Saturday 11 August 2012

குட்பாய் விமலன் ப்ளேபாய் அகிலன் டபுள் ட்ரீட் மாற்றான்!


''ஓ.கே... இப்ப கொஞ்சம் பேசி டலாம். எனக்கே யார்கிட்டயாவது சொல்லி டணும்னு தவிக்குது. 'மாற்றான்’ல சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். 'கான்ஜாயிண்ட் ட்வின்ஸ்’னு (Conjoined twins) சொல்வாங்க. ஒரே உடம்பு... ரெண்டு மனசு. குணாதிசயங்களும் எதிரெதிர் துருவங்களா இருக்கும். டெக்னிக்கலா ரொம்ப சேலஞ்ஜிங்கான கதை. கிராஃபிக்ஸ் பெர்ஃபெக்ட்டா இருக்கணும். கொஞ்சம் அசந்தாலும் ஏமாத்திரும். சூர்யாவின் இன்னொரு தலையை கம்ப்யூட்டர்ல ஜெனரேட் பண்ணணும். அதில் உயிர் இருக்கணும். எல்லாத்துக்கும் மேலே நீங்க நம்பணும். சூர்யாவுக்கு நாலு கை, நாலு கால், இரண்டு தலை... நல்லா இருக்குல்ல!'' - கண்களின் ரியாக்ஷன் பார்க்கிறார் கே.வி.ஆனந்த். 'மாற்றான்’ படத்துக்காக பிரமாண்ட உழைப்பு கொட்டிய அயர்ச்சி யைத் தாண்டியும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது குதூகலம்.

 ''எங்கே பிடிச்சீங்க இந்த ஐடியாவை?''
'' 'சிவாஜி’க்காக 'ஒரு கோடி சன்லைட்’ பாட்டு ஷூட் பண்ணிட்டு நானும் ஷங்கர் சாரும் ஃப்ளைட்டில் வந்துட்டு இருந்தோம். அப்போ நேஷனல் ஜியாக்ரஃபி பத்திரிகை யைச் சும்மா புரட்டிட்டு இருந்தேன். அதுல பத்து பக்கத்துக்குத் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த குழந்தைகளைப் பத்தின ஸ்டோரி இருந்தது. மனசுக்குள் மின்னல். இந்தியா வந்து இறங்கினதும் அப்படியான குழந்தைகளைத் தேடினால், ஆச்சர்யத் தகவல்களா கொட்டுது. அப்படியே அதை நூல் பிடிச்சுட்டே போனா, செம சினிமாவுக்கான கதை. ரொம்ப பாசிட்டிவ் எண்ணங்கள் உள்ளவனா ஒருத்தனும் வசதி தந்த திமிரால் தடம் மாறியவனா ஒருத்தனும் இருக்காங்க. நிஜத்திலும் அப்படிப் பல ட்வின்ஸ் இருக்காங்க. ஒரே உடம்புல ரெண்டு மனசு!''
''சூர்யாவையே மலைக்கவைக்கிற உழைப்பு தேவைப்படுமே... சமாளிச்சாரா?''
''பின்னிட்டார்! மூணு படங்கள்ல கொட்ட வேண்டிய வேலையை இதில் கொடுத்திருக்கார். 'அயன்’ சமயமே இந்தக் கதையை அவர்கிட்ட சொன்னேன். கேட்டுக்கிட்டார். நான் 'கோ’ முடிச்சதும் 'என்ன ட்வின்ஸ் கதையை இப்போ கையில் எடுக்கலாமா’னு கேட்டார். நிறைய ஹோம் வொர்க் பண்ணிட்டுக் கிளம்பிட்டோம்.
ட்வின்ஸ் சூர்யாவுக்கு அகிலன், விமலன்னு பேர். இதுல விமலன் ரொம்ப நல்ல பையன். கவிதை எழுதுவான், எல்லாருக்கும் உதவி பண்ணுவான், வடைதான் பிடிக்கும், பொய் சொல்ல மாட்டான். அகிலன் அப்படியே ஆப்போசிட். பீட்டர் இங்கிலீஷ், பீட்ஸா பார்ட்டி, டேட்டிங் இளைஞன். விமலன் குட்பாய்னா, அகிலன் ப்ளேபாய். ரெண்டு பேருக்குமான வித்தியாசத்தை நல்லா உள்வாங்கிட்டு, பிரமாதமா பெர்ஃபார்ம் பண்ணார். ஒரே சமயத்துல ரெண்டு அவதாரம் எடுத்த மாதிரி நடிச்சிருக்கார். காமெடிக்குனு யாருமே இல்லை. அதுக்கும் சூர்யாதான் பொறுப்பு!''
'' 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டும்தான் களத்தில் நேருக்கு நேர் மோதுது. இதில் சூர்யா-விஜயைத் தாண்டி, கே.வி.ஆனந்த்-ஏ.ஆர்.முருகதாஸ் போட்டியும் இருக்கே?''
''விஜய் மாஸ் நடிகர். முருகதாஸ் கிளாஸ் இயக்குநர். 'மாற்றான்’, 'துப்பாக்கி’... ரெண்டுமே நல்ல விஷயம்தான். ஒரு ரசிகனா நான் 'துப்பாக்கி’யை எதிர்பார்க்கிறேன். ஆனா, என் 'மாற்றான்’ அவங்களுக்கு எந்தவிதத்திலும் குறையாமல் ரொம்பவே நல்லா இருக்கும்!''
''சட்டுனு பார்த்தா தமிழ் சினிமாவின் 'கமர்ஷியல் கில்லி’ இயக்குநர்களில் உங்களுக்குப் பிரதான இடம்... என்ன மேஜிக் பண்ணீங்க?''
''அதுக்கெல்லாம் சின்ன வயசுல நான் படிச்சு வளர்ந்த புத்தகங்கள்தான் காரணம். கற்பனை யைத் தூண்டும் 'இரும்புக் கை மாயாவி’, 'துப்பறியும் சாம்பு’வோட ரசனையை உயர்த்திய தமிழ்வாணன், சுஜாதா இவங்களுக்கும் அதில் பங்கு இருக்கு. நான் வேலை பார்த்த ப்ரியதர்ஷன், ராஜ்குமார் சந்தோஷி, ஷங்கர், வஸந்த், கதிர் இவங்க எல்லோரும் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. நான் இவங்க எல்லாருக்கும் முதல் அசிஸ்டென்டா நின்னேன். அவங்க பிரச்னையை என்கிட்ட பகிர்ந்துக்கிட் டாங்க. நான் விளம்பரத்தைப் பாடமா படிச்சிருக்கேன். இப்பெல்லாம் முதல் நாள் தியேட்டருக்கு வந்து பார்க்கிறவங்க வயசு 25-க்கு உள்ளேதான் இருக்கு. மத்தவங்க சீரியல், டி.வி.டி-னு செட்டில் ஆகிடுறாங்க. எந்தப் பொருளை யாருக்கு விக்கிறேங்கிறதுல தெளிவா இருக்கேன். அதேசமயம் இலக்கியம், இலக்கணம் எல்லாம் தாண்டி சினிமா பணம் பண்ணுற விஷயம். அதிலும் நான் தெளிவா இருக்கேன். என்னோட ஸ்பெஷாலிட்டியா நான் நினைக்கிறது... எதிலும் கொஞ்சம் லாஜிக் சேர்த்துடுறது!''
''ரஜினிக்குக் கதை சொன்னீங்கன்னு சொன்னாங்களே?''
''கதை சொல்றதுக்காக நான் ரஜினியைச் சந்திக்கவே இல்லை. ரஜினி தங்கமானவர். நான் பயப்படுறது அவரோட ரசிகர்களுக்காக. நான் ரஜினி சாரைச் சமாளிச்சுருவேன். ஷூட்டிங்ல தன் குடையைத் தானே பிடிச்சுக்குவார். ஆனா, அவர் ரசிகர்கள் எதிர்பார்ப்பைச் சமாளிக்க... எனக்கு இன்னும் பயிற்சி வேணும்!''

நீதானே என் பொன்வசந்தம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாய் நடக்க கவுதம் மேனன் ஏற்பாடு.


மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களை இயக்கிய கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது ஜீவா மற்றும் சமந்தா நடிக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தை இயக்குகிறார்.
இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள மிகப்பெரிய அரங்கில் வரும் செப்படம் 1-ந்தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

கவுதம் மேனன் மற்றும் இளையராஜா இருவரும் முதன்முறையாக இணைவதால், இந்நிகழ்ச்சியை பிரமாண்டமாய் நடத்த வேண்டும் என முடிவு செய்து, பாடல் வெளியீட்டு விழாவின் நிகழ்ச்சிகளை தானே முன்னின்று மேற்பார்வையிடுகிறார் கவுதம் மேனன்.
இவ்விழாவில் இசைஞானியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

பாலாவின் பரதேசி படப்பாடல்கள் லண்டனில் வெளியீடு.


சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலா, 'பரதேசி' என பெயர் இடப்பட்டிருக்கும் புதிய படத்தை வித்தியாசமான கதை பின்னணியில் இயக்கியிருக்கிறார்.

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
அதர்வா, வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ்.
படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப் பகுதிகளில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றது.
செப்டம்பர் 19 லண்டனில் இத்திரைபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் லண்டனில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பரில் முதன்முறையாக இணையும் விஜய்-விஜய். கேள்விக்குரியாக யோஹான்.





இரண்டு நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. 'துப்பாக்கி'யை முடித்ததும் விஜய் 'யோஹன்' படத்தில் நடிக்கப் போவதில்லையாம்.. அதற்கு முன்பே இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தான் அந்த செய்தி.

இது குறித்து நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், 'துப்பாக்கி' படத்தின் மொத்த பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொடுக்க இருக்கிறார் விஜய். ஒரு மாதம் ஒய்வுவிற்கு பின் நவம்பர் மாதம் முதல் விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

'தாண்டவம்' படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளியீட்டு விழா முடித்து, செப்டம்பரில் வெள்ளித்திரையில் தாண்டவமாட இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் விஜய் - விஜய் இணைவதால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதுமட்டுமன்றி, 'தாண்டவம்' படத்தின் டிரெய்லர் - உருவான விதம் வீடியோக்களை பார்த்த நடிகர் விஜய் மிகவும் சந்தோஷப்பட்டு, நவம்பரில் நமது படத்தை துவங்குகிறோம் என்று தெரிவித்து இருக்கிறாராம்.

விஜய் - கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'யோஹன்' படம் எப்போது துவங்குகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

உதயநிதி படத்தை இயக்கும் எண்ணம் இல்லை. இயக்குனர் ராஜேஷ்


சிவா மனசுல சக்தி', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என ஹ்யூமர் ஹாட்ரிக் வெற்றி அடித்தார் இயக்குனர் ராஜேஷ்.

மூன்றாவது படத்தில் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக அறிமுகம் செய்தவர், அடுத்து இப்போது கார்த்தியை இயக்க இருக்கிறார்.

படத்திற்கு 'அழகுராஜா ஆல் இன் ஆல்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தப்பட்டிருக்கிறார். முந்தைய படங்களைப் போலவே நாயகனின் நண்பனாக சந்தானம் கலாய்க்க இருக்கிறார்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை முடித்து விட்டு 'பிரியாணி' படத்தில் நடிக்க இருப்பதால் 'அழகுராஜா' படத்தை கார்த்தி எப்போது தொடங்குவார் என்று கேள்வி தொக்கி நின்றது.

'அழகுராஜா' படப்பிடிப்பு குறித்து ராஜேஷ் " அழகுராஜா ஆல் இன் ஆல் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. அதற்குள் கார்த்தி 'பிரியாணி' படத்தின் ஒரு ஷெட்யூல் முடித்து இருப்பார் " என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கும் 'ஆண்பாவம்' படத்தின் ரீமேக் உரிமையை தான் இயக்கவில்லை என்றும், ரீமேக் படங்களை இயக்கும் எண்ணம் தனக்கு எப்போதும் கிடையாது என்றும் தெரிவித்து இருக்கிறார் ராஜேஷ்.

மிஷ்கின் என்னை அடிக்கவில்லை. அணைத்துதான் வேலை வாங்கினார். பூஜா ஹெக்டே





டைரக்டர் மிஷ்கின், ரொம்ப கோபக்காரர் என்கின்றனரே, "ஸ்பாட்டில் அவரிடம் அடி வாங்கினீர்களா? என,"முகமூடி படநாயகி பூஜா ஹெக்டேவை கேட்டால், "என்னை அடிக்கவில்லை; அரவணைத்து வேலை வாங்கினார், என்கிறார்.

"எனக்கு தமிழ் தெரியாது என்பதால், டைரக்டர் மிஷ்கின் மட்டுமின்றி, நாயகன் ஜீவாவும் தமிழ் கற்று தந்ததோடு, வார்த்தைகளின் அர்த்தத்தை புரிய வைத்து நடிக்க வைத்தனர்."முகமூடியில் நான் நன்றாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர் என்றால், அதற்கு அவர்கள் இருவரும் தான் காரணம், என்கிறார் பூஜா ஹெக்டே.

கல்லூரி விழாவில் பங்கேற்க ரூ.5 லட்சம் கேட்ட சினேகா. மாணவர்கள் அதிர்ச்சி.


தமிழ்நாடு இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்து மதம் பாரம்பரிய பெருமைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. சேவை மனப்பான்மையுடன் இந்து மக்களுக்காக ஏராளமான பொதுச்சேவைகள் செய்து வருகிறோம். அண்மையில் காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த விழாவொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க நடிகர் பரத்தை மாணவர்கள் அழைத்தனர். ஆனால் அந்த விழாவில் பங்கேற்க பரத் ரூ.5 லட்சம் கேட்டாராம். அதிர்ந்து போனோம்.
பரத்தை டெலிபோனில் தொடர்பு கொண்டு, மாணவர்களாகிய ரசிகர்கள்தான் உங்களுக்கு அடையாளம் தந்து உயரத்தில் ஏற்றி வைத்துள்ளனர். கல்லூரி விழாவுக்கு வர பணம் கேட்கலாமா என கேட்டேன். போனை துண்டித்து விட்டார்.
பிறகு நடிகை சினேகாவை அழைத்தோம். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது. வேறு பல நடிகர்களையும் அழைத்தோம். அவர்களும் பணம் கேட்டார்கள். நடிகர்களை பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இளைஞர்கள் இனிமேல் விழிப்புணர்வுடன் செயல் படவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது

லிங்குசாமியின் அடுத்த படத்தில் நடிக்கும் சூர்யாவின் சம்பளம் ரூ.30 கோடி.


        

சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கும் மாற்றான் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. 'கோ' ஹிட் படத்தை எடுத்த கே.பி. ஆனந்த் 'மாற்றான்' படத்தை இயக்குவது இன்னொரு சிறப்பு அம்சமாகும்.
கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கில் சூர்யா படங்கள் வசூல் குவித்து வருகின்றன. ஆந்திர வினியோகஸ்தர்கள் சூர்யாவின் படங்களை தெலுங்கில் 'டப்பிங்' செய்து கணிசமான அளவு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
'மாற்றான்' படம் அனைத்து ஏரியாக்களிலும் பல கோடிகளுக்கு வியாபாரமாகிக் கொண்டு இருக்கிறது. சிங்கப்பூரில் இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை நடத்தியது படத்துக்கு இன்னும் மார்க்கெட்டை ஏற்றி உள்ளது. படங்கள் வசூல் குவிப்பதால், சூர்யாவின் சம்பளம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்து நடிக்கப் போகும் லிங்குசாமி படத்துக்கு ரூ.15 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அத்துடன் படத்தின் தெலுங்கு உரிமைக்கு மேலும் ரூ.15 கோடி பெறுகிறாராம். இதன் மூலம் தமிழில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் பட்டியலில் சூர்யா சேர்ந்துள்ளார்

மலபார் நடிகைக்காக ஓகே சொன்ன விண்ணை தாண்டிய இயக்குனர்.





தமிழில் உச்ச நடிகையாக வலம்வந்த மலபார் நடிகை, பாலிவுட் பக்கம் சென்று அங்கும் தனது புகழை உச்சத்தில் நிலைநாட்டினார். இந்நிலையில், தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகையை தற்போது விண்ணைத் தாண்டிய இயக்குனர் இயக்கவிருக்கிறாராம்.




ஆம், பிரபல குளிர்பானத்திற்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட மலபார் நடிகை, அந்த குளிர்பானத்தின் விளம்பரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த விளம்பரத்தை இயக்க விண்ணைத் தாண்டிய இயக்குனர் மறுத்துவிட்டாராம். ஆனால், அந்த விளம்பரத்தில் மலபார் நடிகை நடிக்கிறார் என்று தெரிந்தவுடன் உடனே ஓ.கே. சொல்லிவிட்டாராம்.

ஸ்ரீதேவி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜீத். ஏற்பாடுகள் தீவிரம்



பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது. இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். அவர் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்குகின்றனர். இதற்காக அங்கு செட் போடப்பட்டு உள்ளது. 13-ந்தேதி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் ஆகும். படப்பிடிப்பிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படம் அக்டோபர் 5-ந்தேதி ரிலீசாகிறது.

சரத்குமாரின் சூரியன் பட ரீமேக்கில் மகள் வரலட்சுமி.




சரத்குமார், ரோஜா நடித்து 1992ம் ஆண்டு வெளிவந்த படம் சூரியன். இதனை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். பவித்ரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில்தான் முதன் முதலாக பிரபுதேவா ஒரு நடன கலைஞராக அறிமுகமாயிருந்தார்.

இதில் சரத்குமார் முதன் முறையாக மொட்டை அடித்து நடித்திருந்தார். சரத்குமாரின் வெள்ளி விழா படங்களில் இதுவும் ஒன்று. தேவா இசை அமைத்திருந்தார். படத்தைப் போலவே பாடல்களும் பெரிய ஹிட்டானது. இதனை தற்போது ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குனர் பவித்ரன்.
தமிழ், இந்தி மொழிகளில் ரீமேக் செய்து கொள்ள தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனிடம் அனுமதி பெற்றுள்ளார். தமிழில் சரத்குமார் நடித்த கேரக்டரில் விஷாலும், ரோஜா கேரக்டரில் சரத்குமார் மகள் வரலட்சுமியையும் நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.

இந்தியில் சாருக்கான் அல்லது சல்மான்கான் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்றைய சூழ்நிலைக்கேற்ப கதையில் சில மாற்றங்கள் செய்து பிரமாண்டமாக தயாரிக்க பவித்ரன் முடிவு செய்துள்ளார். பவித்ரனை நம்பி பல கோடிகளை செலவு செய்ய தயாரிப்பாளர் யாராவது முன்வந்தால் மட்டுமே இந்த முயற்சி சாத்தியம் என்றும் கூறப்படுகிறது.

ஒரே ஹோட்டலில் அஞ்சலியுடன் சுந்தர் சி நெருக்கம். அதிர்ச்சியில் குஷ்பு



சுந்தர்.சிக்கும் அஞ்சலிக்குமான நட்புதான் இப்போது லேட்டஸ்ட் ஹாட் ஆப் தி சினிமா. ஆயுதம் செய்வோம் படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து நடித்தார் அஞ்சலி. அப்போதே இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. அஞ்சலி முதன் முறையாக கிளாமராக நடித்ததும் அந்தப் படத்தில்தான்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான கலகலப்பு படத்தில் நடித்தார். இந்தப் படம்தான் அஞ்சலியை கமர்ஷியல் ஹீரோயினாக்கியது. இப்போது மீண்டும் சுந்தர்.சி இயக்கும் எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் வெளிப்புற படப்பிடிப்பில் ஹோட்டலில் சுந்தர்.சியும், அஞ்சலியும் அடுத்தடுத்த அறையில் தங்கியிருந்தார்கள்.

இருவரும் ஒரே காரில் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். ஒரே டேபிளில் அமர்ந்து சாப்பிடுகிறார்கள். அஞ்சலி நடிக்கும் காட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்கிறார். இருவருக்கும் நெருக்கமான நட்பு என்று ஏகத்துக்கு பரபரத்து கிடக்கிறது. இதுபற்றி சுந்தர்.சியிடம் கேட்டால். ரெண்டு பெண் குழந்தைக்கு அப்பாங்க என்னைப்போய் இப்படி சந்தேகப்படுறீங்களே என்கிறார். அஞ்சலியிடம் கேட்டால் இந்த மீடியாகாரங்களே இப்படித்தான். என்னைப் பற்றி எனக்கு தெரிந்ததை விட மீடியாக்காரங்களே அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்கிறார். இதுகுறித்து குஷ்பு அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.




ஒரு விஷயம் மட்டுமே இங்கே கவனிக்கத்தக்கது. இருவருமே எங்களுக்குள் எந்த உறவு இல்லை. நாங்கள் அண்ணன்-தங்கை மாதிரி என்று ஹன்சிகா மாதிரியோ, டாப்ஸி மாதிரியோ சொல்லவில்லை.

சிகரெட் பிடிக்கும் காட்சிக்கு தடையில்லை! மத்திய அரசு

government allows smoking scene in cinema
சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது. நடிகர்களைத் தாண்டி, நடிகைகளும் ஏகாந்தமாக தம்மடிப்பது போல காட்சிகளை வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால், திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னணி நடிகர் நடிகைகளும் கண்டித்தனர். ஆனால் தடை உத்தரவை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.

நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அத்தகைய காட்சிகள் இடம்பெறக்கூடாது என அரசும் சமூக நல ஆர்வலர்களும் கூறினர். ஆனால் இப்போது தனது உத்தரவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கதைக்கு தேவை என்றால் புகை பிடிக்கும் காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. படம் துவங்கும் போது புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும். இடைவேளை விட்டு படம் துவங்கும் போதும் இந்த வாசகம் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் காட்சி வரும் போதும் நன்றாக பெரிய எழுத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

பிறந்த நாளில் குழந்தைகளை தத்தெடுத்த ஹன்சிகா!

Hansika adopts two children in her birthdayநடிகை ஹன்சிகா மோத்வானி தனது பிறந்த நாளில் 2 குழந்தைகளை தத்தெடுத்து பிறந்தநாளை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடியிருக்கிறார். சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகை ஹன்ஸிகா. பொதுவாக நடிகர், நடிகைகள் பிறந்த நாளன்று பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தூள் கிளப்புவார்கள். ஆனால் ஹன்ஸிகா ரொம்பவே வித்தியாசமானவர். கடந்த முறை தனது பிறந்த நாளன்று இரு ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்தார்.

இந்த பிறந்த நாளிலும் ஏதாவது நல்ல விஷயத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த மேலும் இரு குழந்தைகளைத் தத்தெடுத்துள்ளார். இவர்களின் படிப்பு உள்ளிட்ட செலவுகளை ஹன்ஸிகா தான் செய்யப் போகிறாராம். மாலையில் தனது தத்துக் குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்தார்.

Friday 10 August 2012

மாற்றான் ஆடியோ ரிலீஸ் ஆல்பம்!

மாற்றான் ஆடியோ ரிலீஸ் ஆல்பம்! சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற ”மாற்றான்” படத்தின் இசை வெளியீட்டு விழா ஆல்பம். படங்கள் : கணேஷ்

காஜல் அகர்வாலின் விஜய் கனவு!


Kajal Agarwals dream! விஜய்யுடன் டூயட் பாட வேண்டும் என்பது, காஜல் அகர்வாலின் நீண்ட நாள் கனவு. அது, "துப்பாக்கி படத்தில் நனவாகி விட்டதாக சொல்லி குதூகலிக்கிறார்."தமிழ், தெலுங்கு, இந்தி என, பரவலாக ஏராளமான நடிகர்களுடன் நடித்து விட்டேன். அப்படி நடித்த போது, ஒவ்வொரு கதாநாயகர்களும், ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்களாக இருந்தனர். ஆனால், விஜய் மாறுபட்டவராக தெரிந்தார். காரணம், காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், காமெடி, நடனம் என, எல்லாவற்றிலும் ஸ்பெஷலாக இருந்தார். அதனால் தான் ஒரு சக கலைஞராய், அவருடன் நடிக்க விரும்பி காத்திருந்தேன். "துப்பாக்கி என் ஆவலை பூர்த்தி செய்துள்ளது, என்கிறார் காஜல்.

இளையதளபதியின் யோஹன் திரைப்படம் ஸ்டாப்பா? நோ… நோ… என்கிறார் கௌதம்!



     கௌதம் இயக்கத்தில் வெளியாகவுள்ள, இளையதளபதி யின் யோஹன் அத்தியாயம் ஒன்று திரைப்படம் கைவிடப்படுவதாக செய்தி வெளியகியிருந்தது.

அதனை மறுக்கும் விதத்தில் பேசியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்…

நீதானே என் பொன்வசந்தம் வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.

துப்பாக்கி திரைப்படம் முடிவடைந்தவுடன் யோஹன் படப்பிடிப்புக்கு கிளம்ப வேண்டியதுதான். படத்தின் வெற்றியைப் பொறுத்து ஜேம்ஸ்பாண்ட் சீ‌ரிஸ் போல யோஹனின் அடுத்தடுத்த சீ‌ரிஸுகளை எடுக்கலாம்.

என்று தெ‌ரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரை இளையதளபதி தரப்பிலிருந்து யோஹன் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றான் வலையில் விழாத பெரிய ஹீரோயின்கள்.



















       பெரிய ஹீரோக்களின் படவிழாக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெற இருக்கிறது என்றாலே கோடம்பாக்கத்தின் பல முன்னணி ஹீரோயின்கள் அல்சர் மாத்திரை வாங்க தயாராகிவிடுவார்கள். வேறென்ன? ஒரு பாட்டுக்கு வந்து ஆடிட்டு போகணும். எவ்வளவு கேட்டாலும் தர ரெடி என்கிற அழைப்புதான் காரணம். நடிகைகளை வளைக்க வலையோடு கிளம்பிவிடுவார்கள் சம்பந்தப்பட்ட படக்குழுவினர்.

பெரிய ஹீரோ படம். போய் ஆடிட்டு வந்தா அடுத்த படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 'ம்ம்ம்ம்' என்கிற நடிகைகளும் இருக்கிறார்கள். அந்த மேடையோடு நம்மை மறந்துவிடுவார்கள் என்கிற நிஜம் புரிந்து 'ம்க்கும்' என்கிற நடிகைகளும் இருக்கிறார்கள்.

'மாற்றான்' ஆடியோ ரிலீஸ் விழாவுக்கும் அப்படியொரு வலையோடு அலைந்தார்களாம் கோடம்பாக்கத்தில். அனுஷ்கா, நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி என்று அவர்கள் ஆடக் கேட்ட அத்தனை பேரும் கண்களில் டேஞ்சர் லைட்டோடு எதிர்கொள்ள, தன்ஷிகா மாதிரி டம்மி பீஸ்கள் மட்டுமே கிடைத்தனவாம் கடைசியில்.

ஜீவா,ஆர்யா இணையும் படத்தில் கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள்.



              பிரண்ட்ஷிப்பை பொருத்தவரை ஒண்ணுக்குள்ள ஒண்ணாகவே கிடக்கிறாங்க ஆர்யாவும் ஜீவாவும். இவர் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதும், அவர் படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதும் அடிக்கடி நடக்கிற விஷயம்தான். இப்போது இருவருமே சேர்ந்து ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல் சைலண்ட்டாக.




இவர்கள் சேர்ந்து நடிப்பது சம்பளத்திற்காகவோ, அசர வைக்கும் கதைக்காகவோ அல்ல, பிரண்ட்ஷிப்புக்காக என்பதுதான் இன்னும் ஆச்சர்யம். கடந்த ஆட்சியில் பிரபலமாக இருந்த ஒருவர் தயாரிக்கும் படத்தில்தான் இந்த 'காம்போ' ஸ்பெஷல். இவர்கள் இருவர் மட்டுமல்ல, கோடம்பாக்கத்தின் முக்கிய ஹீரோக்கள் பலரும் கூட இப்படத்தில் நடித்துக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களாம். தமிழ்சினிமாவே திரண்டு உருவாக்கிய 'சுயம்வரம்' என்ற படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அப்படி ஒரு ஸ்டைலில் உருவாகுமாம் இப்படமும்.

பிரியாணிக்குப் பின் அழகுராஜா!


'சிவா மனசுல சக்தி', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என ஹ்யூமர் ஹாட்ரிக் வெற்றி அடித்தார் இயக்குனர் ராஜேஷ்.

மூன்றாவது படத்தில் உதயநிதி ஸ்டாலினை நாயகனாக அறிமுகம் செய்தவர், அடுத்து இப்போது கார்த்தியை இயக்க இருக்கிறார்.

படத்திற்கு 'அழகுராஜா ஆல் இன் ஆல்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தப்பட்டிருக்கிறார். முந்தைய படங்களைப் போலவே நாயகனின் நண்பனாக சந்தானம் கலாய்க்க இருக்கிறார்.

'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை முடித்து விட்டு 'பிரியாணி' படத்தில் நடிக்க இருப்பதால் 'அழகுராஜா' படத்தை கார்த்தி எப்போது தொடங்குவார் என்று கேள்வி தொக்கி நின்றது.

'அழகுராஜா' படப்பிடிப்பு குறித்து ராஜேஷ் " அழகுராஜா ஆல் இன் ஆல் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்து விட்டது.

படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் துவங்க இருக்கிறது. அதற்குள் கார்த்தி 'பிரியாணி' படத்தின் ஒரு ஷெட்யூல் முடித்து இருப்பார் " என்று தெரிவித்து இருக்கிறார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கும் 'ஆண்பாவம்' படத்தின் ரீமேக் உரிமையை தான் இயக்கவில்லை என்றும், ரீமேக் படங்களை இயக்கும் எண்ணம் தனக்கு எப்போதும் கிடையாது என்றும் தெரிவித்து இருக்கிறார் ராஜேஷ்.

சொட்டவாளக்குட்டி தனுஷ்!


'களவாணி', 'வாகை சூட வா' ஆகிய படங்களைத் தந்த இயக்குனர் சற்குணம், அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார். இப்படத்திற்கு 'சொட்டவாளக்குட்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தை 'பொல்லாதவன்', 'ஆடுகளம்' ஆகிய படங்களைத் தயாரித்த S.கதிரேசன் தயாரிக்கிறார்.

கும்பகோணத்தில் குத்துவிளக்கு செய்து விற்கும் நாயகனுக்கும், பல் மருத்துவம் படிக்கும் நாயகிக்குமிடையே இருக்கும்
காதலை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் சொல்லும் படமாக இது இருக்குமாம்.

வம்சிகிருஷ்ணா வில்லனாக நடிக்கிறார். உடன் நாசர், சாயாஜி ஷிண்டே, சூ , சிங்கம்புலி, ஸ்ரீமன், சத்யன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.

'வாகை சூட வா' ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

செப்டம்பர் மாத இறுதியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தினை பிப்ரவரி 2013-ல் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தள்ளிப் போகும் யோஹன்!

இரண்டு நாட்களாக இணையத்தில் ஒரு செய்தி உலா வருகிறது. 'துப்பாக்கி'யை முடித்ததும் விஜய் 'யோஹன்' படத்தில் நடிக்கப் போவதில்லையாம்.. அதற்கு முன்பே இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தான் அந்த செய்தி.

இது குறித்து நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், 'துப்பாக்கி' படத்தின் மொத்த பணிகளையும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடித்துக் கொடுக்க இருக்கிறார் விஜய். ஒரு மாதம் ஒய்வுவிற்கு பின் நவம்பர் மாதம் முதல் விஜய் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

'தாண்டவம்' படத்தின் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் இயக்குனர் விஜய். ஆகஸ்ட் 15ம் தேதி இசை வெளியீட்டு விழா முடித்து, செப்டம்பரில் வெள்ளித்திரையில் தாண்டவமாட இருக்கிறார்கள்.

நவம்பர் மாதம் விஜய் - விஜய் இணைவதால் அவர்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. அதுமட்டுமன்றி, 'தாண்டவம்' படத்தின் டிரெய்லர் - உருவான விதம் வீடியோக்களை பார்த்த நடிகர் விஜய் மிகவும் சந்தோஷப்பட்டு, நவம்பரில் நமது படத்தை துவங்குகிறோம் என்று தெரிவித்து இருக்கிறாராம்.

விஜய் - கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'யோஹன்' படம் எப்போது துவங்குகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.

Thursday 9 August 2012

சிவாஜியின் நீளத்தைக் குறைத்த ஏ.வி.எம். சரவணன்.


              

       சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா ஹிட்சிவாஜி - தி பாஸ் படத்தின் 3 டி பதிப்பு 48 நிமிட காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன.

இன்றைய சூழல் மற்றும் படத்தின் நீளம் கருதி இந்த முடிவை எடுத்ததாக தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறியுள்ளார்.

சிவாஜி 3 டியை கோச்சடையான் வெளியீட்டுக்கு முன், அதாவது வரும் செப்டம்பரில் வெளியிட முழு வீச்சில் வேலைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் 3 டி தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்ட இந்தப் படத்தைப பார்த்த ரஜினி, அதில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து திருப்தி தெரிவித்தார்.

இந்த நிலையில் படம் குறித்து தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் கூறுகையில், "சிவாஜி - தி பாஸ் 3 டி யில் இன்னும் சிறப்பாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரொம்ப ரசித்தார் ரஜினி சார். 3 டி படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கிறோம். மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக ஒடக்கூடிய இந்தப் படத்தை இப்போது 2.17 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் ட்ரிம் செய்திருக்கிறோம்," என்றார்.

சிவாஜி - தி பாஸ் 185 நிமிட நேரப் படம். இப்போது அதில் 48 நிமிடங்கள் குறைத்துள்ளார்களாம்!

நான் ஈ பார்ட்-2 படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" எஸ்.எஸ்.ராஜமவுலி


         தெலுங்கு, தமிழில் வெளியான நான் ஈ படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் பெரும் வசூலைக் குவித்தது. இதனால் இந்தப் படத்தின் பார்ட்-2 வரும் என்று பரவலாக பேச்சு இருந்து வந்தது. இப்போது அதற்கு படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும், நடிகர் சுதீப்பும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

படத்தின் வெற்றியை கொண்டாட சென்னை வந்த சுதீப் "இயக்குனர் ராஜமவுலி எப்போதுமே ஒரே வேலையை இரண்டாவது முறை செய்ய மாட்டார். அதனால் நான் ஈ பார்ட்-2 வுக்கு சாத்தியமே இல்லை. அதோடு நான் ஈ உருவாக்க பட்ட சிரமங்களை நினைத்துப் பார்த்தால் இனி அப்படி ஒரு படம் செய்ய எனக்கு துணிச்சல் இல்லை" என்றார்.

இதேபோன்று ராஜமவுலி ஐதராபாத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் "ரீமேக், பார்ட்-1 கான்செப்டில் எனக்கு விருப்பம் இல்லை. ஒவ்வொரு படமும் புதிதாக இருக்க வேண்டும் என்ற விரும்புவேன். அதற்காக கடுமையாக உழைப்பேன். எனது அடுத்த படமும் இதுவரை இயக்கிய 9 படங்களிலிருந்து நிச்சயம் மாறுபட்டு இருக்கும்.

ரஜினி நடிப்பில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பதும், மகாபாரத்தை உலக ரசிகர்கள் பார்க்கும் வகையில் இயக்க வேண்டும் என்பதும் என் கனவு" என்றார். இதனால் நான் ஈ பார்ட்-2 எல்லை என்பது தெளிவாகிவிட்டது.

விஜய்க்கு வில்லனாகிறாரா நான் ஈ சுதீப்.


துப்பாக்கி' படத்தினைத் தொடர்ந்து 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விஜய்.

கெளதம் மேனன் இயக்கி வரும் ' நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்து விட்டு யோஹனில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'யோஹன் அத்தியாயம் ஒன்று' படம் முழுக்க முழுக்க பிரிட்டனில் உருவாக இருக்கிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக யார் என்பதில் இப்போதே முன்னணி நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் படத்திற்கு வில்லனாக நான் ஈ படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்ற சுதீப் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்தன.

கெளதம் மேனன், சுதீப் இருவருமே இத்தகவலை மறுத்து இருக்கிறார்கள். கெளதம் மேனன் 'நீதானே என் பொன்வசந்தம்' படம் தான் இப்போதைக்கு எனது முழுக்கவனமும், யோஹன் அதற்கு பிறகு தான் " என்று தெரிவித்து இருக்கிறார்.

கெளதம் மேனன் தயாரிப்பில் துள்ளி வரும் தங்க மீன்கள்!


கெளதம் மேனன் தயாரிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் 'தங்க மீன்கள்'. 'கற்றது தமிழ்' படத்தினை அடுத்து ராம் இயக்கும் படம் என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்ப்பார்ப்பு இருந்தது.

கெளதம் மேனன் தயாரித்த இப்படம் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக படப்பணிகளை துவங்கி விட்டார்கள்.

'தங்க மீன்கள்' படத்தின் இசையை விரைவில் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் ஆல்பத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது.

குழந்தைகளுக்கான கீதம் ஒன்றை இப்படத்திற்காக தயார் செய்து இருக்கிறார் யுவன். தந்தைக்கும், மகளுக்குமான உறவை சொல்லுகிறது அப்பாடல்.

இன்றைய கல்வி முறை, தேர்வு முறை, ஆசிரியர்கள், இன்றைய மாணவர்கள் மற்றும் பள்ளிகூடத்தை பற்றிய இந்த பாடல் நிச்சயம் குழந்தைகளுக்கான கீதமாக அமையும் என்று கூறி இருக்கிறார் இயக்குநர் ராம். இப்பாடலை மட்டும் கொண்டு ஒரு பிரத்யேக ஆல்பத்தினை தயார் செய்ய திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

இந்த ஆல்பத்திற்காக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சென்று, பள்ளிக் குழந்தைகளுடன் இசையமைப்பாளர் யுவனை ஆடிப்பாடவைத்து படமாக்க இருக்கிறார்கள்.

நாற்பது கோடி கொடுத்து சூரயாவை மடக்கிய லிங்குசாமி.




     லிங்குசாமி படத்தில் சூர்யா நடிப்பாரா, மாட்டாரா என்ற சந்தேகத்தின் உதட்டில் செமத்தியான ஒரு திண்டுக்கல் பூட்டை மாட்டியிருக்கிறார்கள் இருவரும். லிங்குவின் கதை சூர்யாவுக்கு பிடித்ததும், அதில் நடிக்க அவர் கால்ஷீட் கொடுக்க முன் வந்ததும் பழங்கதை. ஆனால் யார் பேனரில் இப்படத்தை தயாரிப்பது என்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் லிங்குவின் படத்திலிருந்தே விலகும்படி ஆனது சூர்யாவுக்கு.

கோடிகள் கிடைக்கும் என்றால் கொசுவர்த்தி விளம்பரங்களில் கூட நடிக்க தயாராக இருக்கும் சூர்யாவை அதே பாணியில் சென்று மடக்கினாராம் லிங்கு. இதுவரை சூர்யாவுக்கு யாரும் வழங்கியிராத ஒரு சம்பளத்தை வழங்குவதாக கூறினாராம். (தெலுங்கு உரிமைக்கான மதீப்பீட்டையும் சேர்த்து சுமார் 'நாற்பது' என்கிறது கோடம்பாக்க ஆந்தை)

ஆடிப்பெருக்கு தினத்தன்று வசதியான ஒரு தொகையை அட்வான்சாக கொடுத்தாராம் சூர்யாவுக்கு. 'மாற்றான்' படத்தின் வியாபாரம் எழுபதிலிருந்து எண்பது கோடியை எட்டும் என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் நாற்பதை சூர்யாவுக்கு கொடுத்தாலும், லிங்குவின் அக்கவுண்ட்டை விட்டு லட்சுமிதேவி எங்கேயும் ஷிப்ட் ஆகப்போவதில்லை.

கன்னடத் தயாரிப்பாளரின் படத்தில் விஜய்!



         பிரபல கன்னட திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான கே.மஞ்சு முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்க வருகிறார். அதில் நாயகனாக நடிக்கப் போகிறார் விஜய்.

பெங்களூரிலிருந்து வரும் தகவல்கள் இதைத் தெரிவிக்கின்றன. சமீபத்தில் கன்னட சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான புனீத் ராஜ்குமார், ஜீவா நடித்த முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டார். அதில் விஜய்யும் கலந்து கொண்டார். அப்போது தமிழில் நேரடிப் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறியிருந்தார் புனீத். இந்த நிலையில், கன்னடத் தயாரிப்பாளர் ஒருவரின் தமிழ்ப் படத்தில் விஜய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் புனீத்தும் இடம் பெறுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

கன்னடத்தில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருப்பவர் கே.மஞ்சு. தமிழ்ப் படங்கள் பலவற்றை கர்நாடகத்தில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றிருப்பவர் இவர். லேட்டஸ்டாக இவர் வாங்கிய படம் பில்லா 2. அதற்கு முன்பு விஜய்யின் வேலாயுதம் படத்தையும் இவர் வாங்கி விநியோகித்திருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறாராம் மஞ்சு.

விஜய்யின் காவலன் பட ரிலீஸின்போது விஜய்யை பெங்களூருக்கு வரவழைத்து, அவரை கன்னடத்தில் பேச வைத்து கன்னட மீடியாக்கள் மற்றும் மக்கள் மத்தியில் விஜய்க்குப் பெரும் பெயர் வாங்க முக்கியக் காரணமே மஞ்சுதான். மேலும் விஜய்க்கும், மஞ்சுவுக்கும் இடையே நல்ல நட்பும் இருக்கிறதாம். இதனால் மஞ்சு தன்னை அணுகியபோது உடனே ஓகே. சொல்லி விட்டாராம் விஜய்.

இதுகுறித்து மஞ்சு கூறுகையில், ஆரம்ப கட்ட அளவில் பேச்சுக்கள் உள்ளன. விஜய் சாருடன் பேசியுள்ளேன். நல்ல கதையைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். அதுதொடர்பாக தற்போது தீவிரமாக பேசி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் எல்லாம் முடிவாகி விடும் என்றார்.

அதேசமயம், விஜய் படத்தை தயாரிப்பதற்கு முன்பு இன்னொரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கும் திட்டமும் மஞ்சுவிடம் உள்ளதாம். இதை இயக்கப் போவது சசிக்குமாராம். ஸ்கிரிப்ட் ரெடியாகி விட்டதாம். விரைவில் இது தொடங்குமாம். தமிழ், கன்னடம், தெலுங்கு எனமூன்று மொழிகளில் இது நேரடியாக தயாராகிறதாம்.

ரூ.85 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ஷங்கரின் ஐ.



     ஷங்கர் இயக்கும் ஐ படத்தில் விக்ரமுக்கு சம்பளம் ரூ 15 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர் விக்ரம். பத்தாண்டுகளுக்கு மேல் போராடி, சேது படத்துக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் தமிழில். அதைக் கெடுத்துக் கொள்ள அவரே அவ்வப்போது மஜா, ராஜபாட்டை போன்ற குப்பைப் படங்களை செய்வதும் உண்டு.

ஆனாலும், அவரது நடிப்பு திறமை, ஆர்வம் அவரது இடத்தை இன்னும் அப்படியே வைத்துள்ளது.

இப்போது தமிழில் இரு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார். ஒன்று தாண்டவம். வரும் செப்டம்பரில் இந்தப் படம் வரவிருக்கிறது.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ஐ. இந்தப் படத்துக்காக விக்ரம் பெறும் சம்பளம் ரூ 15 கோடி என்கிறார்கள். ஏற்கெனவே விஜய்யும் அஜீத்தும் இந்த சம்பளத்தைத் தாண்டிவிட்டார்கள். விக்ரம் இப்போதுதான் இந்த ரேஞ்சுக்கு வந்திருக்கிறார்.

ஐ படத்தின் பட்ஜெட் ரூ 85 கோடி என்கிறார்கள். விக்ரமுக்கு உள்ள ரசிகர்கள், படத்தின் தமிழ் - தெலுங்கு -இந்தி உரிமைகள் அனைத்தையும் கணக்கில் வைத்து இந்த அளவு பட்ஜெட் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆர்ப்பாட்டமில்லாமல் 50வது பாடலை நெருங்கும் மதன் கார்க்கி.





இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, "கண்டேன் காதலை" படம் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான கார்கி, பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார்.

தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்ப‌ோது நான் ஈ படத்தில் எல்லா பாடல்களையும் இவரே எழுதி ராஜமவுலியின் மொத்த பாராட்டையும் பெற்றுள்ளார். அந்த வேகம் குறைவதற்குள், இதோ அவரது வரிகளில் ஏகப்பட்ட படங்கள் வர இருக்கின்றன.

அவற்றுள் துப்பாக்கி, மாற்றான், கடல், நிமிர்ந்து நில், முகமூடி, ஐ, ஒரே ஞாபகம் என்று கைவசம் வைத்திருக்கிறார். இதுதவிர நிறைய படங்களுக்கும் பாடல் வரிகள் எழுத கமிட் ஆகி இருக்கிறார். அமைதியின் உருவமாய், அழகான வரிகளின் உயரமாய் விளங்கும் மதன் கார்கி விரைவில் தனது 50வது பாடல் நெருங்குவார் எனத் தெரிகிறது.

கரையை நெருங்கும் கடல்!

   இயக்குனர் மணிரத்னம் ரசிகர்களுக்கு சீக்கிரம் கண்ணுக்கு குளிர்ச்சியான விருந்து காத்திருக்கிறது. 'கடல்' படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறதாம். விரைவில் 'கடல்' வெளியாகிவிடும்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்காக நான்கு பாடல்களை முடித்து கொடுத்து விட்டார்.

கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது. அங்கு நாயகன், நாயகி பங்கேற்ற ஒரு அழகான காதல் பாடலை படமாக்கினார்கள்.

அந்தமான், கேரளா பகுதிகளிலே மிக அதிகமாக படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாட்டை சுற்றியுள்ள கடலோர பகுதிகளில் தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் இருந்து 60 கிமீ தூரத்தில் இருக்கும் மனபாட் கிராமத்தில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

வைரமுத்து எழுதிய காதல் பாடலை படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தில் வைரமுத்து மகன் மதன் கார்கி மூன்று பாடல்கள் எழுதி இருக்கிறார்.

அடுத்த தலைமுறை 'அக்னி நட்சத்திரம்'



மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக் இணைந்து நடித்த படம் 'அக்னி நட்சத்திரம்'. பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.

'அக்னி நட்சத்திரம்' படத்தின் ரீமேக் உரிமையை பாலாஜி ரியல் மீடியா வாங்கி இருக்கிறது. பிரபு, கார்த்திக் வேடங்களில் நடிக்க முன்னணி நட்சத்திரங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அறிவித்தது.

தற்போது இப்படத்தின் ரீமேக்கில் பிரபுவின் மகன் விக்ரம்பிரபு, கார்த்திக்கின் மகன் கௌதம் இருவரும் நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தினை இயக்க தரணியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளிவரும்.

கோச்சடையான், விஸ்வரூபம் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸா? கோலிவுட்டில் பரபரப்பு.


ரஜினியின் 'கோச்சடையான்', கமலின் 'விஸ்வரூபம்' படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. இரு படங்களும் ஒரே சமயத்தில் ரிலீசாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'கோச்சடையான்' படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீ ரிக்கார்டிங், சி.ஜி.டி.ஐ., மிக்சிங் போன்ற பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. பலத்த பாதுகாப்புடன் இப்பணிகள் நடந்து வருகிறது.

இதுபோல் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பும் முடிவடைந்து ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. ரஜினி, கமல் படங்கள் ஒன்றாக ரிலீசானால் வியாபார விஷயங்களில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்கள் பிடிப்பதிலும் போட்டா போட்டி ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே போட்டியை தவிர்த்து இரு படங்களையும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக ரிலீஸ் செய்ய ரஜினி, கமல் விரும்புவதாகவும் இதுகுறித்து இருவரும் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாயின.

ஆனால் கமல் தரப்பில் இது மறுக்கப்பட்டது. கோச்சடையான் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் 'விஸ்வரூபம்' படம் அதற்கு முன்னதாகவே திரைக்கு வந்துவிடும் என்றனர்.

சாருலதாவிற்கு பயந்து மாற்றானை ரீஷூட் செய்யும் கே.வி.ஆனந்த்



         சில படங்களை நோக்கிதான் வழி மேல் விழி வைத்திருப்பார்கள் ரசிகர்கள். அந்த வரிசையில் வரப்போகும் படங்களில் ஒன்றுதான் 'மாற்றான்'. ஒட்டிப்பிறந்த ரெட்டையராக நடிக்கிறார் சூர்யா என்பது அநேகமாக அமீபா வரைக்கும் தெரிந்த செய்தி.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக ஒரு ரெட்டைப்பிறவி படம் என்ற ஆவலின் மீது நண்டு சிண்டு சுண்டைக்காயெல்லாம் கல் வீசுவது போலவே நடக்கிறது அடுத்தடுத்த சம்பவங்கள். வேறொன்றுமில்லை, ப்ரியாமணி நடித்த 'சாருலதா' என்ற ரெட்டைப்பிறவி படம் இம்மாதமே திரைக்கு வருகிறது. இதிலேயே பாதி புஸ் ஆகிவிட்டார்களாம் 'மாற்றான்' படக்குழுவினர்.

இது போதாதென்று மலையாளத்தில் இதே டைப்பில் உருவான இரண்டு மூன்று டப்பா படங்களையும் களத்தில் இறக்கப் போகிறார்கள் வரிசையாக. 'மாற்றான்' வெளிவருவதற்கு முன்பே வெளிவரும் இந்த பேதி மாத்திரைகள் ஏகக்கடுப்பை உருவாக்கி வருகின்றன சூர்யா ரசிகர்களுக்கு.

இந்த நிலையில்தான் 'மாற்றான்' படத்திற்காக சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்காக மெனக்கட்டு தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் சூர்யாவும். சிங்கப்பூரில் ஆடியோ ரிலீஸ் முடிந்த கையோடு படப்பிடிப்புக்கு கிளம்புகிறார்களாம்.

துப்பாக்கி வாங்கிய முக்கிய தொலைக்காட்சி நிறுவனம்.




      இளைய தளபதி நடித்துக்கொண்டிருக்கும் புதிய படத்தின் தொலைக்காட்சி உரிமையை அவரது பெயர்கொண்ட டி.வி. நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன?. ஏற்கனவே இளைய தளபதி மூன்று பேருடன் இணைந்து நடித்த படத்தையும் அந்த டி.வி.தான் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
      தன்னுடன் தாண்டவமாடிய இங்கிலாந்து நடிகையை தனது அடுத்த படங்களுக்கும் சிபாரிசு செய்கிறாராம் சீயான். சீயானின் சிபாரிசால்தான், பிரம்மாண்ட இயக்குனர் இயக்கத்திலும் சீயானுக்கு ஜோடியாகும் வாய்ப்பைப் பெற்றாராம் நடிகை.
இதுபோதாதென்று தன்னுடன் இதுவரை ஜோடி சேர்ந்த நடிகைகளிலேயே இவர்தான் தனக்கு பொருத்தமானவர் என தனக்கு நெருங்கியவர்களிடம் துரையம்மா புகழ் பாடுகிறாராம் சீயான். நடிகர் மீதுள்ள அக்கறையால்தான் இங்கிலாந்து நடிகை இங்கேயே தங்கிவிட்டாரோ என்னவோ?

விஜய்,கெளதம் மேனன் மோதல். யோவான் படம் டிராப்.



  

விஜய் நடிக்க கவுதம் மேனன் இயக்க இருந்த படம் கைவிடப்படும் என தெரிகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் ‘யோவான் அத்தியாயம் ஒன்று. இப்பட ஷூட்டிங் இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கும் என்று கடந்து ஆண்டே அறிவிக்கப்பட்டது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘துப்பாக்கி படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

அதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் ஜீவா, சமந்தா நடிக்கும் ‘நீ தானே என் பொன் வசந்தம் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார் கவுதம் மேனன். இதையடுத்து நீண்ட நாட்களாக ஆலோசனையில் இருக்கும் சூர்யாவுடனான ‘துப்பறியும் ஆனந்த் ஷூட்டிங்கை தொடங்குவது பற்றியும் கவுதம் ஆலோசித்து வருகிறார். இதனால் விஜய்யின் யோவான் பட ஷூட்டிங் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கிரீடம் விஜய் இயக்கத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்திருக்கிறார் விஜய். தற்போது தாண்டவம் படத்தின் இறுதிகட்ட பணிகளில் இயக்குனர் விஜய் பிஸியாக ஈடுபட்டிருக்கிறார். அதன் பணி செப்டம்பருடன் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே இவர் இயக்கும் படத்தில் அக்டோபர் மாதம் முதல் விஜய் நடிப்பார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

அதே நேரம் யோவான் படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணி முழுமை அடையவில்லை என்றும் இதனால் விஜய்,கவுதம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து யோவான் படம் கைவிடப்படும் என்றும் தெரிகிறது.

மீண்டும் குள்ளர் வேடத்தில் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் கமல்.




        விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் ஹாலிவுட் படத்தில் நடிக்க போகிறார் என்றொரு தகவல் வருகிறதல்லவா? அதில் அவருக்கு ஜோடியாக ஏழு வயது சிறுமி நடிக்கப் போவதாக இப்பவே சுவாரஸ்யத்தை கிளப்ப ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். அந்த கிளப்பலில் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் குள்ளமாக நடிக்கப் போகிறாராம் அவர்.

'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் குள்ள அப்புவாக நடித்திருந்தார் அல்லவா? இப்படத்திலும் அதே போன்றதொரு கேரக்டரில்தான் நடிக்கவிருக்கிறாராம் கமல். இப்படியெல்லாம் கோடம்பாக்கத்தில் சந்துக்கு சந்து கிளப்பப்படும் யூகங்களை கலைஞானியே தலையிட்டு தடுத்தால்தான் உண்டு. அல்லது 'ஆமாம்' என்று ஒப்புக் கொண்டாலும் சந்தோஷம்தான்!