Tuesday 25 September 2012

அக்டோபர் 12 'மாற்றான்' ரிலீஸ் !


'மாற்றான்' படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி வருகிறார்கள்.

கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் முடித்து விட்டார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே ஒரு சில மாற்றங்களை கே.வி.ஆனந்த் தெரிவித்து இருக்கிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

படத்தின் கால அளவு 168 நிமிடங்களாம். படத்தின் அனைத்து பணிகளையும் முடித்து, சென்சாருக்கு செப்டம்பர் 28ம் தேதி அல்லது அக்டோபர் 1ம் தேதி அனுப்ப இருக்கிறார்கள். திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதால் அக்டோபர் 12ம் தேதி கண்டிப்பாக திரைக்கு வர இருக்கிறதாம் 'மாற்றான்'.

'மாற்றான்' படத்தின் தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டார் சூர்யா. தற்போது 'சிங்கம் 2' படத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய ஏரியாக்களின் உரிமைகளையும் ஈராஸ் நிறுவனம் விற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

அஜீத் அடுத்த படம் டிசம்பரில் !


விஷ்ணுவர்தன் இயக்கி வரும் படத்திற்காக உடற்பயிற்சி எல்லாம் செய்து, உடம்பை மெருகேற்றி நடித்து வருகிறார் அஜீத்.

சென்னை அம்பத்தூரில் நடக்கும் படப்பிடிப்பில் ஆர்யா, நயன், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தினை தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத். விஜய வாஹினி நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது.

அஜீத் சிவாவிற்கு போன் செய்து கதையை மாற்றும்படி கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதனை சிவா மறுத்து இருக்கிறார்.

இப்படம் குறித்து சிவா "படத்தின் கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறேன். அஜீத் இதுவரை எனக்கு போன் எதுவும் செய்யவில்லை. அஜீத் போன்ற ஒரு பெரிய நடிகரை வைத்துக் கொண்டு எந்த மாதிரி கதையை வேண்டுமானாலும் செய்யலாம். இப்படத்தில் இதுவரை நீங்கள் பார்க்காத அஜீத்தை பார்க்கலாம். அஜீத்திற்கே இந்த கேரக்டர் புதிதாக இருக்கும்.

படத்தின் நாயகியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்யலாம் என்று இருக்கிறோம். படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியிருக்கும் படங்களில் நடித்து முடித்து விடுவார் என்று நம்புகிறேன். " என்று தெரிவித்து இருக்கிறார்.

Love U, விஜய்!


'முகமூடி' படத்தினைத் தொடர்ந்து விஜய் - விக்ரம் இணைப்பில் உருவாகியுள்ள 'தாண்டவம்' படத்தினை யு.டிவி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

செப்டம்பர் 28-ம் தேதி உலகம் முழுக்க 1000 அரங்குகளில் வெளியாகிறது 'தாண்டவம்'. தெலுங்கில் 'சிவதாண்டவம்' என்ற பெயரில் அதே நாளில் வெளியாகிறது.

விக்ரமுடன், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், ஜெகபதிபாபு நடித்துள்ள இப்படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள், U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லண்டனில் அதிக நாட்கள் ஷூட்டிங் நடந்த தமிழ்ப் படம் என்ற பெருமையைக் கொண்டது 'தாண்டவம்'. சென்சார் அதிகாரிகள் எந்த ஒரு காட்சியிலும் கட் செய்யாமல், U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

விஜய் இதுவரை இயக்கி வெளிவந்த 'கிரீடம்', 'பொய் சொல்ல போறோம்', 'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்' ஆகிய படங்களும் U சான்றிதழ் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் விஜய், அனைவரும் பார்க்கக் கூடிய வகையில் இப்படி U சான்றிதழ் படங்களை இயக்கவே விரும்புகிறாராம்.

தீபாவளிக்கு துப்பாக்கியா சரவெடியா?

விஜய் நடித்த 'காவலன்' படத்தின் வெளியீட்டிற்கு தான் பிரச்னை எழுந்தது. ஆனால் 'துப்பாக்கி' படத்திற்கு தலைப்பே பெரும் பிரச்னையை ஏற்படுத்தி இருக்கிறது.

'துப்பாக்கி' தலைப்பு பிரச்னையை ஒன்பதாவது முறையாக ஒத்திவைத்து இருக்கிறது சென்னை நீதிமன்றம். மும்பையில் அனைத்து படப்பிடிப்புகளையும் முடித்து விட்டு சென்னை திரும்பி இருக்கிறது 'துப்பாக்கி' படக்குழு.

அக்டோபர் 3ம் தேதி இப்படத்தின் வழக்கு நீதிமன்றத்திற்கு வரவிருக்கிறது. அன்று இப்படத்தின் தலைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இசை வெளியீட்டு விழாவை விரைவில் நடத்தி படத்தினை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

அக்டோபர் 3ம் தேதி பிரச்னை முடியவில்லை எனில் படத்திற்கு 'சரவெடி' அல்லது 'மும்பை தமிழன்' என்று பெயரிடலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் முழுக்க மும்பையில் நடப்பதால் 'மும்பை தமிழன்' என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவில் சிலர் நினைக்கிறார்களாம். ஆனால் ஏ.ஆர்.முருகதாஸ் 'துப்பாக்கி' தான் படத்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு, அக்டோபர் 3ம் தேதி வரை பார்க்கலாம், மறுபடியும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டால், வேறு தலைப்பு பற்றி யோசிக்கலாம் என்று கூறுகிறாராம்.

அக்டோபர் 3ம் தேதி துப்பாக்கி, சரவெடி, மும்பை தமிழன் எது தலைப்பு என்று தெரியவரும்.

அஜீத் அக்கறை! க்ரிஷ் உருக்கம்!

பின்னணி பாடகர் க்ரிஷ் கோலாலம்பூருக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. பயணிகள் பயம் காரணமாக அலறினர். குழந்தைகள் அழ ஆரம்பித்தனர். ' நான் உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் தான்' என க்ரிஷ் டிவிட்டரில் தெரிவித்தார்.

விமானம் பினாங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பிறகு அவருடைய டிவிட்டரில் அவர் "எனது விமானம் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதை குறித்து நான் தெரிவித்த உடன் எனது நண்பர்கள், மீடியா நண்பர்கள் யாருமே என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு வெங்கட்பிரபு மட்டுமே மெசேஜ் செய்தார்.

எனக்கு உடனே போன் செய்து விசாரித்த ஒரே நபர் அஜீத் அண்ணா மட்டுமே. இவர்கள் இருவரையும் நான் எப்போதும் நம்புகிறேன்.

அஜீத்திற்கு இந்த செய்தி எப்படி தெரிந்தது என்பது எனக்கு தெரியவில்லை. என் வீட்டிற்கு போன் செய்து எனது மலேசிய போன் நம்பரை வாங்கி இருக்கிறார். அவர் குரலை கேட்டதும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனேன்." என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

'நீங்கள்லாம் ரத்தமும் அரிவாளுமா திரியறீங்களேப்பா. அமீரிடம் இளையராஜா




விஜய்யை வைத்து தான் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரானுக்கு இசையமைத்துத் தரவேண்டும் என இளையராஜாவைக் கேட்டுள்ளாராம் இயக்குநர் அமீர்.

தனது முதல் படமான மௌனம் பேசியதே-யிலிருந்து இசைஞானியின் இளையமகன் யுவன் சங்கர் ராஜாவின் இசையைத்தான் அமீர் பயன்படுத்தி வருகிறார்.

பருத்தி வீரனில் யுவன் இசையில் இளையராஜா பாடிய அறியாத வயசு... பாடல் மிகப் பிரபலமானது.

தனது அடுத்த படத்துக்கு எப்படியாவது இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று வெளிப்படையாக ஒரு மேடை நிகழ்ச்சியில் அமீர் கேட்டுக் கொள்ள, 'நீங்கள்லாம் ரத்தமும் அரிவாளுமா திரியறீங்களேப்பா... அது நான் சரிப்பட மாட்டேன். யுவனே போதும்..', என்றார் சிரித்தபடி ராஜா.

ஆனால் தொடர்ந்து அமீர் ராஜாவை இசையமைக்கக் கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது ஆதிபகவன் படத்தை முடித்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறார் அமீர். அதற்குள் விஜய்யை வைத்து அவர் இயக்கும் அடுத்த படமான கண்ணபிரான் குறித்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.

இந்தப் படத்துக்கு இசையமைத்துத் தர வேண்டும் என அமீர் இளையராஜாவுக்ககு கோரிக்கை விடுத்துள்ளாராம். கண்ணபிரானை இசை மழையால் நனைப்பாரா அல்லது தன் வீட்டு 'இளைய'ராஜா யுவனே போதும் என்று விட்டுவிடுவாரா... பார்க்கலாம்!

இதற்கு முன் இளையராஜா இசையமைத்த விஜய் படங்களான காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ப்ரெண்ட்ஸ் ஆகியவற்றின் இசை - பாடல்கள் பெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தல நடிகரை இயக்க ஆசைப்படும் விண்னைத்தாண்டிய இயக்குனர்.


  

விண்ணைத் தாண்டிய இயக்குனரின் படங்கள் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவர் இயக்கும் படங்களில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.


ஆனால், இயக்குனருக்கோ வேறு விதமான ஆசை வந்திருக்கிறது. இவர், தன் வாழ்நாளில் ஒருமுறையாவது தல நடிகரை வைத்து இயக்கிவிடவேண்டும் என்று ஆசையில் இருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து தல நடிகரிடம் இதுவரை அவர் சொன்னதே கிடையாதாம்.

தல நடிகரிடம் கேட்டால் அவர் என்ன வேண்டாமென்றா சொல்லப் போகிறார்? என இயக்குனருக்கு நெருங்கிய வட்டாரங்கள் அவரிடம் ஆறுதல் கூறி வருகின்றனராம்.

தணிக்கை குழுவினர் பாராட்டிய பார்வையற்ற வேடம். விக்ரமுக்கு மீண்டும் விருது?




    தெய்வ திருமகள் திரைப்படத்துக்குப் பிறகு விக்ரம்-ஏ.எல்.விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தாண்டவம். இத்திரைப்படத்தில் விக்ரம் இரு வேடங்கள் ஏற்றுள்ளார். அதில் ஒன்று பார்வையற்றவர் வேடம்.

மேலும் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுக்ஷா, எமி ஜாக்சன், ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் லட்சுமிராய் நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்டம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

இதனிடையே தாண்டவம் திரைப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது.மேலும் படம் சூப்பராக உள்ளதாக தணிக்கை குழுவினர் பாராட்டியுள்ளனர். இந்த படத்தில் பார்வையற்றவராக நடித்துள்ள விக்ரமுக்கு மீண்டும் ஜனாதிபதி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் பரபரக்கிறது.

இடைவேளை வேண்டாம் அப்படியே கண்டினியூ பண்ணுங்க..சாட்டை படத்திற்கு கிடைத்த வெற்றி.





சின்ன படம்தான்.. வெளிநாட்டு லொகேஷன்களோ, ஆடம்பர செட்களோ எதுவும் இல்லை. முக்கியமாக வனிக ரீதியில் ஒரு காட்சி கூட இல்லை. ஆனாலும் இடைவேளை விடும்போது, ‘எதுக்குங்க.. அப்படியே கன்டினியூ பண்ணுங்க' என்று பார்வையாளர்கள் பலர் ஆர்வத்துடன் கேட்டது, புது இயக்குநர் அன்பழகனின் ஸ்க்ரிடுக்குக் கிடைத்த வெற்றி.

படமும் பரவலாக பேசப்படுகிறது. முதல் மூன்று நாட்களும் இந்தப் படத்துக்கு கவுரவமான எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்திருப்பதும், மவுத் டாக் நன்றாக இருப்பதும் தயாரிப்பாளராக இயக்குநர் பிரபு சாலமனை சந்தோஷப்பட வைத்துள்ளது.

எப்படி இந்த ஸ்கிரிப்டை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டபோது, "அன்பழகன் என் உதவி இயக்குநர்தான். மைனா சமயத்திலேயே இந்த ஸ்கிரிப்டை சொன்னார். நிச்சயம் பண்ணலாம் என்று சொன்னேன். இந்தக் கதையை எழுதும்போதே, தயாளன் என்ற பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை மனதில் வைத்துதான் எழுதியதாகச் சொன்னார்.

சமுத்திரக்கனியிடம் விஷயத்தைச் சொன்னதும்.. ‘இது நாம சேர்ந்து பண்ண வேண்டிய படம். இந்த மாதிரி ஒரு படத்தை நம்ம மாதிரி இயக்குநர்கள்தான் சேர்ந்து பண்ண முடியும்' என்றார்.

அவர் சொன்னது உண்மைதான். எங்களை மாதிரி இயக்குநர்கள் மனது வைத்தால் சாட்டை மாதிரி நிறை படங்கள் நிறைய வரும்," என்றார்.

வரணும் வரணும்... தமிழ் சினிமாவுக்கு அது நல்ல அந்தஸ்தைப் பெற்றுத் தரணும்!

விக்ரம் பிரபுவின் அடுத்தபடம்...!


Vikram Prabhus next with engeyum eppothum saravananநடிகர் பிரபுவின் கலைவாரிசு விக்ரம் பிரபு, கதாநாயகனாக அறிமுகமாகும் "கும்கி படம், விரைவில் திரைக்கு வர உள்ளது. இதில், விக்ரம் பிரபுவின் நடிப்பை பற்றி, சினிமா வட்டாரத்தில், "சிவாஜி வீட்டு சிங்க குட்டியாச்சே... சோடை போகுமா? என, பேசப்படுகிறது. "கும்கி வந்த பிறகு, விக்ரம் பிரபுவுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என, கூறும் இயக்குனர் லிங்குசாமி, அவரை, தன் சொந்தப் பட நிறுவனமான, திருப்பதி சாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க, ஒப்பந்தம் செய்துள்ளார். "எங்கேயும் எப்போதும் தந்த சரவணன், இந்தப் படத்தை இயக்குகிறார்; சத்யா இசையமைக்கிறார். படத்திற்கான பெயர், கதாநாயகி, தொழில்நுட்ப கலைஞர்கள் என, எதுவும் முடிவு செய்யப் படவில்லை. படத்துக்கு பூஜை போட்டு, வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.

அஜீத் படத்துக்காக தெலுங்கு படத்தை தவிர்த்த அனுஷ்கா!

Anushka avoiding telugu films for ajithதாண்டவம் படத்தையடுத்து செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து முடித்து விட்ட அனுஷ்கா, இப்போது சுராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிக்கும் அலெக்ஸ் பாண்டியன், ஹரியின் சிங்கம்-2 படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களையடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக அவரை அழைத்தபோது மறுத்து விட்டாராம். காரணம், தற்போது தமிழில் பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறேன். அதோடு சிறுத்தை சிவா இயக்கும் அஜீத் படத்திலும் அடுத்து நடிக்கிறேன். அதனால் இந்த நேரத்தில் தெலுங்கிலும் கவனத்தை சிதற விட்டால், தமிழில் சரியான இடத்தை பிடிக்க முடியாது. அதனால் தெலுங்கு உள்பட மற்ற மொழிகளில் இருந்து வரும் எந்த புதிய படங்களையும் இப்போது நான் ஏற்பதில்லை என்கிறார் அனுஷ்கா.

கும்கியில் ஒரு பாடலுக்காக 8 மாதம் காத்திருந்து படமாக்கினேன்: நெகிழ்கிறார் பிரபுசாலமன்!

Prabhu solomons kumki experienceலீ, லாடம், கொக்கி போன்ற படங்களை டைரக்டர் பிரபுசாலமன் இயக்கி இருந்தாலும் மைனா படம் தான் அவ‌ரை அடையாளம் காட்டியது. அதில் நடித்த அமலாபால் இப்போது எங்கோ உச்சத்துக்கு சென்றுவிட்டார். மைனாவுக்கு அடுத்து பிரபுசாலமன் தற்போது இயக்கி முடித்திருக்கும் படம் கும்கி. பிரபு மகன் விக்ரம் பிரபுவை இப்படத்தில் அறிமுகப்படுத்துகிறார் பிரபுசாலமன். அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து வந்தவரை, அழுக்கு சட்டையுடன் யானை வளர்க்கும் பாகனாக சேற்றில் புரட்டி எடுத்திருக்கிறார் இயக்குநர். முதல்படம் என்று சொல்ல முடியாதபடி அத்தனை நேர்த்தியாக நடித்து கொடுத்திருக்கிறார் விக்ரம். கும்கி படத்தை வெயில், காற்று, மழை, குளிர் என நான்கு காலங்களிலும் எடுத்துள்ளார்.

கும்கி படம் காதல் பற்றி பேசும் படமாக இருந்தாலும், மாணிக்கம் என்ற யானையும் பத்து நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்திருக்கிறது. மைனா லொகேஷன் போல கும்கியிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பல்வேறு இடங்களில் படமாக்கி இருக்கிறார் பிரபுசாலமன். அதிலும் ஒரு பாட்டுக்காக கிட்டத்தட்ட எட்டுமாத காலம் காத்திருந்து ஜோக் நீர்வீழ்ச்சியில் பிரம்மாண்ட முறையில் படமாக்கி இருக்கிறார். திரையில் இந்த பாடலை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு ஒரு வித உணர்வை ஏற்படுத்தும் என்கிறார். தற்போது படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் கும்கி படம் நிச்சயம் ஒரு பெரிய மைல்கல்லாக பேசப்படும் என்று உறுதிபட கூறுகிறார் பிரபுசாலமன்.

மீண்டும் தனுஷூக்கு ஜோடியாகும் ஹன்சிகா...!


Hansika with dhanush againமாப்பிள்ளை படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர இருக்கிறார் ஹன்சிகா. வாகை சூடவா படத்திற்கு பிறகு சற்குணம் இயக்க உள்ள படம் சொட்ட வாளகுட்டி. கும்பகோணத்தில் குத்துவிளக்கு விற்கும் ஒருவரின் கதை இது. இப்படத்தில் தனுஷூ ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் தனுஷூக்கு ஜோடியாக ஹன்சிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது இந்தபடம் தொடங்கும் என்று சற்குணத்திடம் கேட்டால், தனுஷ், இப்போது இந்தி படத்தில் பிஸியாக இருக்கிறார். அந்தப்படத்தை முடித்து எங்களது படத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். நவம்பர் மாதம் கும்பகோணத்தில் சொட்டவாள குட்டி ஆரம்பமாக இருக்கிறது. தற்போது படத்திற்கான பாடல் கம்போசிங், ஜிப்ரானின் இசையில் தீவிரமாக நடந்து வருகிறது. அறிவுமதி, நா.முத்துகுமார், ‌தேவேந்திரன் ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர் என்றார்.

மனிதநேயம் சொல்லும் ஜெயம் ரவி


jayam ravis humanity"சாக்லேட் ஹீரோ என்ற "இமேஜில் இருந்து விடுபடும் முயற்சியில் இறங்கியுள்ள ஜெயம் ரவி, "தான் நடித்துள்ள, "ஆதிபகவன், பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், கண்டிப்பாக என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார். இதில், "பூலோகம் படத்தில், "பாக்சராக நடித்திருக்கும் ரவி, அன்பு, காதல், நட்பு, நல்லிணக்கம், மனிதநேயம் சொல்லும், மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். "படத்தின் துவக்கத்தில், ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் நான், பின், தொப்பை வைத்த கெட்டப்பில் நடித்துள்ளேன். இதற்காக, இரண்டு மாதங்களாக, உணவுக் கட்டுப்பாட்டை தவிர்த்து, உடலை பெருக்க வைத்து நடித்தேன் என்கிறார் ரவி.

சீனாவில் "டூயட் பாடும் விக்ரம் - எமி

Vikram-Amy to duet in china

"தாண்டவம் படத்திற்காக அமெரிக்காவில் "டூயட் பாடிவிட்டு திரும்பியுள்ள விக்ரம் - எமி ஜாக்சன் ஜோடி, இப்போது ஷங்கரின், "ஐ படத்துக்காக, சீனாவில் "டூயட் பாட செல்கிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்திய ஷங்கர், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை, சீனாவில் நடத்துகிறார். அங்கு, விக்ரம் - எமி சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் மட்டுமின்றி, சந்தானம் நடிக்கும், "காமெடி காட்சிகளும் படமாகின்றன. அதனால், யூனிட்டோடு, சந்தானத்தையும் கையோடு கூட்டிச் செல்கிறார் ஷங்கர்.

விஜய்யின் துப்பாக்கி சரவெடியாகிறது

Thuppaki to change as saravedi     துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி பிரச்னை முடிந்தபாடில்லை. கோர்ட் வரை சென்று இழுத்தடித்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி படத்தை தயாரிப்பது சின்ன நிறுவனமாக இருந்தாலும், துப்பாக்கி யூனிட் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயன்றதால் நிலைமை கட்டுமீறி போய்விட்டது. இனியும் கோர்ட், வழக்கு என்று அலைந்தால் படம் இன்னும் தாமதமாகும். அதனால் படத்தின் தலைப்பை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் சந்தித்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளனர். அனேகமாக படத்தின் பெயர் சரவெடி அல்லது மும்பை தமிழன் என்று மாறலாம்.

நம்பர் 1 நடிகையாக பயிற்சி எடுக்கிறார் அமலாபால்


Amala Pauls No-1 dreamமலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்த ரன் பேபி ரன் வெற்றிக்குப் பிறகு அமலாபால் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்கிறார். தமிழில் ஜெயம் ரவியுடன் ஜோடி போடுகிறார். இப்போதுள்ள இளம் நடிகைகளில் எதையும் திட்டமிட்டு சரியாக செய்கிறவர் என்ற பெயர் அமலாபாலுக்கு உண்டு. அவரது டிரஸ்சிங் சென்ஸ் பற்றி மற்ற நடிகைகள் அரண்டு போயிருக்கிறார்கள். தமிழில் எப்படியாவது நம்பர் ஒன் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.

அனுஷ்கா தெலுங்கில் அக்கறை காட்டி வருகிறார், நயன்தாராவுக்கு தமிழ் படங்களில் ஆர்வம் இல்லை. காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் இந்தி படங்களின் பக்கம் கவனம் செலுத்துகிறார்கள். த்ரிஷா கல்யாண மூடில் இருக்கிறார். ஆக தமிழில் நம்பர் ஒன் நடிகை என்ற இப்போதைக்கு யாரையும் குறிப்பிட முடியாது அந்த இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்கத்தான் அமலாபால் முயற்சி செய்து இருக்கிறார். இப்போது அவருக்கு இருக்கும் ஒரே போட்டியாளர் ஹன்சிகா மட்டுமே அவருக்கு வடக்கத்திய முகசாயல் இருப்பதால் எல்லா கேரக்டருக்கும் அவர் பொருந்த மாட்டார். ஆனால் அமலாபாலுக்கு உள்ளூர் முகம், கவர்ச்சி, நடிப்பு என எல்லாமே இருப்பதால் எளிதில் நம்பர் 1 இடத்தை பிடித்து விடுவார் என்று சொல்கிறார்கள்.

நடனத் திறமையை மெருகேற்ற தனியாக ஒரு மாஸ்டரை நியமித்து கற்று வருகிறார். மேக்அப் மேன், டயட்டீசியன், பேஷன் டிசைனர், தமிழ் வாத்தியார் என தனி டீமே அமலா பாலுவுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் விஜய் இயக்க இருக்கும் புது படத்தில் அமலாபால்தான் ஹீரோயின் என்று இப்போதே பேச்சு இருக்கிறது. எல்லாவற்றையும் விட யாரிடம் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார் அமலாபால்.

விஸ்வரூபம் தள்ளிப்போவது ஏன்?


Why vishwaroopam release delayingகமல், பூஜாகுமார், ஆன்ட்ரியா நடித்துள்ள படம் விஸ்வரூபம் கமலே இயக்கி உள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டநிலையிலும் படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் என்றே எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அடுத்த ஆண்டு ஜனவரி பொங்கல் அன்றுதான் வெளிவரும் என்று இப்போது கூறப்படுகிறது.

விஸ்வரூபம் தள்ளிப்போவதற்கு மூன்று காரணங்கள் சொல்லப்படகிறது. ஒன்று படத்தில் ஆரோ 3டி என்ற சவுண்ட் தொழில்நுட்பத்தை கமல் பயன்படுத்த விரும்புகிறார். இது ரெட் டெய்ல்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தொழில் நுட்பத்தை படத்தில் இணைக்க 100 நாட்கள் தேவைப்படுமாம்.

இரண்டாவது காரணம். படத்தில் கிளைமாக்ஸ் கிடையாதாம். கிளைமாக்ஸ் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம் என்று கார்டு போடுகிறார்களாம். இது சரியாக வருமா? ஒரு கிளைமாக்சை எடுத்து கையில் வைத்துக் கொள்வோம். ஒருவேளை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் எடுத்து வைத்திருக்கும் கிளைமாக்சை இணைத்து விடலாமா? என்பதில் கமல் குழம்பி போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

மூன்றாவது காரணம். படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகமாகிவிட்டது. ஆனால் அந்த அளவுக்கு படம் வியாபாரமாகவில்லை. அதனால் சொந்தமாகவே வெளியிட்டு விடலாமா? அல்லது லாபத்தை பார்க்காமல் விற்று விடலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மூன்று காரணங்களில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது.