Thursday 10 January 2013

தயாரிப்பாளராக மாறிய சற்குணத்துக்கு தனுஷ் போட்ட கண்டிஷன்.


www.thedipaar.com
    இயக்குனர் சற்குணம் மஞ்சப்பையை தூக்கப்போகிறார் என்றது டென்ஷன் ஆனது தனுஷ்தானாம். ஏன். சற்குணம் தயாரிப்பாளர் ஆனதுக்கும் தனுஷ் டென்ஷன் ஆனதுக்கும் என்ன சம்மந்தம்?
 இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே தனுஷிடமிருந்து அழைப்பு வந்ததாம் சற்குணத்திற்கு. பாராட்டதான் அழைக்கிறார் என்று நம்பி போனவருக்கு தனுஷ் சொன்ன அட்வைஸ் அவ்வளவு சரியாக படவில்லையாம். அப்படி என்ன சொன்னார் தனுஷ்?
'நீங்க படம் தயாரிக்கறது நல்ல விஷயம்தான். பாராட்டுகள். ஆனால், இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்க நினைச்சா தேவையில்லாத டென்ஷன்தான் வரும். அதனால் முதல்ல நீங்க தயாரிக்கிற மஞ்சப்பையை முடிச்சுட்டு வாங்க. இல்லேன்னா சொட்டவாளக்குட்டிய முடிச்சுட்டு மஞ்சப்பைக்கு போங்க. தயாரிப்பாளருக்கு ரெகுலரா வர்ற டென்ஷனோட நான் நடிக்கும் படத்தை இயக்க வந்தீங்கன்னா ரிசல்ட் அவ்வளவு திருப்தியா இருக்காதுங்கறது என்னோட கருத்து. இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?' என்றாராம்.

சிம்புவுக்கு போட்டியாக தனுஷ் பாடியிருக்கும் இரண்டாம் உலக பாடல்


www.thedipaar.com
தனுஷ், சிம்பு இருவரும் மாறி மாறி ஆல்பம் வெளியிட்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் தங்களது போட்டியை வெளிப்படுத்தி கொண்டிருப்பதை இன்னும் விடவில்லை போலும். சமீபத்தில் தன் நண்பரின் தயாரிக்கும் படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடினார் சிம்பு. உடனே தனுஷுக்கு ஏதாவது ஒரு படத்தில் தானும் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தன்னுடைய அண்ணனுடை இரண்டால் உலகம் படத்தில் ஒரு வாய்ப்பு வந்ததும் கெட்டியாக பிடித்துக் கொண்டார் தனுஷ்.


குறிப்பிட்ட அந்த பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய இசையமைப்பாளர் தனுஷுக்கு அழைப்பு விடுக்க, பிசியான வேலைகளுக்கு மத்தியில் அந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ். ஏற்கெனவே தனது அண்ணன் படங்களான ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் தனுஷ்.

இந்த பாடல் படமாக்கப்பட்டதும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பின் இறுதிப் பணிகளை விரைந்து முடித்து வெகுசீக்கிரமாகவே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.

நயன் தாராவுடன் ரகசிய திருமணமா? அதிர்ச்சியுடன் பதிலளித்த ஆர்யா.



www.thedipaar.com


நடிகர் ஆர்யாவை நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. அவருடன் ஜோடியாக நடித்த பல நடிகைகளோடு இணைத்து பேசப்பட்டார். தற்போது நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவி உள்ளது.


இருவரும் ஏற்கனவே "பாஸ் என்கிற பாஸ்கரன்" படத்தில் ஜோடியாக நடித்தனர். தற்போது இன்னொரு படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆர்யா தான் சிபாரிசு செய்து நயன்தாராவை தனக்கு ஜோடியாக்கியதாக கூறப்பட்டது. சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் விருந்து அளித்ததாகவும் செய்திகள் வந்தன. இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கள் மிக வேகமாக பரவி வருகின்றது.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்டபோது மறுத்தார். நடிகைகளுடன் இணைத்து தன்னைப் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் வருகின்றன என்றும் வருத்தப்பட்டார்

துப்பாக்கி நடிகரின் புதிய படத்தின் வில்லன் திடீரென நீக்கப்பட்டது ஏன்? கோலிவுட்டில் பரபரப்பு.




       துப்பாக்கி நடிகர் நடிக்கும் படத்துக்கு நீண்ட மூக்கு வில்லன் நடிகர்தான் முதலில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்ததாம். அந்த நடிகரின் மனைவி தயாரிப்பாளர் சங்கத்தில் கில்லி நடிகரின் தந்தைக்கு எதிர் அணியில் தீவிரமாக செயல்படுகிறவர்.

இதனால் ஆத்திரம் அடைந்த துப்பாக்கி நடிகரின் தந்தை விஜயமான இயக்குனருக்கு போன் போட்டு அந்த நடிகரை என் மகன் படத்திலிருந்து உடனே நீக்குங்கள். இல்லாவிட்டால் என் மகன் உங்கள் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சவுண்ட் விட பயந்து போன இயக்குனர் தந்தைகுலத்தை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு. அடுத்த நிமிடமே வில்லன் நடிகருக்கு போன்போட்டு அவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு விஷயத்தை கமுக்கமாக முடித்தாராம்.

அலட்டிக் கொள்ளாத வில்லன் நடிகர் "யாரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் வாங்கிய அட்வான்சை திருப்பித் தரமாட்டேன்" என்று சொல்லிவிட்டாராம். உடனே விருது பெற்ற அம்மா நடிகையின் பொன்னான கணவரை அந்த கேரக்டருக்கு ஒப்பந்தம் செய்து இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கிறாராம். தயாரிப்பு சங்கத்து அரசியல் திரைக்கு வெளியே மட்டுமல்ல திரைக்கு உள்ளேயும் இருக்கிறதாம்.

முழுக்க முழுக்க இரவிலேயே படமாகும் விழித்திரு படத்தில் தெய்வத்திருமகள் சாரா.



அவள் பெயர் தமிழரசி டைரக்டர் மீரா கதிரவன் சற்று இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் விழித்திரு. இப்படத்தில் கிருஷ்ணா, விதார்த், டைரக்டர் வெங்கட் பிரபு, தன்ஷிகா, அபிநயா, தம்பி ராமையா உள்ளிட்ட எக்கச்சக்க நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முக்கிய கதாபாத்திரத்தில் தெய்வத்திருமகள் புகழ் சாரா நடித்துள்ளார். ஓர் இரவில் நடக்கும் சம்பவமும், அதில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்றாக இணைவதும் தான் இப்படத்தின் கதையாம். மேலும் படம் முழுக்க முழுக்க இரவிலேயே படமாக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

விஸ்வரூபம் ஜனவரி 25ல் தியேட்டரில் ரிலீஸ். கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு. டி.டி.எச்சில் எப்போது?


www.thedipaar.com  விஸ்வரூபம் திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக 500 திரையரங்குகளில் வெளியாகும் என்று கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். டிடிஎச்சில் வெளியாகும் தேதி குறித்து அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

ஆனால், டிடிஎச் முயற்சிக்கு துணை நின்ற எந் திரையுலக சகோதரர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கமல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

விஸ்வரூபம் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஜனவரி 25ஆம் தேதி 500 அரங்குகளுக்குக் குறையாமல் தமிழகமெங்கும் திரையிடப்பட இருக்கிறது.

என் தொலைநோக்கைப் புரிந்து கொண்டு டிடிஎச் எனும் புதிய முயற்சிக்கு துணை நிற்கத் தயாரான என் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

தனி மனிதனை மதித்து ஒருங்கிணைந்த அனைவருக்கும் நன்றி.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

டிடிஎச்சில் எப்போது வெளியாகும் என்று கமல் எதுவும் கூறவில்லை.

விஸ்வரூபம் படம் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் முதலில் வெளியாகும் என்பதைத்தான் நேற்று காலை அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால் அதை மறுத்து, அவர்களுக்கெல்லாம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் போவதாக பிரஸ் மீட் வைத்து கூறினார் கமல். ஆனால் இன்று அவர் அதே அபிராமி ராமநாதன் உள்ளிட்டோருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதே தேதியைத்தான் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

நடிகர்களை வறுத்தெடுக்கும் இயக்குனர் பாலாவையே தடுமாற வைத்த இரண்டு முன்னணி நடிகர்கள்

www.thedipaar.com
டைரக்டர் பாலாவின் படங்களில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் உள்ளிட்ட நடிகர்களுக்கே சிறந்த அங்கீகாரம் கிடைத்தது. அதன்பிறகு அவர்களுக்கு மற்ற இயக்குனர்களும் அவர்களை நம்பி அதிரடியான கதைகளுக்கு புக் பண்ணினர். ஆனால் பாலா படத்தில் நடித்த பிறகு மீண்டும் நடிப்பதற்கு சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் முயற்சி எடுக்கவில்லை. அவரிடம் சிக்கினால் ஒரு வருடத்துக்கு மேலாக வேகாத வெயிலில் போட்டு வறுத்து எடுத்து விடுவார் என்கிற பயம்தான் காரணம்.

ஆனால் விக்ரம், விஷால் ஆகிய இருவரும் மீண்டும் பாலாவின் அடுத்தடுத்து படங்களில் நடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் கடுமையாக முயற்சி எடுத்து வருகின்றனர். என்னதான் அவர் கஷ்டப்படுத்தினாலும் அது நம்மை செம்மைப்படுத்துவதற்காகவே என்று நினைக்கிறார்கள்.

அதனால் தற்போது அதர்வாவைக்கொண்டு பரதேசி படத்தை இயக்கி முடித்துள்ள பாலா, அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவது என்ற முடிவு எடுக்காததால், மேற்படி நடிகர்கள் இருவருமே முண்டியடித்து வருகிறார்கள். இருவருமே வேண்டப்பட்ட நடிகர்களாகி விட்டதால், அடுத்த படத்தில் யாருக்கு சான்ஸ் கொடுப்பது என்பது புரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார் பாலா.