இந்த அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே தனுஷிடமிருந்து அழைப்பு வந்ததாம் சற்குணத்திற்கு. பாராட்டதான் அழைக்கிறார் என்று நம்பி போனவருக்கு தனுஷ் சொன்ன அட்வைஸ் அவ்வளவு சரியாக படவில்லையாம். அப்படி என்ன சொன்னார் தனுஷ்?
'நீங்க படம் தயாரிக்கறது நல்ல விஷயம்தான். பாராட்டுகள். ஆனால், இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் உருவாக்க நினைச்சா தேவையில்லாத டென்ஷன்தான் வரும். அதனால் முதல்ல நீங்க தயாரிக்கிற மஞ்சப்பையை முடிச்சுட்டு வாங்க. இல்லேன்னா சொட்டவாளக்குட்டிய முடிச்சுட்டு மஞ்சப்பைக்கு போங்க. தயாரிப்பாளருக்கு ரெகுலரா வர்ற டென்ஷனோட நான் நடிக்கும் படத்தை இயக்க வந்தீங்கன்னா ரிசல்ட் அவ்வளவு திருப்தியா இருக்காதுங்கறது என்னோட கருத்து. இது பற்றி நீங்க என்ன சொல்றீங்க?' என்றாராம்.