Friday 17 August 2012

கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட். எழுத்தாளர் ஜெயமோகன்.





முழுக்க முழுக்கப் புதுமுகங்களை மட்டுமே வைத்து மணிரத்னம் எடுத்துக் கொண்டிருக்கும் கடல் படத்துக்கு ரூ 50 கோடி பட்ஜெட் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம், நடிகை ராதா மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகிறார்கள் இந்தப் படத்தில்.இவர்களைத் தவிர, அர்ஜுனும் நடிக்கிறார். படத்தின் உண்மையான ஹீரோவாக ஏ ஆர் ரஹ்மான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் படம் குறித்தப் பேசியுள்ள, அப்படத்தின் கதை வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகன், "நானும் மணிரத்னமும் சேர்ந்து பணியாற்ற கடந்த நபல வருடங்களாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமையவில்லை. கடலில் அது கைகூடியுள்ளது. கடல் படம் ரூ 50 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதால், நினைத்ததை எடுக்கும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது," என்றார்.

முற்றிலும் புதுமுகங்கள், ஓபனிங் வேறு இருக்காது...ரூ 50 கோடி என்பது அதிகமாகப் படவில்லையா என்றால், "புதுமுகங்களைப் பார்க்காதீர்கள்... இது மணிரத்னம் படம். அது போதாதா?" என்றார்.

இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இளையராஜா


இளம் தலைமுறையை சந்திப்பேன்... என் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், என்றார் இசைஞானி இளையராஜா.
தமிழ் சினிமாவின் இன்றைய ஸ்பெஷல் இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் இசைதான்.
இதுவரை இந்தப் படத்தின் இசைக்கான மூன்று முன்னோட்ட வீடியோக்கள் வந்துவிட்டன. மூன்றும் ரசிகர்களைப் பரவசப்பட வைத்துள்ளன.
இந்த நிலையில், இந்தப் படத்தின் இசை உருவாக்கம் குறித்து ஆகஸ்ட் 15-ம் தேதி ஜெயா டிவியில் இளையராஜாவும் இயக்குநர் கவுதம் மேனனும் கலந்துரையாடினர்.
அப்போது ஒரு பரம ரசிகனாக மாறி கவுதம் மேனன் கேள்விகளை எழுப்ப, இசைஞானி தனக்கே உரிய பாணியில் பதில்களைச் சொன்னார். பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது இந்த உரையாடல். இளையராஜாவும் ஆங்கிலத்திலேயே பேசினார்.
அப்போது, 'உங்களிடம் பேச வேண்டும், உங்கள் அனுபவங்களை நீங்கள் சொல்லக் கேட்க வேண்டும் என இன்றைய தலைமுறை மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால் நீங்கள் அதற்குத் தயாரா என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களைச் சந்திப்பீர்களா..?'
"நிச்சயமாக கவுதம், இன்றைய இளம் தலைமுறையினருக்கு என் அனுபவங்களைச் சொல்ல, அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களுடன் பேச விரும்புகிறேன். நிச்சயம் அவர்களை நான் சந்திப்பேன்," என்றார்.
உங்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னைப் போன்ற பலருக்கும் ஆசை என்றாலும், ஒரு அச்சம் காரணமாக வரத் தயக்கமாக இருக்கிறது, என்று கவுதம் மேனன் கூறியபோது, "என்னைப் பார்த்து ஏன் நீங்கள் பயப்பட வேண்டும்... அதற்கு அவசியமில்லையே.." என்றார் இளையராஜா.
நீதானே என் பொன்வசந்தம் படத்தில் உங்களுக்குப் பிடித்த பாட்டு எது என்று கேட்டபோது, "படத்தின் ஆல்பத்தில் உள்ள 8 பாடல்களுமே எனக்குப் பிடித்தவைதான். மாற்றம் வேண்டுமானால் சொல்லுங்கள்... இப்போதும் மாற்றித் தருகிறேன், என்றார் ராஜா.
உடனே கவுதம் மேனன், ஆத்மார்த்தமாக சொல்கிறேன்... எனக்கு அனைத்துப் பாடல்களுமே மிகத் திருப்தியாக இருந்தன, என்றார்.
இந்த நேர்காணலின் முடிவில் கவுதம் மேனன் ராஜாவைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
"சார்... நீங்க எனக்கு ஒரு பாட்டு எழுதினீங்க... என்னோடு வாவா என்று சொல்ல மாட்டேன்.. உன்னை விட்டு தூரம் எங்கும் போக மாட்டேன் என்று. நானும் அதையே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 'என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன், உங்களைவிட்டு நானும் போகமாட்டேன்' என்ற போது ராஜாவின் முகத்தில் அந்த அக்மார்க் சிரிப்பு.
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்காக, சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது... பாடலைப் பாடி பியானோ இசைத்தார் இசைஞானி!!

ரஜினியின் கோச்சடையான் ஆடியோ உரிமம்: சோனி நிறுவனம் வாங்கியது


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது.



ரஜினிகாந்த், தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகி வரும் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், ரஜினியுடன் தீபிகா படுகோனே, ஷோபனா, ருக்மினி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


முப்பரிமாண முறையில் (3டி) தயாராகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் தெலுங்கில் விக்கிரம சிம்மா என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. மேலும் இந்தி, மலையாளம், ஜப்பான் மற்றும் ஆங்கிலத்திலும் இப்படம் வெளியிடப்படுகிறது.


இப்படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோச்சடையான் ஆடியோ உரிமத்தை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.


இதுபற்றி சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அசோசியேட் இயக்குனர் அசோக் பர்வானி கூறுகையில், தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்களின் எதிர்பார்பில் இருக்கும் கோச்சடையான் ஆடியோ உரிமத்தை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்.


சிறந்த நடிகர் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இசையமைப்பாளர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். இந்த ஆடியோவை புதுமையான மார்க்கெட்டிங் அம்சங்கள் மூலம் ஏராளமான இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்’ என்றார்.

சினிமால ஒரு தோல்வி அவ்வளவு கசக்கும்! நான் ஈ சுதீப்



மு
ன்னாடிலாம் சென்னைக்கு வந்தா என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. ஆனா, இப்போ  சிக்னல்ல கார் கண்ணாடி தாண்டிலாம் சிரிக்கிறாங்கப்பா!'' - அதிர அதிரச் சிரிக்கிறார் 'நான் ஈ’ சுதீப். 'என்னைவிடச் சிறந்த வில்லன்’ என்று ரஜினியிடம் பாராட்டு வாங்கிய கன்னடத்தின் 'மோஸ்ட் வான்டட் ஹீரோ’!
 ''பெர்சனலா எனக்குத் தமிழ் சினிமா ரொம்பப் பிடிக்கும். கன்னடத்தில் நான் நடிச்ச முதல் படம் சூப்பர் ஃப்ளாப். டி.வி. சீரியல்கள் பக்கம் ஓடிட்டேன். 'சேது’ கன்னட ரீ மேக் 'கிச்சா’ படத்துக்காக மொட்டை அடிக்கணுமேனு கன்னட ஹீரோக்கள் ஒதுங்கினப்போ, நான் மொட்டை அடிச்சு நடிச்சேன். 'கிச்சா’ சுதீப்னு கர்நாடகாவே கொண்டாடுச்சு. அடுத்தடுத்து 'வாலி’, 'ஆட்டோகிராஃப்,’ 'சிங்கம்’ பட ரீமேக்கு களில் நடிச்சேன். எல்லாப் படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். தமிழ் சினிமாவுக்கும் அதன் ரசிகர்களுக்கும் நன்றி.''
'' 'நான் ஈ’ தெலுங்குப் படம். அந்தப் பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஆந்திராக்காரர். கன்னட நடிகரான உங்களை எப்படி அதில் நடிக்கவெச்சார்?''
''ராம்கோபால் வர்மாவின் 'ரான்’ படத்துல  நடிச்சேன். 'நான் ஈ’ படத்துக்கு ராஜமௌலி வில்லன் தேடிட்டு இருந்தப்போ, வர்மா என்னைப் பத்தி அவர்கிட்ட சொல்லி இருக்கார். ராஜமௌலி ஒரு நெகட்டிவ் வார்த்தையைக் கூடப் பேச மாட்டார். பொம்மையைக் கையில கொடுத்தாக்கூட, 'இதை ரிமோட் கன்ட்ரோல்ல இயக்க முடியும்’னு பாசிடிவ் பேசுற மனிதர்.''
''தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''
'' 'நந்தா’ படத்துல நடிக்கும்போதே சூர்யா நல்ல அறிமுகம். எனக்கும் பைக் ரேஸ் பிடிக்கும். ஸோ, அஜித்தும் நானும் நிறையப் பேசிப்போம். விஜய், விக்ரம், தனுஷ் எல்லார்கூடவும் டச்ல இருக்கேன்.''
''படத்துல 'ஈ’யைப் பார்த்துப் பயந்தீங்க. நிஜத்துல எது மேல பயம்?''
''வெள்ளிக் கிழமை மேல! ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நிறையப் படங்கள் ரிலீஸாகுது. அதுல எந்தப் படம் நம்ம பொசிஷனை அடிச்சு உதைக்கும்னு பயமா இருக்கும். வெள்ளிக் கிழமை என் படம் ரிலீஸான அன்னைக்கு நாள் முழுக்க மரண பயமா இருக்கும். ஏன்னா, சினிமால ஒரு தோல்வி அவ்வளவு கசக்கும்!''

இரண்டாம் உலகத்திற்காக அலெக்ஸ் பாண்டியனை பகைத்து கொள்ளும் அனுஷ்கா.


செல்வராகவன் இயக்கும் படம் "இரண்டாம் உலகம்'. ஆர்யா ஹீரோ. அனுஷ்கா ஹீரோயின். இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது.

ஏற்கனவே சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக "அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதற்கிடையே செல்வராகவன் படத்திற்காக ஜார்ஜியா நாட்டுக்கு சென்று விட்டார். மாதக்கணக்கில் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவதுடன், சில நாள்கள் ஷூட்டிங் நடத்தாமல் அனுஷ்காவின் கால்ஷீட்டை செல்வராகவன் வீணாக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் "அலெக்ஸ் பாண்டியன்' ஷூட்டிங்கில் அனுஷ்கா பங்கேற்க முடியாமல் இருக்கிறார். அவர் வராததால் "அலெக்ஸ் பாண்டியன்' ஷூட்டிங் பாதித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையறிந்த செல்வராகவன் ""இரண்டாம் உலகம்' ஷூட்டிங் திட்டமிட்டப்படிதான் நடந்து வருகிறது. யாருடைய கால்ஷீட்டையும் வீணாக்கி, எந்த படத்துக்கும் இடையூறாக இல்லை'' என தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். அனுஷ்காவும் தன் டிவிட்டர் பக்கத்தில் ""திட்டமிட்டப்படியே எல்லாம் நடக்கிறது'' என கூறியிருக்கிறார். எது உண்மையோ!

எல்லாம் ஆண்டவன் கையில இருக்கு. சமாளித்த சூப்பர் நடிகர்.


சூப்பர் நடிகரும், பழம்பெரும் ஸ்டுடியோ அதிபரும் ஒண்ணா பங்கேத்து அருகருகே உக்காந்திருந்த கூட்டத்துல தர்மசங்கடத்துல மாட்டிட்டாங்களாம்... மாட்டிட்டாங்களாம்... ‘ஏற்கனவே சூப்பர் நடிகர வச்சி படம் எடுத்த உங்களுக்கு மறுபடியும் கால்ஷீட் தருவாரா’னு கேள்வி வந்துச்சாம். என்ன சொல்றதுன்ன தெரியாம தவிச்ச அதிபர், ‘எல்லாம் ஆண்டவன் கையில இருக்கு’னு பதில் சொன்னாராம். தன்னோட பதில அதிபர் சொன்னத பாத்த சூப்பர் நடிகரும் கூலா, ‘அவர் சொன்னதுதான் என்னோட பதிலும். எல்லாம் ஆண்டவன் கையில இருக்கு’னு சொல்லி சமாளிச்சாராம்... சமாளிச்சாராம்...

பெல் இயக்கம் இயக்கற சமுத்திர படத்துக்கு 50 சி பட்ஜெட்னு சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்... எப்பவுமே ஸ்டார்களுக்கும், மியூசிக் இயக்கத்துக்கும் தள்ளுபடி வச்சித்தான பேமென்ட் பேசுவாராம். அதுவும் சமுத்தர படத்துல நடிக்கறவங்க புது ஸ்டாருங்க. இவங்க சம்பளத்த பத்தி சொல்லவோ வேணாம். ஷூட்டிங்கும் குடிசை பகுதிலதான் நடக்குதாம். இப்படியிருக்கறப்ப 50 சி எப்படி செலவாகும்ன்னு இன்டஸ்ரிகாரங்க முணுமுணுக்கறாங்களாம்... முணுமுணுக்கறாங்களாம்...

மல்லுவுட்ல ஏற்கனவே உதவியாளருங்களுக்கு நடிகர்களே சம்பளம் தரணும்னு தயாரிப்புங்க சொல்லிட்டாங்களாம்... சொல்லிட்டாங்களாம். இந்த நெலைல சில ஹீரோயினுங்க தங்களோட கால்ஷீட் மானேஜர்களுக்கு பெருந்தொகைய சம்பளமா கொடுக்கணும்னு தயாரிப்புங்க கிட்ட மல்லுகட்றாங்களாம். இதபாத்து ஷாக்கான தயாரிப்புங்க ஒண்ணுகூடி பேசி புதுமுடிவு அறிவிச்சிட்டாங்களாம். இனிமே கால்ஷீட் பாக்கற மேனேஜருக்கும் நடிகைகங்களே பேமன்ட்
தரணும்ன்னு கறாரா பேசிட்டாங்களாம். இதகேட்டு ஹீரோயினுங்க அதிர்ச்சில இருக்காங் களாம்... இருக்காங்களாம்...

தாண்டவம் படத்திற்கு திடீர் சிக்கல்!


Trouble for vikrams thandavamவிக்ரம் நடித்துள்ள தாண்டவம் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் தாண்டவம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அதில் தாண்டவம் பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், ரூ.1.5 கோடி செலவிட்டு படமும் எடுத்து முடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த படத்தின் நாயகனாக புதுமுகம் பாலு, நாயகியாக சரண்யாமோகன் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தின் சூட்டிங்கை முடித்து விட்ட நிலையில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தாண்டவம் படக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்.

விஷாகா சிங்குடன் குத்தாட்டம் போட்ட சந்தானம்


Santhanams item song with vishakha singhசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்த சந்தானம் இன்று தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார். தனது காமெடி நடிப்பின் மூலம் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்று விட்டார். தற்போது தயாரிப்பாளராக உயர்வு பெற்றுள்ள சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தை இராம.நாராயணனுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

சந்தானம் - பவர் ஸ்டார் கூட்டணியில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக குத்துப் பாட்டு ஒன்றுக்கு சந்தானம் ஆட்டம் போட்டுள்ளார். அவருடன் இணைந்து பிடிச்சிருக்கு கதாநாயகி விஷாகா சிங்கும் ஆடியுள்ளார். தமன் இசையில் இந்த பாட்டு பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை, என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டும் ஸ்ருதிஹாசன்!

Shruthi hassan in devotionalதந்தை கமலஹாசனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர் கோவிலுக்கும் சென்றதில்லை. ஆனால் மகள் ஸ்ருதி அதற்கு நேர் எதிர்மாறானவராக இருக்கிறார். ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்ருதிக்கு கடவுள் நம்பிக்கை இருந்தாலும் அப்பாவைப்போல அதிகம் கோவிலுக்கு சென்றதில்லை. எப்போதாவது அம்மா சரிகாவுடன் சென்று விட்டு வருவார். ஆனால் இப்போது ஆன்மீகத்தின் மீது அவருக்கு நெருக்கம் அதிகமாகி இருக்கிறது.

ஆரம்பத்தில் ஸ்ருதி நடித்த படங்கள் சரியாக போகவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிட்டு முழுநேரமும் இசை அமைப்பாளராகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தாயின் ஆலோசனைப்படி திருப்பதி சென்று வந்தார். அதன் பிறகு அவரது சினிமா வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. தமிழில் அறிமுமான முதல் படமான 7ம் அறிவு வெற்றி பெற்றது. அதன்பிறகு ஸ்ருதிக்கு கடவுள் பக்தி அதிகமானது. தெலுங்கில் தொடர்ந்து தோல்வி படங்களாகவே ஸ்ருதிக்கு அமைந்தது. இந்த நேரத்தில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தபாங்க், தெலுங்கில் கப்பார்சிங் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தில் ஸ்ருதி நடித்தார். இது வெற்றி பெற வேண்டும் என்று திருப்பதிக்கு சென்று வந்தார். வேண்டுதல் நிறைவேறியது. கப்பார்சிங் சூப்பர் டூப்பர் ஹிட். தெலுங்கின் டாப் ஹீரோயின்கள் வரிசைக்கு வந்து விட்டார் ஸ்ருதி. அதோடு தற்போது தமிழில் வெளிவந்த உனக்கும் எனக்கும் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

தனது சினிமா மாற்றத்துக்கும், வெற்றிக்கும் கடவுளின் அருள்தான் என்பதை உணர்ந்தார் ஸ்ருதி. இப்போது தீவிர பக்தையாகிவிட்டார். விமானத்தில் பறந்த பறந்து இந்தியாவின் முக்கிய கோவில்களுக்கு ரகசியமாக சென்று வழிபட்டு வருகிறார். முக்கிய நாட்களில் விரதம், ஆன்மீகம் தொடர்பான புத்தகங்கள் படிப்பது என்று ஆளே மாறிவிட்டார். இதுவரை பூஜை அறை இல்லாத கமல்வீட்டில் விரைவிலேயே பூஜை அறையும் அமைக்க இருக்கிறார். மகளின் ஆன்மீக ஈடுபாட்டை ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்கிறார் கமல்.

கவர்ச்சி களத்தில் ஸ்ரேயா...!

Shriya pose maximum for maxim magazine மழை படத்தின் மூலம் பாந்தமான கேரக்டரில் தமிழுக்கு வந்தார் ஸ்ரேயா. அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும், சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியானதும் ஸ்ரேயாவின் கேரியர் டாப் கீயரில் எகிறியது. சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தினார். அதன்பிறகு தமன்னா, இலியானா, காஜல் என்ற இளசுகளின் எண்ட்ரிக்கு பிறகு சற்றே முதிர்ச்சியான முகம் கொண்ட ஸ்ரேயா ஓரம் கட்டப்பட்டார். வடிவேலு கதாநாயகனாக நடித்த ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

இப்போது சந்திரா என்ற படத்தில் மைசூர் மகாராணியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினியுடன் நடித்த ஸ்ரேயா இப்போது அப்கமிங் ஹீரோ கணேஷ் வெங்கட்ராமுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்பு கேட்டு தனக்குத் தெரிந்த தயாரிப்பு நிறுவனங்கள், இயக்குனர்கள், நண்பர்களுக்கு விட்ட தூதுகள் அனைத்தும் வெற்றி பெறவில்லை. இவரும் சம்பளத்தை குறைக்க தயராக இல்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது "கொஞ்சம் கவர்ச்சியை அள்ளிவிடுங்க விட்ட இடத்தை பிடிச்சிரலாம்" என்று யாரோ ஆலோசனை சொல்ல களத்தில் குதித்துவிட்டார் ஸ்ரேயா.

கவர்ச்சி படங்களுக்கு பெயர் பெற்ற மேக்ஸிம் பத்திரிகையை தொடர்பு கொண்டார். "நான் ரெடி எப்படி வேணாலும் போட்டோ எடுத்து போட்டுக்குங்க" என்ற இவர் சொல்ல. கரும்பு தின்ன கூலியா என்று அந்த பத்திரிகையும் ஸ்ரேயாவுக்கு தனி போட்டோ ஷூட்டே நடத்தி தன் வாசகர்களுக்கு ஸ்ரேயே ஸ்பெஷல் கவர்ச்சி விருந்து படைத்து விட்டது. மேக்ஸிம் பத்திரிகையில் வெளிவந்துள்ள ஸ்ரேயாவின் கவர்ச்சி படங்கள்தான் இந்த வார சென்சேஷனல் மேட்டர்.

நான் பச்சோந்தி இல்லை! அசின்

I am not a Chameleon says asinசில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர் அசின். புதிய நடிகைகளின் வரவுகளால் சரியான வாய்ப்புகள் இன்றி இந்தி பக்கம் சென்று விட்டார். அவர் தலைக்கனத்துடன் இருப்பதாக விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது குறித்து அசின் அளித்துள்ள பேட்டியில், சினிமாவுக்குள் வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. சினிமாவில் வெற்றி, தோல்வி இரண்டையும் சந்தித்து விட்டேன். இந்திக்கு போனதும் அசினுக்கு தலைக்கனம் பிடித்து விட்டது, தென்னிந்திய திரையுலகை கேவலமாக பார்க்கிறார் என்றும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு நல்லதொரு சினிமா வாழ்க்கையை அமைத்து கொடுத்தது. அதனால் அதன்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் கண்டப்படி நிறம் மாறும் பச்சோந்தி அல்ல. எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதுமாதிரியே மாறி விடுவேன். எனக்குள் இருக்கும் அத்தனை திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்று கூறியுள்ளார்.

அஜித் ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்!!


bruna abdullah to wed soonஅஜித்துடன் பில்லா-2 படத்தில் நடித்த நடிகை ப்ரூனா அப்துல்லாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. விளம்பர மாடலாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். ப்ரூனா அப்துல்லா, வங்காள இளைஞர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இந்த நிலையில் பில்லா-2 படத்தை முடித்து விட்டு குடும்பத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்பிய ப்ரூனா அப்துல்லாவுடன் காதலரும் சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 ஆண்டுகளாக அந்த இளைஞரை ப்ரூனா காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கேட்ட போதெல்லாம் ப்ரூனா கருத்து கூற மறுத்து வந்தார். தற்போது தனது மவுனத்தை கலைத்து, எனக்கும் வங்காள இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட உள்ளது என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். விரைவில் அவர்கள் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத்துடன் உறவு முறிந்து விட்டது! ஆண்ட்ரியா


I boke the relationship with anirudth says andreaஇசையமைப்பாளர் அனிருத்துடன் உறவு முறிந்து விட்டது என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அனிருத்துக்கு 21 வயதுதான் ஆகிறது. ஆன்ட்ரியா 30 வயதை தொடுகிறார். ஆன்ட்ரியாவை உதட்டோடு உதடு கடித்து அனிருத் முத்தமிடுவதுபோல் ஸ்டில்கள் வெளியாகியுள்ளன. இவற்றை இன்டர்நெட்டில் பரவ விட்டது யார் என்று தெரியவில்லை.

முத்தக்காட்சி படங்கள் குறித்து ஆன்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், நானும் அனிருத்தும் முத்தமிட்டது கிட்டத்தட்ட இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இப்போது வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம். என்னைப்பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன், என்று கூறியிருக்கிறார்.

கன்னட படங்களில் பிஸியான ப்ரணிதா!

praneetha so busy in kannada filmநடிகை ப்ரணிதா கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். உதயன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ப்ரணிதா. தொடர்ந்து கார்த்தியின் சகுனி படத்தில் நடித்தார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் வேறு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போன ப்ரணிதா, கன்னட திரையுலகிற்கு சென்று வாய்ப்பு வேட்டையில் இறங்கினார். இப்போது அவர் மூன்று கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றி ப்ரணிதா அளித்துள்ள பேட்டியில், தமிழில் நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். இப்போதைக்கு கன்னட படங்களில் பிஸியாக இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

3டி படத்தில் நயன்தாரா...!

Nayanthara in 3d film
அடுத்தடுத்த காதல் கலாட்டாக்களால், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நயன்தாரா, தன் அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவக்கியுள்ளார். தற்போது, அஜீத்துடன் ஒரு படத்திலும், தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, பிரபல மலையாள இயக்குனர் அமல் நீராட் இயக்கும், "அரிவாள் சுட்டிகா நட்சத்திரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம், "3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது. மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். "மம்மூட்டி, பிருத்விராஜ், நயன்தாராவா... காம்பினேஷன் கலக்கலா இருக்கே! என, எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், மலையாள ரசிகர்கள்.

ஆத்திரத்தில் வயதை சொன்ன சமீரா ரெட்டி!



Sameera Reddys age!
சமீபத்தில் மம்மூட்டியுடன் ஒரு மலையாள படத்தில் நடிக்க சமீரா ரெட்டியிடம், "கால்ஷீட் கேட்டனர். ஆனால், அதே தேதியில் வேறு படம் இருந்ததால், தன் இயலாமையை தெரிவித்தார் சமீரா. ஆனால், அதன்பிறகு, சமீரா ரெட்டிக்கு வயது அதிகம் என்பதால் தான், அந்தப் படத்திலிருந்து அவரை நீக்கி விட்டதாக செய்தி பரவியது. இதனால் ஆத்திரமடைந்த சமீரா, "எனக்கென்ன பெரிய வயதாகி விட்டது. இப்போது தான், முப்பதை தொட்டிருக்கிறேன். இன்றைய ஹீரோக்களைப் பார்க்கையில், இதெல்லாம் ஒரு வயதே இல்லை என்று தன் நிஜ வயதை போட்டு உடைத்து விட்டார். இதை கேள்விப்பட்டு, "அப்படின்னா நம்மை விட, சமீரா பெரிய பொண்ணா? என, அவருடன் நடித்த சில ஹீரோக்கள் வாய் பிளந்து நிற்கின்றனர்.

போலீசை கிண்டல் செய்து நடிக்கவில்லை: கருணாஸ் சொல்கிறார்!



Fun of the police do not have acted: Karunas says!
       காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க பயப்படும் காலத்தில் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடித்து வருகிறார் கருணாஸ், திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி படங்களில் ஹீரோவாக நடித்தார். இரண்டுமே அவரது சொந்தப் படங்கள். அடுத்து வேறு யாராவது ஹீரோவாக நடிக்க கூப்பிடுவார்களா என்று பார்த்தார், கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தெரியவில்லை. அடுத்த படத்தையும் தானே தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். ரகளபுரம் படத்தில் பயந்தாங்கொள்ளி போலீசாக நடித்து வருகிறார் கோவை சரளா, மனோபாலா, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர் என ஒரு காமெடி பட்டாளத்தை வைத்துக் கொண்டு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து அம்பாசமுத்திரம் அம்பாணி படத்தை இயக்கிய ராம்நாத் இயக்கும் படத்திலும், ரகளைபுரம் படத்தை இயக்கும் மனோ இயக்கத்தில் இன்னொரு படமும் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்கிடையில் ஷக்தி சிதம்பரம் இயக்கும் மச்சான் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோவாக மாறியது குறித்து அவர் கூறியதாவது: காமெடியன்கள் ஹீரோவா நடிக்கிறது புதுசு இல்லை. என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, நாகேஷ், கவுண்டமணி, வடிவேல்னு பெரிய லிஸ்ட்டே இருக்கு. நான் யார் பணத்துலேயும் ஹீரோவாகல என் சொந்தப் பணத்துல நடிக்கிறேன். எல்லோரும் சினிமாவில் சம்பாதித்து வீடு, நிலம் வாங்குவாங்க, நான் பிலிம் வாங்குறேன். சினிமாவுல சம்பாதிச்சு வட்டிக்கு விடுவாங்க. நான் வட்டிக்கு வாங்கி சினிமா தயாரிக்குறேன். ஒரு செகண்டுக்கு பிலிம் 24 பிரேம் ஓடும். நான் ஒவ்வொரு செகண்டும் சினிமாவுக்காக ஓடுறேன். என் படத்துக்கு ஒரு மினிமம் கியாரண்டி இருக்கு அதனால தைரியமா நடிக்கிறேன்.

ரகளபுரம் படத்துல போலீசை நையாண்டி பண்ணி நடிக்கிறதா சிலபேர் வதந்திய கிளப்பி விட்டுருக்காங்க. அப்படி எதுவுமே இல்லை. எதைக் கண்டாலும் பயப்படுற ஒருத்தனுக்கு போலீஸ் வேலை கிடைச்சுடுது. அவன் கிறுக்குத்தனமா எதையாவது செய்ய அது பெரிய விளைவுகள உண்டாக்குது. இதை வச்சு காமெடியா பண்ணியிருக்கோம். நான் போலீசை ரொம்ப மதிக்கிறவன். அதுவும் தமிழ்நாட்டு போலீஸ்தான் இந்தியாவுலேயே பெஸ்ட்டுன்னு சொல்றாங்க. அவுங்கள எப்படி நான் கிண்டல் பண்ணுவேன். போலீசோட பெருமைய சொல்றமாதிரி நிறைய வசனம் இருக்கு. அதனால வதந்திகளை யாரும் நம்பாதீங்க. என்றார்

மீண்டும் லாரன்சுடன் லட்சுமிராய்!



Lakshmi rai again paired with lawrence!
லாரன்சுடன், "காஞ்சனா படத்தில் ஜோடி போட்ட லட்சுமிராய், அதற்கடுத்து அவர், தெலுங்கில் தமன்னாவை கொண்டு இயக்கியுள்ள, "ரெபல் என்ற படத்தை ஆரம்பித்த போதும் வாய்ப்பு கேட்டார். அப்போது, தமிழில், "காஞ்சனா பார்ட்-2 படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் எனக் கூறிய லாரன்ஸ், சொன்னபடியே, இப்போது அந்தப் படத்துக்கு லட்சுமிராயை ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், இதுவரை தன்னுடன் உதவி டான்ஸ் மாஸ்டராக இருந்த தன் தம்பி வினுவையும், இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.

மலையாள படத்தை "ரீ-மேக் செய்யும் பிரகாஷ்ராஜ்!


மலையாளத்தில், "சால்ட் என் பெப்பர், நித்ரா போன்ற படங்களை தயாரித்த லுக்சம் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம், தற்போது தமிழிலும் ஒரு படம் தயாரிக்கிறது. அந்தப் படத்தை சிம்பு தேவனின் உதவியாளர் தனராம் சரவணன் இயக்குகிறார். மேலும், இவர்கள் தயாரித்த, "சால்ட் என் பெப்பர் படத்தை, தமிழ், தெலுங்கில், "ரீ-மேக் செய்கிறார் பிரகாஷ்ராஜ். கேரளாவில், 140 நாட்கள் ஓடியதோடு, மாநில விருது இரண்டும் பெற்ற இந்தப் படம், புதிய போக்கிற்கு வித்திடும் இளைய தலைமுறை படம் என்ற பாராட்டு பெற்றுள்ளது. பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தை, "ரீ-மேக் செய்வதற்கு இதுவே காரணம்.

Tuesday 14 August 2012

நடிக்க வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்


மலையாள படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். கோலிவுட், பாலிவுட் படங்களை தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்ததுடன் இரண்டு ஆஸ்கர் விருதுகளை தட்டி வந்தவர் ஏ.ஆர்.ரகுமான். சொந்தமாக இசை ஆல்பம் வெளியிட்டு அதில் பாடல்கள் பாடி நடித்திருக்கிறார். பல இயக்குனர்கள் அவரை தனது படத்தில் நடிக்க கேட்டும் மறுத்திருக்கிறார். இந்நிலையில் மலையாள படம் ஒன்றில் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இதுபற்றி இயக்குனர் ஷஜுன் கரியால் கூறியதாவது: மல்லுவுட் நடிகர் பிஜு மேனனுடன் இணைந்து தயாரித்து படத்தை இயக்குகிறேன். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றியவர்தான் இதில் ஹீரோ. ‘இப்படத்தில் கவுரவ வேடத்தில் ஏ.ஆர்.ரகுமான் நடிப்பாரா? என்கிறார்கள். அதுபற்றி இவ்வளவு சீக்கிரம் உறுதிப்படுத்த முடியாது. ஆனால் அந்த எண்ணம் எங்களுக்கு உள்ளது. கவுரவ வேடத்தில் நடிப்பது பற்றி அவரிடம் பேசி வருகிறோம். இன்னும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடவில்லை. ரகுமானிடம் பணியாற்றிய தீபக் தேவ் இசை அமைக்கிறார். 5 நண்பர்கள் பற்றிய கதையான இதில் பிஜுமேனன், லால், சுரேஷ் கிருஷ்ணா, பி.சுகுமார், சுனில் பாபு நடிக்கின்றனர். காமெடியை மையமாக கொண்ட இப்படத்தின் கதை முழுவதும் 2 நாட்களில் நடந்து முடிவதுபோல் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.

உடம்பை முறுக்கேற்றும் அஜித் - ரசிகர்கள் புகழாரம்!


ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது பில்லா 2. அஜித் ரசிகர்களுக்கு படம் பிடித்தாலும், சுமாரான படம் என்ற பேச்சே பலரிடம் வெளிப்பட்டது. இந்த படத்தை இயக்க இருந்தவர் அஜித்துக்கு பில்லா என்ற அல்டிமேட் ஹிட் படத்தை கொடுத்த விஷ்ணுவர்தன் தான். ஆனால் பல தயாரிப்பு சிக்கல்களால் சக்ரி பில்லா 2 படத்தை இயக்கினார். இப்போது அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் தான் இயக்கி வருகிறார். எப்போதும் போலவே அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எதிர்பார்ப்புகளை ஏகத்துக்கும் வளர்த்து வருகிறது அஜித் நடிக்கும் அடுத்த படம். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். அஜித்துடன் சேர்ந்து ஆர்யாவும் படத்தில் நடிக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் படம் தான் தமிழ்த் திரையுலகில் ஆர்யாவுக்கு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல அறுவை சிகிச்சைகளை தன் உடம்பு கண்டிருப்பதால், உடற்பயிர்ச்சிகளில் ஆர்வம் இல்லாம் வந்தார் அஜித். படத்தில் அவர் ஆடும் போது, அவரின் தொப்பையும் சேர்ந்து ஆடுகிறது என்று பலரும் கமெண்ட் அடிக்க அது வசதியாக இருந்தது. ஆனால், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் உடற்பயிர்ச்சிகள் மேற்கொண்டு கட்டுமஸ்தான உடலுக்கு மாறி இருக்கிறார் அஜித். இணைய தளங்களில் தல ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள்...

அஜித் ஜிம் ஆசைக்கு காரணம்!


பல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இருந்து தனது உடல் எடையை பராமரித்து வந்தவர் நடிகர் அஜித்குமார். அஜித்குமாரின் சினிமாவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமனையை கொடுத்த பில்லா படத்தின் தொடர்ச்சியான பில்லா-2 படத்திலும் தொப்பையோடே நடித்த அஜித்குமார், விஷ்ணுவர்தனின் படத்திற்காக ஜிம்மில் அதிக நேரத்தை செலவிடுவது தான் திரைநட்சத்திரங்கள் பலரின் முதல் பேச்சாக இருக்கிறது. அஜித் ஜிம் செல்வதற்கான காரணத்தை பற்றி விசாரித்த போது பில்லா-2 படத்தின் ஷூட்டிங்கின் போது, அந்த படத்தில் வில்லனாக நடித்த சுதன்ஸு பாண்டேவின் சிக்ஸ் பேக்கை பார்த்து அஜித் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அப்போது சுதன்ஸு பாண்டே “ அஜித் அடுத்த படத்தில் சிக்ச் பேக்கில் நடித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று கமெண்ட் அடித்திருக்கிறார். அதே போல் சுதன்ஸு பாண்டேவும் அஜித் ரேஸ் ஓட்டுவதைப் பார்த்து ஆர்வம் கொண்டு இப்போது தனது வண்டியின் ஆக்ஸிலேட்டரில் இருந்து கால் எடுப்பதே இல்லையாம்.

விஜய்க்கு போட்டி போடும் நடிகைகள்!


ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார். திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியாவுக்கு விஜய் நடித்துக்கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தில் பாட்டு பாட வாய்ப்பு வந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி முருகதாஸிடம் இந்த படத்தில் தனக்குமொரு வாய்ப்பு தரும்படி அவராகவே வ்முன்வந்தௌ கேட்டுள்ளார் ஆண்ட்ரியா. முருகதாஸும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டாராம். நடிகை லட்சுமி ராய் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் அவரது படத்தில் வாய்ப்பு தருமாரு கேட்டுள்ளாராம். லட்சுமிராய் ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் நடிக்க பல நடிகைகளும் ஆர்வமாக உள்ளனர்.

விஜய்யின் அடுத்த படத்தில் மூன்று விஜய்!






நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். தாண்டவம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும் ஏ.எல்.விஜய்யும் அடுத்ததாக தலைவன் படத்திற்காக எந்த படத்திலும் கமிட்
ஆகாமல் இருக்கிறார். ஒருபுறம் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு வேகமாக நடந்துவருகிறது. தலைவன் படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் ஏ.எல்.விஜய், பாடகர் விஜய் யேசுதாஸை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது.விஜய் யேசுதாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.


இதுவரை திரைக்கு பின்னால் பாடல்களைப் பாடி வந்த விஜய் யேசுதாஸ் தனது முதல் படத்திலேயே வில்லனாக நடிக்கிறார். நடிகை லட்சுமிராய் இந்த படத்தில் நடிக்க தாண்டவம் படத்தில் நடிக்கும் போதே ஏ.எல்.விஜய்யின் காதில் போட்டு வைத்துவிட்டார்.

காதல்ல தோத்தாலும் வரலாறு தான்! அட்டக்கத்தி நாயகன் தினேஷ்



மேனரிஸம், மொழி ஆளுமை என பார்ப்பதற்கு அச்சு அசல் சென்னைப் பையன் போலவே இருக்கிறார் 'அட்டகத்தி' நாயகன் தினேஷ்.

"நான் பிறந்தது மட்டும்தான் வேலூர். மத்தபடி வளர்ந்தது எல்லாம் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையிலதான். இப்ப நான் குடியிருக்குறது செவ்வாய்ப்பேட்டை. இப்ப சொல்லுங்க, நான் அக்மார்க் சென்னைப் பையன்தானே?" வயதுக்கே உரிய குறும்பு தெரிகிறது தினேஷிடம்.
ஏற்கெனவே 'ஈ', 'ஆடுகளம்', 'மௌனகுரு' படங்களில் சின்னச்சின்ன வேடங்கள் ஏற்றவருக்கு, தன்னுடைய மொத்தத் திறமையையும் வெளிக்காட்டும் விதமாக இந்தப் படத்தில் ஹீரோவாக கலக்கி இருக்கிறார்.

செவ்வாய்ப்பேட்டை டு கோடம்பாக்கப் பயணம் நிகழ்ந்தது எப்படி?
"சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்னு ஆசை. ப்ளஸ்-டூ முடிச்சதும் காலேஜ்ல சேராம ஒவ்வொரு இயக்குநரா போய் பாத்து வாய்ப்பு தேடி அலைஞ்சிகிட்டு இருந்தேன். அப்பதான் ஒருநாள் இயக்குநர் பாலுமகேந்திரா சார்கிட்ட கோ-டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டு இருந்த வெற்றிமாறன் சாரைப் பார்த்தேன். ஒரு சீனைச் சொல்லி நடிச்சிக்காட்டச் சொன்னார். ஆனா, அது எனக்கு சரியா வரலை. அவர்தான் தியேட்டர் பத்தி சொல்லி, நடிக்கக் கத்துக்கணும்னா தியேட்டர்தான் சரியான சாய்ஸ்னு அனுப்பி வெச்சார். இது நடந்தது 2003. அதுக்குப்பிறகு நிறைய தியேட்டர்ல சேர்ந்து நடிக்கக் கத்துக்கிட்டேன். இதுவரைக்கும் 8 நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். இடையில 'ஈ', 'ஆடுகளம்', 'மௌனகுரு' படங்கள்ல சின்னச்சின்ன வேடங்கள் பண்ணேன். 'அட்டகத்தி'க்கு ஆடிஷன் நடக்குறதா கேள்விப்பட்டு கலந்துக்கிட்டேன். இறுதியா 6 பேர் தேர்வானாங்க. அந்த 6 பேருக்கும் வெச்ச போட்டியில நான் தேர்வானேன்.


'அட்டகத்தி' பத்தி சொல்லுங்க..
"நான் செலக்ட் ஆனதும் 'எவ்வளவு மொக்கை வாங்குனாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கணும்'னு படத்தோட ஒன்லைன் மட்டும்தான் சொன்னாங்க. ஷூட்டிங் போகப்போகத்தான் இது அவ்வளவு அருமையான படம்னு புரிஞ்சுது. இப்ப வர்ற பெரும்பாலான படங்கள் நம்மை அழவைக்குற மாதிரிதான் இருக்குது. ஆனா, எல்லாத் தரப்பு மக்களையும் சிரிக்க வைக்குற படமா 'அட்டகத்தி' இருக்கும். எல்லோருக்குள்ளும் ஒரு ஹீரோ கண்டிப்பா இருப்பான். அதேமாதிரி எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனமும் ஒளிந்திருக்கும். அதை வெளிக்காட்டுகிற படமா இது இருக்கும்."

'ஷூட்டிங் ஸ்பாட்' எப்படி இருந்தது?
எங்க டைரக்டர் ரொம்ப ஜாலியானவர். அதனால யூனிட்டே எப்பவும் கலகலன்னுதான் இருக்கும். எப்பவுமே எனர்ஜியோட இருப்பார். ஷூட்டிங் ஆரம்பிச்ச மூணாவது நாள், ஒரு சீன் மட்டும் முடிக்க முடியாம 19 டேக் வரைக்கும் போயிடுச்சி. எல்லாருமே சோர்ந்து போயிட்டோம். ஆனா, டைரக்டர் மட்டும் ஒண்ணாவது டேக் எடுக்கும்போது என்ன வேகத்தோட இருந்தாரோ, அதேவேகத்தோடத்தான் 19 டேக்லயும் இருந்தார். அவரைப் பார்த்துதான் நாங்க எல்லாம் சுறுசுறுப்பா இயங்குனோம்... இயங்கிகிட்டு இருக்கோம்.

படத்துல 5 ஹீரோயின்ஸாமே... அப்படியா?உண்மைதாங்க. ஒரு ஹீரோயின்கிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ணி மொக்கை வாங்குறது, அதப்பத்திக் கொஞ்சம்கூட கவலைப்படாம அடுத்த ஹீரோயினை ட்ரை பண்றதுன்னு என் கேரக்டர் செம ஜாலி! படத்தோட கடைசிவரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருப்பேன். 'காதல்ல தோத்தாலும் வரலாறு' இதுதான் படத்தோட பஞ்ச்!

ஹீரோயின்ஸ்ல உங்களுக்கு யாரை ரொம்பப் பிடிக்கும்?கிசுகிசு எழுதறதுக்கு கேட்குறீங்கனு நினைக்குறேன். ஏன் இந்த ஓரவஞ்சனை? 5 பேரையுமே பிடிக்கும்னு போட்டுக்கோங்க. 'நடிகையுடன் பார்ட்டிக்குப் போனார்'ன்னு இப்பவே கிசுகிசு ரெக்கை கட்டிப் பறந்துகிட்டு இருக்கு. நான் இதுவரைக்கும் தனியாகூட பார்ட்டிக்குப் போனது கிடையாது. ஹீரோயின்ஸ்ல ஒருத்தர் செல்போன் நம்பர்கூட என்கிட்ட கிடையாது. நாம் ரொம்ப நல்ல பையன். ( நம்பறோம்ம்ம்..! )

ஆரம்பத்துல சின்னச்சின்ன வேடங்கள்ல நடிச்ச நீங்க, இப்ப ஹீரோ ஆகிட்டீங்க. இனிமேல் ஹீரோ மட்டும்தானா? ஒன்லி ஆப்பிள் ஜூஸா..?!"அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. ஹீரோவாக நடிக்க என் திறமையையும், அர்ப்பணிப்பையும் எந்த அளவுக்குத் தந்தேனோ, அதே அளவுக்குத்தான் சின்னச்சின்ன வேடங்களுக்கும் தர்றேன். இனிமேல் ஹீரோவா மட்டுமே நடிப்பேன்னு எல்லாம் கிடையாது. சின்னச்சின்ன வேடங்கள்னாலும் ரசிகர்களை அட! ன்னு சொல்ற மாதிரி இருந்தால் கண்டிப்பாகச் செய்வேன். என்னைப் பொருத்தவரை, செய்யற வேலையை ரசிச்சு முழுமனசோட செய்யணும்.. ரோல் பெரிசா, சின்னதான்னு எல்லாம் நான் கவலைப்படறாதில்லை..!"

ஃபேஸ்புக்கில் அறிமுகமான பெண்ணை திருமணம் செய்கிறாரா நான் ஈ நாயகன் நானி.


‘நான் ஈ’ படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகனாக நடித்திருப்பவர் நானி.
இவருக்கு கவுதம்மேனன் இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். நானிக்கு திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மணமகள் பெயர் அஞ்சனா.

இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நவம்பரில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து நானி கூறும்போது, அஞ்சனாவுக்கும், எனக்கும் விசாகப்பட்டினத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டு குடும்பத்தினரும் பங்கேற்றனர். திருமண தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, சில பத்திரிகைகளில் நானும் அஞ்சனாவும் ‘பேஸ்புக்’ மூலம் அறிமுகமானதாக செய்திகள் வந்துள்ளன. அது தவறானது. இருவரும் 5 வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் மூலம் அறிமுகமானோம். அப்போது நான் சினிமாவில் நடிக்கவில்லை. நண்பர்களாக பழகினோம். பின்னர் காதல் மலர்ந்தது என்றார்.

பொருத்தமான ஆணை சந்திக்கும் வரை திருமணத்தை தேடி நான் போகமாட்டேன். த்ரிஷா




நடிகை திரிஷா 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். இதுவரை 48 படங்களில் நடித்து விட்டார். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.
சிம்ரன்தான் அதிக நாட்கள் சினிமாவில் கதாநாயகியாக நீடித்தார். அவருக்கு பின் ஜோதிகாவும் நீண்ட நாட்கள் நடித்தார். இவர்களை தொடர்ந்து திரிஷாவும் சினிமாவில் நிலைத்து இருக்கிறார்.
இதுகுறித்து திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் பத்து வருடங்களாக கதாநாயகியாக நான் நடித்து கொண்டிருப்பதற்கு ரசிகர்களே காரணம். அவர்கள் இல்லாமல் இதை சாதித்து இருக்க முடியாது. எனது கடின உழைப்பும் இதில் இருக்கிறது.
வெற்றி-தோல்வி பற்றி வருத்தப்பட்டது இல்லை. ஒவ்வாரு படத்திற்கும் முழு உழைப்பை கொடுத்தேன். தெலுங்கு நடிகர் ராணாவுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவரை பத்து வருடமாக எனக்கு தெரியும். குடும்ப நண்பராக இருக்கிறார். நாங்கள் காதலிக்கவில்லை.
திருமணம் என்பது வாழ்க்கையில் சந்தோஷமான விஷயம். அதை நான் தேடிப் போகமாட்டேன். பொருத்தமான ஆணை சந்தித்ததும் திருமணத்துக்கு சம்மதிப்பேன். எப்போது நடக்க வேண்டுமோ அப்போது என் திருமணம் நடக்கும்.
நான் ஒல்லியாக இருப்பதற்கு காரணம் உணவு கட்டப்பாடு மற்றும் உடற்பயிற்சி ஆகும். எதிர்மறையான சிந்தனைகளை மனதில் வளர விடமாட்டேன். அதுவும் எனது உடல் அமைப்பை நன்றாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தால் மன அழுத்தம், கவலைகள் வராது. நான் ஏதேனும் பிரச்சினைகளுடன் சங்கடமாய் வீட்டுக்கு வந்தாலும் நாயை பார்த்ததும் அவை பறந்து போகும். தமிழில் நான் நடித்ததில் எனக்கு பிடித்த படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.

விக்ரம் நடித்த தாண்டவம் படத்தை எதிர்த்து வழக்கு. திட்டமிட்டபடி ஆடியோ வெளியீடு நடக்குமா




      விக்ரம் நடிக்கும் ‘தாண்டவம்’ படத்தின் தலைப்புக்கு உரிமை கோரி ஸ்டார்லைன் மீடியா பட நிறுவனமும் ஹேப்பி மீடியா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் சென்னை சிட்டிசிவல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் எஸ்.விஜய், சங்கர் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-
‘தாண்டவம்’ பெயரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அந்த தலைப்பில் புதுமுக நாயகன் பாலு, சரண்யாமோகன் ஜோடியாக நடிக்க படம் எடுத்தோம். ஆர்.ஷங்கர் இயக்கினார். படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.
இந்த நிலையில் விக்ரம் நடிக்கும் படத்துக்கு ‘தாண்டவம்’ என பெயரிட்டுள்ளதாகவும் 15-ந்தேதி ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா நடக்க உள்ளதாகவும் விளம்பரங்கள் வந்துள்ளன.
‘தாண்டவம்’ பெயரில் ரூ. 1.5 கோடி செலவிட்டு படம் எடுத்துள்ளோம். விக்ரம் படத்துக்கு அதை பயன்படுத்தினால் நிதி நெருக்கடிக்கு ஆளாவோம். எனவே ‘தாண்டவம்’ பெயரை விக்ரம் படத்துக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நீதிபதி இந்திராணி முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கோதண்டபாணி, கிஷோர் ஆஜரானார்கள். யு.டி.வி. சார்பில் வக்கீல் சிவம் சிவானந்தராஜ் ஆஜராகி பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

பவர் ஸ்டாருடன் குத்தாட்டம் போட்ட சந்தன காமெடி நடிகர்.



சந்தன காமெடி நடிகர் தான் தயாரித்து, நடிக்கும் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் பவர் ஸ்டார். ஏற்கெனவே தயாரிப்பாளருடன் நடித்த கண்ணாடி படத்தில் குத்தாட்டம் போட்ட சந்தன நடிகர், அது பிடித்துப் போகவே, தற்போது நடிக்கும் படத்திலும் இசையமைப்பாளரிடம் சொல்லி குத்துப் பாட்டு ஒன்றை போடச் சொல்லியிருக்கிறாராம். இந்த குத்துப் பாட்டுக்கு இவருடன் சேர்ந்து ஆடப்போவது பவர் ஸ்டார் என்பதுதான் ஹைலைட்.

சினிமாவில் இசைக்காக உயரிய விருதுகளை இந்தியாவுக்கு வாங்கிக் தந்த பெருமை பெற்ற இசைப்புயல், தனது அடுத்த பரிமாணத்திற்குள் இறங்கியிருக்கிறார்.

இவர் இதுவரை இவர் இசையில் உருவாகும் ஆல்பம் மற்றும் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்தியாவின் பல முன்னணி இயக்குனர்கள் இவரை சினிமாவில் நடிப்பதற்கு அழைத்தும் மறுத்த இவர், தற்போது மலையாள படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

இவரின் உதவியாளர் அப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாவதால் இந்த சலுகை என்று மாலுவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது

ஹாலிவுட்டை தமிழ்படங்கள் நெருங்கி விட்டது. ரஜினிகாந்த்




       ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் ‘சிவாஜி'. ஷங்கர் இயக்க¤னார். ஏ.ஆர்.ரகுமான் இசை. 5 வருடத்துக்கு முன் வெளியான இப்படத்தை 3டி யில் மாற்றம் செய்திருக்கின்றனர். இதன் முன்னோட்ட காட்சி மற்றும் பாடல் காட்சிகள் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ரஜினிக்கு திரையிடப்பட்டது. இது பற்றி ரஜினி கூறியதாவது:

'சிவாஜி' படத்தை 15 நாட்களுக்கு முன் 3 டியில் சில காட்சிகளை பார்த்தேன். அப்போது என் படம் என்றுகூட நினைக்காமல் 3டி காட்சிகளை பார்த்து கைதட்டி ரசித்தேன். 'கோச்சடையான்' படமும் 3டி யில் வெளியிட உள்ளோம். அதற்குமுன் ஏவிஎம் முந்திக்கொண்டது. பத்திரிகையாளர்களுக்கு இப்படம் பிடித்திருக்கிறது. நீங்களே கைதட்டி ரசித்தீர்கள் என்றால் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

‘நான் நடித்த வேறு எந்த படத்தை 3டியில் மாற்றலாம்?, என்கிறார்கள். ,எந்திரன்,படையப்பா படங்களை மாற்றலாம். பிரமாண்டமான படங்களை 3டியில் மாற்றினால்தான் சரியாக இருக்கும். ‘தொடர்ந்து 3 டி படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கின்றனர். அதற்கு ஏற்ற சப்ஜெக்ட் வேண்டும். இந்த தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஹாலிவுட்டை தமிழ்படங்கள் நெருங்கி இருக்கிறது. எதிர்காலத்தில் இப்படித்தான் படங்கள் வரப்போகிறது. கறுப்பு வெள்ளை படம் முதல் 3டி காலகட்டம் வரையிலும் நான் நடித்துக்கொண்டிருப்பது சந்தோஷம். ஆண்டவன் தீர்மானித்தபடிதான் என்வாழ்வில் ஒவ்வொன்றும் நடக்கிறது. இனியும் அப்படித்தான்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார். பேட்டியின்போது ஏவி.எம்.சரவணன், எம்.எஸ்.குகன், பிரசாத் ஸ்டுடியோ தொழில்நுட்ப கலைஞர்கள் உடனிருந்தனர்.

சிம்புவின் போடா போடி படத்தில் நடனக்காட்சி கிளைமாக்ஸ்.


நாயகன் மரணம், நாயகி மரணம், வில்லன் மரணம், வில்லன் மனம் மாறுதல், வில்லனை ஜெயிக்கும் நாயகன் இது தான் தமிழ் வணிகப் படங்களின் க்ளைமாக்ஸ் காட்சிகள் டிரண்ட்.

ஒரு சில படங்கள் மட்டுமே இது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் மாறி இருக்கும். அந்த வரிசையில் இடம் பெற இருக்கிறது சிம்பு நடித்து வரும் 'போடா போடி' திரைப்படம்.

சிம்பு, வரலெட்சுமி நடித்து வரும் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது. தரண் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு இசை, நடனம் சம்பந்தப்பட்ட படமாகும். விக்னேஷ் சிவா இப்படத்தினை இயக்கி இருக்கிறார்.

'போடா போடி' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி நடனக்காட்சியாக அமைய இருக்கிறதாம். இக்காட்சிக்காக கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

ஒரு நடன நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிம்பு, வரலெட்சுமி மற்றும் ஷோபனா மூவரும் நடனமாடுவது போன்று அமைத்து இருக்கிறார்களாம். இக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கிறது படக்குழு.

இக்காட்சிகள் அனைத்து முடிந்தவுடன் 'போடா போடி' படத்தின் முழுப் படப்பிடிப்பும் முடிவடைகிறது. இதர பணிகளையும் முடித்துவிட்டு நவம்பர் மாதம் படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

பரதேசிக்காக சோத்துப்பாறை மலையை விலைக்கு வாங்கிய பாலா.


அதர்வா நடிப்பில், பாலா இயக்கியுள்ள படம், "பரதேசி! இதன் முக்கிய காட்சிகளை பெரியகுளத்தில் உள்ள, சோத்துப்பாறை மலையில் படமாக்கியுள்ளார் அவர். முன்னதாக, அந்த மலையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மலையையே விலை பேசி வாங்கிவிட்டார் பாலாவின் மைத்துனர். அதன் பிறகு அங்கே முகாம் போட்டு, சவுகரியமாக படப்பிடிப்பு நடத்தியுள்ளார் பாலா.

3டியில் வெளியாகும் ரஜினியின் முதல்படம் சிவாஜி...!


Rajinis first 3d movie is Sivaji  சில ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற சிவாஜி படம் இப்போது 3டியில் உருவாகி ரஜினியின் முதல் 3டி படமாக வெளியாக இருக்கிறது. ஏ.வி.எம். தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த படம் சிவாஜி. ஷங்கர்-ரஜினி கூட்டணியில் அமைந்த முதல்படம் இது. கறுப்புபணத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. அத்துடன் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் இடம்பெற்ற சஹானா, ஆம்பல் ஆம்பல், அதிரடிக்காரன் மச்சான்... போன்ற பாடல்கள் பிரபலமும் அடைந்தன.

இந்நிலையில் இப்படத்தை இப்போது 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட ஏ.வி.எம். நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஒருவருடமாக சுமார் 400 தொழில்நுட்ப கலைஞர்களுடன் சிவாஜியின் 3டி தொழில்நுட்ப பணியை பிரசாத் லேப்பில் தொடங்கியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மிக பிரம்மாண்டமாக சிவாஜி 3டி படத்தை உருவாக்கி உள்ளனர். ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தரப்பட்ட ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.

படம் உருவான விதம் குறித்து நாம் கேட்டறிந்த செய்திகள் இதோ, பிரசாத் குரூப் நிறுவனம் திரு.சாய் பிரசாத் ஏ.வி.ஏம்.குகனை சந்தித்து 3டியில் படம் பண்ணலாமே என்று கேட்டபோது, ரஜினியின் சிவாஜி படத்தை எடுக்க முடிவு செய்தனர். அதன்படி இப்படத்தில் உள்ள காட்சிகள், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்று ஒவ்வொரு காட்சியையும் பிரித்து எடுத்து, மிட் வைடு, க்ளோஸ் என்று ஒவ்‌வொரு பகுதியும் பிரிக்கப்பட்டு, ரோட்டோ ஸ்கோபி முறையில் தொடங்கி, அதற்கென உரிய சாப்ட்வேர் கொண்டு பிரேம் பை பிரேம் அவுட்புட் எடுத்து இறுதியாக படத்தின் தரம், கலர், சவுண்ட் உள்ளிட்டவைகள் 2டியில் எடுக்கப்பட்டு பின்னர் 3டியில் இப்படத்தை கொண்டு வந்துள்ளனர். மேலும் 3டியில் படத்தின் நீளமும் 2.17 மணி நேரமாக குறைக்கப்பட்டு உள்ளது.

`சிவாஜி 3டி படத்தின் ஒரு பாடல் மற்றும் டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று மாலை திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த் கலந்து கொண்டார். நிருபர்களுடன் அமர்ந்து கறுப்பு கண்ணாடி அணிந்தபடி, `சிவாஜி 3டி படத்தின் பாடல் மற்றும் டிரைலரை பார்த்து ரசித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ஏவி.எம். நிறுவனம் `சிவாஜி படத்தை 3டி படமாக உருவாக்கியிருக்கிறது. இந்த படத்தை சில நாட்களுக்கு முன்புதான் எனக்கு திரையிட்டு காண்பித்தார்கள். என் படம் என்று தெரியாமல், நானே கைதட்டி ரசித்தேன். குறிப்பாக, பாடல் காட்சிகளை மூன்று முறை பார்த்து பிரமித்துப் போய்விட்டேன். `கோச்சடையான் படம்தான் முதலில் 3டியில் வருவதாக இருந்தது. ஏவி.எம். நிறுவனம் முந்திக்கொண்டார்கள். பத்திரிக்கையாளர்களாகிய உங்களுக்கே இந்த படம் பிடித்து இருக்கிறது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். சிவாஜியை தொடர்ந்து எந்திரன் படத்தை 3டியில் கொண்டு வரலாம். தமிழ் படங்கள் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட்டை நெருங்கிவிட்டது. அதை எண்ணும்போது பெருமையாக இருக்கிறது என்றார்.

அருணா குகன் : சிவாஜி 3டி படத்தின் தயாரிப்பாளரான அருணா குகன் கூறுகையில், சிவாஜி 3டி படத்தின் டிரைலர் பார்த்தேன். நன்றாக வந்திருக்கிறது. நிச்சயம் இந்தப்படம் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவரும், படம் முழுமையாக முடிய இன்னும் சில பணிகள் இருக்கிறது. அது முடிந்ததும் விரைவில் திரைக்கு வரும் என்றார்.

ரஜினி உடல்நிலை பற்றி வதந்தி கிளப்பாதீர்கள்: எஸ்.பி.முத்துராமன் வேண்டுகோள்


S.P.Muthuraman request about rajiniரஜினிக்கு மீண்டும் உடல்நலமில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலவி வருகிறது. சிவாஜி 3டி பட வெளியீட்டில் இது குறித்து இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக ரஜினியின் உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகள் கவலை அளிப்பதாக உள்ளது. அவர் கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையால் மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார். இனி அவருக்கு சாவே கிடையாது அவர் இப்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். கடந்த சில தினங்களாக என்னோடு கம்பன் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். ஒரு நாளைக்கு 4 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கம்பன் விழா உரைகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு நானே சாட்சி. இதோ இப்போது உங்கள் முன் ஆரோக்கியமாக, உற்சாகமாக நின்று கொண்டிருக்கிறார். எனவே அவரைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு அவரது ரசிகர்களுக்கும், கோடான கோடி ரசிகர்களுக்கு மனவருத்தத்தை உருவாக்க வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன். என்றார்.

என் கேரியரில் மாறுபட்ட ஆக்ஷ்ன் த்ரில்லர் படம் சமர்! - சொல்கிறார் விஷால்!!


Vishals action thriller samar"தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தை அடுத்து, மீண்டும் திரு இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் "சமர்! "இதற்கு முன்பு பல படங்களில் நான் ஆக்ஷன் ரோலில் நடித்திருந்தாலும், இந்த படம் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வகையில், அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகியுள்ளது, என்று சொல்லும் விஷால், "என் கேரியரில் மாறுபட்ட ஆக்ஷன் த்ரில்லர் படமாக, "சமர் இடம்பெறும், என்கிறார். இதில், த்ரிஷா, சுனைனா என்ற இரண்டு ஜோடிகளுடன் அதிக நெருக்கமாக நடித்திருக்கும் இவர், "கிளுகிளுப்பான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை, என்கிறார்.

அனிரூத்தா இப்படி...?! இணையதளங்களில் உலவும் சர்ச்சை படங்கள்..!!

Anirudh liplock with andrea photo leaked in websitesகொலவெறி இசையமைப்பாளர் அனிரூத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் மிகவும் நெருக்கமாக இருக்கும் ‌போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிரூத். இவரது இசையமைப்பில் வெளியாகி இருப்பது வெறும் ஒரே ஒரு படம் என்றாலும், அந்த ஒரு படத்தில், ஒரே ஒரு பாட்டான ஒய் திஸ் கொலவெறி... என்ற பாட்டுக்கு இவருக்கு கிடைத்திருக்கும் பெயர் புகழ் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தபடத்தால் இந்தி படங்களில் கூட இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்று திரையுலகினர் இவரை பாராட்டி வரும் வேளையில் இணையதளத்தில் இவரது ‌சர்ச்சை படம் ஒன்று வெளியாகி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அனிரூத்தும், பிரபல நடிகையும்-பாடகியுமான ஆன்ட்ரியாவும் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. இதில் ஆங்கில படங்களையே மிஞ்சும் அளவுக்கு இருவரும் அப்படியொரு நெருக்கமாக லிப்-டூ-லிப் கிஸ் கொடுத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஹைலைட்டான விஷயம் அனிருத்துக்கு 21 வயது, ஆன்ட்ரியாவுக்கு 30 வயது.

ஒய் திஸ் கொலவெறி...!

ஸ்லிம் டாப்சி கொழு கொழு டாப்சியானார்!!


slim tapsee to be a fat tapsee"ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்தபோது, கொழுகொழுவென இருந்த டாப்சி, அதன்பிறகு, தெலுங்கு, இந்தி படங்களில், பருமனை குறைத்தார். தற்போது, அஜீத்தின் புதிய படத்தில் நடிக்கும் டாப்சியை, அப்படத்தின் இயக்குனரான விஷ்ணுவர்தன், மீண்டும், கொழுகொழுவென மாற, உத்தரவு போட்டுள்ளார். அதனால், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளை ஏறக்கட்டிவிட்ட டாப்சி, சதை போடும் உணவுகளாக பார்த்து, புகுந்து விளையாடி வருகிறார்.

குத்துவிளக்கு விற்கும் தனுஷ்!


dhanushs character in sargunam film"களவாணி, வாகை சூடவா பட இயக்குனர் சற்குணம், அடுத்து இயக்கும் படம், "சொட்டவாளக்குட்டி! "பொல்லாதவன், "ஆடுகளம் ஆகிய படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தில்; கும்பகோணத்தில், குத்துவிளக்கு செய்து விற்கும் வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இவருக்கும், பல் டாக்டருக்கு படிக்கும் வனரோஜா என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை தான், முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்கிறார் சற்குணம். இந்த படத்தில், வம்சி கிருஷ்ணா, நாசர், சாயாஜி ஷிண்டே, சூரி, சிங்கம்புலி, ஸ்ரீமன், சத்யன் என, பலர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், கதாநாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை.

Monday 13 August 2012

தத்து குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ஹன்சிகா.


நடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளில் 2 குழந்தைகளை தத்தெடுத்து பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியிருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை ஹன்ஸிகா. பொதுவாக நடிகர், நடிகைகள் பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள். ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்ஸிகா தான் செய்யப் போகிறாராம். மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தார்.

ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதியா? ரசிகர்கள் பரபரப்பு.





சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நிலை குறித்து இன்று பிற்பகலிலிருந்து பரவிய வதந்திகளால் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர்.

ரஜினி நலமுடன் இருப்பதாகவும், அவர் பட வேலைகளில் பிஸியாக இருப்பதாகவும் அவரது வீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி, ராணா படப்பிடிப்பின்போது உடல் நலக்குறை ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றே அவர் டிஸ்சார்ஜ் ஆனாலும், அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட, அடுத்தடுத்து பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு, கடைசியில் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, நலமுடன் வீடு திரும்பினார்.

அதன் பிறகு சில மாத ஓய்வுக்குப் பிறகு, வழக்கம் போல விழாக்களில் பங்கேற்று வருகிறார். கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவனையில் சில மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது.

ஆனால் அது பொய்யான தகவல் என்று பின்னர் தெரிய வந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் ரஜினி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தகவல் வெளியிட்டது.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த பரிதவிப்புக்கு உள்ளாகினர். தங்களுக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதுகுறித்து ரஜினியின் வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, "ரஜினி சார் நல்லா இருக்கார். வழக்கம்போல அவர் படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். வீண் வதந்தி. ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்," என்றனர்.

இந்த பொய்யான செய்தி ரசிகர்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.

உதவி இயக்குனரின் வாயை அடைக்க தாண்டவமாடும் படக்குழு.



'ஐ யம் ஷாம்' படத்தின் அப்பட்டமான காப்பிதான் தெய்வ திருமகள். இப்பவும், 'அது என்னோட சொந்த சரக்கு' என்று சூடம் கொளுத்தி அந்த வெளிச்சத்தில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் டைரக்டர் விஜய். கண்ணுக்கு தெரிஞ்சே இப்படி நடந்திருக்கும் போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் 'தாண்டவம்' மட்டும் ஒரிஜனல் சரக்காகவா இருக்கும்? இப்படி ஒரு சந்தேகக் கண்ணோடு அவரை நோக்கும் லட்சோப லட்சம் கண்கள், 'தாண்டவம்' எந்த படத்தின் டி.வி.டியிலிருந்து சுடப்பட்டது என்று அலசிக் கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் விடையாக மெல்ல ஒரு முணுமுணுப்பு கேட்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கத்தில். டைரக்டர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் யூடிவி தனஞ்செயனிடம் ஒரு ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்தாராம். வாய்ப்பு கேட்டு போன போது நடந்த சம்பவம் அது. தாண்டவமாக இப்போது உருவாகியிருப்பதும் அதே ஸ்கிரிப்ட்தானாம்.

கொஞ்சம் லேட்டாகதான், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்திருக்கிறார் உதவி இயக்குனர், நேரடியாகவே யூடிவி நிர்வாகத்தை அணுகியிருக்கிறாராம். சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், ரிலீசுக்குள் உதவி இயக்குனரின் வாய் அடைக்கப்படலாம் என்றும் பரிகாச சிரிப்பு சிரிக்கிறது பட்சி!

திருமணத்துக்கு இன்னும் நான் தயாராகவில்லை. த்ரிஷா



நடிகர் ராணாவை காதலிக்கிறேனா என்கிறார்கள். ஆனால் திருமணத்துக்கு நான் இன்னும் தயாராகவில்லை என்றார் த்ரிஷா. இது பற்றி த்ரிஷா கூறியதாவது: திரையுலகுக்கு வந்து 10 வருடம் கடந்துவிட்டது. இது அதிர்ஷ்டத்தால் நடந்ததில்லை. நான் நடித்த படங்கள்தான் என்னை இந்த அளவுக்கு நிலைநிறுத்தி இருக்கிறது. ஏதோ ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த படத்திலும் நடித்ததில்லை. எதில் நடித்தாலும் அந்த கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஏற்றிருக்கிறேன். இதை எனது கொள்கையாக வைத்திருக்கிறேன்.
‘நடிகர் ராணாவை காதலிக்கிறேன், அவரை மணந்துகொள்ளப்போகிறேன்' என்று அடிக்கடி வதந்திகள் வெளியாகிறது. நாங்கள் இருவரும் கடந்த 10 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். வதந்திகள்பற்றி நான் கவலைப்படுவதில்லை. திருமணத்துக்கு இன்னும் நான் தயாராகவில்லை. எனக்கேற்ற காதலனுக்காக காத்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமணம் என்பது வாழ்க்கையின் புது அத்தியாயமாகும். அதற்கு அவசரப்படக்கூடாது. திருமண பந்தம் எனக்காக காத்திருக்கும்.
இப்போது விஷால், ஜீவா, ஜெயம் ரவியுடன் படங்களில் நடிக்கிறேன். இதுதவிர சில தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்திருந்தாலும் கவுதம் மேனன் இயக்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா', பிரபு தேவா இயக்கிய ‘நு ஒஸ்தானன்டே நேன் ஒத்தன்டானா' ஆகிய படங்கள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. அந்த படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயரைச் சொல்லி இன்றும் என்னை நிறைய பேர் அழைக்கிறார்கள். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

சூர்யாவால் நின்றுபோன விஜய்யின் யோஹான். கவுதம் மேனன் அதிர்ச்சி.



கவுதம்மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படம் கைவிடப்பட்டதாக தகவல். சமீபத்தில் கவுதமை அழைத்த விஜய், 'இப்போதைக்கு இந்த படம் வேணாம்னு ஃபீல் பண்றேன். பிறகு கூப்பிடும்போது வாங்க' என்று கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று தலையை பிய்த்துக் கொள்ளவில்லை கவுதம். சட்டென்று மூளைக்குள் மின்னலாக புரிந்துவிட்டதாம் அவருக்கு. சூர்யாவை வைத்து 'துப்பறியும் ஆனந்தன்' என்ற படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் கவுதம். இதற்காக சூர்யாவுக்கு நாலு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்தாராம். ஆனால் யோஹன் விஷயமாக விஜய்க்கு கொடுக்கப்பட்ட முன் பணம் வெறும் ரெண்டே ரெண்டு கோடி. இதுதான் விஜய்யின் கோபத்திற்கு காரணம் என்கிறது கோடம்பாக்கம்.

மீண்டும் வருகிறார் குழந்தை நட்சத்திரம் சாரா!




   இயக்குனர் கௌதம் இயக்கவிருக்கும் திரைப்படம் ‘சென்னையில் ஒரு நள்ளிரவு’.

இப்படத்தில் நாயகனாக ‘மைனா’ படத்தில் நடித்த விதார்த் நடிக்கிறார். அவருடன் மலையாள நடிகர் அனூப்-பும் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் விக்ரமின் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் அள்ளிய குழந்தை நட்சத்திரம் சாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘தெய்வத்திருமகளுக்குப் பிறகு சாராவுக்கு கிடைத்திருக்கும் முதல் தமிழ்ப்பட வாய்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சில விளம்பரப்படங்களிலும் சாரா நடித்திருக்கிறார்.

விமானம் ஓட்டத் தெரிந்த ஒரே தமிழ் நடிகர் தல தான்!



                               

நடிகர், நடிகைகளை பொறுத்தவரை அனைவரிடமும் லைசென்ஸ் இருக்கும். அதில் ஒருசில நடிகர்கள் பைக் லைசென்ஸோ அல்லது கார் லைசென்ஸோ வைத்திருப்பார்கள்.

ஆனால் நடிகர் அஜித், பைக், கார் லைசென்ஸ் மட்டுமின்றி விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸிம் வைத்திருக்கிறார்.

இதுல சிறப்பு என்னவென்றால் விமானம் ஓட்டுவதற்கான பைலட் லைசென்ஸ் வைத்துள்ள இந்திய நடிகர் அஜித் மட்டுமே. இவர் பைக் மற்றும் கார் ஓட்டுவதில் மட்டும் சிறந்தவரல்ல விமானம் ஓட்டுவதிலும் சிறந்தவராவார்

நான் திரைப்படத்தில் இலங்கை கவிஞனின் பாடல் இதோ!

        இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ´´நான்´´ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் இலங்கை கவிஞர் அஸ்மினால் எழுதப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி சர்வதேச மட்டத்தில் நடத்திய பாடலியற்றல் போட்டியில் 20,000 போட்டியாளர்களுள் முதலாமிடம் பெற்ற அஸ்மின் ´´நான்´´ திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பினை பெற்றுக்கொண்டார்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. நான் திரைப்படம் ஒகஸ்ட் 15ம் திகதி உலகமெங்கும் வெளியாகிறது.



தீபாவளி விளம்பர படங்கள்: நடிகைகள் தீவிரம்...!

Actress waiting for deepavali adதீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரபல ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனங்கள் தீபாவளி விளம்பரங்கள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்தப் படங்களில் நடிக்க நடிகைகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆண்டுதோறும் புதிதாக வெளிவரும் தீபாவளி விளம்பரங்களில் அந்த ஆண்டு முன்னணியில் இருக்கும் நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் இருக்கும். ஒவ்வொரு நிறுவனமும் முன்னணி நடிகைகளைக் கொண்டே விளம்பரங்கள் தயாரிக்க விரும்பும்.

கடந்த ஆண்டு, அமலா பால், ரிச்சா கங்கோபாத்யா, டாப்ஸி ஆகியோர் முன்னணியில் இருந்தார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே அசினும், தமன்னாவும், த்ரிஷாவும் விளம்பரத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்கள். அதேபோல லட்சுமிராயும் விளம்பரங்களில் மின்னிக் கொண்டிருக்கிறார். சினேகா சிறு நிறுவனங்களின் விளம்பரத்தில்கூட நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஹன்சிகாவும், காஜல் அகர்வாலும், ப்ரணிதாவும். சமந்தாவும் களத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இந்த ஆண்டும் அமலாபாலின் ஆதிக்கம் தொடர்கிறது. அஞ்சலிக்கும் விளம்பர உலகில் நல்ல டிமாண்ட் இருக்கிறது. அனுஷ்கா தனக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

நடிகைகள் விளம்பர படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம். குறைந்த உழைப்பு நிறைய சம்பளம் என்ற தாரக மந்திரம்தான். ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக பட்சம் நான்கு நாள் கால்ஷீட் கொடுத்தால் போதும், அதற்கு ஒரு படத்தில் நடிப்பதற்கான சம்பளம் கிடைக்கும், அடிக்கடி தொலைக்காட்சியில் விளம்பரங்கள் இடம்பெறுவதால் மக்களின் மனதில் முகமும் நன்றாக பதிந்துவிடும். யார் முக்கிய நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கிறார்களோ அவர்கள்தான் நம்பர் ஒன் என்ற இமேஜும் இருக்கிறது.

தென்னிந்தியாவை பொறுத்தவரை அசின், த்ரிஷா, அனுஷ்கா முன்னணியில் இருக்கிறார்கள், இவர்கள் மூவருமே ஒப்பந்த அடிப்படையில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறுகிறவர்கள். பாலிவுட்டை பொறுத்தவரையில் ஐஸ்வர்யாராய் முதல் இடத்தில் இருந்தார். இப்போது அந்த இடத்தை பிரியங்காக சோப்ரா பிடித்து ஐஸ்வர்யாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளியிருக்கிறார். இவர்களின் சம்பளத்தை சொன்னால் மயக்கம் வரும்.

நயன்தாரவை துரத்தும் சிம்பு!!


simbu continously willing nayantharaநயன்தாரா தற்போது தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகை. அவரைச் சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்தாலும் கோடிகளை கொட்டி தங்கள் படத்தில் அவரை புக் பண்ண தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். ஹீரோக்களும் வெயிட்டிங். சிம்பு தமிழ்நாட்டில் இரண்டாவது வரிசையில் இருக்கும் ஹீரோ. நயன்தாரா நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா, இரண்டைத் தவிர சிம்பு படம் எதுவும் பெரிய ஹிட்டாகவில்லை.

இப்படி சினிமாவின் தர வரிசைப் பட்டியலில் பெரிய இடைவெளி கொண்ட இருவரும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். வல்லவன் படத்தின்போதுதான் இவர்கள் காதல் கொண்டார்கள். அப்போது இருவருமே சினிமாவில் ஒரே தரவரிசையில்தான் இருந்தார்கள்.

நயன்தாரா யார் மீதாவது அன்பு வைத்தால் அதில் அதி தீவிரமாக இருப்பார். உயிருக்கு உயிராக நேசிப்பார். அதற்கு ஒரு சிறு சேதாரம் வந்தால்கூட அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். அதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. சிம்பு இந்த கேரக்டருக்கு நேர் எதிர்மறை. எதையுமே ஜஸ்ட் லைக் தட் என எடுத்துக் கொள்பவர். அதனால் இருவருக்கும் ஒத்துப் போகாமல் பிரிந்தார்கள். பிரிவு கூட நயன்தாராவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அவர்களின் அந்தரங்க உறவுகள் படமாக வெளிவந்தபோதும், அதை வெளியிட்டவரே சிம்புதான் என்ற தகவல் பரவியபோதும் அவர் ரொம்பவே அப்சட் ஆகிவிட்டார். இனி தன் வாழ்நாளில் சிம்புவுக்கு எந்தவிதத்திலும் இடமில்லை என்ற முடிவோடு தன் பயணத்தை தொடர்ந்தார்.

நயன்தாராவின் அதீத அன்பு அடுத்து பிரபுதேவாவின் பக்கம் பாய்ந்தது. பிரபுதேவாவின் அழகிலோ, அவரிடம் இருக்கும் செல்வத்திலோ அவர் மயங்கவில்லை. காரணம் அவரைவிட அழகானவர்கள், பணக்காரர்கள் நயன்தாராவின் பார்வைக்கே தவம் கிடக்கிறார்கள். பிரபுதேவா மகனின் மரணம் அவரைப்போலவே நயன்தாராவையும் பாதித்தது. அந்த பாதிப்புக்கு பரிகாரம் சொன்னவர் பாசத்தையும் சேர்த்து கொடுக்க அதுவே காதலானது. பிரபுதேவா தனக்கு மட்டுமே சொந்தமானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் பெயரை தன் கையில் டாட்டூ குத்திக் கொள்ளும் அளவுக்குச் சென்றார். இயற்கையிலேயே குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்ட பிரபு தேவாவினால் நயன்தாராவிற்காக தன் மனைவியை மட்டும்தான் தியாகம் செய்ய முடிந்தது. குழந்தைகளை விட்டுப் பிரிய முடியவில்லை. அன்பை பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத நயன்தாராவுக்கு இது சரியாக வரவில்லை. அவரிடமிருந்தும் பிரிந்தார்.

சிம்புவை விட்டு நயன்தாரா பிரிந்த பிறகு அவர் மார்க்கெட் இழந்து சாதாரண நடிகையாகிவிட்டிருந்தாலோ, அல்லது சினிமாவை விட்டு விலகி இருந்தாலோ நயன்தாரா என்ற ஒருவரை காதலித்ததையே சிம்பு வசதியாக மறந்து விட்டிருப்பார். ஆனால் பிரிவுக்கு பிறகான நயன்தாராவின் வளர்ச்சி அவரை மிகவும் ஆச்சர்யப்பட வைத்தது. அதிர்ச்சியடைய வைத்தது. நயனை தவறவிட்டுவிட்டோமோ என்று நினைக்க ஆரம்பித்தார். அதனால் மீடியாக்களிலும், தனிப்பட்ட நண்பர்களிடமும், ஏதாவது ஒரு வகையில் நயன்தாராவை குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். அவர் எங்கிருந்தாலும் வாழ்க, அவரைப்பற்றி எனக்குத்தான் அதிகம் தெரியும், திருமணம் நடக்கட்டும் பார்க்கலாம் அவருடன் நடிக்க தயார், இப்படி ஏதாவது சொல்லி மீடியாக்கள் தன்னையும், நயனையும் சேர்த்து நினைக்க வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் சிம்பு பற்றி நயன்தாரா எந்த இடத்திலும் பேசவில்லை. அப்படி ஒரு சில இடங்களில் மீடியாக்கள் பேச வைக்க முற்பட்டபோதும் அது முடிந்து போன கதை என்று மட்டும் சொன்னார்.

இப்போது நயன்தாரா, பிரபுதேவாவை விட்டு விலகிய நிலையில் தனது நெருக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் சிம்பு. அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் வாலிண்டரி அட்டனென்ஸ் கொடுப்பது. அவர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் ஆர்வமாக கலந்து கொள்வது. அல்லது தானே பார்ட்டி கொடுத்து அதற்கு நண்பர்கள் மூலம் நயனை வரவழைப்பது என்று தனது காய்களை நகர்த்தினார். அப்படி நடந்த ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மரியாதை நிமித்தமாக ஹாய் சொல்லியிருக்கிறார். தயாராக நின்றிருந்த போட்டோகிராபர் அதனை படமெடுத்திருக்கிறார். இவ்வளவுதான் நடந்தது. பத்திரிகையாளர் கலந்து கொள்ளாத, பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லாத ஒரு பார்ட்டியில் எடுத்த புகைப்படம் பத்திரிகைக்கு எப்படி வந்தது. ஆனால் வந்துவிட்டது. சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைகிறார்கள் என்று மீடியாக்கள் இதனை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நாளைக்கு சிம்புவும், நயன்தாராவும் இணையலாம், திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி நடந்தால் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று நயன் முடிவு செய்துவிட்டார் என்று பொருள்.

மீடியாவுக்காக செல்போன் நம்பரை மாற்றிய சிவ கார்த்திகேயன்...!


Sivakarthikeyan changes his cellphone numberசின்னத்திரையில் கால்பதித்து, இப்போது பெரிய திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சிவகார்த்தி‌கேயன். மெரினா படம் மூலம் ஹீரோவாக அவதரித்த அவர், தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்தார். இப்போது தனுஷ் தயாரிக்கும் ஒருபடம், பசங்க பாண்டிராஜின் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரை சந்தித்தபோது அவர் நம்மிடம் பேசியதாவது, சினிமாவில் எனக்கு கிடைத்த இந்த இடம் மிகப்பெரியது. 3 படத்தில் தனுஷூன் நடித்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. என்னுடைய காமெடி சென்ஸை புரிந்து கொண்டு சரியாக பயன்படுத்த நினைப்பவர். படம் ஆரம்பிக்கும் முன்பாக என்னிடம் என்ன கதை சொன்னார்களோ, அதை அப்படியே படமாக எடுத்தனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய ப்ரீடம் கொடுத்தாங்க. தனுஷ் அடுத்து தயாரிக்கும் புதிய படத்தில் நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இப்போது என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜின் படத்தில் விமல் கூட கேடி பில்லா கில்லா ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறேன். நான் பிறந்து, ஓடி, ஆடி விளையாடிய திருச்சியில் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட்டிங்கில் பங்கேற்கும் போது அப்படியே எனது பழைய நினைவுகள் வருது. விமல் கூட முதன்முறையாக நடிக்கிறேன். எல்லோரும் யார் பில்லா, யார் கில்லாடி ரங்கா என்று கேட்கின்றனர். ஆனால் அது சஸ்பென்ஸ். நிறைய பேர் மீடியாவுல நான் சரியா பேசுறது இல்லை என்று சொல்றாங்க. நம்ப மாட்டீங்க, நான் ஷூட்டிங் முடித்து என் செல்போனை பார்த்தால் நிறைய மிஸ்ட்கால் இருக்கும். இதுல யாருக்கு போன் பண்ணுவேன். இந்தநிலையை தவிர்க்க எட்டு வருஷமா நான் வச்சிருந்த என் ‌போன் நம்பரை இப்போ மாற்றிவிட்டேன். எனது புது நம்பரை எல்லோருக்கும் கொடுத்து பேசிக்கொண்டு இருக்கேன். இனி யார் எப்ப என்ன கேட்டாலும் தவிர்க்காம உடனே பதில் சொல்வேன் என்னை நம்புங்க என்று அழாத குறையா சொல்லி முடித்தார் சிவ கார்த்திகேயன்.

திகரிக்கும் வெளிநாட்டில் பாடல் வெளியிடும் சீசன்...! யாருக்கு லாபம்...?!!

increasing audio launch function in foreginதமிழ் சினிமாவில் யாராவது எதையாவது புதிதாக செய்துவிட்டால் அதையே எல்லோரும் கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது வெளிநாட்டில் பாடல்களை வெளியிடும் சீசனை தொடங்கி விட்டார்கள். முன்பு ஒன்றிரண்டு படங்களின் பாடல் வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடந்ததுண்டு. அவை அத்திபூத்தமாதிரி எப்போதாவது, ஏதாவது ஒரு காரணத்துக்காக நடக்கும். ஆனால் இப்போது வெளிநாட்டில் பாடல்களை வெளியிடுவது அது பெரிய படம் என்று காட்டுவதற்கும், தங்களின் சக்தியை காட்டுதற்காகவுமே நடத்தப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா பாடலை கவுதம் மேனன் வெளிநாட்டில் வெளியிட்டார். எந்திரன் பாடல்கள் மலேசியாவில் வெளியிடப்பட்டது. உச்சிதனை முகர்ந்தால் என்ற சிறிய படத்தின் பாடல் வெளியீடுகூட லண்டனில் நடந்தது. தாண்டவம் படத்தின் பாடல்கள் முதலில் லண்டனில் வெளியிடப்பட்டது. சமீபத்தில் மாற்றான் படத்தின் பாடல்கள் சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. இப்போது பரதேசி படத்தின் பாடல்களை லண்டனிலும், கோச்சடையான் பாடல்களை ஜப்பானிலும் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வெளிநாட்டில் பாடல்கள் வெளியிடப்படுதால் அந்த தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை என்பதுதான் உண்மை. விமான செலவு, ஓட்டல் செலவு, உணவு செலவு, பார்ட்டி செலவு, விழாச் செலவு எல்லாம் சேர்ந்து கோடியை தொட்டுவிடுமாம். இதில் லாபம் யாருக்கு? நடிகர் நடிகைள் உள்ளிட்ட விழாவில் பங்கேற்பவர்களுக்குதான். தயாரிப்பாளர் செலவில் ஒரு ஜாலி டூர் சென்று விட்டு வருகிறார்கள். விழாவில் நடனம் ஆடும் நடிகைகள் கணிசமான தொகையை சம்பளமாக பெறுகிறார்கள்.

வெளிநாட்டில் பாடல் வெளியீட்டு விழா நடத்துவதால் ஒரு கேசட் கூட அங்கு அதிமாக விற்று விடப்போவதில்லை. வெளிநாடு வாழ் தமிழர்கள் இணையதளத்தில் டவுண்லோட் செய்து கேட்டு விடுவார்கள். படத்திற்கான புரமோசன் என்று எடுத்துக் கொண்டால்கூட எந்த வெளிநாட்டு தமிழனும் பாடல் வெளியீட்டு விழாவில் மயங்கி படம் பார்த்துவிடுவதில்லை. மவுத்டாக், இணைய தள விமர்சனங்கள் பார்த்துதான் படம் பார்ப்பார்கள்.

"தயாரிப்பாளரின் தலையில் சுமையை ஏற்றும் இதுபோன்ற ஆடம்பரங்களை தவிர்த்தால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். ஒரு சினிமாவை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டமிட்டு அதற்காக செலவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும். வியர்வை சிந்தி உழைத்த பணத்தை தியேட்டரில் கொடுத்து படம் பார்க்கும் அம்மாபட்டி ரசிகனும், ஆண்டிப்பட்டி ரசிகனும் ஏனோ சினிமாகாரர்கள் கண்களுக்கு தெரிவதே இல்லை" என்று வருத்தப்படுகிறார். ஒரு முன்னணி தயாரிப்பாளர்.

ரசிகர்களுக்கு நமீதா அட்வைஸ்!!

Namitha adivces to her fansநிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது; எனவே நிலத்தில் எல்லோரும் முதலீடு செய்ய வேண்டும் என்று நடிகை நமீதா தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை நமீதா இப்போது சினிமாவில் நடிப்பதைக்காட்டிலும் விளம்பர நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க தொடங்கியுள்ளார். அதிலும் குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழிலில் அவர் ரொம்ப தீவிரம் காட்டி வருகிறார். மும்பையில் சொந்தமாக கம்பெனி துவங்கி கட்டுமான தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விலைக்கு கொடுக்கிறார்.

நமீதாவின் ரியல் எஸ்டேட் பிஸினஸ் குறித்து அறிந்த தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் தங்களது நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி நமீதாவுக்கு அழைப்பு விடுத்தது. கும்மிடிப்பூண்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நமீதா, ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, சம்பாதிக்கும் பணத்தை லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வது அவசியம். இன்று தங்கத்திலும், நிலத்திலும் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானதாக உள்ளது. தங்கம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. அதுபோல் நிலத்தின் மதிப்பும் உயர்கிறது. எனவே பணத்தை இவ்விரண்டிலும் முதலீடு செய்யுங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

இந்தி நடிகர் பெயரை பச்சை குத்திய எமி!


amy jackson tatoo pratieks nameபிரபுதேவா மீது கொண்டிருந்த அலாதியான காதலுக்கு அடையாளமாக, அவரது பெயரை, தன் கையில் நயன்தாரா பச்சைக் குத்திக் கொண்டது பழைய கதை. அவரையடுத்து, இப்போது, "மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்துள்ள எமிஜாக்சனும், தன்னுடன், "ஏக் தீவானாதா என்ற இந்தி படத்தில் நடித்த பிரதீக்கின் பெயரை, தன் கையில் பச்சைக் குத்தியுள்ளார். "இதுவும் காதலின் வெளிப்பாடு தானா? என்று எமியைக் கேட்டால், "எனக்கு தெரியவில்லை. ஆனால், பிரதீக்கை எனக்கு ரொம்ப பிடிக்கும்; அதற்காகவே பச்சைக் குத்தி உள்ளேன், என்கிறார்.