Thursday 10 January 2013

தயாரிப்பாளராக மாறிய சற்குணத்துக்கு தனுஷ் போட்ட கண்டிஷன்.


www.thedipaar.com
    இயக்குனர் சற்குணம் மஞ்சப்பையை தூக்கப்போகிறார் என்றது டென்ஷன் ஆனது தனுஷ்தானாம். ஏன். சற்குணம் தயாரிப்பாளர் ஆனதுக்கும் தனுஷ் டென்ஷன் ஆனதுக்கும் என்ன சம்மந்தம்?
 இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே தனுஷிடமிருந்து அழைப்பு வந்ததாம் சற்குணத்திற்கு. பாராட்டதான் அழைக்கிறார் என்று நம்பி போனவருக்கு தனுஷ் சொன்ன அட்வைஸ் அவ்வளவு சரியாக படவில்லையாம். அப்படி என்ன சொன்னார் தனுஷ்?
'நீங்க படம் தயாரிக்கறது நல்ல விஷயம்தான். பாராட்டுகள். ஆனால், இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்க நினைச்சா தேவையில்லாத டென்ஷன்தான் வரும். அதனால் முதல்ல நீங்க தயாரிக்கிற மஞ்சப்பையை முடிச்சுட்டு வாங்க. இல்லேன்னா சொட்டவாளக்குட்டிய முடிச்சுட்டு மஞ்சப்பைக்கு போங்க. தயாரிப்பாளருக்கு ரெகுலரா வர்ற டென்ஷனோட நான் நடிக்கும் படத்தை இயக்க வந்தீங்கன்னா ரிசல்ட் அவ்வளவு திருப்தியா இருக்காதுங்கறது என்னோட கருத்து. இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?' என்றாராம்.

சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் பாடியிருக்கும் இரண்டாம் உலக பாடல்


www.thedipaar.com
தனுஷ், சிம்பு இருவரும் மாறி மாறி ஆல்பம் வெளியிட்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் தங்களது போட்டியை வெளிப்படுத்தி கொண்டிருப்பதை இன்னும் விடவில்லை போலும். சமீபத்தில் தன் நண்பரின் தயாரிக்கும் படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடினார் சிம்பு. உடனே தனுஷுக்கு ஏதாவது ஒரு படத்தில் தானும் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தன்னுடைய அண்ணனுடை இரண்டால் உலகம் படத்தில் ஒரு வாய்ப்பு வந்ததும் கெட்டியாக பிடித்துக் கொண்டார் தனுஷ்.


குறிப்பிட்ட அந்த பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய இசையமைப்பாளர் தனுஷுக்கு அழைப்பு விடுக்க, பிசியான வேலைகளுக்கு மத்தியில் அந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ். ஏற்கெனவே தனது அண்ணன் படங்களான ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் தனுஷ்.

இந்த பாடல் படமாக்கப்பட்டதும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பின் இறுதிப் பணிகளை விரைந்து முடித்து வெகுசீக்கிரமாகவே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

நயன் தாராவுடன் ரகசிய திருமணமா? அதிர்ச்சியுடன் பதிலளித்த ஆர்யா.



www.thedipaar.com


நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவருடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டார். தற்போது நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.


இருவரும் ஏற்கனவே "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது இன்னொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆர்யா தான் சிபாரிசு செய்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியதாக கூறப்பட்டது. சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் விருந்து அளித்ததாகவும் செய்திகள் வந்தன. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கள் மிக வேகமாக பரவி வருகின்றது.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன என்றும் வருத்தப்பட்டார்

துப்பாக்கி நடிகரின் புதிய படத்தின் வில்லன் திடீரென நீக்கப்பட்டது ஏன்? கோலிவுட்டில் பரபரப்பு.




       துப்பாக்கி நடிகர் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துப்பாக்கி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம்.

அலட்டிக் கொள்ளாத வில்லன் நடிகர் "யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கிய அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்" என்று சொல்லிவிட்டாராம். உடனே விருது பெற்ற அம்மா நடிகையின் பொன்னான கணவரை அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தயாரிப்பு சங்கத்து அரசியல் திரைக்கு வெளியே மட்டுமல்ல திரைக்கு உள்ளேயும் இருக்கிறதாம்.

முழுக்க முழுக்க இரவிலேயே படமாகும் விழித்திரு படத்தில் தெய்வத்திருமகள் சாரா.



அவள் பெயர் தமிழரசி டைரக்டர் மீரா கதிரவன் சற்று இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், டைரக்டர் வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வத்திருமகள் புகழ் சாரா நடித்துள்ளார். ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைவதும் தான் இப்படத்தின் கதையாம். மேலும் படம் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

விஸ்வரூபம் ஜனவரி 25ல் தியேட்டரில் ரிலீஸ். கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு. டி.டி.எச்சில் எப்போது?


www.thedipaar.com  விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். டிடிஎச்சில் வெளியாகும் தேதி குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

ஆனால், டிடிஎச் முயற்சிக்கு துணை நின்ற எந் திரையுலக சகோதரர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விஸ்வரூபம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கைப் புரிந்து கொண்டு டிடிஎச் எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிஎச்சில் எப்போது வெளியாகும் என்று கமல் எதுவும் கூறவில்லை.

விஸ்வரூபம் படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் முதலில் வெளியாகும் என்பதைத்தான் நேற்று காலை அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்து, அவர்களுக்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக பிரஸ் மீட் வைத்து கூறினார் கமல். ஆனால் இன்று அவர் அதே அபிராமி ராமநாதன் உள்ளிட்டோருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதே தேதியைத்தான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

நடிகர்களை வறுத்தெடுக்கும் இயக்குனர் பாலாவையே தடுமாற வைத்த இரண்டு முன்னணி நடிகர்கள்

www.thedipaar.com
டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கே சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு அவர்களுக்கு மற்ற இயக்குனர்களும் அவர்களை நம்பி அதிரடியான கதைகளுக்கு புக் பண்ணினர். ஆனால் பாலா படத்தில் நடித்த பிறகு மீண்டும் நடிப்பதற்கு சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முயற்சி எடுக்கவில்லை. அவரிடம் சிக்கினால் ஒரு வருடத்துக்கு மேலாக வேகாத வெயிலில் போட்டு வறுத்து எடுத்து விடுவார் என்கிற பயம்தான் காரணம்.

ஆனால் விக்ரம், விஷால் ஆகிய இருவரும் மீண்டும் பாலாவின் அடுத்தடுத்து படங்களில் நடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர். என்னதான் அவர் கஷ்டப்படுத்தினாலும் அது நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே என்று நினைக்கிறார்கள்.

அதனால் தற்போது அதர்வாவைக்கொண்டு பரதேசி படத்தை இயக்கி முடித்துள்ள பாலா, அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற முடிவு எடுக்காததால், மேற்படி நடிகர்கள் இருவருமே முண்டியடித்து வருகிறார்கள். இருவருமே வேண்டப்பட்ட நடிகர்களாகி விட்டதால், அடுத்த படத்தில் யாருக்கு சான்ஸ் கொடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் பாலா.

ஆதிபகவன் படத்தில் அமீருடன் எனக்கு ஒத்துப் போகவில்லை. ஜெயம் ரவியில் திடுக்கிடும் பேட்டி.


www.thedipaar.com
அமீர் தனது கதை பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டு ஆக்ஷ்ன் களத்திற்கு அடி எடுத்து வைத்துள்ள படம் ஆதிபகவன். ஜெயம் ரவி, நீது சந்திரா நடித்துள்ள இப்படத்தில் ரவி கிட்டத்தட்ட 5 ரோலில் நடித்து இருக்கிறார். பல‌ கெட்-அப் மாற்றங்கள் செய்து ரொம்ப கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜெயம் ரவியிடம் கேட்டபோது, ஆதிபகவன் படம் தொடங்கியபோது அமீர் அண்ணன் ஸ்டைலுக்கும் நமக்கும் ஒத்து போகல. அமீரிடம், அண்ணா எனக்கு சரியா வருமா என்று பலமுறை பயந்து கேட்டு இருக்கேன். அமீர் அண்ணன் தான், என் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்குல, தைரியமா நடி என்று எனக்கு சப்போர்ட் பண்ணி நடிக்க வைத்தார்.

ஆதிபகவன் படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி இருக்கும். மாபியா கும்பிலின் கதையை அதிரடியா எடுத்திருக்கிறார். இப்படத்தில் என்னுடைய ரோலை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன். மொத்தத்தில் ஆதிபகவன் படம் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்றார்.

எப்பொழுதுமே நான் ஒரு அதிருப்தியாளன். என்னை திருப்திபடுத்தவே முடியாது. கமல்


www.thedipaar.comநடிகர், நடிகைகளும் பிசினஸ்மேன்கள் ஆகிவிட்டதாக, நடிகரும் இயக்குனருமான கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

விஸ்வரூபம் வெளியிடப்படுவதையொட்டி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின் சாராம்சம்:

''எனது திரையுலக வாழ்க்கையில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால், இன்னும் பணியாற்றிக்கொண்டு இருக்கமாட்டேன்; இந்தப் பேட்டியையும் அளித்திருக்க மாட்டேன். கற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. நான் ஓர் அதிருப்தியாளன்.

தற்போதுள்ள பெரும்பான்மையான நடிகர், நடிகைகள் பிசினஸ்மேன்களே. ஒருவர் நட்சத்திரம் ஆகிவிட்டதும் பணமும் புகழுமே அவரது நோக்கமாகிவிடுகிறது. கலைத் திறமைப் பற்றியும் படைப்புப் பற்றியும் கவலையே கொள்வதில்லை. எப்போதுமே வசூலை நோக்கியே பயணிக்கிறார்கள்.

விஸ்வரூபம் ரூ.150 கோடியை வசூல் செய்யவில்லை என்றால், அது என்னுடைய தோல்வி ஆகிவிடும். அப்படி நேராமல் முதல் வாரத்திலேயே அந்த இலக்கு எட்டப்படும் என நம்புகிறேன்.

பாலிவுட்டுக்கும் தென்னிந்திய திரைப்படத் துறைக்கும் இடையே நட்சத்திர கலாசாரம் வேறுபட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். தெற்கில் கோயில் கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்துகின்றனர்; மும்பையில் மதச் சடங்களுகளில் ஈடுபடுகின்றனர். அமிதாப் பச்சன் உடல்நிலை குன்றியபோது, ரசிகர்கள் நடத்திய சிறப்புப் பூஜைகளே இதற்குச் சான்று" என்றார் நடிகர் கமல்ஹாசன்.

பாக்யராஜ் மீது வழக்கு போடுவேன்...கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி ஆவேசம்!


Abirami                               
    பிரபல இயக்குனர், இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை எழுத்தாளர், நடிகர், அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட சாதனையாளரான கே.பாக்யராஜே அத்தகைய புகாரோடு காவல் துறையை நாடியிருக்கிறார். கே.பாக்யராஜால் குற்றம் சுமத்தப்படுகிறவர்களும் சாதாரண மனிதர்களல்ல. சினிமாவில் மிக முக்கியமான இடத்திலிருப்பவர்கள்.

அந்த புகார் மனுவில் கே.பாக்யராஜ் யார் யாரையெல்லாம் குறை கூறியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், புகாருக்குரிய படம் எது என்பதை பார்ப்போம். பிரபல இயக்குனர் இராம.நாராயணன், மற்றும் நகைச்சுவை நடிகர் சந்தானம் இருவரும் இணைத்து தயாரித்த படம் 'கண்ணா லட்டு திங்க ஆசையா'. இப்படத்தை கே.எஸ்.மணிகண்டன் என்ற புதியவர் இயக்குகிறார். முக்கியமாக சந்தானத்துடன் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.

ஹீரோயின் விஷாகாவை சந்தானம், சீனிவாசன், சேது என்ற அறிமுக ஹீரோ ஆகிய மூவரும் காதலிக்க, யார் விஷாகா மனசில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதையாம்.

இதில் விஷாகாவை கவர நினைக்கும் சந்தானம், அவரது அப்பாவான விடிவி கணேஷிடம் சங்கீதம் கற்கிறாராம். கழுத்து நிறைய தண்ணீரில் மூழ்கினால் ஸ்ருதி வரும் என்று ஐடியா கொடுக்கும் கணேஷ், அவரை பெரிய நீர் நிரம்பிய குவளைக்குள் இறக்கி சாதகம் சொல்லிக் கொடுக்கிற காட்சியும் இருக்கிறது. இப்படி மூவரும் அவரவர் திறமைக்கு ஏற்ப விஷாகாவை கவர முயல்வதுதான் இந்த படத்தின் மொத்த கதையும். நாற்பதை கடந்தவர்களும், ரெகுலராக சின்னத்திரையில் படம் பார்ப்பவர்களும் சட்டென யூகித்துவிட முடியும், இது 'இன்று போய் நாளைவா' கதையாச்சே என்று! அந்த படத்தில் ஒரு இந்தி வாத்தியார் என்றால் இந்த படத்தில் ஒரு பாட்டு வாத்தியார். இப்படி போட்டுக் கலக்கி கலக்கல் காமெடி சர்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில் 'இன்று போய் நாளைவா' படத்தின் கதைக்கான முழு உரிமையும் தன்னிடம் இருக்க, அதை வேறு ஷேப்பில் அடிக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் போலீசுக்கே போய்விட்டார் பாக்யராஜ்.
ஆணையாளரிடம் அவர் அளித்திருக்கும் புகாரின் சாரம்சம் இதுதான். 1981 ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்க ஆசைப்படும் இந்த கதை நானே எழுதியது. இதன் மூலக்கதை, திரைக்கதை, வசனம், இம்மூன்றும் என் உழைப்பில் உருவானவை. இப்படத்தையும் நானே இயக்கியிருக்கிறேன்.
இடையில் இப்படத்தை இந்தியில் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நைஹா ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் நானே இதன் உரிமையை விற்றிருக்கிறேன். தயாரிப்பாளரான பி.வி.டெஹ்ரானிக்கும் இது தெரியும். கதை எனக்கே சொந்தம் என்பதால் அவர் இதை ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இப்படத்தை தமிழில் மீண்டும் உருவாக்க நினைத்த தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி என்னை தொடர்பு கொண்டு இதன் உரிமையை கேட்டார். நான் என் மகன் சாந்தனுவை ஹீரோவாக்கி நானே அந்த கதையை எடுக்கப் போவதாக கூறினேன். அதன்பின் டைரக்டர் இராம.நாராயணன் என்னை அணுகி இன்று போய் நாளை வா படத்தின் கதை உரிமையை கேட்டார். அவரிடமும் அதே பதிலை சொன்னேன்.
ஆனால் தற்போது உருவாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'கண்ணா லட்டு திங்க ஆசையா' படம் 'இன்று போய் நாளைவா' படத்தின் பிளாட்தான் என்று அப்படத்தின் ஹீரோவான சந்தானமே பேட்டிகளில் கூறி வருகிறார். என்னிடம் ரீமேக் உரிமையை வாங்காமல் இந்த படத்தின் நெகட்டிவ் உரிமையை வாங்கி வைத்திருக்கும் ஆர்.வி.மணி என்பவரிடம் உரிமை வாங்கி படமெடுப்பது செல்லாது. என் அனுமதியில்லாமல் என் கதையை படமாக்குவது மோசடியானது. எனவே இராம.நாராயணன், புஷ்பா கந்தசாமி, அவரது குடும்ப உறுப்பினாரான ஜனனி கந்தசாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார் பாக்யராஜ்.
கோடம்பாக்கத்தையே அதிர வைத்திருக்கும் இந்த கதை திருட்டு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது. தனது கதையைதான் படமாக்குகிறார்கள் என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தாராம் பாக்யராஜ். அவ்வப்போது சந்தானத்தை சந்திக்கும் போதெல்லாம், இந்த சீனை எப்படி எடுத்தீங்க, அந்த சீன் எப்படி வந்திருக்கு என்றெல்லாம் பாக்யராஜ் விசாரித்து வந்தததாகவும் நம்மிடம் கூறினார்கள் சந்தானம் தரப்பினர். இப்போது எழுப்புகிற பிரச்சனையை அப்போதே அவர் எழுப்பியிருந்தால் கூட பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால் படம் வெளியாகிற கடைசி நேரத்தில் இப்படி செய்துவிட்டாரே என்று பாக்யராஜின் செயலை கவலையோடு அலசுகிறது சந்தானம் வட்டாரம்.
ஆனால் அப்படியே நேர்மாறாக புலம்பல் சப்தம் கேட்கிறது பாக்யராஜ் அலுவலகத்தின் பக்கம். தனது கதையை ரைட்ஸ் வாங்காமல் படம் எடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட எங்க டைரக்டர் பலமுறை இராம.நாராயணனிடம் அதுகுறித்து பேசி வந்தார். அப்போதெல்லாம் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்றே கூறிவந்தார் அவர். கடைசி நேரம் வரைக்கும் இப்படி இழுத்ததடித்தால்தான் போலீசுக்கு போக நேர்ந்தது. இது எங்க டைரக்டரே விரும்பாமல் செய்த அதிரடி முயற்சிதான் என்கிறார்கள் இந்தப் பக்கம்.



ஜனவரி 7 ந் தேதி பாக்யராஜ் பிறந்த நாள் என்பதால் அவர் செம பிஸி. வெளியூர்களிலிருந்து வந்த ரசிகர்களை சந்திப்பது, குடும்பம் மற்றும் உறவினர் நண்பர்களோடு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவது என பதில் சொல்ல நேரமில்லாமல் பறந்து கொண்டிருந்தார். அவ்வளவு அவசரத்திற்கு இடையிலும் நம்மிடம், 'தயாரிப்பாளர் கேயார் மாதிரி என்னுடைய நலம் விரும்பிகள் இந்த பிரச்சனை தொடர்பா பேசிட்டு வர்றாங்க. விரைவில் ஒரு நல்ல முடிவு வரும்னு நம்புறேன்' என்றார்.
பாக்யராஜால் குற்றம் சாட்டப்பட்ட புஷ்பா கந்தசாமியிடம் பேசினோம். இந்த பிரச்சனையில் எதுக்கு என் பெயரை இழுக்கிறார்னு தெரியல. அவரை சந்தித்து நான் இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் உரிமையை கேட்டேன்னு சொல்றதே சுத்த பொய். நான் எந்த நேரத்திலும் அவரை சந்திச்சு இது பற்றி கேட்கல. முன்பெல்லாம் தமிழ் படங்களை தமிழிலேயே ரீமேக் செய்யும் வழக்கம் இல்லாமலிருந்தது. இப்போதுதான் அந்த வழக்கம் வந்திருக்கிறது.
இது மாதிரி ரைட்ஸ் வேணும்னு நினைக்கிறவங்க அந்த காப்பி ரைட்ஸ் யாரிடம் இருக்கோ, லேப் என்டாஸ்மெனட் யாருகிட்ட இருக்கோ, அவங்ககிட்டயே வாங்கிக்கிற வழக்கமும் இருக்கு. டைரக்டருக்கு முழு பணத்தையும் செட்டில் பண்ணிவிடுகிற போது இந்த உரிமையையும் எழுதி வாங்கிக்கிற தயாரிப்பாளர்களும் இங்கு உண்டு. ஆர்.வி.மணியிடம் நான் வாங்குவதற்கு முன் சட்டப்படி உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் வாங்கினேன். அது மட்டுமல்ல, சினிமா சங்கங்களிடம் ஆலோசனை கேட்டுதான் வாங்கினேன். ஏதோ பெரிய அளவில் பணம் கைமாறிவிட்டதாகவும் அவர் நினைக்கிறார். உண்மையில் அதுவும் இல்ல.
யாரையும் ஏமாத்தி சம்பாதிக்கணும்னு நினைக்கிற குடும்பத்திலிருந்து நான் வரல. எங்க அப்பா பாலசந்தர் சாரிடம் இல்லாத கதையையா நான் இன்னொருத்தரிடமிருந்து வாங்கி ரீமேக் பண்ணணும்?
இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த விஷயத்துல தொடர்ந்து அவர் என் பெயரை யூஸ் பண்ணினா நானும் சட்டப்படி அவர் மீது வழக்கு தொடர வேண்டி வரும்' என்றார் கோபமாக!
ஒருவேளை பாக்யராஜ் தனது தரப்பு நியாயத்தை நிரூபித்துவிட்டால், 'கண்ணா திருட்டு லட்டு திங்க ஆசையா'ன்னு தலைப்பையே கூட மாற்றிவிடலாம்!

விஸ்வரூபம் பிரஸ்மீட்டில் ரஜினியை குத்திக்காட்டினாரா கமல்? கோலிவுட்டில் பரபரப்பு.


www.thedipaar.com
       இது புதுவழி... என் சுயநலத்திற்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழியல்ல!' நேற்றைய பிரஸ்மீட்டில் கமல் வாயிலிருந்து மிக திட்டமிட்டு வெளிவந்த இந்த வார்த்தைகள் யாருக்கு புரியாமலிருந்தாலும், கமலின் நாற்பதாண்டு கால நண்பர் ரஜினிக்கு புரியாமலிருக்காது.

சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் 'என் வழி தனீ வழி' என்று முழக்கமிடும் ரஜினி, கமல் விஷயத்தில் அமைதிகாப்பது ஒட்டுமொத்த திரையுலகத்தையே புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 'கமல் என் நண்பன். அவருக்கு ஒரு பிரச்சனைன்னா நான் பார்த்துகிட்டு இருக்க முடியாது' என்று ஒருவார்த்தை ரஜினி வாயிலிருந்து வந்திருந்தால், மிச்சத்தை அவரது ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்தளவுக்கு ரஜினியை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் பின்னாலேயே வரப்போகிற கோச்சடையானுக்காக தப்பி தவறி கூட இந்த விஷயம் குறித்து வாயை திறக்காத ரஜினி மீது கமலுக்கு கோபம் இருந்திருக்கலாம். அதனால்தான் இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கை மிக திட்டமிட்டு பேசியிருக்கிறார் அவரும்.

  கூரையில சோறு வச்சா ஓராயிரம் காக்கா... என்றொரு பழமொழி உண்டு. போராடி கமல் திறந்து வைக்கப் போகும் இந்த பூங்காவுக்குள் காற்று வாங்க வரப்போகும் கமலின் பின்னோடி திரையுலக தோழர்களுக்கு பெருத்த சாபம் காத்திருக்கிறது ஆழ்வார்பேட்டை முகவரிக் காரரிடமிருந்து!அதுமட்டும் நிச்சயம்...

கொந்தளிக்கும் தேசம்! திரைப்படமாகும் டெல்லி பாலியல் பலாத்கார உண்மைகள்!


    சமீபத்தில் நடந்த டெலி பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து எவ்வித வேறுபாடும் பாராமல் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து தலைநகரையே குலுங்கச் செய்தனர். குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளி மீது விசாரனையும், வழக்கும் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த பாலியல் பலாத்கார சம்பவம் இந்தியில் திரைப்படமாகிறது. டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் நடந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்திய உடனேயே ’டெல்லி மாஃபியா’ , ‘நிஷா’ என இரு படங்கள் டெல்லி சம்பவத்தை கருவாகக் கொண்டு துவங்கப்பட்டுவிட்டன. மூன்றாவதாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ‘ஃப்ரீடம்(FREEDOM)' என பெயரிட்டுளனர். மற்ற இரண்டு படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் டெல்லி சம்பவத்துடன், பெண் உரிமை, பெண் சுதந்திரம் ஆகிய பல முக்கிய விஷயங்களை அலசுகிறார்களாம்.

மும்பையில் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பை 'RDX’ என்ற படமாக எடுத்த டான் கௌதம் இந்த படத்தை இயக்குகிறார். டெல்லியைச் சேர்ந்த மாணவி பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிப்பதுடன், பாகிஸ்தானைச் சேர்ந்த குலாம் நபி என்ற இசையமைப்பாளர் படத்திற்கு இசையமைக்கிறாராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டதால், ஜனவரி 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. டெல்லி பாலியல் பலாத்கார கொடூர சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் ஒரு பாடல் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகிறது.

அஜித் - விஜய் வருவார்களா? காத்திருக்கும் இயக்குனர்கள்!



     முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தான் முன்னணி இயக்குனர்கள் பலரும் விரும்புகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என ஒரு லிஸ்டையே சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸுக்கு முதல் படத்தில் நடித்து மாபெரும் வெற்றி தேடிக்கொடுத்த அஜித்துடன் மறுபடியும் இணைய வேண்டும் என்பது தான் ஆசை. ’கதையை எப்போதோ தயார் செய்துவிட்டேன்’ என முருகதாஸ் தொடர்ந்து சொல்லி வந்தாலும் அஜித் சம்மதம் சொல்லாமல் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார்.கௌதம் மேனன் அஜித், விஜய், சூர்யா என மூவரிடமும் கதை சொல்லிவிட்டார் ஆனால் அவர்களும் சம்மதம் தெரிவிக்காமலேயே இருக்கின்றனர். கௌதம் மேனன் சூர்யாவை வைத்து எடுத்த காக்க காக்க மிகப்பெரிய வெற்றி பெற்று சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் “ நான் மட்டும் அல்ல, என்னைப் போன்ற பல இயக்குனர்கள் விஜய், அஜித் கால்ஷீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    சசிகுமார், ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட பல இயக்குனர்கள் விஜய், அஜித்திற்காக கதை வைத்திருக்கின்றனர். மேலும் எத்தனையோ இயக்குனர்கள் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் ஒப்புக்கொள்வதும், ஒப்புக்கொள்ளாததும் அவர்கள் இருவர் கையில் தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார். கௌதம் மேனன் இயக்கிய நீ தானே என் பொன்வசந்தம் எதிபார்த்த ரிசல்ட் தரவில்லை.

     முன்னணி நடிகர்களை வைத்து ஒரு முழுநீள ஆக்‌ஷன் படம் எடுக்க கதையுடன் காத்துக்கொண்டிருக்கிறார் கௌதம் மேனன். விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டதால் அடுத்து அஜித்தின் கால்ஷீட்டுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இரு இயக்குனர்களும் தமிழில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் அஜித்-விஜய்க்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

‘சிட்டி ரோபோ’வாக கலக்கும் பவர்ஸ்டார்!


       நடிகர் டாக்டர் பவர்ஸ்டார் சீனிவாசன் இப்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார். சந்தானம் தயாரித்து நடிக்கும் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்திலும், பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் இயக்கத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஷங்கரும் கலந்துகொண்டார். இசை வெளியீட்டு விழாவில் பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன் எனக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஷங்கர் தம்பியும் எனது தீவிர ரசிகர்தான் என்றெல்லாம் போட்டு உடைத்தார். பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென இப்படி சொல்லிவிட்டதால் ஷங்கர் அவர் மீது கோவத்தில் இருக்கிறார், அவரது ஐ படத்திலிருந்து பவர்ஸ்டாரை நீக்கிவிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை என்கிறதாம் ஐ படக்குழு.

ஷங்கரின் இந்த படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனும், சந்தானமும் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பவர்ஸ்டார் சீனிவாசன், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ கதாபாத்திரத்தில் நடித்து காமெடி செய்கிறாராம் ஐ படத்தில். பவர்ஸ்டார் நடிப்பில் வெளிவரவிருக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு ராசிகர்களிடையே மிகப்பெஇய எதிர்பார்ப்பு இருக்கிறது.

பாதி போலீஸ்! பாதி கிளாமர்! - அசத்தும் அமலாபால்!


         நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். நடுவில் சொற்ப படங்கள் சொதப்பினாலும், மற்ற படங்கள் கொடுத்த பெரிய ஹிட் இன்று தமிழ், தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அமலாபால். தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கும் அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை என்றால் அது விஜயசாந்தி தான் என்ற எண்ணம் இன்றுவரையிலும் ரசிகர்களிடத்திலிருந்து அகலவில்லை. 80-களில் விஜயசாந்தி போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்தது தான், இன்றுவரை எந்த நடிகையும் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை. அமலாபால் போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பேன் என்று கூறி கடின பயிற்சி எடுத்து வருகிறாராம்.
      ஒரு சில காட்சிகளில் மட்டும் போலீஸாக வந்து தனது கடின உழைப்பை காட்டிவிட்டு, மீதிக் காட்சிகளில் கவர்ச்சிக் கன்னியாக ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கிறாராம் அமலாபால். படத்தில் ஒரு சில காட்சிகளில் போலீஸ் உடையில் வருவதற்கே இவ்வளவு அலப்பறைகள் கொடுப்பதாக கோடம்பாக்கத்தில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் !

மீண்டும் சசிகுமார் ஜோடியாக 'குட்டிப்புலி' படத்தில் நடித்து வரும் லட்சுமி மேனன், 'மஞ்சப்பை' என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விமல் நாயகனாக நடிக்க, இயக்குனர் சற்குணம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இப்போதே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி விட்டது.

'சுந்தர பாண்டியன்' வரவேற்பைத் தொடர்ந்து, லட்சுமி மேனனை பல்வேறு முன்னணி நாயகர்கள் தங்களது படங்களில் நாயகியாக ஒப்புக்கொள்ள அழைப்பு விடுத்து வருகிறார்கள். ஆனால் லட்சுமி மேனனின் சிந்தனை வேறுவிதமாக இருக்கிறது.

லட்சுமி மேனன் "ஒரு நல்ல நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்தேன். வந்த வேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுவிட்டேன். இனி முன்னணி நடிகையாக வேண்டும். அதற்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும்.

ஆனால் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் நடிக்க வேண்டுமென்றால் பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே, முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி இருக்கும்.

எனக்கு அது சரிப்பட்டு வராது. அதனால்தான் அவர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை விட்டுவிட்டேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கை கணக்கல்ல. கொஞ்ச காலம் நடித்தாலும் நல்ல படங்களில் நடித்துவிட வேண்டும்" என்று தெரிவித்து இருக்கிறார்.

வெல்கம் டூ சினிமா! : 'அப்பா' அர்ஜூன்!



அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், விஷாலுக்கு ஜோடியாக 'பட்டத்து யானை' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கி வருகிறார்.

அர்ஜுன் தனது மகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அர்ஜுன், ஐஸ்வர்யா, விஷால், இயக்குனர் பூபதி பாண்டியன், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அச்சந்திப்பில் அர்ஜுன் "நான் ஒரு நடிகராக, ஒரு இயக்குனராக, ஒரு தயாரிப்பாளராக உங்களை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் இச்சந்திப்பு எனக்கு மிகவும் புது அனுபவமாக இருக்கிறது. அதே சமயம் மிகவும் பெருமையாகவும் இருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இதே தமிழ் சினிமாவில் என் மகளையும் ஒரு ஹீரோயினாக அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சில நண்பர்கள் என் மகளை ஹீரோயின் ஆக்குவது குறித்து என்னிடம் பேசினார்கள். அவர்கள் " மகன் என்றால் கூட பரவாயில்லை.. உங்கள் மகளை ஏன் சினிமாவில் நாயகியாக அறிமுகப்படுத்துகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.

நல்லது கெட்டது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அதைப் பொருத்துதான் நமக்கும் எல்லாம் நடக்கும். சினிமா தான் எனக்கு நல்ல பெயர், புகழ், பணம், அந்தஸ்து அனைத்தையும் கொடுத்தது. சினிமா என்பது எனது குடும்பம் மாதிரி, என் குடும்பத்துக்குள் என் மகளை அறிமுகப்படுத்துவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை.

என் மகளை ஒரு பெண் போல மட்டுமில்லாமல் ஒரு ஆண்போலவும் வளர்த்திருக்கிறேன். அதனால் எனக்கு பயமில்லை.

'பட்டத்து யானை' படத்தின் மூலம் எனது மகள் ஐஸ்வர்யா அறிமுகமாவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் நடித்த 'கிரி' படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் பூபதி பாண்டியன். ஆகவே அவருக்கு தெரியும் ஒரு படத்தின் வெற்றி எதில் இருக்கிறது என்று.

நான் இயக்கிய 'வேதம்' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விஷால். அவர் இப்போது முன்னணி நாயகன். அவருடன் இணைந்து எனது மகள் நடிப்பது கூடுதல் சந்தோஷம் " என்றார்.

தனுஷ், சிம்பு - இளமை ஊஞ்சலாடவில்லை!



தனுஷ், சிம்பு இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பார்களா என்பது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.

1978ல் வெளிவந்த 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தினை ரீமேக் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடித்த அப்படத்தினை ஸ்ரீதர் இயக்க, இளையராஜா இசையமைத்து இருந்தார்.

தற்போது அப்படத்தின் ரீமேக்கில் ரஜினி வேடத்தில் தனுஷ், கமல் வேடத்தில் சிம்பு, ஸ்ரீப்ரியா வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

ஆனால் தனுஷ், சிம்பு இருவருமே ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் பணிகள் இருப்பதால், அப்பட பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு தான் 'இளமை ஊஞ்சலாடுகிறது' ரீமேக் குறித்து யோசிக்க முடியும். இருவரும் இணையும் படமாக ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ இருக்காது.. இது வெறும் வதந்தி தான் என்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.

சிகரம் தொட தயாராகும் யுடிவி!



’தூங்காநகரம்' படத்தினை இயக்கிய கௌரவ், தனது படத்தின் பணிகளை துவங்கி விட்டார். விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க இருக்கும் இப்படத்திற்கு 'சிகரம் தொடு' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

யு.டிவி நிறுவனம் தற்போது ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகா, அஞ்சலி நடிக்கும் 'சேட்டை' படத்தினை தயாரித்து வருகிறது. ஜனவரி 31ம் தேதி இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

'சேட்டை' படத்தினைத் தொடர்ந்து திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் 'இவன் வேறமாதிரி' படத்தினை வெளியிட இருக்கிறது.

'சிகரம் தொடு' படத்திற்கு மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் வெள்ளித்திரையில் 'சிகரம் தொட' இருக்கிறார்கள்
.

தமிழ்ல Hangover !

பிரபல சினிமா மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் இயக்கி வரும் படம் 'ஒன்பதுல குரு'.

வினய், லட்சுமிராய், சத்யன், பிரேம்ஜி, சோனா, லட்சுமிராய் மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தை ஆங்கிலத்தில் வெளிவந்த Hangover படத்தின் மையக் கதையை தழுவி எடுத்து இருக்கிறாராம்.

நீண்ட நாள் கழித்து சந்திக்கும் கல்லூரி நண்பர்கள், ஜாலியாக பாண்டிச்சேரிக்கு டூர் செல்கிறார்கள். அங்கு என்ன ஆகிறது என்பதை காமெடியாக திரைக்கதை அமைத்து இயக்கி வருகிறாராம் செல்வகுமார்.

அதுலயும் சந்தானம்.. இதுலயும் சந்தானம்!


உதயநிதி ஸ்டாலின் அடுத்து நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அனிருத் இசையமைப்பார் என்று பேசப்பட்டது.

தற்போது உதயநிதி - எஸ்.ஆர்.பிரபாகரன் இணையும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

உதயநிதி தயாரிக்கும் மற்றொரு படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் இணையும் இப்படத்தினை கிருத்திகா உதயநிதி இயக்க இருக்கிறார். கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஜனவரி 25ம் தேதி 'விஸ்வரூபம்' வெளியாகும் - கமல்

'விஸ்வரூபம்' படம் ஜனவ்ரி 25ம் தேதி அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என கமல் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பது " 'விஸ்வரூபம்' திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கை புரிந்துகொண்டு DTH என்னும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர் மற்றும் விநியோகஸ்த சகோதர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி. " என்று குறிப்பிட்டுள்ளார்.