Friday 24 August 2012

ஜப்பானிஸ் உள்பட பல மொழிகளில் கோச்சடையான். சவுந்தர்யா பேட்டி





ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் ‘கோச்சடையான்’ படம் டிசம்பரில் ரிலீசாகிறது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து சவுந்தர்யா அளித்த பேட்டி வருமாறு:-
நான் அப்பாவுக்கு அழியா புகழை தர விரும்புகிறேன். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நாடி நரம்புகளில் ஊடுருவியுள்ள ஒரு நடிகரின் ஸ்டைல்கள், மேனரிசம்கள், நடிப்பு ஆகியவற்றை நான் கம்ப்யூட்டரில் திரும்பவும் உருவாக்குகிறேன்.
ஆகையால் அனிமேஷன் படங்களுக்கே உரிய வாலுள்ள கதாபாத்திரங்கள், நெருப்பை கக்கும் விலங்குகள் என்றெல்லாம் இதில் எதுவும் இல்லை. அனிமேஷன் மேல் எனக்கு மிகப்பெறும் ஈடுபாடு உண்டு. அனிமேஷன் என்றாலே கார்ட்டூன் என்ற கருத்தை இந்தப் படம் உடைக்கும்.
இந்தப் படத்தில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் மக்களை சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய ஒன்று. அவர் வெறும் உபதேசம் மட்டும் செய்வதில்லை. தத்துவங்கள்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார். தான் என்ன பிறருக்கு சொல்கிறோமோ அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து, மொழி தெரியாத ஒரு மாநிலத்துக்கு வந்து அவர் இந்தளவு உயர்ந்திருக்கிறார். அவர் என்ன சொல்லணுமோ அதை வாழ்ந்தே காட்டிவிட்டார்.

ஜப்பானிஸ் உள்பட பல மொழிகளில் ‘கோச்சடையான்’ வெளியாக உள்ளது. பெரும்பாலும் இங்கிலாந்தில் ஷூட் செய்யப்பட்டாலும், இந்தியாவின் ஆன்மா படத்தில் இருக்கும். காட்சியமைப்புகள், காஸ்ட்யூம்கள், லொக்கேஷன்கள், பாடல்கள், நடனம் இப்படி இந்தியப் படங்களுக்கே உரித்தான பல பிரத்யேக அம்சங்களுக்கு படத்தில் குறைவில்லை. சொல்லப்போனால் ‘கோச்சடையானி’ல் பாட்டும், நடனமும் நிறையவே உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்

என்னுடைய ஸ்கிரிப்டுக்கு விஜய் பொருத்தமில்லை. கவுதம் மேனன்


   விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதில் இருந்து விலகினார் கவுதம் மேனன். இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம் ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கவிருந்தார்.

ஹாலிவுட் பாணியிலான இப்படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் வெளிநாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. விஜய் தற்போது முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், திடீரென்று இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். கடந்த இரண்டு வாரமாக இத்தகவல் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.




இந்நிலையில் விஜய் படத்தை இயக்கவில்லை என்று கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியது: ஆரம்பத்தில் விஜய்யிடம் இப்படத்தின் ஒரு வரி கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டேன். முழுவதுமாக ஸ்கிரிப்ட் தயாரான பிறகு அதை மீண்டும் விஜய்யிடம் கூறினேன். ஆனால், அந்த கதை தனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறினார்.அவருக்கு ஏற்ற மாதிரி மீண்டும் ஸ்கிரிப்டை மாற்றி அமைக்க எனக்கு நேரமில்லை.

எனவே, இப்படத்தை கைவிட முடிவு செய்தோம். அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்ததையடுத்து நான் விலகிவிட்டேன். அடிக்கடி இதுபோல் பிரச்னை வருவது ஏன் என்கிறார்கள். இது தானாக நடக்கும் செயல், அவ்வளவுதான். எதிர்காலத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன். இவ்வாறு கவுதம் மேனன் கூறினார்.

உச்ச நடிகரின் குணாதிசயங்கள் தல நடிகரிடம்.



தற்போது தல நடிகர் பழைய தேவி நடிகை நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக பணம் வாங்காத விஷயம் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தல நடிகரின் நெருங்கிய வட்டாரங்கள் உச்ச நடிகரின் குணாதிசயங்கள் தலயிடம் காணப்படுவதாகவும் கூறி வருகின்றனர்.  பணத்தின் மீது நாட்டம் இல்லாமல் ஆன்மீகத்தின் மீது தல நடிகர் நாட்டம் கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர். 

எனவே உச்ச நடிகரின் பாணியை பின்பற்றும் தல நடிகர் எப்பொழுது வேண்டுமானாலும் இமயமலைக்கு பறந்து செல்லலாம் என ரசிகர்கள் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.


தென்னிந்திய சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நாயகர்களில் ஒருவர் பவர் ஸ்டார். இவரைப் பற்றி வெளிவரும் எந்தவித செய்தியும் கலகலப்பூட்டுவதாக அமைந்து விடுகிறது. 

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தி வரும் இரண்டெழுத்து டான்ஸ் மாஸ்டர் சூப்பர் ஸ்டாரையும், பவர் ஸ்டாரையும் இணைத்து கமெண்ட் விட்டுள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் கஷ்டப்பட்டு பீல்டுக்கு வந்தவர், பவர்ஸ்டார் எல்லோரையும் கஷ்டப்படுத்த பீல்டுக்கு வந்தவர் என்று கிண்டலடித்துள்ளார். 

இதை அறிந்த பவர் ஸ்டார் ரசிகர்கள் கொதித்துப் போயுள்ளனராம். இவர் மட்டும் டான்ஸ் என்ற கலையை கொச்சைப்படுத்தலாம். எங்கள் தலைவர் நடிக்கக்கூடாதா? என்று டான்ஸ் மாஸ்டரை நோக்கி கேள்விகளை எழுப்பி வருகின்றனராம். 

இதனால் டான்ஸ் மாஸ்டர், பவர் ஸ்டார் இடையே தற்போது மோதல் துளிர் விட்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது

உங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும். கோபப்பட்ட லட்சுமியான ராய்





எனக்கு எனிமீஸ் அதிகமாகிட்டாங்க. வதந்தி பரப்புவதையே வேலையா வச்சுகிட்டுதிரியுறாங்க. அதெல்லாம் தப்புன்னு அவங்க உணரதான் போறாங்க என்று பல்லை நறநறத்தபடியே பேசிக் கொண்டிருப்பது சாட்சாத் லட்சுமிகரமான ராய் நடிகைதான்

நறுக்குன சாப்பாட்டு இலையில வழுக்குன ஜவ்வரிசி போல தமிழ்சினிமாவில் பட்டும் படாமலும் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை இவர்தான். இவரை பற்றிய கிசுகிசுக்கள் அண்மை காலமாக அதிகரித்திருப்பதுதான் லட்சுமியின் ஆங்கிரிக்கு ஒரே காரணம்.

இதற்கிடையில் முன்னணி ஹீரோ ஒருவர் நடித்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு இவரை அழைத்தார்களாம். ச்சும்மா இன்விடேஷன் என்றால் கோபம் வந்திருக்காது. ஒரு பாட்டுக்கு ஆடணும். வர்றீங்களா என்றார்களாம்.

உங்க படத்து பிரமோஷனுக்கு நான் எதற்கு ஆடணும் என்றாராம் ராய். இந்த விவகாரம் மழை நின்று சில வாரங்கள் ஆன பின்பும் வெப்ப தூறல்களாக விழுந்து கொண்டிருப்பதுதான் கொடுமை!

பெரும வரவேற்பை பெற்ற மதன் கார்க்கியின் முகமூடி பாடல்.


ஜீவா நடிப்பில் - மதன் கார்க்கி பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 'கோ' பாடல்களைத் தொடர்ந்து 'முகமூடி' பாடல்களும் வரவேற்பை பெற்று இருக்கின்றன.

'முகமூடி' படத்தில் மதன் கார்க்கி எழுதியுள்ள 'வாய மூடி சும்மா இருடா' என்ற பாடல் தற்போது அனைத்து எஃப்.எம் சேனல்களிலும் அடிக்கடி ஒலிபரப்பப்படுகிறது.

மதன் கார்க்கியும் 'கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ?' என்ற இப்பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று தெரிவித்து இருக்கிறார்.

த்ரிஷா மற்றும் பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இப்பாடல் தங்களுக்கு மிகவும் பிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அப்பாடல் வரிகள் இதோ :

வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!

கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!

பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.

காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !

பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?

என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?

நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?

ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?

நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!

வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!

கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?

கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

அனுஷ்காவின் ஒத்துழைப்பால் மகிழ்ந்த செல்வராகவன்.







ஜார்ஜியா நாட்டில் 'இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா என படக்குழு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி படப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அனுஷ்கா, படத்தில் தான் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு தற்போது சென்னையில் கார்த்தியுடன் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.

'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பின் போது அனுஷ்காவின் அணுகுமுறை குறித்து படக்குழு பாராட்டி வருகிறது.

அனுஷ்கா இதுவரை எந்த ஒரு படத்திற்கும் தொடர்ச்சியாக 40 நாட்கள் தேதிகள் ஒதுக்கியது இல்லையாம். அதுமட்டுமன்றி ஜார்ஜியாவில் கடுமையான குளிர் இருந்தாலும், தனது பணிகளை எந்த புலம்பலும் இல்லாமல் நேர்த்தியாக முடித்து கொடுத்து இருக்கிறார் அனுஷ்கா.

பொதுவாக, கதாநாயகிகளை 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைப்பார்கள். சகல சௌகர்யங்களும் இருக்கும்.

ஜார்ஜியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடத்தை தேடிப் பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே அந்த இடங்களில் பெரிய ஹோட்டலோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் எதைப் பற்றியும் குறை சொல்லாமல் தன் வேலையை முடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.

அனுஷ்காவின் ஒத்துழைப்பால் மகிழ்ந்த செல்வராகவன், 'இரண்டாம் உலகம்' படத்தில் அனுஷ்காவின் பணிகள் முடிந்தவுடன், அனுஷ்காவிற்கு FAREWELL பார்ட்டி கொடுத்தாராம்.