Friday 3 August 2012

100 கோடி ! வடக்கில் பறக்கும் அசின் கொடி!


'உள்ளம் கேட்குமே'வில் அறிமுகமானாலும், 'எம். குமரன் S/O மகாலெட்சுமி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலூன்றியவர் அசின்.

விஜய், அஜீத் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டு, 'கஜினி' படத்தின் இந்தி ரீமேக் மூலம் இந்தி திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நடுவில் கமலுடன் 'தசாவதாரம்' படத்திலும் நடித்தார்.

அதன் பிறகு நடித்த 'காவலன்' பெரிய வரவேற்பைப் பெறாததால், இப்போது இந்தி படங்களே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டாராம் அசின். ஏனென்றால் அசினுக்கு அங்கு அவ்வளவு டிமாண்ட்.

இது வரை 'கஜினி', 'லண்டன் ட்ரீம்ஸ்', 'ரெடி', 'ஹவுஸ் ஃபுல் 2', 'போல் பச்சன்' என ஐந்து படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார் அசின். 'லண்டன் ட்ரீம்ஸ்' படம் மட்டுமே சரியான வரவேற்பை பெறவில்லை.

மீதமுள்ள நான்கு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருக்கிறது. இதனால் கடும் சந்தோஷத்தில் இருக்கிறார் அசின்.

இது குறித்து அசின் " பணக்கார நண்பர்கள், திரையுலக வழிகாட்டிகள், சொந்தக்காரர்கள் என எந்த வித பின்புலமும் இல்லாமல் பாலிவுட்டில் இவ்வளவு தூரம் வந்தது குறித்து சந்தோஷப்படுகிறேன். தென்னிந்தியா, வட இந்தியா என நாட்டின் இரு திசைகளிலும் ஒரு நடிகையை அங்கீகரிப்பது அபூர்வம். இது எனக்கு வாய்த்தததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." என்று தெரிவித்து இருக்கிறார்.

ரஹ்மான் : விருதுகள் வெல்வாரா?


     GLOBAL INDIAN MUSIC ACADEMY (GIMA) விருதுகள் விழாவில் 7 விருதுகளுக்கு நான் இருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

2010 ஆண்டு வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த இந்திப் படம் ROCKSTAR. ரன்பீர் கபூர் நடித்த இப்படம் மக்களிடையே வரவேற்பு பெற்றது.

Best Music Arranger and Programmer, சிறந்த பின்னணி இசை, சிறந்த பின்னணி பாடகருக்காக 2 விருதுகள் (ஜாவித் அலியுடன் இணைந்து ஒரு பாடல், மோஹித் ஷொஹனுடன் இணைந்து ஒரு பாடல்), சிறந்த படப் பாடல், சிறந்த பட ஆல்பம் என மொத்தம் 7 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

Rockstar படம் மொத்தம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து Ra.one, Zindagi Na Milegi Dobara ஆகிய படங்கள் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

சூர்யா தயாரிப்பு நிறுவனத்துக்காக ஜீவா!



கோலிவுட்டின் ஒன் அண்ட் ஒன்லி காஸ்ட் எஃபெக்டீவ் ஹீரோ என்றால் அது ஜீவாதான்!

ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு , விஷால் என எல்லா இளம் ஹீரோக்களோடும் நட்புடன் பழகும் ஜீவா, கார்த்தி மற்றும் சூர்யா வட்டாரத்தில் இருந்து சற்று விலகியே இருந்து வந்தார். ஆனால் தற்போது சூர்யா பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க ஓப்புக்கொண்டிருகிறார்.

சுந்‌தர்‌.சி‌. நடி‌த்‌த தலை‌நகரம்‌, அர்‌ஜூ‌ன்‌ நடி‌த்‌த மருதமலை‌ போ‌ன்‌ற படங்‌களை‌ இயக்‌கி‌யவர்‌ சுரா‌ஜ்‌. சுந்‌தர்‌.சி‌யி‌ன்‌ உதவி‌யா‌ரா‌ன இவர்‌, தற்‌போ‌து கா‌ர்‌த்‌தி‌ நடி‌க்‌கும்‌ அலெ‌க்‌ஸ்‌பா‌ண்‌டி‌யன்‌ படத்‌தை‌ இயக்‌கி‌ வருகி‌றா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌துக்‌கு பி‌றகு இவர்‌ இயக்‌கும்‌ படத்‌தி‌ல்தான்‌ ஜீ‌வா‌ நடி‌க்‌க ஒப்புக்க்கொண்டிருகிறாராம்!

தற்போது நீ‌தா‌னே‌ என்‌ பொ‌ன்‌ வசந்‌தம்‌, முகமூ‌டி‌, என்‌றெ‌ன்‌றும்‌ பு‌ன்‌னகை‌ போன்ற படங்‌களி‌ல்‌ நடி‌த்‌து வருகி‌றா‌ர்‌ ஜீ‌வா‌, இந்‌தப்‌ படங்‌களுக்‌கு பி‌றகு, சுரா‌ஜ்‌ இயக்‌கும்‌ புதிய படத்‌தி‌ல்‌ நடி‌ப்‌பா‌ர்‌ என்‌றும்‌ சூர்யா நேரே ஜீவாவுக்கு போன் செய்து “ இந்தக்கதை உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும்” என்று சொன்னதை முன்னிட்டு, க்ரீன் ஸ்டூடியோவுக்கு கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டிருகிறராம்!

ஜீவா ஒப்புக்கொள்ள இன்னொரு காரணம், அவருக்கு இந்த படத்துக்காக 4 கோடி சம்பளம் தர க்ரீன் ஸ்டூடியோ தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது என்கிறார்கள்! ஒருபெரிய மாஸ் ஹீரோ இன்னொரு ஹீரோவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க முன்வந்ததே பெரிய விஷயம்தாம்போய்!

விமல்,சிவகார்த்திகேயன் இணையும் கேடி பில்லா கில்லாடி ரங்கா.



    பசங்க', 'வம்சம்', 'மெரினா' என வித்தியாசமான படைப்புகளை கொடுத்தவர் பாண்டிராஜ். 'மெரினா' படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார்.

தற்போது புதிய படமொன்றை இயக்க தொடங்கி இருக்கிறார். விமல், சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து இப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இருவருமே ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து இருக்கிறார்கள்.

'பசங்க' படத்தின் மூலம் விமலை அறிமுகப்படுத்தினார். 'மெரினா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தினார். தற்போது இருவரையும் ஒரே படத்தில் இணைத்து பணியாற்றுவதால், படப்பிடிப்பு மிக சுலபமாகும். இப்படத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் பாண்டிராஜ். படத்திற்கு 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்று தலைப்பிட்டு இருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக இது இருக்கும் என்கிறார்கள். படத்தின் இரு நாயகிகளில் ஒருவராக பிந்து மாதவி நடிக்க இருக்கிறார். மற்றொரு நாயகியாக 'அழகிய அசுரா ' ரெஜினா நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கில் 'சிவா மனசுல சக்தி' ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் " கேடி பில்லா கில்லாடி ரங்கா படபிடிப்பு தொடங்கி இருக்கிறது. செப்டம்பர் மாதம் வரை தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. மறுபடியும் பாண்டிராஜ் சாருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இம்முறை முழுப்படமுமே காமெடி தான். கண்டிப்பாக மெரினாவை விட அதிகமாக இப்படம் உங்களுக்கு பிடிக்கும் " என்று தெரிவித்து இருக்கிறார்

கும்கி படத்தில் யானையை மையப்படுத்தி க்ளைமாக்ஸ்.


       பிரபு சாலமன் இயக்கத்தில் 'மைனா' படத்தினைத் தொடர்ந்து 'கும்கி' படம் வெளிவருவதால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

இசை வெளியீட்டு விழாவில் படத்தின் பாடல்கள், டிரெய்லரை பார்த்தவர்கள் படம் கண்டிப்பாக வெற்றி தான் என்று விநியோகஸ்தர்கள் அனைவருமே தயாரிப்பாளர் லிங்குசாமி அலுவலகத்தினை முற்றுகையிட்டு வருகிறார்கள்.

கும்கி பாடல்கள் இளைஞர்களின் காதுகளை நிறைத்து வருகிறது. 'ஒண்ணும் புரியல', 'அய்யய்யோ ஆனந்தமே', 'சொல்லிட்டாளே அவ காதல' ஆகிய பாடல்கள் காதலர்களின் ரிங் டோனாக இருக்கிறது.

இப்படத்தில் பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். மைனா டீம் அப்படியே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறது.

தம்பி ராமையா பேசும் வசனங்கள் பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் படக்குழு.

படத்தில் யானையும் கதாநாயகனும் நட்பாக இருப்பார்களாம். அனைத்து படங்களிலுமே க்ளைமாக்ஸ் காட்சிகள் நாயகனை சுற்றி தான் இருக்கும். ஆனால் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டும் பிரபு சாலமன், கும்கி க்ளைமாக்ஸ் காட்சியினை யானையை மையப்படுத்தி வைத்து இருக்கிறாராம்.

அமெரிக்கா,பிரிட்டனில் ஒரு கோடி கூட வசூல் செய்யாத பில்லா 2.


     அஜீத்தை 'கிங் ஆஃப் ஓபனிங்' என்பார்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள். காரணம் அவரது படம் வெளியான முதல் வாரம் எந்த ஒரு திரையரங்கிலும் டிக்கெட் கிடைப்பது அரிது.

விநியோகஸ்தர்கள் முதல் வாரத்தில் கடகடவென கல்லாவை கட்டி விடுவார்கள் . 'பில்லா 2' விலும் நல்லா கட்டலாம் கல்லா என நினைத்த விநியோகஸ்தர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இரண்டாம் நாள் முதலே பட வசூல் குறைய ஆரம்பித்தது. பார்வையாளர் மிகவும் குறைய ஆரம்பித்ததால், இப்போது பல தமிழக திரையரங்குகளில் 'நான் ஈ' கொடி கட்டி பறக்கிறது.

இப்போது 'பில்லா 2' படத்தின் வெளிநாட்டு வசூல் எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் ஒரு கோடி ரூபாய் கூட பில்லா 2 வசூல் செய்யவில்லை.

பிரிட்டனில் 'பில்லா 2' முதல்வாரம் ஈட்டிய தொகை ரூ 61.20 லட்சம். பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் 20 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

அமெரிக்காவில் மிகவும் பிரம்மாண்டமாக 31 திரையரங்குகளில் இப்படத்தை வெளியி்ட்டனர். அங்கு முதல்வாரம் மொத்தம் 64 லட்சத்தை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.

மூன்று வாரங்களில் அமெரிக்காவில் 90 லட்சம், பிரிட்டனில் 79 லட்சம் மட்டுமே வசூல் செய்து இருக்கிறது. இத்தகவல்களை, பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு 'பில்லா 2' பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசை! ஜீவா


ச்சர்யம்... கோடம்பாக்கத்தின் இயக்குநர்கள், நடிகர்கள் அனைவரின் குட் புக்கிலும் இருக்கிறார் ஜீவா. 'முகமூடி’, 'நீதானே என் பொன்வசந்தம்’ என மோஸ்ட் வான்டட் படங்களின் ஹீரோவிடம் பேசியதில் இருந்து...
 ''எந்த ஆர்ட்டிஸ்ட்கிட்ட கேட்டாலும் 'நல்ல பெர்ஃபார்மர்’னு உங்களைக் கை காட்டுறாங்க... உங்களுக்குப் பிடிச்ச நடிகர் யார்?''
''விஜய், கமர்ஷியல் சினிமாவுக்கான ஸ்பெஷலிஸ்ட். அஜித், தன் இமேஜ்பத்திக் கவலையே இல்லாமல் அடிச்சுப் பட்டையைக் கிளப்புறார். கார்த்தி செலெக்ஷன் எப்பவும் நல்லா இருக்கு. ஆர்யா படங்கள் எப்பவும் கலகல. தனுஷ், தவிர்க்க முடியாத நடிகரா உருவாகிட்டார். தேசிய விருதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் வாங்குறார். சின்சியரா வேலை பார்த்தா விருது பக்கத்துலனு நம்பிக்கை கொடுத்திருக்கார். இதுக்கு நடுவுல விஷால் சட்டுனு ஆச்சர்யம் கொடுத்துட்டார். கமர்ஷியல், அடிதடி படங்களாப் பண்ணிட்டு, 'அவன் இவன்’ல அப்படி ஒரு கேரக்டர் நடிக்க ரொம்பத் தைரியம் வேணும். பார்க்க ஈஸியாத் தெரியும்... ஆனா, அது இவ்வளவு ஈஸி கிடையாது. இங்கே யாரையும் தப்புக் கணக்கு போட முடியாது பாஸ்.''
''நல்ல கம்போசிஷன் இருக்கே உங்க படங்களில்... நடிக்கும் படங்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீங்க?''
''சினிமாவுக்கு வந்த 11 வருஷங்களில் 20 படங்கள் நடிச்சிட்டேன். அதுல ஆறேழுதான் சொல்லிக் கிற மாதிரி இருக்கும். எனக்கு இப்போ அமீர் கான் மாதிரி ஆகணும்னு ஆசையா இருக்கு. 'தாரே ஜமீன் பர்’, 'லகான்’, 'மங்கல் பாண்டே’, 'தில் சாஹ்தா ஹை’, 'கஜினி’... என்னா மனுஷங்க அவர்? இத்தனைக்கும் அவரோட பல படங்கள் சோதனை முயற்சிதான். ஆனா, அதில் பணமும் அள்றார்... மனசையும் அள்றார். யாருக்கு சார் கிடைக்கும் இந்த மதிப்பு? மூணு கோடிக்குப் படம் பண்ணிட்டு 30 கோடிக்கு சாமர்த்தியமாக வித்தா, அது அநியாயம். யாரும் படம் பார்த்துத் திட்டக் கூடாது. ஒருவேளை படம் கையைச் சுட்டாலும் சரி, அடுத்த படத்தில் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு விநியோகஸ்தர்கள் சொல்றது மாதிரி இருக்கணும். ஒரு நடிகனுக்கு அதுதான் நியாயமான எல்லை. இதை எல்லாம் மனசுல வெச்சுதான் நான் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். ராஜேஷோட 'எஸ்.எம்.எஸ்.’ பண்ணலாம்னு தீர்மானிச்சது நல்ல மூவ். ஆனா, சமயங்களில் சில நல்ல கதைகளைத் தவிர்த்து இருக்கேன். என் ஜட்ஜ்மென்ட் தப்பாவும் ஆகி இருக்கு.''
''எந்த டைரக்டர்கிட்ட வேலை செய்ய ஆசை?''
''ஏங்க... எனக்கு என்ன குறைச்சல்? ராம், அமீர், கே.வி.ஆனந்த், ஷங்கர், மிஷ்கின், கௌதம் மேனன்... நச் இயக்குநர்களோட நல்ல நல்ல படங்கள் பண்ணி இருக்கேன். அடுத்து, இந்தியாவே கொண்டாடுற ரவி.கே.சந்திரனோட ஒரு படம், கமர்ஷியல் கிங் ஹரி சாரோட படம் பண்ணப் பேசிட்டு இருக்கேன். சுராஜ் கூடப் படம் பண்ணுவேன். பெர்சனலா செல்வராகவன், 'மௌனகுரு’ சாந்தகுமார், 'ஆரண்ய காண்டம்’ குமாரராஜா இவங்ககிட்ட எல்லாம் நடிக்க ஆசையா இருக்கு. 'மௌனகுரு’ நான்தான் செஞ்சிருக்க வேண்டியது. கதையைக் கேட்டப்போ என்னமோ பயந்துட்டேன். என் ஜட்ஜ்மென்ட் தப்பும்னு சொன்னேன் இல்லையா... அதான் இது.''
''சண்டை மறந்து சிம்புகூட நட்பு ஆகிட்டீங்களா?''
''என்னைக்குக் கட்டி உருண்டோம்? நான் யார்கிட்டயும் மோதுறது இல்லை. ஜாலியா இருக்கிறதுதான் என் குணம். அவர்கிட்ட பெரிசா தொடர்பு கிடையாது. அவ்வளவுதான்.'' 

எனக்கு எந்த விருதும் வேண்டாம். ரஜினியின் பாராட்டு ஒன்றே போதும். நான் ஈ சுதிர்.




       திடீரென ரஜினி போனில் அழைத்து பாராட்டியபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றார் வில்லன் நடிகர் சுதீப். ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் சுதீப். அவர் கூறியதாவது:

நான் எப்போதுமே ஸ்கிரிப்ட்டைவிட அதை யார் இயக்குகிறார்கள் என்று பார்த்துத்தான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். இயக்குனர்கள் ராஜ்மவுலி, ராம் கோபால் வர்மா படங்களில் அப்படித்தான் நடித்தேன். பெங்களூரில் எனது தயாரிப்பாளர் நண்பர் ஒருவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசியில் முக்கிய நபர் ஒருவர் என்னை அழைப்பதாக கூறி என்னிடம் போனை தந்தார்கள்.

மறுமுனையில் பேசுவது யார் என்று தெரியாத நிலையில் போனை வாங்கி பேசினேன். அது ரஜினிசார் குரல். ஒரு நிமிடம் என்னால் நம்ப முடியவில்லை. இன்ப அதிர்ச்சியாக இருந்தது. யாரோ குரல் மாற்றிப்பேசி ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். அது யார் என்று கேட்க கூட முடியாமல் தயங்கினேன். ‘நான் ஈ’ படத்தில் எனது நடிப்பை பாராட்டினார்.

பெரிய நடிகர்கள் போன் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றிருப்பது எண்ணி மகிழ்ந்தேன். எனக்கு இனிமேல் எந்த விருதும் வேண்டாம். எனக்கு கிடைத்த பாராட்டுகளே போதும். இப்போதைக்கு மற்றவர்களின் விமர்சனம்தான் அவசியம்.

தல நடிகரின் கோபத்திற்கு ஆளானா மங்காத்தா காமெடி நடிகர்.


        யாராவது பேசினா சட்டுனு கோபமா பேசி பேச்சை கட் பண்ணுவாராம் ஆண்ட்ரி ஹீரோயின். இப்ப சாப்ட் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்... கோபத்தால் நெறய படங்க போனதுதான் மிச்சம். இனிமே நடிப்புல கவனம் செலுத்துன்னு தோழிங்க சொன்ன அட்வைசை ஏற்று மாறிட்டாராம். இதுக்கு கைமேல பலன் கெடச்சிருக்காம். மல்லுவுட்லயிருந்தும் இப்ப சான்ஸ் வர ஆரம்பிச்சிருக்காம். இதே பாணிய தொடர்ந்தா டாப் ஹீரோயின் இடத்த பிடிப்பேன்னு சொல்றாராம்... சொல்றாராம்...


இனிஷியலோடு கூடிய பிரகாச ஹீரோ கோலிவுட்ல விட்ட இடத்த பிடிக்கறதுக்கு தவமா தவமிருக்காராம்... இருக்காராம்... சில பெரிய ஹீரோயினிங்கிட்ட தன்னோட ‘மியூசிக்’ படத்துக்கு கால்ஷீட் கேட்டப்ப கைய விரிச்சிட்டாங்களாம். எல்லாமே மார்க்கெட்ட வச்சித் தான் மரியாதை தர்றாங்க. அந்த மார்க்கெட்ட மறுபடியும் பிடிச்சிக்காட்றேன்னு வெறுத்துப்போய் சொன்னவரு மும்பையிலிருந்து புதுமுகத்த இறக்குமதி பண்ணிருக்காராம். அவருக்கு அந்த சாயலே தெரியக்கூடாதுனு மறைந்த நடிகையர் திலகத்தோட பேர வச்சிருக்காராம்...
இருக்காராம்...

தல ஹீரோ பிரேம காமெடி நடிகருக்கு சீக்ரெட்டா வீடியோ மெயில் அனுப்பனாராம்... அனுப்பனாராம்... அவரோ அந்த வீடியோவ தன்னோட டுவிட்டர் பக்கத்துல போட்டு மத்தவங்களுக்கும் அனுப்பிவச்சிட்டாராம். ‘சீக்ரெட்டா ஒரு மேட்டர அனுப்பனா இப்படியா அவர் எல்லாருக்கும் அனுப்புவாரு’னு ஹீரோ கோபத்துல இருக்காராம்... இருக்காராம்...

விஜய் ஆண்டனிக்கு "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை!


Vijay Antonys Not
விஜய் ஆண்டனி இசையமைக்கும் 25வது படம், "நான்! இது, அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படமும் கூட. படத்தில், ரூபா மஞ்சரி, அனுயா, விபா என, மூன்று நடிகைகள் அவருடன் நடித்துள்ளனர். ஆனால், இதில் ஒரு நடிகையுடன் கூட, அவருக்கு "டூயட் கிடையாதாம். அதனால், "இந்தப் படத்தை பொறுத்தவரை, எந்த நடிகையுடனும் எனக்கு, "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்கிறார் விஜய் ஆண்டனி. அதேசமயம், அடுத்தடுத்து நடிக்கும் படங்களில், நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி உருவாகும் வகையில் நடித்து, இளவட்ட ரசிகர்களை குஷிப்படுத்துவேன் என்கிறார்.

அமலா பால் வாய்ப்பை பறித்த ஹன்சிகா மோத்வானி!


Hansika Motwani has snatched the opportunity to Amala paul!         வேட்டை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். தமிழில் ஹிட்டான வேட்டை படம் தெலுங்கில் பலே தம்மடூ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். தமிழில் மாதவன் நடித்த ரோலில் நடிகர் சுனில் நடிக்கிறார். படத்தின் ஹீரோயினாக தமிழில் நடித்த அமலா பால் நடிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹன்சிகா மோத்வானியை ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோல தமிழில் சமீரா ரெட்டி நடித்த ரோலில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

Wednesday 1 August 2012

சசிகுமார் படத்தை விலைக்கு கேட்கும் சூர்யா நிறுவனம்!


      வெங்கட்பிரபுவின் உதவியாளர் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் ‘அட்டக்கத்தி’ படத்தை வாங்கி, ஒரு ஏரியாவைக் கூட யாருக்கும் விற்காமல் தமிழகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்கிறது சூர்யாவின் சொந்தப்பட நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ!

தற்போது இந்தப் படத்தை தொடர்ந்து சசிகுமார் ஹீரோவாக நடித்து தயாரித்து வரும் ‘ சுந்தரபாண்டியன்’ படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை விலைக்கு கேட்டிருகிறதாம் சூர்யாவின் படக்கெம்பெனி! காரணம் வேறொன்றும் இல்லை! இந்தப் படத்தை இயக்கும் சசியின் உதவியாளர் பிரபாகரன் இயக்குகிறார். முதலில் இந்தக்கதை ரெடியானதும் கார்த்திக்குத்தான் சொல்லியிருகிறார். கார்த்தியும் கதை ரொம்ப நல்லா இருக்கு! பருத்திவீரணுக்கு அப்புறம் நான் இப்படித்தான் ஒரு மதுரைக் கதையை எதிர்பார்த்தேன். ஆனால் 2013 ஆகஸ்ட்வரை பொறுத்திருங்கள் என்றாராம்! இதை சசியிடம் பிரபாகரன் சொல்ல, அதற்கு கார்த்தியின் மார்கெட் எங்கேயோ போய்விடும், நானே நடிக்கிறேன், தயாரிக்கிறேன் படத்தை சீக்கிரம் ரிலீஸ் செய்யலாம் என்று சொல்லியிருகிறார் சசி! மேலும் ஈசன் கடனில் இருக்கும் சசிக்கு நம்ம படம் உதவினால் சந்தோஷமே என்று பிரபாகரன் உடனே களத்தில் இறங்க முதல் 20 நாள் படப்பிடிப்பை முடித்து எடிட் செய்து பார்த்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் வேறொரு படத்தில் இந்த படத்தின் நாயகி லட்சுமி மேன்னை புக் செய்வதற்காக இந்தப் படத்தின் ரஷ்காட்சிகளை பார்த்த, க்ரீன் ஸ்டூடியோ உரிமையாளர் ஞானவேல் மிரண்டுபோய் கார்த்தியிடம் சொல்ல, நமக்கு கிடைக்காவிட்டாலும், நமக்கு தியேட்டர் உரிமை கிடைத்தால் கூட ஒகேதான் வாங்குங்கள் என்று சொல்ல தற்போது 5 கோடி ரூபாய்க்கு தியேட்டார் உரிமையை கேட்கிறார்களாம்!

அப்படியென்ன இந்தப் படத்தில் புதுச்சரக்கு இருக்கு என்று பார்த்தால் மதுரையை இனிக்க இனிக்க காதல் பின்னனியில் அலசும் முதல் யதார்த்த வகைப்படமாக இருக்கும் என்பதுதான் காரணம் என்கிறார்கள். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட அறுவாலோ, ஒரு சொட்டு ரத்தமோ கிடையாது! ஆனால் முழுக்க முழுக்க மதுரைதான் படம் என்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் நடித்து வெளியன ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ போல, சசிகுமாரை கடனில் இருந்து மீட்டு எடுக்குமா அவர் நடிக்கும் சுந்தரபாண்டியன் என்றால்… “ கண்டிப்பாக! என்று உற்சாகமாகக் கூவுகிறார்கள் அவரது உதவியாளர்கள் தரப்பில்! ” சசி ஒரு கதையை தேர்ந்தெடுத்தார் என்றால் அது கில்லி மாதிரி ரசிகர்களுக்கு பிடிக்கும். ‘சுந்தரபாண்டியமும் அப்படித்தான்” என்கிறார்கள்! படத்தைப் பற்றி சசியிடம் கேட்டால்… தனது உதவியாளரை விட்டுக்கொடுக்காமல் உற்சாகமாகப் பேசுகிறார்.

“தனியாப் படம் பண்ண விரும்பி ஒரு கதை பண்ணதும், பிரபு என்கிட்ட வந்து நிக்கலை. ரெண்டு மூணு தயாரிப்பாளர்கள்கிட்ட கதை சொல்லி அது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தும், அவங்களால பண்ண முடியாமப்போச்சு. இருந்தாலும், அவன் வெளியேதான் வாய்ப்பு தேடிட்டு இருந்தான். அந்தத் தேடலோட தீவிரம் எனக்குப் பிடிச்சது. அவன் போராட்டம் என் போராட்டமாத் தெரிஞ்சது. 'கதை சொல்லு... பார்ப்போம்’னு சொன்னேன். மழையில நனைஞ்ச செடி மாதிரி சிலிர்க்கவெச்சான். ஸ்பாட்ல பிரபு வேலை பார்க்கிற விதம் எனக்குப் பெருமையா இருக்கு. சுந்தரபாண்டியனுக்கு அடுத்தபடியா இன்னும் ரெண்டு அறிமுக இயக்குநர்களோட படங்கள்ல நடிக்கிறேன். அதுக்கான தைரியத்தைக் கொடுத்தது பிரபுதான்.'' என்று ஆச்சர்யப்படுத்தும் சசியிடம் கதை பற்றிச் சொல்ல முடியுமா என்றால்.. “ இது புதிதாக பூக்க இருக்கும் ஒரு கலைஞனின் உண்மையும் கற்பனையும் கலந்த காப்பிரைட் சம்பந்தப்பட்டது. அவனைக் கேட்காமல் நான் படத்தைப் பற்றி அதிகமாக பேச முடியாது! என்று பொடி வைக்கிறாரார்! சசி இந்த இடத்தில் ஹீரோ இல்லை, ஒரு மாணவனின் குரு!

துப்பாக்கி நீதிமன்ற தீர்ப்பு தள்ளிப்போனது



          துப்பாக்கி தலைப்புக்கு எதிராக கள்ள துப்பாக்கி படக்குழுவினர் வழக்கு தொடர்ந்தது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று மூன்றாவது தடவையாக கோர்டுக்கு சென்ற இந்த வழக்குக்கு இன்று ஒரு முடிவு எட்டப்படும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பு மறுபடியும் ஆகஸ்ட் 6 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரசன்னாவின் மனைவியாக இருக்க விரும்பாத சினேகா



        பிரசன்னாவிற்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்று நடிகை சினேகா கூறியுள்ளார்.சினேகா- பிரசன்னா திருமணம் முடிந்தாலும் அவர்கள் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டிகள், விளம்பரங்கள் விறுவிறுப்பாகவே இருக்கின்றது.

சமீபத்தில் சினேகா- பிரசன்னா பிரிவிற்கு யார் காரணம் என்ற ஒரு விளம்பரம் வந்து தமிழகத்தை கலக்கியது.

இந்நிலையில் மற்றொரு எதிர்மறையான பதிலை கொடுத்து சினேகா அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சமீபத்தில் சென்னையில் ஆடை, அலங்கார நடைமேடை விழா நடந்தது.

இதில் சினேகா- பிரசன்னா இருவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பின்பு, சினேகாவிடம் பிரசன்னாவோட மனைவியாக எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க, பிரசன்னாவிற்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்றும் அவருடைய காதலியாக இருக்க விரும்புவதாகவும் நடிகை சினேகா பதிலளித்தார்.

இதே நிகழ்ச்சி சென்ற வருடம் நடந்தபோது இருவரும் கலந்து கொண்டனர். ஆனால் அப்போது காதலர்கள் என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கார்த்தி கலந்து கொண்ட நிகழ்ச்சி தடியடி… தள்ளுமுள்ளு…



           கிரிக்கெட் என்றால் ஆர்வத்தோடு அது பற்றி சிலாகிக்கும் நம்ம ஊர் ஹீரோக்களில்கார்த்தி ரொம்பவே வித்தியாசமானவர். நமது பாரம்பரிய விளையாட்டான கபடிக்கும் மரியாதை கொடுப்பவர்.

சில தினங்களுக்கு முன் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற மிகப்பெரிய கபடிப் போட்டி நிகழ்ச்சிக்கு நேரில் சென்று வீரர்களுக்கும் வீராங்கனைக்கும் பரிசளித்தார்.

கார்த்தி வருகிறார் என்றதும் அப்பகுதி மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்துவிட்டார்கள். அவரை பார்க்கும் ஆசையில் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிலரால் கேலரி சரிந்து ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் வேறு! இதனால் ஒரு நிமிடம் திகைத்துப் போன கார்த்தி, ‘எல்லாரும் அமைதியா இருங்க. நானே உங்க இடத்துக்கு வர்றேன்’ என்று கூறிவிட்டு அந்த கேலரியை சுற்றி ஒரு ரவுண்ட் அடித்தார்.

இவ்வளவு ஸ்போர்ட்டிவாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருக்கும் ஒரு சின்ன அதிர்ச்சி. கார்த்திக்காக போடப்பட்டிருந்த இருக்கையின் இருபுறத்திலும் தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் அமர்ந்திருக்க, அவர்களிடம் பேசினாலும் சிக்கல். பேசாவிட்டாலும் சிக்கல். தேவையில்லாமல் அரசியல் சாயம் பூசப்படுமே என்று அஞ்ச ஆரம்பித்துவிட்டார் அவர்.

இவர்கள் இல்லையென்றால் அதிக நேரம் இருந்திருப்பாரோ என்னவோ? சட்டென்று கிளம்பி, விர்றென பறந்தேவிட்டார்.

SIIMA விழாவில் ஆரம்பித்த நட்பை தொடரும் சிம்பு,தனுஷ்.


       துபாயில் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட நட்பு, சிம்பு - தனுஷ் இருவரையும் நெருங்கிய நண்பர்களாக ஆக்கி இருக்கிறது.

அடிக்கடி பார்ட்டியில் ஒன்றாக பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தார்கள்.

தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றதில் இருந்து தமிழ் திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து இருக்கிறது. காரணம் தனுஷிற்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் பார்ட்டி கொடுத்தவர் சிம்பு என்பது தான்.

தனுஷின் நெருங்கிய நண்பர்கள், குடும்ப நண்பர்கள், படங்களில் தனுஷுடன் நடித்தவர்கள் என அனைவரையும் ஒன்றாக அழைத்து பார்ட்டி ஒன்றை தயார் செய்தார் சிம்பு.

அந்த இடம் முழுவதுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தனுஷ் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த நெருங்கிய நண்பர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தனுஷ் சிறிது நேரம் எதுவுமே பேசவே இல்லையாம்.

அதுமட்டுமன்றி 'ஆடுகளம்' படம் தனுஷிற்கு பல்வேறு விருதுகள் பெற்றுக் கொடுத்ததால், பிறந்த நாள் கேக்கின் மீது சேவல் போலவே வடிவமைத்து இருந்தார் சிம்பு.

சிம்பு இவ்வாறு தனக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்டி கொடுப்பார் என்று சிறிதும் எதிர்பாராத தனுஷ் மனம் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

அப்பார்ட்டியில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, சரத்குமார், ராதிகா சரத்குமார், சந்தானம், தமன்னா, வெற்றிமாறன், ஜெய், அனிருத், விஜய் ஜேசுதாஸ், பிரேம்ஜி, அமலா பால், நரேன், பார்வதி ஒமணக்குட்டன் என ஒரு நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தியது.

பிறந்த நாள் பார்டி குறித்து தனுஷ் " எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமன்றி எனக்கு சர்ப்ரைஸாக பார்ட்டி கொடுத்த சிம்புவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

ரஜினியின் கோச்சடையான் படம் முழுவதும் காமிக்ஸ் புத்தகத்தில் வருகிறது.



ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான், காமிக்ஸ் புத்தகமாக வெளிவர உள்ளது. தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் பட ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் ரிலீசாக உள்ளது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக படத்தின் பாடல் வெளியீட்டு விழா டோக்கியோவில் நடைபெறுகிறது. அப்போது ஜப்பானிலுள்ள ரஜினி ரசிகர்கள் திரளாக விழாவில் பங்கேற்க உள்ளனர். கோச்சடையானÕ மொபைல் போன்களும் விழாவில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த கட்டமாக படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் காமிக்ஸ் புத்தகத்தில் கோச்சடையான‘ பட கதையை வெளியிட உள்ளனர்.

முழு படமும் காமிக்ஸ் புத்தகமாக வெளியாக உள்ளது. பட ரிலீசுக்கு பின்பு இந்த புத்தகம் வெளியாகும். அதேபோல் கோச்சடையான¢ கேம் ஒன்றையும் உருவாக்க உள்ளனர். இதற்கு முன் பாலிவுட்டில் க்ரிஷ், ராஒன், கஜினி படங்களின் கேம் வெளியிட்டனர். தமிழில் முதல்முறையாக கோச்சடையான் கேம் வெளியிட உள்ளனர். இதில் ரஜினி உருவில் பொம்மை உருவாக்கப்பட்டு, வில்லன்களுடன் மோதுவது போன்ற கேம் வடிவமைக்கப்பட உள்ளது.


இது பற்றி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறும்போது, முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். சர்வதேச கேம் தயாரிப்பு நிறுவனங்களும் எங்களை தொடர்புகொண்டன. காமிக்ஸ் புத்தகம் தயாரிக்கும் பணி குறித்தும் சம்பந்தப்பட்ட சில நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்.

ஆதிபகவன் படம் தாமதமானது ஏன்? படக்குழுவினர் வெளியிடும் ரகசியம்.

      படத்தை ஆரம்பித்தால், அப்படம் எப்போது முடியும் என்பது அவருக்கே தெரியாது. யாருக்கு? இயக்குனர் அமீருக்கு!

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், நடிகர்களிடமிருந்து தேவையான நடிப்பை வாங்கி படத்தினை செதுக்குவார் அமீர்.

ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் 'ஆதிபகவன்' படத்தினை இயக்கி வந்தார் அமீர். படத்தின் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை வரிசையாக காட்சிப்படுத்துவதால் தான் தாமதம் என்று செய்திகள் வெளியானது.

எப்படி என்றால், படத்தின் முதல் காட்சி மும்பையில் என்றால் அங்கு சென்று காட்சிப்படுத்தி விட்டு திரும்பி விடுவது, இறுதி காட்சி திரும்பவும் மும்பை என்றால் திரும்பவும் மும்பைக்கு செல்வது என்று 'ஆதிபகவன்' படத்தினை அதே வரிசையில் காட்சிப்படுத்தினாராம் அமீர்.

இப்படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே படத்தை எப்போது முடிப்பார் என்ற எரிச்சல் அடைந்தாலும், படம் நன்றாக அமைந்து இருப்பதில் சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.

ஒரு வழியாக 'ஆதிபகவன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டது. ஜெயம் ரவி எப்போதுமே ஒரு படத்தினை முடித்து விட்டுதான் அடுத்த படத்திற்கு தேதிகள் ஒதுக்குவார். 'ஆதிபகவன்' படத்தினால் அதிகம் பாதிப்படைந்தவர் என்றால் அது ஜெயம் ரவி தான்.

'ஆதிபகவன்' படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிகளை ராஜஸ்தானில் படமாக்கி வந்தார்கள். இப்படத்தின் இறுதிவடிவம் அமீருக்கு பெரும் திருப்தியளித்து இருக்கிறதாம்.

படத்தினை செப்டம்பரில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பெங்களூரு பிரகாசிக்கிறது... ஸ்ரேயா ஜொலிக்கிறார்...






பெங்களூருவில் மிகுந்த பொருட்செலவில் கலைநயத்துடன் நிர்மாணிக்க பட்ட படப்பிடிப்பு அரங்கத்தில் ஏராளமான துணை நடிகர் நடிகையர் சூழ பிரேம், சுகன்யா, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் படம் “சந்திரா’. இந்தியன் கிளாசிக் ஆர்ட்ஸ், நரசிம்ம ஆர்ட்ஸ் என்ற நிறுவனங்களும் இணைந்து வழங்கும் “சந்திரா’ படத்தின் மூலம் கணேஷ் வெங்கட்ராமன், பிரேம் ஆகிய இருநாயகர்களும் உச்சநிலைக்கு செல்வார்கள் என்று படபிடிப்பு குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

“ஸ்ரேயா எங்களை ஆச்சரிய படுத்துகிறார்.. மயக்குகிறார். அவர் அழகால் மட்டுமின்றி... உழைப்பாலும் தான்’ என்கிறார் சந்திரா படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் ரூபா ஐயர். இப்படத்தில் நடிக்கும் ஸ்ரேயா படப்பிடிப்பு குழுவினரை மட்டுமின்றி எல்லோரையும் தன்னுடைய திறமை மூலம் கவர்ந்து விட்டார். சிறிதளவும் அயர்ச்சி இன்றி அவர் நடிப்பது எங்களுக்கு உண்மையில் ஆச்சரியம் தான். இவர் ஒரு ஒளிபதிவாளரின் பொக்கிஷம்... எந்த கோணத்தில் படம் எடுத்தாலும் அழகாகவே இருக்கிறார். எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்கிறார்.. நடிப்பாகட்டும், நடனம் ஆகட்டும்... இவருடன் பணிபுரிவது மிகவும் உற்சாகமானது என்று கூறினார்.

புன்னகையோடு இவரது புகழாரத்தை ஏற்று கொண்ட ஸ்ரேயா சரண் “ரூபா ஐயர் மிகவும் திறமையான இயக்குனர்... இவர் திட்டமிடுவதில் ஒரு நேர்த்தி இருக்கும்... நம்மிடம் வேலை வாங்குவதிலும் சிறிதும் பதட்டம் இன்றி செயல்படுகிறார்.. இப்படத்தில் நான் இளவரசி.. அதை போலவே உணர வைக்கப்படுகிறேன்... ரூபா இந்திய அளவில் பெரிய இயக்குனராக வருவார்’ என்றார்.

தாண்டவம் படத்தில் கண் தெரியாதவராக நடிப்பதற்காக வெளிநாட்டவரிடம் பயிற்சி பெற்றேன். விக்ரம்


      விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் இணைந்து நடிக்கும் படம் ‘தாண்டவம்’. விஜய் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மயிலாப்பூர் ஐநாக்ஸ் தியேட்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-


‘தெய்வத் திருமகள்’ படத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து இந்த படத்தை செய்கிறோம். வித்தியாசமான படம். அறுபத்தைந்து நாட்கள் லண்டனில் படப்பிடிப்பு நடத்தினோம். அதிகாலையிலிருந்து துவங்கி மாலை 3 மணி வரை படப்பிடிப்பு நடந்தது. மீண்டும் 7 மணிக்கு தொடர்ந்தோம். தினமும் காலை முதல் இரவு வரை கஷ்டப்பட்டு வேலை செய்வோம்.

இயக்குனர் விஜய் தூங்கி, சாப்பிட்டு பார்த்ததே இல்லை. பம்பரமாக பணியாற்றினார். ‘தாண்டவம்’ நல்ல கதை. படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் நிறைய இருக்கும். அனுஷ்கா, எமியின் ‘கெமஸ்ட்ரி’ நன்றாக இருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையில் கலக்கி உள்ளார். இரு வேடத்தில் நடக்கிறேன். அதில் ஒன்று பார்வையற்ற கேரக்டர்.

வெளிநாட்டில் டேனியல் கிஷ் என்ற பார்வையற்றவர் யார் துணையும் இன்றி சப்தங்களின் எதிரொலியை துல்லியமாக உணர்ந்து சராசரி மனிதனை போல் சைக்கிளும் ஓட்டுகிறார். அவரை முன் மாதிரியாக வைத்து பார்வையற்ற வேடத்தை செய்கிறேன். அவரிடம் பயிற்சியும் பெற்றேன்.

‘காசி’ படத்தில் கண் தெரியாத வேடத்தில் நடித்தேன். அதேபோல் பல படங்களில் பார்வையற்ற கேரக்டர்களில் வித்தியாசங்கள் காட்டி என்னால் நடிக்க இயலும்.

இவ்வாறு விக்ரம் கூறினார்.

அப்போது இயக்குனர் விஜய், நடிகை எமி, இசையமைப்பாளர் ஜி.பி.பிரகாஷ், பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார், யு.டி.வி. தனஞ்செயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கம்ப்யூட்டரில் இருந்து திருடி கோச்சடையானை விற்க சதியா?


ரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள ‘கோச்சடையான்’ அனிஷேன் படம் டிசம்பரில் ரிலீசாகிறது. ஸ்டூடியோக்களில் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

யாரேனும் இப்படத்தை கம்ப்யூட்டரில் இருந்து திருடி திருட்டு வி.சி.டி.யாக வெளியிடப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து ‘கோச்சடையான்’ படத்தக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகர் கூறியதாவது:-

திரைப்படத்துறையில் திருட்டு வி.சி.டி. மிகப்பெரிய சவாலாக உள்ளது. ‘கோச்சடையான்’ படம் ‘3டி’ என்பதால் இந்த திருட்டு வி.சி.டி.யாக எடுப்பது கடினமாக இருக்கும்.

திருட்டு வி.சி.டி. பிரச்சினை நாடு முழுவதும் இருக்கிறது. ‘கோச்சடையான்’ படத்தை பாதுகாக்கும் பொறுப்பை படத்தின் இயக்குனர் சவுந்தர்யா கவனிக்கிறார். படத்துக்கான பணிகள் அனைத்தையும் அவர் தனது கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைத்துள்ளார். ஸ்டுடியோவுக்குள் யார் வருகிறார்கள், வெளியே யார் போகிறார்கள் என்பதெல்லாம் அவருக்கு தெரியும். அனைத்து விவரங்களும் ஒரு சர்வரில் பதிவு செய்யப்படுகிறது. சாதாரணமாக யாரும் ஸ்டூடியோவுக்குள் வரமுடியாது.

‘கோச்சடையன்’ படத்தில் பணிபுரிபவர்களுக்கு விசேஷ அடையாள அட்டை தரப்பட்டு உள்ளது. இந்த படத்துக்கான பணிகள் நடைபெறும் கம்ப்யூட்டர்களில் தகவல்களை பெறலாம். ஆனால் எதையும் டவுன்லோட் செய்ய முடியாது. ஏதேனும் டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் சவுந்தர்யா அதற்கு ஒரு கோட் நம்பரை தரவேண்டும். அப்போதுதான் டவுன்லோட் செய்ய முடியும்.

அதுபோல் சி.டி.க்களிலோ பென் டிரைவ்களிலோ கூட விவரங்களை எதையும் காப்பி செய்யமுடியாது. ‘கோச்சடையான்’ படத்தை காமிக்ஸ் புத்தகமாக வெளியிட பலர் அணுகி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இயக்குனர் ஆகிறார் நடிகை ரோஹினி!



Actress Rohini becomes director!          நடிகை ரோஹினி விரைவில் சினிமா ஒன்றை இயக்கவுள்ளார். வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவை விட்டு விலகியிருந்த ரோஹினிக்கு பல ஆண்டுகளாக சினிமாப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதையடுத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார். அப்பாவின் மீசை என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த கதையையே படமாக எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அப்பாவின் மீசை கதையை டைரக்டர் சேரனிடம் சொல்லியிருக்கிறார்.

கதை சேரனுக்கு பிடித்து விட்டதால், உடனடியாக படமாக எடுக்கும் பணிகளை கவனிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதோடு படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

விரைவில் பாலாவின் பரதேசி!


Balas Paradesi soon!பாலாவின் பரதேசி படம் விரைவில் ரீலிஸ் ஆகும் என கூறப்படுகிறது. தேசிய விருது இயக்குனர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். தன்ஷிகா மற்றும் வேதிகா ஹீரோயினாக நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படம் மலையாள நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. படத்திற்கு பரதேசி என்று பெயரிட்டிருக்கிறார் பாலா. படத்தின் சூட்டிங் முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து பாலா, படத்தை தீபாவளிக்கு முன்பே வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம். இதனால் அடுத்த மாதம் மத்தியில் பரதேசி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு தெரிவித்துள்ளது. பரதேசி படத்துக்கு பிறகு விஷாலை வைத்து படம் இயக்க பாலா திட்டமிட்டு இருக்கிறாராம்.

அழகின் ரகசியத்தை கூறும் த்ரிஷா!



Trisha says the secret of beauty!          அழகு என்பது உடலைப் பொருத்த விசயமா? அது மனதோடு தொடர்புடையதா என்று கேள்வி எழும் நிலையில், உடல் அழகாயிருப்பதற்கு மனம் முக்கிய காரணமாகிறது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாதுறையில் இருந்தாலும் அங்கங்கே அழகான அளவோடு இருக்கும் நடிகை த்ரிஷா தனது அழகை கட்டுப்பாட்டோடு வைக்க அதிகம் மெனக்கெடுவதில்லையாம். நிறைய தண்ணீர், சாத்துக்குடி, மாதுளை ஜூஸ் குடிக்கிறாராம். நீச்சல் மிகவும் பிடித்தமான விசயமாம். வெளிநாட்டிற்குப் போனால் இன்டோர் நீச்சல் குளத்தில் மணிக்கணக்கில் நீந்தி ரிலாக்ஸ் செய்வது பிடித்தமான செயல் என்கிறார் த்ரிஷா. காபி, டீயை பக்கத்தில் கூட வரவிடுவதில்லையாம் அதைத்தவிர பவர்யோகா செய்து மனதையும், உடலையும் இளமையாக வைத்திருக்கிறாராம் த்ரிஷா.

Tuesday 31 July 2012

'தாண்டவம்' படத்தின் டிரைலர்


        கண் தெரியாத ஒருவர் எப்படி எதிரிகளை பழிவாங்குகிறார் என்பதே 'தாண்டவம்' படத்தின் கதை!

இப்படத்தில் கண் தெரியாமல், ஒலிகளை வைத்தே சுற்றி நடக்கும் விஷயங்களை யூகித்து கொள்ளும் பாத்திரத்தில் நடித்து இருக்கிறார் விக்ரம்!








Monday 30 July 2012

த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த ’மாஸ்டர்’ பிளான்!


      நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர். (பிளாஷ்பேக் போல சொல்வதென்றால்) ஒரு ஆரேழு வருஷத்துக்கு முன்னாடி த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் செம ஹிட்.
அந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போதும் ஹிட்டோ ஹிட். (நிகழ்காலத்துக்கு வருவோம்)பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா அந்த படத்தை இந்தியில் எடுக்கிறார். த்ரிஷாவும், பிரபுதேவாவும் அவ்வப்போது பார்ட்டிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டே இருந்ததால் த்ரிஷா தான் இந்தியிலும் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
   ரசிகர்கள் மட்டுமில்லாமல், த்ரிஷாவிற்கே ஷாக் கொடுக்கும் வகையில் நடிகை ஸ்ருதிஹாஸனை நடிக்க வைக்கிறார் மாஸ்டர் பிரபுதேவா. சமீபத்தில் நடந்த பார்ட்டியில் த்ரிஷாவும், நயன்தாராவும் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதையும், மாஸ்டரின் இந்த திடீர் முடிவையும் பிண்ணிக்கொண்டிருக்கிறது கோடம்பாக்கம்.

’மனைவியாக இருக்க விருப்பமில்லை’ - சினேகா அதிரடி!



கடந்த ஞாயிற்றுக்கிழமை(29.07.12) ”சென்னை சர்வதேச ஃபேஷன் வார விழா” சென்னையில் நடந்தது. மாடலிங் துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். சினிமா நட்சத்திரங்களான சினேகா, பிரசன்னா, கார்த்திகா நாயர், அஜ்மல், மகத், லட்சுமிராய் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். 

சினேகாவும் பிரசன்னாவும் சென்ற வருடமே இவ்விழாவில் கலந்துகொண்டு ஜோடியாக நடந்துவந்தனர். ஆனால் அவர்கள் இருவருக்கும் அப்போது காதல் இருந்தது யாருக்கும் தெரியாது. புதுமணத்தம்பதிகளான சினேகாவும்-பிரசன்னாவும் ஆடி மாதமென்பதால் பிரிந்திருப்பது அனைவரும் அறிந்ததே.

இருவரும் பிரிந்திருக்கும் இந்த சமயத்தில் சினேகா ”எனக்கு பிரசன்னாவுடன் மனைவியாக இருக்க விருப்பமில்லை” என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

ஃபேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சினேகாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளும் சினேகாவின் பதில்களும் :-

“போன வருடமும் நீங்கள் பிரசன்னாவுடன் ஜோடியாக நடந்து வந்தீர்கள். இப்போது கணவன் மனைவியாக நடந்து வரும்போது எவ்வாறு உணர்கிறீர்கள்?” 

போன வருஷம் நாங்க இந்த நிகழ்ச்சியில் நடந்து வரும் போது காதலிச்சிகிட்டு இருந்ததே யாருக்கும் தெரியாது. போன வருஷம் காதலர்கள்; இந்த வருஷம் கணவன் மனைவியா நடந்துவர்றோம்.

“பிரசன்னாவோட மனைவியா எப்படி உணர்கிறீர்கள்?” 

பிரசன்னாவோட மனைவியா இருக்க எனக்கு விருப்பமில்லை. பிரசன்னாவோட மனைவியா இருக்குறதவிட, காதலியா இருக்கதான் ஆசைப்படுகிறேன்.

“கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்துல நீங்க இரெண்டு பேரும் ஜோடியா சிறப்பு தோற்றத்துல நடிக்கிறதா பேசிக்கிறாங்களே?”

அதுபற்றி இன்னும் முடிவாகல. பேசிகிட்டு இருக்கோம். முடிவு எடுத்ததும் கண்டிப்பா சொல்றேன்

அஜித் ஜிம் ஆசைக்கு காரணம்!


பல விபத்துக்களுக்குப்பின் ‘இனி எவ்விதமான ரிஸ்கும் எடுக்கக்கூடாது’ என மருத்துவர்கள் கூறிவிட்டதால் உணவில் மட்டும் கட்டுப்பாடுடன் இருந்து தனது உடல் எடையை பராமரித்து வந்தவர் நடிகர் அஜித்குமார்.

அஜித்குமாரின் சினிமாவாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமனையை கொடுத்த பில்லா படத்தின் தொடர்ச்சியான பில்லா-2 படத்திலும் தொப்பையோடே நடித்த அஜித்குமார், விஷ்ணுவர்தனின் படத்திற்காக ஜிம்மில் அதிக நேரத்தை செலவிடுவது தான் திரைநட்சத்திரங்கள் பலரின் முதல் பேச்சாக இருக்கிறது.

அஜித் ஜிம் செல்வதற்கான காரணத்தை பற்றி விசாரித்த போது பில்லா-2 படத்தின் ஷூட்டிங்கின் போது, அந்த படத்தில் வில்லனாக நடித்த சுதன்ஸு பாண்டேவின் சிக்ஸ் பேக்கை பார்த்து அஜித் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அப்போது சுதன்ஸு பாண்டே “ அஜித் அடுத்த படத்தில் சிக்ச் பேக்கில் நடித்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை” என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.
அதே போல் சுதன்ஸு பாண்டேவும் அஜித் ரேஸ் ஓட்டுவதைப் பார்த்து ஆர்வம் கொண்டு இப்போது தனது வண்டியின் ஆக்ஸிலேட்டரில் இருந்து கால் எடுப்பதே இல்லையாம்.

யம்ம்ம்மா.... 'மாற்றான்' !




       சூர்யா - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளிவரும் படம் என்றாலே அப்படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் இருந்து 'மாற்றான்' படமும் தப்பவில்லை.

'அயன்' வெற்றிக் கூட்டணியின் அடுத்த படம் 'மாற்றான்'. இந்த மெகா பட்ஜெட் படத்தினை தயாரித்து இருக்கிறார் கல்பாத்தி S. அகோரம்.

இப்படம் ஆரம்பித்த உடனேயே விநியோகஸ்தர்கள் மத்தியில் படத்தினை யார் வாங்குவது என்று பெரும் போட்டி நிலவியது.

இப்படத்தின் மொத்த உரிமையையும் EROS நிறுவனம் 84 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு உரிமையை பேலம்கொண்டா சுரேஷ் 17 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாகவும், வெளிநாட்டு உரிமை 12 கோடிக்கு விலை பேசி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படத்தின் இசையை சோனி நிறுவனம் 1.2 கோடிக்கு வாங்க இருக்கிறது. இது தான் தற்போதைய ஆடியோ உரிமையில் பெரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா - கே.வி.ஆனந்த் - ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கூட்டணியில் 'அயன்' பாடல்கள் வெற்றி என்பதால் தான் 'மாற்றான்' படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு.

இப்படத்தின் இசையை ஆகஸ்ட் 9ம் தேதி சிங்கப்பூரில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். ஆகஸ்ட் 9ம் தேதி NATIONAL DAY OF SINGAPORE என்பதால் சிங்கப்பூரில் அரசு விடுமுறை. ஆகவே அன்று அங்கே பிரம்மாண்டமாக இவ்விழாவை நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.

சுழற்றி அடிக்கும் ஈ !


   இயக்குனர் ராஜமெளலி தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் சாதனை படைத்து இருக்கிறார்.
'நான் ஈ' படம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகிறது. படம் வெளியான 3 வாரங்கள் கழித்து எந்த ஒரு படமும் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய திரையரங்கிற்கு மாற்றியது இல்லை.

தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சென்னை மாயாஜால் திரையரங்கில் வெளியான ஒரு நாளில் அவ்வளவு காட்சிகள் திரையிட்டது இல்லை என்ற சாதனையோடு வெளியான 'பில்லா 2' திரைப்படம் தற்போது வெறும் 19 காட்சிகளே திரையிடப்படுகிறது.

ஆனால் 'நான் ஈ' திரைப்படத்தை இப்போது 30 காட்சிகள் திரையிட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி சென்னை சத்யம் காம்ப்ளெக்ஸில் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய அரங்கிற்கு மாற்றி இருக்கிறார்கள்.

வெளியான ஒரே வாரத்தில் 'நான் ஈ' படத்தினை எடுத்துவிட்டு 'பில்லா 2' படத்தினை வெளியிட்ட காசி தியேட்டரில் தற்போது மீண்டும் 'நான் ஈ' படத்தினை திரையிட்டு இருக்கிறார்கள்.

மொத்தம் 208 திரையரங்கில் வெளியான 'நான் ஈ' திரைப்படம் 175 அரங்குகளாக குறைந்தது. அது தற்போது 185 அரங்குகளாக அதிகரித்து இருக்கிறது.

'நான் ஈ' திரைப்படம் ராஜமெளலியின் 'மாவீரன்' படத்தின் சாதனை முறியடித்து இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான 'நான் ஈ' திரைப்படம் தமிழகத்தில் 18.22 கோடி ரூபாய் 21 நாட்களில் வசூல் செய்து இருக்கிறது.

இதுவரை இரு மொழிகளில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை.

தமிழக மக்களிடம் அஜீத் நடித்த 'பில்லா 2' படம் வெளியாகியும், அப்படத்தினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஈ மேலே பறப்பதை அடுத்து, தயாரிப்பாளர் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமன்றி இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிடும் என இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்திருந்தார். தற்போதைய வசூலே 100 கோடியை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷை திக்குமுக்காட வைத்த சிம்பு!


       துபாயில் SIIMA விருதுகள் வழங்கும் விழாவில் ஏற்பட்ட நட்பு, சிம்பு - தனுஷ் இருவரையும் நெருங்கிய நண்பர்களாக ஆக்கி இருக்கிறது.

அடிக்கடி பார்ட்டியில் ஒன்றாக பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வந்தார்கள்.

தனுஷ் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றதில் இருந்து தமிழ் திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்து இருக்கிறது. காரணம் தனுஷிற்கு சர்ப்ரைஸாக பிறந்த நாள் பார்ட்டி கொடுத்தவர் சிம்பு என்பது தான்.

தனுஷின் நெருங்கிய நண்பர்கள், குடும்ப நண்பர்கள், படங்களில் தனுஷுடன் நடித்தவர்கள் என அனைவரையும் ஒன்றாக அழைத்து பார்ட்டி ஒன்றை தயார் செய்தார் சிம்பு.

அந்த இடம் முழுவதுமே அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தனுஷ் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த நெருங்கிய நண்பர்களைப் பார்த்ததும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிய தனுஷ் சிறிது நேரம் எதுவுமே பேசவே இல்லையாம்.

அதுமட்டுமன்றி 'ஆடுகளம்' படம் தனுஷிற்கு பல்வேறு விருதுகள் பெற்றுக் கொடுத்ததால், பிறந்த நாள் கேக்கின் மீது சேவல் போலவே வடிவமைத்து இருந்தார் சிம்பு.

சிம்பு இவ்வாறு தனக்கு ஒரு பிறந்த நாள் பார்ட்டி கொடுப்பார் என்று சிறிதும் எதிர்பாராத தனுஷ் மனம் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

அப்பார்ட்டியில் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, சரத்குமார், ராதிகா சரத்குமார், சந்தானம், தமன்னா, வெற்றிமாறன், ஜெய், அனிருத், விஜய் ஜேசுதாஸ், பிரேம்ஜி, அமலா பால், நரேன், பார்வதி ஒமணக்குட்டன் என ஒரு நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு வாழ்த்தியது.

பிறந்த நாள் பார்டி குறித்து தனுஷ் " எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமன்றி எனக்கு சர்ப்ரைஸாக பார்ட்டி கொடுத்த சிம்புவிற்கு நன்றி " என்று தெரிவித்து இருக்கிறார்.

இரண்டு செல்போன் பயன்படுத்துகிறார் விஜய்!


     

     மாஸ் ஹீரோக்கள் என்ற ஸ்டார்டம் கிடைத்து விட்டால் முடிந்தது! சொந்த வீட்டிலே கூட சுதந்திரமாக இயங்கமுடியாது!

இளையதளபதி விஜய்க்கும் தற்போது அதுதான் நிலை என்கிறார்கள் அவரது உதவியாளர் தரப்பில்! காரணம் வேறொன்றும் இல்லை, விஜய் செல்போனுக்கு யாரெல்லாம் பேசுகிறார்கள், விஜய்க்கு யாரெல்லாம் பேசியிருகிறார்கள் என்ற தகவலை, விஜய் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் இருந்து பட்டியல் வாங்கி பார்த்தாராம் அவரது துணைவியார். விஜய் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்துக்கு, தனது தோழியின் கணவர் நடத்தும் அமெரிக்க நிறுவனமே சாப்ட்வேர்களை சப்ளை செய்திருக்கிறது. அந்த இன்ஃபுளுவென்ஸை பயன்படுத்தி பட்டியல் வாங்கியிருக்கிறார் சங்கீதா என்கிறார்கள். இது சமீபத்தில் விஜய்க்கு தெரியவர, அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லையாம் விஜய்!

ஆனால் தனது ரீயாக்‌ஷனை வேறுமாதிரி காட்டிவிட்டார் என்கிறார்கள். அதுவேறொன்றும் அல்ல! விஜய் இரண்டுசெல்போன் டெக்னிக்கை பயன்படுத்துகிறார் என்பதுதான் நமக்கு கிடைத்த நம்பகமான ரகசியத்தகவல்!

அதாவது தன்னுடன் நடிக்கும் ஹூரோயின்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் பேசுவதற்கென்றே ஒரு செல் போனும், வீட்டில் மனைவி, மகன், அப்பா, அம்மாவிடம் பேச ஒரு செல்போனும் பயன்படுத்துகிறாராம்! ஹீரோயின்களை அழைப்பை ஏற்றுப் பேச தன் அசிஸ்டெண்ட் பெயரில் வாங்கிய நம்பரையும், அதற்கு ஒரு போனும் வைத்துள்ளாராம்.

ஸ்ரீதேவி படத்தில் முக்கிய பாத்திரமாக அஜித்..




       ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் இங்கிலீஷ்-விங்கிலீஷ் படத்தில் அஜீத் முக்கிய ரோலில் தலை காட்டவுள்ளாராம்.
இது கெஸ்ட் ரோல் என்றாலும் கூட முக்கியமான ரோலாக அமைக்கப்பட்டிருக்கிறதாம். பால்கி தயாரிப்பில், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம்தான் இங்கிலீஷ் விங்கிலீஷ். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது.
இதில் அஜீத் கெஸ்ட் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது பகுதிகளை சமீபத்தில் படமாக்கியுள்ளனராம். ஸ்ரீதேவியின் ரசிகர் அஜீத் என்பதால் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று கேட்டதும் ஒத்துக் கொண்டாராம் அஜீத்.
தமிழ்ப் பதிப்பில் அஜீத் நடித்துள்ளாராம். இந்திப் பதிப்பில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பலில் இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைக்கு வருகிறது.

பில்லா 2, நான் ஈ வசூல் நிலவரம்


      ஓரளவு பெரிய படங்கள் வராதமையின் காரணமாக தொடர்ந்து பில்லா ௨, நான் ஈ சென்னையில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆரம்பத்தில் 276 காட்சிகளாக இருந்த நான் ஈ நான்கு கிழமைகள் கழித்தும் 324 காட்சிகள் வார இறுதி நாட்களில் காட்டபடுகின்றன. அதன் திரையரங்கு நிரப்பப்படும் வீதம் குறைந்திருந்தாலும் சென்ற கிழமையை விட இந்த கிழமை வசூல் அதிகரித்திருக்கின்றது. சென்னையில் மட்டும் நான்கு கோடிக்கு மேலாக இந்த படம் நான்கு வாரங்களில் வசூலித்துள்ளது. இதில் 1.2 கோடி இந்த கிழமையில் பெறபட்டதாகும். இதன் மூலமாகவே நான் ஈ வலுவடைந்து வருகின்றது என தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில் பில்லா 2 மற்ற பெரிய திரைப்படங்களை போல இறங்கு முகம் காட்டுகின்றது. இது வரைக்கும் சென்னையில் 7.5 கோடிகளை வசூலித்திருக்கிறது. இப்போதைய கால கட்டத்தில் இது கொஞ்சம் குறைவு என்று தன சொல்ல வேண்டும். சகுனி திரைப்படம் இதுவரை 7.1 கோடியை வசூலித்திருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் பில்லா 2 வின் வசூல் கிழமைக்கு கிழமை அரைவாசி ஆகி கொண்டு செல்கிறது.
முதல் கிழமையிலே(முதல் வார இறுதியில்) 2.8 கோடியை வசூலித்தது.
இரண்டாவது வார இறுதியில் 1.4 கொடியையே வசூலித்தது.
இந்த வார இறுதியில் 74 லட்சங்களியே பெற்றுள்ளது.
நான் ஈ இந்த வார இறுதியில் 65 லட்சங்களை பெற்றது குறிப்பிட தக்கது.
பில்லா 2 வின் வார நாட்களின் வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. இரண்டாம் கிழமையில் அதாவது படம் வந்து மூன்று நாட்களுக்கு பிறகு 1.8 கோடியை வசூலித்த பில்லா 2 கடந்த வார நாட்களில் 72 லட்சங்களையே பெற்றுள்ளது.
எது எப்படியாய் இருந்தாலும் பில்லா 2 இதுவரை 87 கோடிகளை அண்ணளவாக பெடிருக்கலம் என கணிக்க படுகிறது.
இல்லை நாங்க சொல்வது பொய். படம் 147 கோடிகளை வசூலித்து விட்டது. சென்னையில் 98 % இருந்த திரை அரங்கு நிரப்பு வீதம் மற்றும் 926 காட்சிகள் அப்பிடியே இருந்தால் மட்டுமே பில்லா 2 பத்தாவது நாளிலும் 10 கோடிகளை வசூலித்திருக்கும். தங்களை பெரிதாக காடுவதற்கு சிலர் சொல்லும் ஆதரமற்ற வசூல் விபரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இது நாங்கள் இயற்றி எழுதியது அன்று. இது “Behindwoods” இணையதளத்தின் வசூல் நிலவரம் ஆகும்.

கமல் மகள் அக்ஷராவை காதலிக்கும் நஸ்ரூதீன் ஷா மகன்.



   

அக்ஷரா நடிப்பார், ஸ்ருதி டைரக்டர் ஆவார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால்எல்லாம் உல்டாவாகிவிட்டது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கமல். அப்பாவின் சிலேட்டுகளில் முட்டை போட்டு வெறுப்பேற்றுவதுதானே பிள்ளைகளின் ஸ்டைல். 90 சதவீத அப்பாக்களின் ஏமாற்றமே கமலுக்கும் மிஞ்சியிருக்கிறது. ஸ்ருதி நடிகையாகிவிட்டார். அக்ஷரா உதவி இயக்குனராக சுறுசுறுப்பாக தொழில் கற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு விஷயத்தில் அப்பாவுக்கு தப்பாத பிள்ளைகளாக இருக்கிறார்கள் ஸ்ருதியும் அக்ஷராவும். அதுதான் லவ் கிசுகிசுக்கள். கல்லூரி வயசிலிருந்தாலும் சிலருக்கு பல்லி மிட்டாய் பிடிக்கும்தானே? ஸ்ருதிக்கும் தனுஷுக்கும் லவ் என்று வெளிவரும் தகவல்களையும் அப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த விஷயத்தில் ஸ்ருதியை விட அக்ஷராவுக்கு டேஸ்ட் அதிகம்.

நஸ்ரூதின் ஷாவின் இளையமகன் விவாவுக்கும் அக்ஷராவுக்கும் லவ்வாகிவிட்டதாம். வழக்கம்போல இது வெறும் பிரண்ட்ஷிப்புதான் என்று அக்ஷரா மறுத்தாலும் இந்த விஷயத்தை விடாமல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் வடக்கில்.

நஸ்ரூதின் ஷா நடித்த ஒரு படத்தைதான் கமல் ரீமேக் செய்திருந்தார். கமலின் மகளோ நஸ்ரூதினின் மகனையே தனக்காக ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். அடடே... என்ன பொறுத்தம் இப்பொருத்தம்?

துப்பாக்கி பிரச்சனையால் விஜய்,முருகதாஸ் கவலை.




        விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்து வருவதாகவும், அதனால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 25ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

துப்பாக்கி படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் தொடர்ந்து படதலைப்பு தொடர்பான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படாததால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

தலைவன் இருக்கிறான் படம் மூலம் மீண்டும் இணையும் கமல்ஹாசன்,சக்ரி டோலட்டி.



        கமல்ஹாசனை வைத்து உன்னைப் போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான படத்தைக் கொடுத்த சக்ரி டோலட்டி மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். தலைவன் இருக்கின்றான் படத்தை இவர்கள் இருவரும் இணைந்து கொடுக்கப் போவதாக செய்திகள் கூறுகின்றன.

சக்ரி டோலட்டியின் லேட்டஸ்ட் படமான பில்லா 2 பாக்ஸ் ஆபீஸில் இரு வேறு விதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்தாலும் தற்போது வசூல் குறைய ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள். ரசிகர்களுக்குப் பிடித்துப் போன இப்படம் மற்றவர்களைக் கவரத் தவறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சக்ரி டோலட்டி அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருவதாக கூறுகிறார்கள். அது கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்று கூறப்படுகிறது.

தலைவன் இருக்கின்றான் பட இயக்கம் தொடர்பா சக்ரியுடன் பேச்சு நடந்துள்ளதாக தெரிகிறது. கமல்ஹாசனுடன் நல்ல நட்பில் இருப்பதோடு, உன்னைப் போல் ஒருவனை ஹிட் படமாக்கியவர் என்பதாலும் சக்ரிக்கே தலைவன் இருக்கின்றான் படம் கிடைக்கும் என்று தெரிகிறது.

சக்ரி சலங்கை ஒலியில் கமல்ஹாசனை பாடாய்ப்படுத்திய குட்டிப் பையன் என்பது நினைவிருக்கலாம். இப்போது இயக்குநராகியுள்ள இவர் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.

மறுபக்கம், தலைவன் இருக்கின்றான் படத்தை கமல்ஹாசனே இயக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. விஸ்வரூபம் படம் வெளியாகும் வரை இதுகுறித்து தெளிவு ஏற்படாது என்றே தெரிகிறது. இருப்பினும் இப்போதைக்கு சக்ரியின் பெயர்தான் முன்னணியில் உள்ளதாக கூறுகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான் படத்தைத் தயாரிப்பது ஆஸ்கர் ரவிச்சந்திரன். இதன் மூலம் தசாவதாரம் படத்திற்குப் பின்னர் கமலும், ஆஸ்கரும் மீண்டும் இணைகிறார்கள்.

தலைவன் இருக்கின்றான், ஊழல், கருப்புப் பணம் குறித்த கதை என்பதை கமல்ஹாசனே பூடகமாக ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடக்கவிருக்கும் மாற்றான் இசை வெளியீடு.




        சூர்யா நடித்துளள மாற்றான் படத்தின் இசை வெளியீட்டை சிங்கப்பூரில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
கல்பாத்தி அகோரம் தயாரிக்க, கேவி ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பெரிய படங்களின் இசை வெளியீட்டை வெளிநாடுகளில் பிரமாண்டமாக நடத்தி, அதன் ஒளிபரப்பு உரிமையை பெரிய விலைக்கு விற்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது.
அந்த வகையில் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டையும் சிங்கப்பூரில் நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விழா நடக்கிறது. இதன் ஒளிபரப்பு உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.
தமிழ் சினிமா நட்சத்திரங்கள், சாதனையாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

நான் இசை வெளியீடு – ஆடியோ வெளியீட்டில் புதுமை…



இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடிக்கும் நான் படத்தில் இடம்பெற்ற‘மக்காஏல… மக்காஏல…’ சிங்கில் டிராக்கில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த பாடல் பட்டிதொட்டியெல்லாம் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இநத படத்தின் முழு பாடல்கள் இன்று ரிலீஸ் செய்யப்படுகின்றன.

நான் படத்தின் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் புதுமையாக ஒரு விஷயத்தைச் செய்யப் போகிறார்கள். இதுவரை தமிழ் சினிமாவின் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் பொத்தம்பொதுவாக பிரபலங்கள் அத்தனைபேரையும் மேடையேற்றி யாராவது ஒருவர் வெளியிட மற்றவர் பெற்றுக் கொள்வார்கள்.

ஆனால், நான் இசை வெளியீட்டில் பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அத்தனைபேரும் ஆடியோவை வெளியிட முன்னணி இசையமைப்பாளர்கள் அத்தனைபேரும் சேர்ந்து ஆடியோவை பெற்றுக் கொள்கிறார்கள்.

கைவசம் 15 படங்கள் – கலகலக்கும் சந்தானம்




         இன்றைய டாப் காமெடி நடிகர் யார்ன்னு கேட்டா கண்ண மூடிக்கிட்டே சொல்லிடலாம் சந்தானம் என்று. சமீபகாலமாக வடிவேலும் இல்லாததால் சந்தானத்திற்கு போட்டிக்கு அவ்வளவாக யாரும் இல்லை என்றே சொல்லலாம்.செம பிஸியாகிவிட்ட சந்தானம் கையில் இப்போதைக்கு சுமார் 15 படங்கள் இருக்கின்றன.

நீதானே என் பொன்வசந்தம், போடா போடி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை விநாயகர், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், பூலோகம், 555, ஓங்காரம், வாலு, ஐ, சேட்டை, ஜே.கே. எனும் நண்பன் வாழ்க்கை, என்றென்றும் புன்னகை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆல் இன் ஆல் அழகு ராஜா… என்று ஒரு டஜனுக்கு மேலாக நீள்கிறது சந்தானம் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட்.

சிறுத்தை சிவாவின் கதையில் மாற்றம் செய்த அஜீத்.




        பில்லா-2 படத்திற்குப் பிறகு அஜீத் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து அஜீத்,சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாவை அழைத்து கதை கேட்ட அஜீத் அதில் சில மாற்றங்களை கூறினாராம்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சிவா கதைக்கான மாற்றங்களில் ஈடுபட்டுள்ளார். எனவே விரைவில் அஜீத்-சிவா கூட்டணியில் புதிய படம் ஒன்றை எதிர்பார்க்கலாம். 
இயக்குனர் சிவா கார்த்தியை வைத்து இயக்கிய ‘சிறுத்தை’ படம் தமிழைக்காட்டிலும்,தெலுங்கில் சூப்பர்ஹிட்டாகியது குறிப்பிடத்தக்கது.

ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் போட்டி


ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடம்: தமிழில் 4 படங்கள் போட்டி
       தமிழில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நான்கு படங்கள் தயாராகின்றன. இவற்றில் எந்த படத்தை முதலில் ரிலீஸ் செய்வது என்பதில் போட்டா போட்டி நிலவுகிறது.
     சூர்யா ‘மாற்றான்’ படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார். நாயகி காஜல் அகர்வால். கே.வி.ஆனந்த் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 9-ந்தேதி சிங்கப்பூரில் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க சூர்யா, காஜல் அகர்வால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சிங்கப்பூர் செல்ல உள்ளனர்.




‘சாருலதா’ என்ற படத்தில் பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக வருகிறார். பொன்.குமரன் இயக்குகிறார். அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.




‘இருவன்’ என்ற பெயரில் இன்னொரு ஒட்டிப்பிறந்த இரட்டையர் படம் தயாராகி உள்ளது. முருகானந்தம் இயக்கி உள்ளார். உடல் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் உண்மை கதை என்று விளம்பரப்படுத்தி உள்ளனர்.




மலையாளத்தில் 1997-ல் ‘இரட்டதல’ என்ற பெயரில் ரிலீசான ஒட்டிப்பிறந்த இரட்டையர் படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிடவும் ஏற்பாடு நடக்கிறது.

மணிவண்ணன், சத்யராஜ் மீண்டும் இணையும் அமைதிப்படை பார்ட் 2.



  புரட்சி இயக்குனர் என பெயர் பெற்ற  மணிவண்ணன், இயக்குனராக மட்டுமல்லாமால், வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் தமிழ் சினிமாவை கலக்கியவர்.
சமீபகாலமாக உடல் நிலை சரியில்லாத காரணத்தில் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவர் இதுவரை 49 படங்களை இயக்கியுள்ளார். தற்போது உடற்பயிற்சி மூலம் உடல் நலம் தேறியிருக்கும் மணிவண்ணன் தனது 50-வது படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகனாக இவரது ஆஸ்தான நடிகர் சத்யராஜ் நடிக்கிறார். படத்தின் தலைப்பை இப்போதைக்கு இருவரும் இணைந்து கலக்கிய அமைதிப்படை பார்ட்-2 என பெயரிட்டிருக்கிறார்கள். பிறகு மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.
அமைதிப்படை படத்தில் உள்ளதுபோல், வழக்கமான கேலி, கிண்டலை கலந்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளதாக மணிவண்ணன் கூறியுள்ளார். தற்போதை அரசியலில் ஈழம் தொடங்கி, ஸ்பெக்ட்ரம் வரையிலான பல சம்பவங்களையும் கலந்து காமெடி படமாக உருவாக்கப் போகிறார்களாம்.

அஜீத்தின் புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஹீரோ ராணாவும் இணைகிறார்.




       தெலுங்கின் முன்னணி நடிகராக வலம் வரும் ராணா, சில தமிழ் படங்களில் நடிக்க முன்வந்தும், இறுதி கட்டத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.

இதனால் தெலுங்கில் 'வேதம்' ( தமிழில் 'வானம்') படத்தின் இயக்குனர் க்ரிஷ் இயக்கி வரும் அடுத்த படத்தில் ராணா மற்றும் நயன்தாரா நடித்து வருகிறார்கள். இப்படம் தனது நேரடி தமிழ் படமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஒரே சமயத்தில் தமிழிலும் இப்படத்தினை இயக்கி வருகிறார் க்ரிஷ். தமிழில் இப்படத்திற்கு பெயர் 'ஓங்காரம்'.

வெற்றிமாறன் - சிம்பு இணையும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க ராணாவிடம் பேசி வந்தார்கள். இறுதியில் அப்படத்தில் இருந்து விலகினார் ராணா. வெற்றிமாறன் - சிம்பு படம் எப்போது தொடங்கும் என்பது அவர்களுக்கே தெரிந்த உண்மை.

இந்நிலையில் அஜீத் - விஷ்ணுவர்தன் இணையும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ராணா. இதற்கான அஜீத் - ராணா படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது.

இப்படத்தில் ராணா சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 முதல் 4 நாட்களில் முடிக்க இருக்கிறார்கள்.

அஜீத், நயன், ஆர்யா, டாப்ஸி, அதுல் குல்கர்னி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தில், ராணாவும் புது நட்சத்திரமாக இணைந்து இருக்கிறார்.

பில்லாவை பின்னுக்கு தள்ளி பந்தாடிய ஈ.



    இயக்குனர் ராஜமெளலி தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ் திரையுலகிலும் சாதனை படைத்து இருக்கிறார்.

'நான் ஈ' படம் வெளிவந்து 4 வாரங்கள் ஆகிறது. படம் வெளியான 3 வாரங்கள் கழித்து எந்த ஒரு படமும் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய திரையரங்கிற்கு மாற்றியது இல்லை.

தமிழில் அஜீத் நடிப்பில் வெளியான 'பில்லா 2' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சென்னை மாயாஜால் திரையரங்கில் வெளியான ஒரு நாளில் அவ்வளவு காட்சிகள் திரையிட்டது இல்லை என்ற சாதனையோடு வெளியான 'பில்லா 2' திரைப்படம் தற்போது வெறும் 19 காட்சிகளே திரையிடப்படுகிறது.

ஆனால் 'நான் ஈ' திரைப்படத்தை இப்போது 30 காட்சிகள் திரையிட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி சென்னை சத்யம் காம்ப்ளெக்ஸில் சின்ன திரையரங்கில் இருந்து பெரிய அரங்கிற்கு மாற்றி இருக்கிறார்கள்.

வெளியான ஒரே வாரத்தில் 'நான் ஈ' படத்தினை எடுத்துவிட்டு 'பில்லா 2' படத்தினை வெளியிட்ட காசி தியேட்டரில் தற்போது மீண்டும் 'நான் ஈ' படத்தினை திரையிட்டு இருக்கிறார்கள்.

மொத்தம் 208 திரையரங்கில் வெளியான 'நான் ஈ' திரைப்படம் 175 அரங்குகளாக குறைந்தது. அது தற்போது 185 அரங்குகளாக அதிகரித்து இருக்கிறது.

'நான் ஈ' திரைப்படம் ராஜமெளலியின் 'மாவீரன்' படத்தின் சாதனை முறியடித்து இருக்கிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியான 'நான் ஈ' திரைப்படம் தமிழகத்தில் 18.22 கோடி ரூபாய் 21 நாட்களில் வசூல் செய்து இருக்கிறது.

இதுவரை இரு மொழிகளில் வெளியான எந்த ஒரு படமும் இவ்வளவு வசூல் செய்தது இல்லை.

தமிழக மக்களிடம் அஜீத் நடித்த 'பில்லா 2' படம் வெளியாகியும், அப்படத்தினை பின்னுக்கு தள்ளிவிட்டு ஈ மேலே பறப்பதை அடுத்து, தயாரிப்பாளர் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமன்றி இப்படத்தின் மொத்த வசூல் 100 கோடியை தாண்டிவிடும் என இயக்குனர் ராம்கோபால் வர்மா தெரிவித்திருந்தார். தற்போதைய வசூலே 100 கோடியை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகையானது என் அதிர்ஷ்டம்: ஸ்ருதிஹாசன்




       நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்துக்கும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதி ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் இல்லை. ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று யோசிப்பதும் அதை திறமையாக செய்து முடிப்பதுமே நடிகர்கள் வேலை.
    அதேவேளை மிகுதியான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நன்றாக இருக்காது. எந்த அளவு நடிக்க வேண்டுமோ அந்த அளவோடு நடிக்கிறேன். சித்தார்த்-திரிஷா ஜோடியாக நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நுவ் ஒஸ்தா னன்டே நே நொத்தன் டானா’ படத்தை பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் திரிஷா வேடத்தில் நான் நடிக்கிறேன். இது எனக்கு திரில்லிங் ஆக உள்ளது. ஒவ்வொரு படத்தையும் என் முதல் படமாக நினைத்தே நடிக்க ஆரம்பிக்கிறேன். சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க கிடைத்த அரிய வாய்ப்பாக பிரபுதேவா படத்தை கருதுகிறேன்.
இவ்வாறு ஸ்ருதி கூறினார்.

மீண்டும் நடிக்க வந்தார் அமலா!



Amala act again!
     நடிகை அமலா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். 80களில் ஆரம்பித்து, 90களின் ஆரம்பம் வரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அமலா.
1992ல் நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பிறகு, சினிமாவுக்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முல இயக்கும் ‘லைப் இஸ் பியூட்டிபுல் என்ற தெலுங்கு படத்தில் அம்மா வேடத்தில் நடிக்கிறார்.

தனது மறுபிரவேசம் பற்றி அமலா கூறுகையில், "இத்தனை நாட்களும் எனது மகன் அகிலை வளர்ப்பதிலும் சமூக சேவைகளிலும் பிசியாகி விட்டேன். இப்போது அகில் வளர்ந்து விட்டான். அவன் பக்கத்தில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவேதான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். தொடர்ந்து படங்களில் நடிப்பதா? வேண்டமா? என்று இன்னும் முடிவு செய்யவில்லை, என்றார்.