை சுதீப் வெளியிட, சினேகா, நமீதா, விமலா ராமன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். படத்தின் டிரெய்லரை அமீர் வெளியிட்டார். விழாவில் பரத், அப்பாஸ் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

அவ்விழாவில் சுதீப் " பொதுவாக ஆண்கள் தங்கள் தலைமுடியை சீரமைத்து, முகத்தை அழகாக்கிக் கொள்வதற்காக சலூன் போகிறார்கள். அது போல் பெண்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ள பார்லருக்கு செல்கிறார்கள்.

ஒரு நடிகருக்கு முகம் தான் மூலதனம். முகத்தைப் பார்த்துதான் நடிகர்களை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்கிறார்கள். நடிகர்களைப் பொருத்தவரை முகம் அழகாக இருக்க வேண்டும். அல்லது அபாரமான நடிப்பு திறமை இருக்க வேண்டும். கதாபாத்திரத்துக்காக தலைமுடியை தியாகம் செய்து, முகத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் ஷாமுக்கு இருக்கிறது. அதை இனிமேல் தான் அவர் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த படத்தின் விளம்பரம் மூலம் அவர் நிரூபித்து விட்டார்.

நான் இவ்விழாவிற்கு வந்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. நான் நடித்த ' நான் ஈ ' படம் இங்கே நன்றாக ஓடியதற்காக வரவில்லை. ஷாம் மனிதநேயம் மிகுந்த மனிதன். அவரைப் போன்ற நல்ல உள்ளத்தை பார்க்க முடியாது என்பதற்காக வந்தேன்." என்று பேசினார்.

இயக்குனர் அமீரின் பிறந்த நாளையும், இசை வெளியீட்டு விழாவில் கொண்டாடினார்கள்.

லூட்டி தாங்க முடியல..!

சந்தானம், பவர் ஸ்டார் நடிப்பில் வெளிவர இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தை நகைச்சுவை ரசிகர்கள் ஆசையோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை 'இன்று போய் நாளை வா' படத்தின் கதை தான் என்று பேச்சுகள் நிலவி வருகிறது. இதனை 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் இயக்குனர் மணிகண்டன் மறுத்து இருக்கிறார்.

இன்று போய் நாளை வா' படத்தினைப் போலவே இதிலும் ஒரே பெண்ணை காதலிக்கும் மூன்று ஆண்கள் என்பது தான் கதை. ஆனாலும், படத்தின் திரைக்கதை வேறு மாதிரி இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. ஷங்கர் வெளியிட சிம்பு பெற்றுக் கொள்கிறார்.

இப்படத்தின் முதல் பாதி வரை பார்த்த உதயநிதி ஸ்டாலின் " கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் முதல் பாதியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்தானம், சேது மற்றும் பவர் ஸ்டார் அடிக்கிற லூட்டி... தாங்க முடியல " என்று தெரிவித்து இருக்கிறார்.

அதுமட்டுமன்றி படத்தினை தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று தீர்மானித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

தமிழில் காலூன்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ்!

ரன்வீர் சிங், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளியான இந்திப் படம் Band Baajaa Baaraat . இப்படத்தினை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்தது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவி வந்தது.

ஆனால் யாஷ் ராஜ் நிறுவனம், தங்களது நிறுவனமே தமிழ், தெலுங்கு பதிப்பினை தயாரிக்கும் என்று அறிவித்தது. தென்னிந்தியாவில் யாஷ் ராஜ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.

முன்னர் ரன்வீர் சிங் வேடத்தில் நானி நடிப்பார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அத்தகவலை அவர் மறுத்தார்.

தற்போது யாஷ் ராஜ் நிறுவனமே படத்தை தயாரிப்பதால், நாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டார்.

விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோகுல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

Wednesday 5 December 2012

காபி ஷாப்பில் பூக்கும் கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல்

Konjam koffee konjam kadhalஇந்த படத்தின் பெயரே, வித்தியாசமாக இருக்கும்போது, கதையும் வித்தியாசமாகத் தானே இருக்கும். இன்றைய இளைய தலைமுறையின், ஒவ்வொரு அசைவுகளையும், பிலிம் ரோலில் "சூட் செய்து, "கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் படத்தை, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அளித்துள்ளனர். "பாம்பே படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, ஹிருதயராஜ் தான், இந்த படத்தின் ஹீரோ. அதிதி என்பவர், ஹீரோயினாக நடித்துள்ளார். குறும் படங்கள், ஆவணப் படங்கள், விளம்பர படங்களை இயக்கிய அனுபவமுள்ள வெங்கி, இந்த படத்தை இயக்கியுள்ளார். பனி கல்யாண் என்பவர், இசை அமைத்துள்ளார். "காபி ஷாப்பில் பூக்கும் அழகான காதலை, ரசனையுடன் விவரிக்கும் இந்த படம், நிச்சயம், வெற்றி பெறும் என, பெருமிதத்துடன் கூறுகிறார், இயக்குனர் வெங்கி. இந்த வார இறுதியில் படம் வெளியாகிறது.

சசிகுமாரின் சென்டிமென்ட் தொடருகிறது


Sasikumars sentimentசசிகுமார் நடித்த படங்களில், "சுப்ரமணியபுரம், நாடோடிகள், சுந்தரபாண்டியன் ஆகியவை, அவருக்கு வெற்றியை கொடுத்த முக்கிய படங்கள். இந்த மூன்று படங்களுக்குமே, ஒரு ஒற்றுமை உண்டு. அதாவது, சசிகுமாரை சுற்றி, நான்கு நண்பர்களும் படம் முழுக்க வருவர். அதனால், இந்த நண்பர்கள் சென்டிமென்ட்டை, தான் புதிதாக நடித்து வரும், "குட்டிபுலி படத்திலும் பின்பற்றி வருகிறார் சசிகுமார். மேலும், நண்பர் கேரக்டரில் நடிப்பவர்களை, புது முகங்களாக இல்லாமல், சுந்தரபாண்டியனில் நடிக்க வைத்தது போல், ஏற்கனவே பரிட்சயமான நடிகர்களை நடிக்க வைக்கிறார். இதையடுத்தும், சசிகுமாரின் இந்த, நான்கு நண்பர்கள் சென்டிமென்ட் தொடருமாம்.

மேனேஜரை டிஸ்மிஸ் செய்த சந்தானம்!


Santhanam dismiss his managerசினிமாவில் ஒரு நடிகரின் மார்க்கெட் எகிறி விட்டால், அந்த நடிகர்களை சமாளிப்பதை விட அவர்களின் மேனேஜர்களை சமாளிப்பதுதான் ரொம்ப கஷ்டமாக இருக்கும். காரணம், ஒரு கட்டத்தில் அவர்கள் சமபந்தப்பட்ட நடிகர்கள் எந்தெந்த படங்களில் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே இவர்களாகி விடுகிறது. அவர்களாகப்பார்த்து கால்சீட் கொடுக்கும்போதுதான் படப்பிடிப்பு நடத்த முடியும் என்பதால் இவர்களைத்தான் படாதிபதிகள் கைக்குள் போட்டுக்கொள்வார்கள். அதற்காக நடிகரின் சம்பளத்துக்கு மேலாக இவர்களுக்கும் ஒரு தொகையை லஞ்சமாக கொடுப்பார்கள்.

அப்படித்தான் சிங்கம்-2 படத்தை இயக்கி வரும் ஹரி, சந்தானத்தின் கால்சீட்டுக்காக முதலில் அவரது மேனேஜர் புஜ்ஜிபாபு என்பவரைத்தான் அணுகியிருக்கிறார். ஆனால் தனக்கும் லஞ்சமாக ஒரு தொகையை எதிர்பார்த்த அவர், ஹரி கேட்டபடி கால்சீட் தராமல் இதோ அதோவென்று அலைய விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான டைரக்டர் ஹரி, இது சம்பந்தமாக சந்தானத்திடம் புகார் அளித்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தானம், மேனேஜரின் செயலுக்காக ஹரியிடம் மன்னிப்பு கேட்டதோடு, உடனடியாக மேனேஜரையே டிஸ்மிஸ் செய்து விட்டார். இனி என் சமபந்தப்பட்ட கால்சீட், சம்பளம் என அனைத்து டீலிங்கையும் நானே பார்த்துககொள்ளப்போகிறேன் என்றும அறிவித்திருக்கிறார்.

ஷங்கரின் ஐ படம் ஒலிம்பிக் கதையாம்!


I film story related about olympicஅந்நியன் படத்திற்கு பிறகு விக்ரம்-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ஐ. ஐ படத்தில், ஒலிம்பிக்கை மையமாக வைத்து, கதை தயார் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர். பலசாலியை விரும்புகிற ஒரு பெண்ணுக்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, உடம்பை கட்டுமஸ்தாக கதாநாயகன் விக்ரம் மாற்றுவதும், அதுவே, விக்ரமை ஒலிம்பிக் வரை கொண்டு போய் விடுவது தான் கதை. இதில் விக்ரம் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு வேலையை கவனிக்கிறார். தற்போது படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2013ம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது.

காஜல் பின்னால் ஒரு கூட்டம்!!

Kajal always with crowdகாஜல் அகர்வால், ஒரு படப்பிடிப்பு தளத்துக்குள் என்ட்ரி ஆனாலே, அவர் பின்னால் ஒரு கூட்டமே திரண்டு வருகிறது. இவர்களெல்லாம் யார் என்று விசாரித்தால், அத்தனை பேரும், அவரது உதவியாளர்கள் என்கின்றனர். பல மொழிகளிலும், பரவலாக நடிப்பதால், ஓடியாடி வேலை செய்ய குறைந்தது எட்டு பேராவது காஜலுக்கு தேவைப்படுவதாக கூறி, கூடவே அழைத்து வந்து விடுகிறார்.

அறுக்க மாட்டாதவன் இடையில் அம்பத்தெட்டு கருக்கரிவாள்!

இனி முன்னணி இயக்குனர்களுடன் மட்டும் தான்...! அதர்வா முடிவு


Atharvas new decisionபாலாவின், பரதேசி படத்தில் நடிப்பதற்கு முன் வரை, புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து வந்த அதர்வாவும், இப்போது மாறிவிட்டார். அடுத்தடுத்து, "முன்னணி இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன்... என்று கூறும் அவர், சில டைரக்டர்களை சந்தித்து, தனக்காக கதை தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், இயக்குனர்களோ, "பரதேசியில் உங்களது பர்பாமென்சைப் பார்த்துவிட்டு, எந்த மாதிரி கதை ரெடி செய்யலாம் என்பதை முடிவு செய்வோம்... என்று, பரதேசி படத்தின் வரவுக்காக காத்திருக்கின்றனர்.

ஹன்சிகாவை விடாது துரத்தும் தனுஷ்!

Dhanush wants hansika for his filmதெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம்தான் தமிழுக்கு என்ட்ரி ஆனார். அதனால் அவரது முதல் தமிழ் ஹீரோ தனுஷ் என்பதால் இப்போதுவரை அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. ஹன்சிகாவே தன்னை மறந்தாலும் அவரை மறக்க விடுவதாக இல்லை தனுஷ். அவ்வப்போது போனில் கடலை போடுவதை வாடிக்கையாகச் செய்து வருகிறார். நேரம் கெட்ட நேரங்களில் அவர் போன் போட்டு வறுத்தாலும்கூட வேறு வழியில்லாமல் அவருக்கு போனில் கம்பெனி கொடுப்பதை தொடர்ந்து வருகிறார் ஹன்சிகா.

இந்த நிலையில், களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து தான் இயக்கும் சொட்டவாளக்குட்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியபோது, முதலில் கால்சீட் தருகிறேன் என்று சொன்ன ஹன்சிகா, பின்னர் தனுஷ் படத்தின் நாயகன் என்றதும், சும்மாவே கடலை போடுவார், பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் அவருடன் நடித்தால் அடிக்கடி அல்வா கொடுக்கும் வேலையிலும் இறங்கி விடுவார் என்று அப்படத்தை தவிர்க்க வெவ்வேறு காரணங்களை சொல்லி நழுவிக்கொண்டு வருகிறார் ஹன்சிகா.

இந்த சேதி தனுசின் காதுகளுக்கு சென்றபோது, எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? என் படத்துக்குள்ள நீ முதல்ல கால்சீட் தரனும் என்று அம்மணியை செல்லமாக கடிந்து கொண்ட தனுஷ், நீ கால்சீட் தருவதாக சொன்னபிறகுதான் படப்பிடிப்பு தேதியே முடிவு செய்வோம். அதுவரைக்கும் டீல்தான் என்று ஹன்சிகாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம். இதனால் தனுசிடம் மீண்டும் சிக்கவா? வேண்டாமா? என்ற பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் ஹன்சிகா.

என் இமேஜை சீனுராமசாமி மாற்றி விட்டார்- சுனைனா

Seenu Ramasamy changes my carrier says sunainaநீர்ப்பறவை படத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நடித்தவர் சுனைனா. இப்படத்துக்கு சற்று முன்புதான் பரத்துடன் படுகவர்ச்சியாக சுனைனா நடித்த திருத்தணி படம் வெளியானது. அதைப்பார்த்து மேலும் சில கமர்சியல் படாதிபதிகள் சுனைனாவை மேலும் தோலுரிக்கும் நோக்கத்துடன் அணுகினர். ஆனால் டைட்டீல் கார்டு தொடங்கி என்ட் கார்டை வரைக்கும் ஒரு டயலாக் விடாமல் கதைகளைக்கேட்ட சுனைனா, சொல்லி அனுப்புகிறேன் என்று படாதிபதிகளை அனுப்பி வைத்தவர்தானாம். அதன்பிறகு எந்த பதிலும் அவரிடமிருந்து வரவில்லையாம்.

இதையடுத்து, என்னாச்சு அம்மணி? ஒரு பதிலையும் காணோமே? என்று கேட்டவர்களிடம், நீர்ப்பறவை படத்தில் நடித்தபிறகு என் மீது நல்ல நடிகை என்றொரு முத்திரை விழுந்திருக்கிறது.எனது இமேஜை நல்ல நடிகையாக மாற்றி விட்டார் சீனுராமசாமி. அதனால் இனிமேல் இருக்கிற கொஞ்சநஞ்ச காலமும் இதுமாதிரி தெறமைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே ஆக்டு கொடுக்க ஆசைப்படுறேன் என்று டபாய்த்து விட்டாராம் நடிகை. இதனால் சுனைனாவை நம்பி மோசம்போன படாதிபதிகள் இப்போது வேறு நடிகைகளை தேடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆர்யா மானஸ்தன் சொல்கிறார் விஷால்!


Vishal at samar press meetஆர்யாவுக்கான கதையில் நான் நடித்தது பற்றி ஆர்யா ஒன்றும் கேட்க மாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன் என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். வெடி படத்திற்கு நடிகர் விஷால் நடித்துள்ள படம் சமர். திரு இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக த்ரிஷாவும், சுனைனாவும் நடித்துள்ளனர். மலையேறும் பயிற்சி தருபவராக இருக்கும் சக்தி என்ற விஷால் ஒரு விஷயமாக பாங்காக் செல்ல அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் கதை. முதன்முறையாக விஷால் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷ்ன் படமாக சமர் உருவாகியுள்ளது. படத்தின் பெரும்பகுதி பாங்காக்கில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் பேசிய விஷால், சமர் படத்தின் கதையை ஆர்யாவுக்குத்தான் டைரக்டர் திரு உருவாக்கினார். ஆனால் கதை பிடித்து போனதால் நானே நடித்து விட்டேன். அவனுக்காக உருவாக்கிய கதையில் நான் நடித்ததால் அவன் நிச்சயம் கோபப்பட மாட்டான். அதைப்பற்றி ஒரு கேள்வி கூட கேட்கமாட்டான். ஏன் என்றால் அவன் மானஸ்தன். அவன் இவன் உள்ளிட்ட படங்கள் முதற்கொண்டு என்னுடைய வளர்ச்சியில் ஆர்யாவின் பங்கு முக்கியமாக இருக்கிறது என்று பேசினார்.

நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது


A baby girl for sangeetha Krish coupleநடிகை சங்கீதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிதாமகன், உயிர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் நடிகை சங்கீதா. இவருக்கும் பிரபல பாடகர் கிரிஷ்க்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வந்த சங்கீதா கர்ப்பமானார். இதையடுத்து சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட்டார். டி.வி. நிகழ்ச்சிகளில் மட்டும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்நிலையில் சங்கீதாவுக்கு நேற்று இரவு பிரசவ வலி எடுக்கவே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். சங்கீதா-கிரிஷ் தம்பதியருக்கு குழந்தை பிறந்த செய்தி ‌கேட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

"பிரியாணி கதை செம டேஸ்ட் : ஹன்சிகா

Briyani is super taste says hansikaஹன்சிகா மோத்வானி, "பிரியாணி படத்தில் நடிப்பதால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார். இயக்குனர் கேட்டதுமே, உடனடியாக கால்ஷீட் கொடுத்த, ஹன்சிகா, இந்த படத்தில், இரண்டு ஹீரோயின்கள் நடிப்பதாக வெளியான செய்தியால், அதிர்ந்து போனார். இதுகுறித்து, இயக்குனரை தொடர்பு கொண்டு, ஹன்சிகா கேட்டபோது, "நீங்கள் தான் ஹீரோயின். மற்றொரு நடிகை, பாடல் காட்சிக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என, உறுதி அளித்தாராம்.

இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது, "பிரச்னை எல்லாம் சரியாகி விட்டது, பாஸ். இப்போது படத்தில் நடிப்பது பற்றித் தான், என் முழு கவனமும் உள்ளது. "பிரியாணி கதை முழுவதும் எனக்கு தெரியும். அசல் பிரியாணி மாதிரியே, பிரியாணி படத்தின் கதையும் செம டேஸ்ட்டா, இருக்கு. காமெடியும் நிறைய இருக்கு... கார்த்திக்கும், எனக்கும் உள்ள ரொமான்டிக் காட்சிகள் டக்கராயிருக்கும் என்றார். கதை குறித்து கேட்டபோது, "கதையா மூச்.. டைரக்டர் டென்ஷனாயிடுவார்... எனக்கு பிடிச்சுருக்கு... தியேட்டருக்கு வரும்போது, உங்களுக்கும் பிடிக்கும் என, கிரேட் எஸ்கேப் ஆனார்.

"யானையை மறக்க முடியவில்லை லட்சுமி மேனன்

Lakshmi menon memorised of kumki elephant"சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்துள்ள லட்சுமிமேனன், அடுத்ததாக, சசிகுமாருடன் "குட்டிப்புலி படத்தில் நடித்து வருகிறார். "கும்கி படத்தில், உடன் நடித்த யானையின் நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கிறாரார், லட்சுமி மேனன். இதனால், அந்த யானையின் புகைப்படத்தை, தன் வீட்டில், பிரேம் போட்டு மாட்டியுள்ளாராம். படப்பிடிப்பில், சில நேரம், துதிக்கையை பிரியமாக வருடும் போது, அது தலையை ஆட்டி, சிநேகம் தெரிவிக்குமாம். யானையுடன், தான் இருக்கும் புகைப்படங்களை, இயக்குனரிடம் கேட்டு வாங்கி வைத்துள்ளார். லட்சுமி மேனன் கூறுகையில்,"கும்கி கிளைமாக்சில், யானை தொடர்பான காட்சிகள், 10 நிமிடங்கள் இருக்கும். இந்த காட்சிகள் ரசிகர்களை மிரள வைக்கும்... நெஞ்சை நெகிழ வைக்கும்... அழவைக்கும்... ஆச்சரியப்படவைக்கும் என்றவர், "கிளைமாக்ஸ் காட்சி பற்றிய ரகசியத்தை வெளியில் யாரிடமும் கூறி விடாதீர்கள் என, காதை கடித்தார்.

விஜய்யின் 25வது பாடல்


Vijay sings 25th songஇயக்குனர் விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் நடிப்பில், புதிய படம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு இன்னும் பெயர் இடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு, மும்பையில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில், மற்றொரு ஹைலைட்டான விஷயமும் உள்ளது. இதில், நடிகர் விஜய், ஒரு பாடலை, பாடப் போகிறார். இந்த பாடல், அவர் சொந்த குரலில் பாடும், 25வது பாடல். ஜி.வி.பிரகாஷ் தான், இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில், ஐந்து பாடல்களாம். இதுவரை, இரண்டு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் பாடல்களில், ஜி.வி.பிரகாசும், விஜய்யும், தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர். விஜய்யின், 25 வது பாடல், பட்டையை கிளப்புமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு..!



வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'பிரியாணி' கமகமவென தயாராகிறது.

இதுவரை 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் வெங்கட்பிரபு, எல்லா படங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும்.

'சரோஜா', 'மங்காத்தா' இரண்டு படங்களுமே த்ரில்லர் வகையில் வெங்கட்பிரபு இயக்கிய படங்கள் தான். பிரியாணி படத்தினையும் அதே பாணியில் இயக்கி வருகிறாராம்.

கதைப்படி கார்த்தி, பிரேம்ஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாம். இருவரும் 'பிரியாணி' பிரியர்களாம். அதுவும் ஆம்பூர் பிரியாணி என்றால் அவ்வளவு பிடிக்குமாம்.

'பிரியாணி'க்கு பேர் போன ஆம்பூருக்கு போய், பிரியாணி சாப்பிட திட்டமிட்டு அங்கே போகிறார்கள். போன இடத்தில் ஒரு கொலை நடந்து, அந்த பழி கார்த்தி, பிரேம்ஜி இருவர் மீதும் விழுகிறது.

பிரியாணிக்கு ஆசைப்பட்டு, கொலை கேஸில் சிக்கிய இருவரும் அந்த பிரச்னையை சமாளித்தார்கள் என்பதையும், கொலை செய்தது யார் என்பதையும் சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறாராம் வெங்கட்பிரபு.

மேலும் இரண்டு 'பிரியாணி' ஸ்பெஷல் ' தகவல்கள் :

'பிரியாணி படத்தின் முதல் பாடலை கார்த்தி, பிரேம்ஜி இருவரும் இணைந்து பாடி இருக்கிறார்கள்.

'செந்தூரப்பூவே' புகழ் ராம்கி, பிரியாணி மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார்!

'ச்சும்மா அதிரும்' சிவாஜி 3D !

'சிவாஜி' படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்லுவார் "ச்சும்மா அதிருதுல்ல!". 3D-யில் 'சிவாஜி' படம் பார்க்கும் பொழுது, இந்த வசனத்தை போலவே தியேட்டரே சும்மா அதிருகிறது. படத்தில் வரும் 'வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி' மற்றும் 'சஹானா சாரல் தூவுதோ' ஆகிய பாடல்களையும், ஒரு சண்டைக் காட்சியையும் பத்திரிகையாளர்களுக்காக சென்னை சத்யம் தியேட்டரில்,3D-யில் நேற்று (03 டிசம்பர் ) திரையிட்டு காண்பித்தார்கள்.

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், திடீரென திரையில் 3D-யில் தோன்றிய ரஜினி "நான் வெளியூர்ல இருக்கேன். 'சிவாஜி’ படத்தை ஷங்கர் டைரக்ஷனில், ஏவி.எம். நிறுவனம் பல கோடி ரூபா செலவுல மிக பிரமாண்டமா தயாரிச்சு ரிலீஸ் பண்ணாங்க.. இப்ப படத்தை அதைவிட ரெண்டு மடங்கு செலவு செஞ்சு 3D படமா மாத்திருக்காங்க. இந்த செலவுல, 2 பிரமாண்ட படங்களே எடுத்திருக்கலாம்.. ஆனா என் பிறந்தநாள் பரிசா ரசிகர்களுக்கு இந்த 3D படத்தை ஏவி.எம். குடுத்திருக்காங்க.. இந்த படத்தை நான் 3Dல பாத்தேன்.. ரொம்ப பிரமாதமா வந்திருக்கு. நீங்களும் பாருங்க" என்றார்.

இயக்குனர் ஷங்கர் " சிவாஜியை 3Dல பண்ண என்ன இருக்கு.. 'எந்திரன்'லயாவது 3D பண்ண நிறைய ஸ்கோப் இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, சிவாஜி படம் 3D-ல பிராமாதமா வந்திருக்கு. நான் பாத்த ஆங்கில படங்களை விட சிவாஜி பிரமாதமா இருக்கு. 3Dல படம் பார்த்தா ஏதாவது கண்ணுகிட்ட வந்து குத்தற மாதிரியே இருக்கும். ஆனா 'சிவாஜி'ல Petals ( பூ இதழ்கள் ) கண் முன்னாடி வருவது ரொம்ப அழகா இருந்தது. இதுக்கு முதல்ல பாராட்ட வேண்டியது கே.வி.ஆனந்த்தை தான். 3D பண்ண மாதிரியே பண்ணியிருக்கிறார். நான் டைரக்டராக பார்க்காம ஒரு பார்வையாளராக தான் பார்த்தேன். படம் பிரமாண்டமா வந்திருக்கு" என்றார்.

வைரமுத்து "ரசிகர்கள் 'சிவாஜி' படத்தை கொண்டாடுவார்கள். பழைய தொழில்நுட்பத்தில் தூரத்தில் இருந்த ரஜினி புதிய தொழில் நுட்பத்தால் நம் அருகில் வந்து மேலும் நெருக்கமாகிறார். ரஜினி இந்த படத்தில் மிக அழகாக தெரிகிறார். இந்த படம் தான் ரஜினியின் பிறந்தநாள் பரிசு, புத்தாண்டு பரிசு, பொங்கல் பரிசு! " என்றார்.

Dolby Atmos தொழில்நுட்பத்தில் வெளிவரும் முதல் இந்திய திரைப்படம் 'சிவாஜி 3D' தான்.

லட்டு ரிலீஸ் : ஷங்கர்.. சிம்பு.. சந்தானம் !



தொடர்ச்சியாக படங்களில் நடித்து வரும் சந்தானம், முதன் முறையாக தயாரிக்கும் படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'.

சந்தானம், பவர் ஸ்டார், சேது, விஷாகா மற்றும் பலர் நடித்து இருக்கும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தினை மணிகண்டன் இயக்கி இருக்கிறார். தமன் இசையமைத்து இருக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தினை ராமநாராயணன் வெளியிட இருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் டிசம்பர் 9ம் தேதி நடக்க இருக்கிறது. பாடல்களை இயக்குனர் ஷங்கர் வெளியிட, சிம்பு பெற்றுக் கொள்கிறார்.,

'பரதேசி', 'சமர்' ஆகிய படங்களுடன் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படம் டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது.

Saturday 1 December 2012

சினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- பூர்ணா

I will never marry an actor says poornaபரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தவர், கோடம்பாக்கம் கைவிரித்ததால் ஆந்திராவில் மையம் கொண்டார். போன வேகத்தில் துகிலுரிந்து படு சூடுகாட்டி நடித்து சில படங்களை கைப்பற்றினார். ஆனால் ஓரிரு படங்களிலேயே பூர்ணாவை துவைத்து பிழிந்து காய போட்டனர் ஆந்திரவாலாக்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் பூர்ணா.

தற்போது ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நடிப்பவர், தமிழ் நாட்டில் தன்னை நல்ல புள்ளையாக காட்டிக்கொள்வதற்காக மீண்டும் போர்த்திக்கொண்டே நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதி, நகுல் போன்ற நடிகர்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா, மீண்டும் அவர்களுடனான நட்பை புதுப்பித்திருப்பதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால் இந்த செய்தியை பூர்ணாவின் காதோரம் கொண்டு சென்றால், எந்த நடிகர்களுடன் நான் நட்பு கொள்ளவில்லை என்கிறார். தமிழைப்போலவே நான் தெலுங்குக்கு சென்றபோதும் ஒரு நடிகருடன் எனக்கு காதல் இருப்பதாகவும், அவரையே நான் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த நடிகருடன் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. அதோடு நடிகர்களை நான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்ததுமில்லை. காரணம், நடிகர்களை திருமணம் செய்து கொண்டு நிம்மதியிழுந்த பல நடிகைகளின் வாழ்க்கையை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் நடிகர்களை திருமணம் செய்து கொண்டு என் நிம்மதியை எந்த காரணம் கொண்டும் நான் கெடுத்துக்கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில், சினிமா வாசணையே இல்லாத பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மட்டும் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் பூர்ணா.

மீண்டும் தள்ளிப்போன விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ்!

Vishwaroopam Audio Release again postponedஎன்ன காரணத்தினாலோ தெரியவில்லை தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது கமலின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகியுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை கடந்த மாதம் அறிவித்து இருந்தார் கமல். சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பறந்து பறந்து ஆடியோவை வெளியிட திட்டமிருந்தார் கமல். ஆனால் மழையால் அதனை ரத்து செய்தார் கமல். பிறகு சென்னையில் மட்டும் வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆடியோவை வெளியிட இருந்தார் கமல். ஆனால் இப்போது அதுவும் ரத்தாகி டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆடியோ விழா நடக்கிறது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

MPMK Audio Launch Live...

’சூப்பர்ஸ்டார்’ சந்தானம் - ரஜினி பதில்!




நகைச்சுவை நடிகர் சந்தானம் கையில் இப்போது கிட்டத்தட்ட 20 படங்கள் இருக்கிறது. சந்தானம் ஆர்யா இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மிகப்பெரிய ஹிட். இப்போது சந்தானம்-ஆர்யா இணைந்திருக்கும் படம் சேட்டை. கண்ணன் இயக்கும் சேட்டை படம் காமெடிக்கு முக்கியத்துவம் அளித்தே எடுக்கப்படுகிறது.



சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட போதிலும் எந்த பட்டப்பெயரும் வைத்துக்கொள்ளாத சந்தானத்திற்கு சேட்டை படக்குழு தங்களின் படத்தின் மூலம் ‘காமெடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டம் தரவிருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தை அவர் ஒருவருக்கே உரியது என்பதால் சந்தானம் ரஜினிக்கு ஃபோன் செய்து வைத்துக்கொள்ளவா? வேண்டாமா? எனக் கேட்டுள்ளார்.


சந்தானத்திற்கு ரஜினி “ வெரிகுட் வெரிகுட். ஆனால் சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தை என் பயரில் ரிஜஸ்டர் ஆகலையே” என்று நகைச்சுவையாக பதில் கூறினாராம்.

ஹீரோவாகிறார் விஜய் படத்தின் வில்லன்!



       பில்லா-2, துப்பாக்கி ஆகிய படங்களின் வில்லன் வித்யுத் ஜம்வால். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இரண்டு படங்களும் முன்னணி நடிகர்களின் படம் என்பதால் வித்யுத்தின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறது. வித்யுத்தின் கட்டுமஸ்தான ஸ்டைலான தோற்றம் பெண் ரசிகைகளையும் கவரத் தவறவில்லை.

காக்க காக்க படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லன் கேரக்டரில் நடித்து சிறந்த அறிமுக நடிகர் விருதை வாங்கியுள்ள வித்யுத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் ஆதரவால் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வித்யுத் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கின்றனராம். இரண்டே படங்களில் இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு பதிலளித்த வித்யுத் “நான் இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு சிற்நத மனிதர்களுடன் நடித்திருக்கிறேன்.

விஜய், அஜித் ஆகிய இருவரையும் உன்னிப்பாக கவனித்து நான் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். விஜய்யிடமிருந்து அமைதியின் முக்கியத்துவத்தையும், அஜித்திடமிருந்து பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன். எனக்கு ஏற்ற கதையாக தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.

மனிஷா கொய்ராலாவிற்கு புற்றுநோய்!


Manisha koyralavirku cancer!பம்பாய், உயிரே, இந்தியன், ஆளவந்தான் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, சில நாட்கள் மருத்துவமனையில் தங்கும் அவருக்கு சில மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, நேபாளின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். விவாகரத்து பெற்ற 42 வயதான நடிகை மனிஷா, 1991-ம் ஆண்டு சௌதாகர் என்னும் இந்தித் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் பட வாய்ப்பை தூக்கியெறிந்த அசின்!


Threw Asin film of the opportunity!


கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட் நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அங்குள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய்குமார் போன்ற பிரபல நடிகர்களை தனது பாக்கெட்டில் இருப்பதால், கோலிவுட் நடிகர்களெல்லாம் அவருக்கு ஹீரோவாகவே தெரியவில்லையாம். சமீபத்தில்கூட விஜய் படத்தை இயக்கும் தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அசினிடம் கால்சீட் கேட்டு மும்பைக்கு சென்றாராம். அப்போது துப்பாக்கிக்கு அப்புறம் விஜய் நடிக்கிற படத்தை நான்தான் டைரக்ட் பண்றேன். அந்த படத்துல நீங்க விஜய்யோட ஆக்ட்டு கொடுத்தா சூப்பரா இருக்கும்னு பீல் பண்றேன் என்று தனது பாணியில் அசினிடம் தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் கலந்து பொறிந்தாராம்.

ஆனால் அதை சுடச்சுட கேட்டுக்கொண்டிருந்த அசின், அவர் பக்கமா திரும்பி, இப்ப அக்சய்குமாரோட கில்லாடி 786 படத்துல நடிக்கிறேன். இதுக்கு அப்புறமா என்னோட நடிக்கிறதுக்கு இரண்டு பெருசு நடிகருங்க க்யூவுல நிக்கிறாங்க. இந்த நேரத்துல நான் கோலிவுட்டுக்கு வந்துட்டா பாவம் இங்க இவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க. அதனால் வேற ஏதாச்சும் நடிகைங்கள பாத்துக்கிங்க என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். அதையடுத்துதான் தனது ஆஸ்தான நாயகியான அமலாபாலை கமிட் பண்ணியிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

ஆனால் அசின் சொல்லி அனுப்பிய இந்த சேதியைக்கேட்டு தளபதி நடிகருதான ரொம்ப டென்சனாகி விட்டாராம். எங்கூட நடிச்சு வளர்ந்த நடிகை. எனக்கே டேக்கா கொடுக்குதா? ஏத்தம்னு ஒன்னு இருந்தா, இறக்கம்னு ஒன்று இல்லாமலா போகும். அப்ப பாத்துக்கிறேன் என்று அசின் பெயரை தனது டைரியில் குறிச்சி வைச்சிருக்கிறாராம்.

ஹன்சிகாவை அதிர வைத்த நயன்தாரா!



Nayanthara Breaking into Hansika!
     ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்தது. அதைத் தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலிக்கு செல்லவிருந்த சில படங்கள்கூட ஹன்சிகா பக்கம் திரும்பின. இதனால் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு தன்னை ஓரங்கட்ட எந்த நடிகையும் வர சான்ஸ் இல்லை என்றும் மிதப்பில் இருந்தார்.

இந்த நிலையில், ஹன்சிகாவுக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஆர்யாவுக்கு ஜோடியாக ராஜா ராணி படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹன்சிகாவிடம்தான் பேசியிருக்கிறார்கள். கால்சீட் கொடுப்பதற்கு ஹன்சிகா தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆர்யாவின் அதிரடி சிபாரிசினால் அப்படத்தை கைப்பற்றியிருக்கிறார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த மேலும் சில படங்களும் இப்போது
நயன்தாரா பக்கம் திரும்பி நிற்கின்றன. இதனால் கைவசம் இருக்கும் படங்களோடு தன்னை டெபாசிட் இழக்க செய்து விடுவாரோ நயன்தாரா என்று கலங்கிப்போய் இருக்கிறார் ஹன்சிகா.

சட்டை காலறை தூக்கி விடும் விஜய்சேதுபதி!


Vijay Sethupathi have huge response after the success of pizzaதென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. இவர் பீட்சா படத்தின் வெற்றியால் பேசப்படும் நடிகராகியிருக்கிறார். வித்தியாசமான ஸ்கிரிப்ட், வித்தியாசமான ஹீரோ என்று அவரை உற்று நோக்குகிறது கோலிவுட். இதனால் பீட்சாவுக்குப்பிறகு சில முன்னணி இயக்குனர்களே அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் பல கதைகள் கேட்டு அதில் நலன் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை மட்டுமே ஓ.கே செய்து படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி விட்டார் விஜய்சேதுபதி.

மேலும், சூதுகவ்வும் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஒரு புதுமையான ஹீரோவாக நடிக்கிறேன். ஆனாலும் காமெடியும் இருக்கிறது. முக்கியமாக இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத கதைக்களமாக இருக்கும் என்று அப்படம் பற்றி சொல்லும் விஜய்சேதுபதி, இனி சுந்தரபாண்டியனில் நடித்தது போன்று வில்லனாக நடிக்க மாட்டாராம். பீட்சா தனக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்து விட்டதால் அந்த ட்ரேக்கிலேயே முழுவீச்சில் பயணிக்கப்போவதாக சொல்கிறார் விஜய்சேதுபதி.

இந்த நிலையில், ஒரு படத்தின் வெற்றியிலேயே 50 லட்சம் சம்பளம் கேட்டு காலரை தூக்கி விடுகிறார் விஜய்சேதுபதி என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவுகிறது. ஆனால் அவரிடம் இதுபற்றி கேட்டால், என்னைப்பற்றி இதுவரை கிசுகிசுக்களோ, வதந்தியோ வரவில்லையே என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி சிரிக்கிறார்.

அஜீத் ஜோடியானார் தமன்னா!!

Tamanna to pair with Ajith filmதற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குபவர் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. விஜயா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத்துடன் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா, விதார்த், முனீஷ், சோஹில், என்ற இளம் நாயகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்த மாதத்துடன் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா நிறைவு பெறுவதால் நாளை (டிசம்பர் 2ந்தேதி) பாடல் பதிவுடன் பணிகளை தொடங்கி விடுகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சிவா கூறும்போது "நாகிரெட்டி அவர்களின் நூற்றாண்டில் படம் துவங்குகிறது. அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விஜயா புரொடக்ஷனின் பிரமாண்டம் இவற்றை மனதில் வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அஜீத்திடம் உள்ள மற்றொரு பரிமாணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்" என்றார்.

Friday 30 November 2012

தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்க ஆசைப் படுகிறேன்; சினேகா!



Wishes to be always in the Tamil film: Sneha!

விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புன்னகை இளவரசியாக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை சினேகா, சமீபத்தில் அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார், அவர் பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் வெளி வர உள்ள படம் ஹரிதாஸ், இந்த படம் குறித்தும் தினமலருக்கு சினேகா அளித்த பேட்டியில்,

நான் சினிமாவில் கிட்டத்தட்ட 69 படங்களில் நடித்துள்ளேன் , ஆனால் ஹரிதாஸ் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம், என் படங்களில் எப்போதும் கிளாமர் இருக்காது, ரொம்ப எதார்த்தமான குடும்ப பாங்கான படங்கள் தான் நடித்துள்ளேன், அந்த வகையில் என் கேரக்டருக்கு பொருத்தமான ரொம்ப எதார்த்தமான படம் ஹரிதாஸ், படத்தில் டீச்சர் ரோல், அந்த சிறு வயது குழந்தையுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தில் நான் ஹீரோயின் அல்ல, கதை தான் எல்லாமே. நான் எப்போதும் என் படங்களுக்கு ஹோம் வொர்க் செய்து பார்க்கும் பழக்கம் இல்லை, இயக்குனர் ஸ்பாட்டில் என்ன சொல்கிறாரோ அதை புரிந்து கொண்டு அப்படியே வெளிப்படுத்துவேன், ஒன்னும் மைண்ட்ல வச்சிக்காம டைரக்டர் சொல்றதை கேட்டு செய்தாலே போதும்னு நினைப்பேன் , அதுவே நாம் நினைப்பதை அழகாக வெளிக்காட்ட முடியும், இந்த படமும் அப்படி தான் நடித்துள்ளேன்.

நான் நடித்த எத்தனையோ படங்களில் சில படங்கள் மனசை விட்டு அகலாது, விரும்புகிறேன், ஆட்டோகிராப், வசூல்ராஜா, பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, இப்படி எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் ஹரிதாஸ் படம் நிச்சயமாக இருக்கும். பொதுவா சினிமா ஹீரோயின்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனா அவங்க திரும்ப நடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்றாங்க. அண்ணி அக்கா இது மாறி ரோல்ஸ் பண்ண வச்சிடறாங்க, என்னை பொறுத்த வரை எந்த கதா பாத்திரம் சினேகா நடித்தா நல்லா
இருக்கும்னு டைரக்டர் முடிவு பண்ணி கேட்கிறார்களோ நிச்சயம் அந்த ரோலை நான் மிஸ் பண்ண மாட்டேன்,

கல்யாணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 கதை கேட்டிருக்கிறேன் அதில் ஒன்று மட்டும் ஒத்துகிட்டேன், எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் , அதன் பிறகு தான் மற்றவை, நான் இது வரை செய்த படங்கள் எனக்கு கெட்ட பெயரை தந்ததில்லை, இனிமேலும் அதை காப்பாற்றுவேன், மீடியாக்களில் நானும் பிரசன்னாவும் நிறைய பேசிட்டோம், அதனால் தான் இந்த தீபாவளிக்கு கூட யாருக்கும் பேட்டி ,பார்ட்டி என்று எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம் ,அப்பா அம்மா அக்கா அண்ணன் என்று கிட்டத்தட்ட 25 பேர் உள்ள எங்கள் குடும்பத்துடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு நானும் பிரசன்னாவும் கொண்டாடினோம் , தற்போது பிரசன்னா சென்னையில் ஒரு நாள் மற்றும் பிரியாணி படத்திலும் ஒரு தெலுகு படத்திலும் நடித்து வருகிறார்

என் எதிர் காலத்தை பற்றி நிறைய கனவு இருக்கு, நிறைய திட்டம் இருக்கு, எனக்கு காஸ்ட்யூம் டிசைன் ஆர்வம் இருக்கு, இன்டிரியர் வேலையும் ஆர்வம் உண்டு, நிச்சயம் விரைவில் சினிமாவில் இருந்து கொண்டு அதன் தொடர்பான சில வேளைகளில் ஈடுபட விரும்புகிறேன், விரைவில் அறிவிப்பேன். படம் எனக்கு வந்தாலும் வரலைனாலும் யாரையும் போய் வற்புறுத்த மாட்டேன், எனக்கு வரும் ரோல் நிச்சயம் எனக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கு, என்ன இருந்தாலும் நான் எப்போதும் சினிமாவில் இருக்கவே ஆசைப் படுறேன் என்று சொல்லி முடித்தார் சினேகா.

Thursday 29 November 2012

வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை- பாலா

Vedhika is not beauty says balaடைரக்டர் பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வேதிகா. அவரைப்பொறுத்தவரை இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்பதால் காடு, மலை, வெயில் என்று பாராமல் மாதக்கணக்கில் பாலாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார். கூடவே இந்த படத்தில் வேதிகாவின் இயல்பான நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதனால் பரதேசி தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை தரும் என்று மனசு நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறார் வேதிகா.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதையடுத்து நடந்த மிரஸ்மீட்டில், அழகான நடிகையான வேதிகாவை, இப்படி அசிங்கமான நடிகையாக்கி விட்டீர்களே? என்று கேள்விகள் எழுந்தபோது,கதாபாத்திரத்திற்கு மேட்சாக வேண்டும் என்பதற்காக அவரது உடம்பு முழுக்க கருப்பு வண்ணம் பூசி படமாக்கியிருக்கிறேன். மற்றபடி வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை. சுமாரான பொண்ணுதான் என்று பதில் சொன்னார் பாலா. ஆனால் அவரது எந்த யதார்த்தமான பதிலைக்கேட்டு அதுவரையில் தவுசண் வாட்ஸ் பல்பமாக பிரகாசித்த வேதிகாவின் முகம் திடீரென்று சுருங்கிப்போனது. தனியாக விட்டால் குலுங்கி குலுங்கி அழுதுவிடும் கண்டிசனில் மேடையில் அமர்ந்திருந்தார்.

சமுத்திரகனி-சசிகுமாரின் நட்பு டமால்!


Sasikumar - Samuthirakani friendship breakநட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் டைரக்டர் சமுத்திரகனி, சசிகுமார் ஆகிய இருவரும். சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரத்தில் வில்லனாக நடித்தார் சமுத்திரகனி. அதில் முளை விட்ட அவர்களது நட்பு, பின்னர் ஆலமரமாய் தழைத்தது. அதன்காரணமாக, பின்னர் சசிகுமாரை வைத்து நாடோடிகள் என்ற படத்தை இயக்கினார் சமுத்திரகனி, அப்படம் மெகா ஹிட்டாகவே அவர்களது நட்பு இன்னும் ஆழமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்கிற அளவுக்கு கொண்டாட்டம் கும்மாளம் என் பின்னி பெடலெடுத்து வந்தார்கள்.

இந்நிலையில், அதன்பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஈசன் படத்தில் நடித்த சமுத்திரகனி, போராளி என்ற படத்தையும் சசிகுமாரை வைத்து இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார் சசிகுமார். ஆனால் இது தெரிந்தும் அந்த படங்களுக்காக தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அடிக்கடி டார்ச்சர் கொடுத்தாராம் சமுத்திரகனி. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அதன்பிறகு இருவருமே பேசிக்கொள்வதில்லையாம். நட்பில் விரிசல் ஏற்பட்டு, இப்போது தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.

ரஜினிக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தார் விஜய்!!


Tamil film Thuppakki enters Rs 100 crore club தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.

பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.

இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில்‌ சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ‌மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஆலோசனையை பின்பற்றும் அஜீத்!

Ajith following rajini adviceரஜினியை ஆன்மீகம் தொடங்கி பல விசயங்களிலும் பின்பற்றி வருபவர் அஜீத். அந்த வகையில், ரஜினி சொன்ன ஒரு ஆலோசனையையும் தற்போது கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் அவர். அது என்னவென்றால், பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினி, இன்றைய நடிகர்கள் ஒரு படத்தை முடித்து அது வெளியான பிறகே அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்கள். அது சரியானதல்ல. காரணம், அந்த படம் ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால், அதன்பிறகு அவரை வைத்து படம் பண்ண படாதிபதிகள் தயங்குவார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வந்தால், அதில் இரண்டு படம் தோல்வி என்றாலும், மூன்றாவதாக ஒரு படம் வெற்றி பெற்று காப்பாற்றி விடும். இதைத்தான் நான் முன்பு கடைபிடித்து வந்தேன். அதனால் இன்றைய நடிகர்களும் அதுபோன்று ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பு என்று பேசினார்.

அவரது வார்த்தைகளையும், அனுபவத்தையும் வேதவாக்காகக் கொண்டு சில நடிகர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அதில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். பில்லா-2 வுக்கு முன்பு வரை ஒரு படம் முடிந்து திரைக்கு வந்த பிறகே அடுத்த படத்தில் நடித்து வந்தவர், இப்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்துக்கொண்டே, சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார். இதில் நடித்தபடியே அதற்கடுத்த படத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக, ரஜினியின் அறிவுரையை முழுசாக பின்பற்றும் நடிகராக இருக்கிறார் அஜீத்.

பரதேசி ஹேர் ஸ்டைல்! அதர்வா ஆச்சர்யம்!!


Atharva praises about his herstyle in paradesiபரதேசி ஹேர் ஸ்டைலை பார்த்து ஆச்சர்யப்பட்டதாக அப்படத்தின் ஹீரோ நடிகர் அதர்வா கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பரதேசி ஹேர் ஸ்டைலுடன் நடமாடிக் கொண்டிருந்த அதர்வா, சூட்டிங் முடிந்த சூட்டோடு சூடாக, யூத் லுக்கிற்கு மாறியிருக்கிறார். பரதேசி படத்தில் அளிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே ஆச்சர்யத்தை தந்ததாக கூறியிருக்கிறார் அதர்வா.

ஹேர் ஸ்டைல் குறித்து அதர்வா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் தன் படத்தில் நடிக்க கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும் பயங்கர சந்தோஷமாகிட்டேன். எப்படியும் தலையில்தான் அவர் கை வைப்பார்னு தெரியும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விதவிதமா ஹேர் ஸ்டைல்களை டவுன்லோடு பண்ணிட்டு போயிருந்தேன். ஆனால் இன்டர்நெட் டேட்டாவுலேயே இல்லாதளவுக்கு ஒரு ஹேர் ஸ்டைலை எனக்கு வச்சுவிட்டுட்டார் பாலா சார். அதுமட்டுமில்ல. சின்ன வயசுல அப்பாவோடு டீ எஸ்டேட்டை சுத்தி பார்க்க போயிருக்கேன். அப்பல்லாம் உயரமான மேட்டிலேர்ந்து குதிக்கணும்னு தோணும். ஆனா அப்பா அனுமதிக்க மாட்டார். இந்த படத்தில் கமிட் ஆகி சூட்டிங் போனதும் பாலா சார் சொன்னது, அந்த மேட்லேர்ந்து நீ குதிக்கணும் என்றுதான். எனக்கு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

மணிரத்னத்திற்கு கதை உருவாக்க தெரியாது! கோவை தம்பி


Kovai thambi slams maniratnamமணிரத்தனத்திற்கு கதை உருவாக்கத் தெரியாது; அவரால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியுள்ளார். மணிரத்னம், கோவைத் தம்பி இடையேயான மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன் என்று மணிரத்னம் பேட்டி அளித்து இருந்தார். இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கோவை தம்பி அளித்துள்ள பேட்டியில், மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார். கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அந்த நேரம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட் போட்டு பணம் எல்லாம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணமாக இருந்தார். இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை உருவாக்க தெரியாது, என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் !


சிம்பு நடித்த படங்களில் பெஸ்ட் என்றவுடன் பலரும் முதலில் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அப்படம். சிம்பு, த்ரிஷா நடித்த அப்படத்தினை இயக்கியிருந்தார் கெளதம் மேனன்.

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தினை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், சூர்யா 'சிங்கம் 2' படத்தினை முடித்து விட்டு லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். இதனால் கெளதம் மேனன் அடுத்து இயக்கும் படம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சிம்பு, கெளதம் மேனன் இருவருமே சமீபத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' போன்ற இன்னொரு காதல் கதை வேண்டாம் என்று முடிவு செய்துள்ள கெளதம் மேனன், சிம்புவுக்கு ஏற்றவாறு ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து இருக்கிறாராம்.

ரெடியாகிறது முனி -3 !


நடன இயக்குனர் என்பதையும் தாண்டி 'முனி', 'காஞ்சனா' (முனி 2) என்ற ஹிட் படங்களை கொடுத்தவர் லாரன்ஸ்.

லாரன்ஸ், சரத்குமார், லட்சுமிராய் நடிப்பில் வெளியான 'காஞ்சனா' பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தினை இயக்கி தயாரித்தார் லாரன்ஸ். 'காஞ்சனா'வின் இந்தி ரீமேக்கில் யார் நடிப்பது என்று ஒரு போட்டியே நடைபெற்று வருகிறது.

'காஞ்சனா' படத்தினைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடித்த REBEL என்ற படத்தினை இயக்கினார் லாரன்ஸ். அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

மீண்டும் தனது பழைய கூட்டணிக்கு திரும்பி இருக்கிறார் லாரன்ஸ். 'முனி' படத்தின் மூன்றாம் பாகத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லாரன்ஸ்.

படத்தின் கதை, திரைக்கதை அனைத்தையும் முடித்து விட்டாராம் லாரன்ஸ். ரஜினி பிறந்த நாளைக்கு சிறப்பு ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இருக்கும் லாரன்ஸ். அப்பணிகள் முடிவடைந்த உடன் 'முனி 3' பணிகளில் ஈடுபடுவார் என்கிறது லாரன்ஸ் வட்டாரம்.

பொங்கல் பட ரேஸ்!


2013 பொங்கல் திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பல்வேறு படங்களை இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விஷால் நடிக்கும் 'மதகஜராஜா', ஜெயம் ரவியின் 'ஆதிபகவன்', ராம் இயக்கி நடிக்கும் 'தங்க மீன்கள்' உள்ளிட்ட படங்களை இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று காலை பேப்பர்களில் வந்த விளம்பரம், பொங்கல் படப் பட்டியலை இன்னும் பரபரப்பாக்கியிருக்கிறது.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் 'விஸ்வரூபம்' படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என விளம்பரம் வந்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மேலே சொன்ன படங்களைத் தாண்டி, பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. எந்தெந்த படங்கள் பொங்கல் ரேக்ளாவில் கலந்து கொள்ளும் என்பது போகப் போகத் தெரியும்!

படங்களை அடுக்கும் ஸ்டூடியோ க்ரீன் !


தமிழ் திரையுலகில் 2013ல் அதிக படங்களை வெளியிடும் நிறுவனமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இருக்கும். இந்நிறுவனத்தினை நடத்தி வருகிறார் ஞானவேல்.

பல்வேறு படங்களை தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், மற்ற நிறுவனங்களின் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது.

அந்நிறுவனம் வெளியிட மற்றும் தயாரித்து வரும் படங்களின் விவரம் :

'கும்கி' : பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து இருக்கும் 'கும்கி' படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரித்து இருக்கிறது. அப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி, டிசம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்சார் செய்ய இருக்கிறார்கள்.

அலெக்ஸ் பாண்டியன் : சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து இருக்கும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. இப்படத்தினை 2013 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாள் அன்று இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா : பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடித்து இருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கி விட்டது ஸ்டூடியோ க்ரீன். 2013 பிப்ரவரியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிங்கம் 2 : ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்து வரும் 'சிங்கம் 2' படத்தை 2013 கோடை விடுமுறைக்கு வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தினை டிசம்பரில் இருந்தே விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரியாணி : வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வரும் 'பிரியாணி' படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னும் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படவில்லை.

அழகுராஜா ஆல் இன் ஆல் : ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் நடிக்க இருக்கும் படம் இது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஆனால் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கமல் ஆலோசனையில் 'கோச்சடையான்'!

ரஜினி பிறந்த நாள் அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கோச்சடையான்' அடுத்த ஆண்டு தான் வெளிவரும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஆனால், ரஜினி பிறந்த நாள் அன்று 'சிவாஜி 3D' படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கோச்சடையான்' படத்தில் AURO 3D தொழில்நுட்பத்தினை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் வெளிவர இருக்கும் முழுமையான MOTION CAPTURE தொழில்நுட்ப திரைப்படம் 'கோச்சடையான்'. மற்ற படங்களில் சில காட்சிகள் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம்' படத்தின் AURO 3D தொழில்நுட்பத்தினை கேள்விப்பட்ட 'கோச்சடையான்' படக்குழு, கமலை சந்தித்து இதனைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அவரும் AURO 3D பற்றி விளக்கி, சில ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

அது ஐடியா தாங்க!

அஜீத் - வெங்கட்பிரபு இணைப்பில் வெளிவந்த 'மங்காத்தா' இன்னும் செய்திகளில் வருவது, படத்திற்கான தாக்கத்தை தெரிவிக்கிறது.

'மங்காத்தா'வில் அஜீத்துடன், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்த இப்படம் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றது.

அப்படம் வெளிவந்து வரவேற்பு பெற்ற போது, இந்தி ரீமேக் குறித்து செய்திகள் வெளிவந்தன. வெங்கட்பிரபுவும் அஜீத் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உடனே அஜீத் மங்காத்தா இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் வெங்கட்பிரபு இச்செய்தியினை மறுத்து இருக்கிறார். மங்காத்தா இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்.. அது ஒரு ஐடியா மட்டுமே என்று டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

ரஜினி 12-12-12 !


ரஜினி பிறந்தநாளை இப்போதே அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் வருகிறது. இந்த வருடத்தில் ரஜினி பிறந்த நாள் என்பது ஸ்பெஷல்.. 12-12-12 அன்று வருகிறது.

அவரது ரசிகர்கள் " இந்தாண்டு ரஜினி பிறந்த நாள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.. 12+12+12=36, ரஜினி திரையுலகிற்கு வந்து 36 ஆண்டுகள் ஆகிறது.. 36ஐ திருப்பி போட்டால் 63 - ரஜினியின் வயது " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்களுக்கு 12-12-12 இன்னொரு தீபாவளி தான் !

'தல'யும் ஏ.ஆர். முருகதாஸும்!

'துப்பாக்கி' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தினை இந்தியில் இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கோடம்பாக்கத்தில் மற்றொரு செய்தி பரபரவென பேசப்படுகிறது. விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா ஆகியோரது படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜீத்.

அஜீத் நடித்த 'தீனா' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா நடித்த 'கஜினி' படமே முதலில் அஜீத்தை வைத்து 'மிரட்டல்' என்ற பெயரில் பூஜைப் போடப்பட்டது தான்.

'துப்பாக்கி' படத்தினைப் பார்த்த அஜீத், விஜய் மற்றும் முருகதாஸை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

எனவே, எப்படியும் அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏ.ஆர்.முருகதாஸிடம் தனது நிறுவனத்திற்கு அஜீத் படத்தினை செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

இந்தி 'துப்பாக்கி' படத்தை முடித்ததும் இப்படத்துக்கான பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

'ஐ' ரோப்பா போறோம் !

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சீனாவில் நடந்தது. இப்போது படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி இருக்கிறார்கள்.

விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சி ஆகியவற்றை மட்டுமே பிரம்மாண்டமாக எடுத்தாராம் ஷங்கர்.

சீனாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு Yuen Woo - Ping என்ற ஹாலிவுட் சண்டைக் காட்சி இயக்குனர் மூலம் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். இவர் ஆஸ்கர் விருது வென்ற Crouching Tiger Hidden Dragon படத்திற்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ராயபுரம் மற்றும் எண்ணூர் ஏரியாக்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் ஷங்கர். 'ஐ' படத்தின் இரண்டாம் பாதியில் விக்ரம் சிக்ஸ் பேக்குடன் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் திரையில் வந்திராத இடங்களில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்களாம்.

ரஜினி பாராட்டிய பீட்சா !

திரைக்கதை ஒரு படத்தின் வெற்றியை பெருமளவு தீர்மானிக்கிறது என்பதற்கு 'பீட்சா' படமும் சாட்சி.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியானது 'பீட்சா'. கார்த்திக் சுப்புராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் அப்படத்தினை வெளியிட்டார்.

'பீட்சா' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமன்றி திரையுலகினர் பலரும் அப்படத்தினை வெகுவாக பாராட்டினார்கள். அப்படத்தினை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'பீட்சா' படத்தினைப் பார்த்த ரஜினி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை அழைத்து " 'பீட்சா' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. படக்குழுவினருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள்" என்று தெரிவித்து இருக்கிறார்.

Friday 12 October 2012

மாற்றான் : விமர்சனம்



முதல் ஷாட்டிலேயே ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் பிரசவம். ஒருவர்க்கு மட்டும் தான் இதயம் இருப்பதை சொல்லும் டாக்டர் "ஒருவர் மட்டும் தான் இருக்க முடியும்" என்று சொல்ல, தாயார் " நான் பார்த்துக்குறேன் " என்று போராடி (கணவர் + டாக்டர்க்கு கன்னத்தில் அறை) வளர்க்கிறார்


சூர்யா தந்தை ஒரு மில்க் பவுடர் தொழில் செய்து கொழிக்கிறார். அதனை பற்றி துப்பறிய வருகிறார் ஒரு வெளிநாட்டு பெண்மணி. முதலில் அவர் தான் வில்லி என்பது போல் செல்லும் கதை அப்படியே உல்ட்டா அடித்து சூர்யா தந்தை பக்கம் கையை காட்டுகிறது. தன் தொழிலில் வெற்றி பெற எதுவும் செய்ய தயாராய் இருக்கும் சூர்யாவின் தந்தையினால் ஒரு சூர்யா இறக்க, அவரது இருதயம் இன்னொரு சூர்யாவிற்கு பொருத்தப்படுகிறது.

இங்கு இடைவேளை.

அதன் பின் பிழைத்த சூர்யா தன் தந்தையின் தகிடுதத்தத்தை வெளிகொணர்ந்து வெற்றி பெறுவார் என எந்த சிறு குழந்தையும் சொல்லிவிடும்.

ப்ளஸ் 

கே. வி ஆனந்த ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாச கதைக்களன் எடுப்பார். அறிவியல் டச் இருந்த அவரது கனா கண்டேன் போல இதுவும் அறிவியல் பின்னணியில் அமைந்த படமே. ஜெனடிக், ஆராய்ச்சி போன்றவற்றை எவ்வளவு தூரம் எளிமைபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் செய்துள்ளார். வித்தியாச கதை என்னும் விதத்தில் பாராட்டுகள்

முதல் பாதியில் சூர்யாவின் உழைப்பு அசரவைக்கிறது. சுஜாதாவின் கணேஷ் வசந்த் போல ஒருவன் புத்திசாலி மற்றவன் வாலு என்ற அந்த இரு பாத்திரங்கள் மிக சுவாரஸ்யம்.

மூன்று பாட்டுகள் அருமை. படமாக்களில் அப்படியே கே. வி ஆனந்த் டச் தெரிகிறது. "கோ"- வில் வரும் அமளி துமளி பாடல் மாதிரியே நாணி கோணி பாடலின் சில லொகேஷன்கள் உள்ளது.

காஜல் அகர்வாலை வெறும் பாடல்களுக்கு மட்டுமின்றி கதையோடு இணைந்து வரும் விதத்தில் நன்கு பயன்படுத்த, காஜல் அழகு, டான்ஸ் ஆகியவற்றுடன் நடிக்கவும் செய்துள்ளார்

சூர்யாவின் தந்தையாக வருபவர்

சூர்யாவின் தந்தையாக நடிக்கும் நடிகர் யார் என தெரியவில்லை. பணக்கார தொனி மற்றும் குள்ளநரித்தனம் சரியே வெளிப்படுகிறது

இரட்டையர்கள் கலக்கும் முதல் பாதி நிச்சயம் பெரிய ப்ளஸ். ஆண்- பெண் கிஸ் அடிப்பதை "தல கறி சாப்பிடுறான்" என்பதாகட்டும் போலிஸ் ஸ்டேஷன் சென்று பெண் போலீசிடம் " நாங்க இந்த பொண்ணை லவ் பண்றோம் " என்பதாகட்டும் கலக்கல். (அதுவும் அந்த பெண் போலிஸ் ரெண்டு பேரும் ஒட்டி இருக்கீங்களே "அப்போ" என்ன பண்ணுவீங்க என்பதும் அதற்கு சூர்யா பதிலும் தியேட்டரில் சவுண்டை கிளப்புது)

மைனஸ்

படத்துக்கு உடனடி தேவை கத்திரி. படம் மூன்று மணி நேரம் ஓடுதுன்னு நினைக்கிறேன். கடைசியில் ஏராளமான மக்கள் உட்கார முடியாமல் எழுந்து போய் கதவுக்கு பக்கத்தில் நின்ற பின்னும் பத்து நிமிஷம் படம் ஓடுது :(

இடைவேளைக்கு பின் தந்தையை மாட்டி வைக்க போகிறார் என்பது தான் கதை என்று அனைவருக்கும் தெரிந்தாலும்,  கழுத்தை சுற்றி மூக்கை தொடும் கதை போல சற்று போர் !

ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருக்கு. கே. வி ஆனந்த் பொதுவாய் இதில் நிறைய ஜாக்கிரதையாய் இருப்பார். ஒட்டி பிறந்தவர்களில் ஒருவர் தான் கார் ஓட்ட முடியும். (அவர்கள் உருவ அமைப்பு மற்றும் நமது காரில் ஸ்டியரிங் உள்ளிட்டவை ஒரே பக்கம் இருப்பதால்) ஆனால் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் ஓட்டுகிறார். போலவே உளவு பார்க்க வந்த பெண்ணை தெரிந்தும் கூட அப்படியே சூர்யா அப்பா அனுப்புவதற்கும் எந்த லாஜிக்கும் இல்லை.

ப்ளே பாயாக இருக்கும் அகிலன் காஜலையும் சைட் அடிப்பதாய் காட்டுகிறார்கள். அப்புறம் அவரே விமலன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுகிறார். அதை விட கொடுமை விமலனை லவ் பண்ணும் காஜல் அவர் இறந்ததும் "காதல் போயின் காதல்" என உடனே மற்றவரை லவ் பண்ணுகிறார்.

உக்ரேனியா (தானே அது?) செல்லும் போது கதை ஒழுங்கா தான் இருக்கு. அங்கு நடப்பவை ஒரு லெவலுக்கு மேல் குழப்பமாயிடுது. சூர்யாவை அரஸ்ட் செய்பவர்கள் யார்? மொட்டை அடித்து ராணுவ உடையில் இருப்பவர் நாட்டு அதிபரா? அவரே துப்பாக்கி எல்லாம் எடுத்து சுடுறார் ! எல்லா டாக்குமெண்ட்ஸ் உடன் கடைசியில் சூர்யாவைஅனுப்பி வைக்கிறார்.. ஒரே குயப்பமா இருக்கு என மக்கள் புலம்பல் கேட்குது

கால் முளைத்த பூவே-க்கு பாலே டான்ஸ் என நிறைய எதிர்பார்ப்புடன் இருந்தால் நம்ம ஊரில் செட் போட்டு வெளிநாட்டு டான்சர் வைத்து ரொம்ப சுமாராய் எடுத்து விட்டனர்.

விசில் அடித்து கொண்டும் டான்ஸ் ஆடி கொண்டும் முதல் பாதி படம் பார்த்த இளைஞர்கள், படம் முடிந்து வரும்போது சற்று புலம்பி கொண்டு தான் வருகிறார்கள்

மொத்தத்தில்   செக்ஸ், வன்முறை போன்றவை இல்லாததாலும் வேறு நல்ல படங்கள் தற்போது இல்லாததாலும், நல்ல முயற்சி என்கிற அளவில் ஒரு முறை பார்க்கலாம் !

மாற்றான்: முதல்பாதி வென்றான்... இரண்டாம்பாதி கொன்றான்... 

Tuesday 9 October 2012

விஜய் VS விஜய்! ரஜினி படம் மாதிரி இருக்கும்!


இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படங்கள் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அப்படி பல பிரச்சனைகளைத் தாண்டி, வெளிவந்த ‘தாண்டவம்’ ரசிகர்களிடையே ‘சுமார்’ என்ற அளவிலான வரவேற்பையே பெற்றுள்ளது. “என் ஒவ்வொரு படத்திலும் நான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். அந்த அனுபவங்கள் தான் என்னை அடுத்தடுத்த நிலைக்கு கொண்டு செல்கின்றன” என்று கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது “பல பிரச்சனைகளைத் தாண்டி தாண்டவம் படம் வெளியானது. துணை இயக்குனர் பொன்னுசாமி UTV-யிடம் ஒரு ஸ்கிரிப்ட் கொடுத்திருந்தார். என் படத்தையும் UTV எடுத்ததால் பொன்னுசாமிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அது நியாயமான சந்தேகம் தான் அவரை யாரும் குறை சொல்ல முடியாது. அதனால் என் ஸ்கிரிப்டை அவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி, என் படத்தையும் அவருக்கு திரையிட்டு காட்டினேன். மேலும் சில பிரச்சனைகள் வந்ததால் அவர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றத்திலும் சில விளக்கங்களை கொடுத்தபின், இப்போது பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.

நான் பொன்னுசாமி இயக்கும், படத்தை தயாரிக்கிறேன் என்றோ, பணம் தருகிறேன் என்றோ வெளிவந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. உண்மையிலேயே அவர் திரைக்கதை நன்றாக இருக்கிறது. அவர் கண்டிப்பாக அதை படமாக எடுப்பார்.

இப்போது நான் நடிகர் விஜய்யை இயக்கும் படத்தின் டிஷ்கஷனில் பிஸியாக இருக்கிறேன். விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அறிந்து அதை என்னால் பூர்த்தி செய்ய முடியும். ஏனென்றால் நானும் அவரது ரசிகன் தான். காதலுக்கு மரியாதை போன்ற படங்களிலெல்லாம் நான் அவரை அவ்வளவு ரசித்துள்ளேன். விஜய்யை வைத்து படம் இயக்குவது ரஜினியை வைத்து படம் இயக்குவதைப் போன்ற உணர்வு எனக்கு. ஏனென்றல் ரஜினி அளவிற்கு விஜய்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படம் ஒரு ரஜினி படம் மாதிரி இருக்கும்.

படம் பண்ணலாம் என ஒப்புக்கொண்டதிலிருந்து விஜய் இதுவரை என்னிடம் ஒன்றே ஒன்று தான் கூறியிருக்கிறார். ‘உங்கள நம்பி படத்துல நடிக்கிறேன். நீங்க தான் எல்லாத்தையும் பாத்துக்கணும்” என்பது தான் அது. அவர் என் மேல் வைத்துள்ள நம்பிக்கையை நான் கப்பாற்றுவேன். இந்த படத்தில் சந்தானம், நாசர் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான தலைப்பு இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜய் படத்திற்கு ஏற்றது போல தலைப்பு வைக்க வேண்டும் என காத்திருக்கிறோம்” என்று கூறினார்.

விஜய் நடிப்பில் விஜய் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் தலைவன் என பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார் என்று திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.

விஜய்யின் துப்பாக்கி ரிலீஸ்! அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படத்திற்கு துப்பாக்கி என பெயர் வைத்ததில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, முடிவடையாததால் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. வழக்கில் வெல்வது முக்கியமல்ல படத்தின் ரிலீஸ் தான் முக்கியம் எனும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸின் டீம் வேறு ஒரு டைட்டிலையும் தயார் செய்து வைத்துக்கொண்டு அக்டோபர் 5-ஆம் தேதி தீர்ப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அஜித்குமாரின் கட்டுமஸ்தான உடலமைப்பை பார்க்க ஆவலாக இருக்கும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லரையும் அஜித்குமாரின் கெட்-அப்பையும் தான். விஷ்ணுவர்தன் படத்தின் டிரெய்லர் தீபாவளியன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது. சென்ற தீபாவளிக்கு அஜித்குமார் நடித்த மங்காத்தா படத்தின் போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே போல் இந்த வருடமும் அஜித்குமார் நடிக்கும் படத்தின் போஸ்டர்கள் வெளிவரவிருக்கின்றன. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் வகையில் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அஜித்குமார் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் நாளை ரிலீஸாகிறது.