Friday 31 August 2012

3D-யில் முகமூடி 2 !

'முகமூடி' படத்தின் 2ம் பாகத்தினை 3Dல் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக யு.டிவி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து இருக்கும் 'முகமூடி' ஆகஸ்ட் 31ம் தேதி வெளிவர இருக்கிறது. டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் யு.டிவி நிறுவனத்தின் தனஞ்செயன் " தற்போது தான் முகமூடி படத்தின் இறுதி வடிவத்தினை பார்த்தேன். மொத்த படக்குழுவும் நன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் கே அமைத்திருக்கும் பின்னணி இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

ஜீவாவிற்கும் நரேன்னிற்கும் போன் செய்து என் பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

நீங்களும் படத்தினைப் பார்த்து கண்டிப்பாக பாராட்டுவீர்கள். 'முகமூடி' படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய படஜெட்டில் தயாரிக்க இருக்கிறோம். 3Dல் தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.

வெள்ளிக்கிழமை நீங்கள் 'முகமூடி' படத்தினைப் பார்த்து விட்டு கூறும் கருத்துகளுக்காக காத்திருக்கிறோம் " என்று தெரிவித்து இருக்கிறார்.

தோனியை பற்றி பேசினால் லட்சுமிராய்க்கு கோப ம் வருவதேன்?

நடிகை லட்சுமிராயையும், இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியையும் இணைத்து, ஆரம்பத்தில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வெளியாயின.

சாக்ஷிக்கும், தோனிக்கும் திருமணமான பின், இந்த கிசுகிசுக்களும் மறைந்து விட்டன. ஆனால், லட்சுமி ராயை சந்திக்கும் அனைவரும், தோனி விவகாரத்தை பற்றியே விசாரிப்பதால், வெறுத்துப் போயிருக்கிறார், லட்சுமி.

"நானும், தோனியும், ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். பரஸ்பரம், "ஹலோ கூறி, நலம் விசாரித்துக் கொண்டோம். தோனி எனக்கு, நல்ல நண்பர். நட்பை தாண்டி, எங்களுக்குள் எந்த விஷயமும் இல்லை.

ஆனால், என்னை சந்திக்கும் சிலர், மீண்டும், மீண்டும் தோனியைப் பற்றியே கேட்பதால், கடும் எரிச்சல் ஏற்படுகிறது என, கோபம் கொப்பளிக்க பேசுகிறார், லட்சுமி ராய்.

வெற்றிமாறனின் திடீர் முடிவிற்கு காரணம் சிம்புவா? தனுஷா?

சிம்பு, தனுஷ் படம் இயக்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் இயக்குனர் வெற்றிமாறன் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
ஆடுகளம் படத்தையடுத்து தனுஷ் நடிக்கும் மற்றொரு படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன் கூறிவந்தார்.

இந்நிலையில் அந்த திட்டத்தை காத்திருப்பில் வைத்துவிட்டு சிம்பு நடிக்கும் “வட சென்னை” படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

தற்போது இந்த படம் இயக்குவதையும் கைவிட யோசித்திருக்கிறார். தனது படத்தை தான் முதலில் இயக்க வேண்டும் என்று சிம்பு, தனுஷ் இருவருமே வெற்றிமாறனிடம் கேட்பதால் எதை இயக்குவது என்று முடிவெடுக்க முடியாமல் அவர் குழப்பத்தில் இருந்தார்.

தற்போது புது முடிவு எடுத்துள்ளார். அதன்படி சித்தார்த் நடிக்க “நான் ராஜாவாகப் போகிறேன்” என்ற சொந்த படத்தை தயாரிக்கும் பணியில் மட்டும் மூழ்கி இருக்கிறார் வெற்றிமாறன்.

இப்படத்திற்கு அவரே வசனம் எழுதுகிறார். இது பற்றி அவர் கூறுகையில், சொந்த படம் தயாரிப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு விட்டேன்.

எனவே அடுத்த படம் இயக்குவது பற்றி எந்த எண்ணமும் இப்போது இல்லை. இப்பட வேலைகள் முடிந்த பிறகு இரண்டு படங்கள் இயக்குவதற்கான முயற்சியில் இருக்கிறேன்.

இதில் யார் கதாநாயகன் என்பது பற்றி இன்னும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மகளுக்கு காதல், அம்மாவுக்கு கவலை!

Daughters love, care for mother!த்ரிஷா, ராணா திருமணம் செய்யப்போகிற செய்தி காட்டுத்தீ போல பரவிக்கிடக்கிறது. ஆனால் இந்த செய்திகளால் த்ரிஷாவின் அம்மா ரொம்பவே அப்செட்டாகி இருக்கிறார். காரணம் ராம்நாயுடு குடும்பம் விட்ட டோஸ். த்ரிஷாவும், "ராணாவும் பக்கத்து வீடுங்றதால சின்ன வயசுலேருந்தே நல்ல பிரண்ட். அவுங்க பிரண்ட்ஷிப்புல வில்லங்கமா ஏதும் இல்லேன்னுதான் நாங்களும் சும்மா இருந்தோம். இப்போ நீங்களே காதல் கல்யாணம்ங்ற வரைக்கும் நியூஸ் பரப்பிட்டிருக்கீங்களா? எங்க குடும்பம் ரொம்ப பெருசு. எந்த முடிவா இருந்தாலும் பெரியவங்க பேசித்தான் முடிவெடுப்போம். ஒருவேளை ராணாவுக்கு த்ரிஷா மேல லவ் இருந்தா எங்ககிட்ட சொல்வான். அப்புறம் நாங்க பாத்துக்குறோம். அதுவரைக்கும் உங்க வாய மூடிக்கிட்டு சும்மா இருங்க. உங்க மகளையும் சும்மா இருக்க சொல்லுங்க"ன்னு ராணா வீட்டு பெரியவர்கள் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று காய்ச்சி எடுத்துட்டு வந்துட்டாங்களாம்.

"மணிரத்னம் ஒரு தேசிய நெடுஞ்சாலை


மணிரத்னம் இயக்கி வரும், "கடல் படமும், சீனுராமசாமி இயக்கும், "நீர்ப்பறவையும், ஒரே மாதிரியான கதையில் உருவாகி வருவதாக, கோலிவுட்டில் செய்தி உலவுகிறது. இதுகுறித்து, இயக்குனர் சீனுராமசாமியிடம் கேட்டபோது, "களம் வேண்டுமானால் ஒன்றாக இருக்கலாம். ஆனால், கதையும், பிரச்னைகளும், கண்டிப்பாக வெவ்வேறாகத்தான் இருக்கும் என்கிறார். காரணம், மணிரத்னம், கப்பலில் சென்று மீன் பிடிப்பவர். நான், நாட்டுப் படகில் சென்று மீன் பிடிப்பவன். அவரிடம், நங்கூரம் உள்ளது. என்னிடம், நானே கரைக்குத் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் ஒரு தேசிய நெடுஞ்சாலை, நானோ, கிராமத்திற்கு போகும் ஒரு சிறிய ஒத்தையடி பாதை. அதனால், அத்தனை பெரிய இயக்குனர் படத்துடன், என் படத்தை ஒப்பிடுவதே தவறு என்கிறார் சீனுராமசாமி.

ரஜினியை ரியலாக காட்டும் "கோச்சடையான்!

Kochadayan will shows real rajini says soundarya"அவதார், லார்டு ஆப் தி ரிங்ஸ் படங்களை காட்டிலும், அதிநவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் படம், ரஜினியின், "கோச்சடையான்! "என் தந்தையை, காலத்தை வென்ற கலைஞனாக நிலைநிறுத்தும் முயற்சி தான், இந்தப் படம் என்று சொல்லும், படத்தின் இயக்குனரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா, "மக்கள் மனதில் பதிந்துவிட்ட அவரது ஸ்டைல், மேனரிசம், பேசும் பாணி என, அனைத்தையும் இந்தப் படத்தில் ரியலாக காண்பிக்கிறேன். அதோடு, அனிமேஷன் என்றால், கார்ட்டூன் படம் தான் என்ற ரசிகர்களின் எண்ணத்தை, இந்தப் படம் மாற்றும் என்கிறார்.

வெயிட்டான வேடம் தேடும் ரீமாசென்!

Reema sen searching for bold roleதிருமணத்திற்கு பிறகு தமிழில், "சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படமான, "தோழன் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரீமாசென். கதாநாயகனின் அக்கா கதாபாத்திரத்தில் ரீமாசென் நடிப்பதால், அக்கா, அண்ணி வேடங்களுக்கு, ரீமாசென் தயாராகி விட்டார் என நினைத்து, சில டைரக்டர்கள் அவரை அணுகினர். ஆனால் நடிகையோ, "சினிமாவில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றாலும், அக்கா, அண்ணியாக நடிக்க மாட்டேன். "தோழன் படத்தில், போலீஸ் வேடம் என்பதால் தான், நடிக்க ஒப்புக் கொண்டேன். அதுவும், இந்தியில், ஹேமமாலினி நடித்த பவர்புல் வேடம் இது என்கிறார்.

கெட்டப்பை மாற்றும் சசிகுமார்!



Sasikumar change to his role"சுப்ரமணியபுரம் துவங்கி, தற்போது நடித்துள்ள, "சுந்தரபாண்டியன் வரை, தான் நடித்த அனைத்து படங்களிலும், தாடி கெட்டப்பிலேயே நடித்துள்ளார் சசிகுமார். ஆனால், அடுத்த ஆண்டு தான் இயக்கி, நடிக்கவுள்ள ஒரு படத்திற்காக, முதன்முறையாக தாடி இல்லாமல் நடிக்கிறார். மேலும், தொடர்ந்து புதுமுக டைரக்டர்களின் படங்களிலேயே நடிக்க திட்டமிட்டிருப்பவர், தன் மூலமாக, குறைந்தது ஒரு பத்து இயக்குனர்களையாவது அறிமுகம் செய்ய, யோசித்து வருவதாக சொல்கிறார்.

ஹன்சிகாவை வீழ்த்திய தமன்னா


Tamanna defeat hansikaதமிழில் வெளியான, "வேட்டை படம் தற்போது, தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில், மாதவன் - ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில், சுனில் - நாகசைதன்யாவும்; சமீரா ரெட்டி - அமலாபால் வேடத்தில், ஆண்ட்ரியா - ஹன்சிகாவும் ஒப்பந்தமாகி இருந்தனர். ஆனால், திடீரென்று அந்த யூனிட்டிற்குள் புகுந்த தமன்னா, தன் ஆஸ்தான நாயகனான நாகசைதன்யாவின் நேரடி சிபாரிசின் பேரில், ஹன்சிகாவின் வேடத்தை கைப்பற்றி விட்டார். தற்போது, தமன்னாவின் மார்க்கெட், தெலுங்கில் உச்சத்தில் இருப்பதால், அவருடன் போராடி ஜெயிக்க முடியாதென, மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல், சென்னை திரும்பியுள்ளார் ஹன்சிகா.

Thursday 30 August 2012

‘கடலில்’ குதிக்க நயன்தாரா மறுப்பு ...!

கொலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளார்.

மணி ரத்னம் தற்போது கார்த்திக் மகன் கௌதம் ராதா மகள் துளசி இருவரை வைத்து கடல் படத்தை இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் அரவிந்த் சாமி, அர்ஜுன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில் அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க பேசி வந்தனர்.

ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு இராமேஸ்வரம் பகுதிகளில் நடந்து வருகிறது.மேலும் நயன்தாராவிற்கு பதிலாக வேறொரு நடிகையை மணிரத்னம் தீவிரமாக தேடி வருகின்றார்.

ஹாலிவுட்டுக்கு முன் காமெடி. கமலின் புதிய திட்டம்.




கமலின் அடுத்தப்படம் ஹாலிவுட்டுக்குதான் என்று ஊரே உருமியடித்துக் கொண்டிருக்க, சைலண்ட்டாக ஒரு சிரிப்பு சப்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது மைலாப்பூர் பக்கம்.

ஹாலிவுட் படம் என்றால் அதற்கான காலமும் நேரமும் டாலர்களும் 'பெரிதினும் பெரிது கேள்' சமாச்சாரமாகிவிடும். இதையெல்லாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் கமல், அந்த ஹாலிவுட் படத்தை துவங்குவதற்கு முன் ஒரு காமெடி படத்தை தயாரித்து இயக்கிவிட்டால் என்ன என்று யோசிக்கிறாராம்.

கமல் சிரிக்கிறார் என்றால் அவருக்கு இரவல் பல்லாக இருப்பவர் கிரேஸி மோகன் அல்லவா? இப்போதெல்லாம் கமல் வீட்டில் கிரேஸியும், கிரேஸி வீட்டில் கமலும் அதிகமாக நடமாட ஆரம்பித்திருக்கிறார்கள். பேசிக் கொண்டே நடக்கிறார்கள். நடந்து கொண்டே சிரிக்கிறார்கள். சிரித்துக் கொண்டே எழுதுகிறார்கள்.

இந்த இருவர் கூட்டணி மீண்டும் ஒரு மெகா ஹிட் காமெடி படத்தை உருவாக்கப் போகும் முயற்சியில் இருப்பதாக தகவல். வாய் விட்டு சிரிச்சா வயிறு கெட்டுப் போகும்னு நினைக்கிற யாரா இருந்தாலும் இந்த செய்தியை புறக்கணிக்கலாம்.

கார்த்தியின் நிறைவேறாத "புட்போர்டு ஆசை

Karthis unfulfilled footboard dream"பருத்திவீரன் கார்த்தி, சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றில், தன் பள்ளி நாட்களை ரீ-வைண்ட் செய்து, அவரின் மனதின் அடிவாரத்தில் தங்கியிருந்த காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். "சென்னை டவுன் பஸ்சில், பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் தொங்குவதைப் பார்க்கும்போது, என்னோட பள்ளி நாட்கள் நினைவுக்கு வரும். பள்ளி நாட்களில், பசங்க பஸ் படிக்கட்டில் தொங்கும், சாகசத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அப்படி சாகசம் செய்யும் பசங்க மீது, பொண்ணுங்க பார்வை திரும்பும். அதனால், நானும் படிக்கட்டில் தொங்க ஆசைப்பட்டேன். நான், அப்ப குண்டாக இருப்பேன். அதனால எந்த பொண்ணும், என்னை திரும்பிப்பார்க்கவில்லை. படிக்கட்டில் தொங்கினால், பொண்ணுங்க பாப்பாங்க, அதில், ஏதாவது ஒரு பொண்ணு லவ் பண்ணும், அப்படிங்கற ஏக்கம் வந்தது. படிக்கட்டில் எப்படி தொங்குவது என்பது குறித்து, என் நண்பன் பயிற்சி கூட கொடுத்தான். ஆனாலும், என்னால் படிக்கட்டில் தொங்க முடியவில்லை. அதனால, எந்தப் பொண்ணும் என்னை திரும்பி பார்க்கவில்லை என்றார் கார்த்தி.

கார்த்தியின் நிறைவேறாத "புட்போர்டு ஆசை

Karthis unfulfilled footboard dream"பருத்திவீரன் கார்த்தி, சமீபத்தில் நடந்த பட விழா ஒன்றில், தன் பள்ளி நாட்களை ரீ-வைண்ட் செய்து, அவரின் மனதின் அடிவாரத்தில் தங்கியிருந்த காதல் ஏக்கத்தை வெளிப்படுத்தினார். "சென்னை டவுன் பஸ்சில், பள்ளி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் தொங்குவதைப் பார்க்கும்போது, என்னோட பள்ளி நாட்கள் நினைவுக்கு வரும். பள்ளி நாட்களில், பசங்க பஸ் படிக்கட்டில் தொங்கும், சாகசத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். அப்படி சாகசம் செய்யும் பசங்க மீது, பொண்ணுங்க பார்வை திரும்பும். அதனால், நானும் படிக்கட்டில் தொங்க ஆசைப்பட்டேன். நான், அப்ப குண்டாக இருப்பேன். அதனால எந்த பொண்ணும், என்னை திரும்பிப்பார்க்கவில்லை. படிக்கட்டில் தொங்கினால், பொண்ணுங்க பாப்பாங்க, அதில், ஏதாவது ஒரு பொண்ணு லவ் பண்ணும், அப்படிங்கற ஏக்கம் வந்தது. படிக்கட்டில் எப்படி தொங்குவது என்பது குறித்து, என் நண்பன் பயிற்சி கூட கொடுத்தான். ஆனாலும், என்னால் படிக்கட்டில் தொங்க முடியவில்லை. அதனால, எந்தப் பொண்ணும் என்னை திரும்பி பார்க்கவில்லை என்றார் கார்த்தி.

திரிஷாவின் சைடு பிசினஸ்


Trishas side businessநமீதா, மும்பையில், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து கலக்குவதை பார்த்த பின், திரிஷாவுக்கும் அதுபோல், "சைடு பிசினஸ் செய்யும் ஆசை வந்து விட்டது. சினிமாவில் சம்பாதித்த பணத்தில், நீலாங்கரை அருகே நிறைய நிலங்களை வாங்கிப் போட்டுள்ளார். "மண்ணில் போட்டது பொன்னாக மாறும் என, திரிஷாவிடம், யாரோ சொல்லி வைக்க, திருமணத்துக்குப் பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் தீவிரமாக இறங்க முடிவு செய்திருக்கிறார், திரிஷா.

"அழுக்கன் அவதாரத்தில் ஷாம்!


Shaams dirty role in 6அழகன் ஷாமை, அழுக்கனாக காட்ட போகிறது,"6என்ற திரைப்படம். படத்தின் தலைப்பை போலவே, கதையும் வித்தியாசமானது தான். அஜீத்தை குடும்ப நாயகனாக காட்டிய முகவரி, பரத்தை ஆக்ஷன் அவதாரம் எடுக்க வைத்த நேபாளி போன்ற படங்களை இயக்கிய, துரை கூறிய கதையை கேட்டு, சிலிர்த்துப் போன ஷாம், வேறு பட வாய்ப்புகளை தவிர்த்து, இதற்காகவே தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து விட்டு, 20 கிலோ எடையை குறைத்திருக்கிறார். அழகனாக இருந்தவர், அழுக்கனாக மாறி, கண்களின் கீழ், இமைகளை வீங்க வைத்து, முகமெல்லாம் கோரமாக்கிக் கொண்டு நடிக்கிறார். "6 திரைப்படத்துக்காக, ஷாம் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. படம் பிரமாதமாக வந்திருப்பதாகவும், இன்னும் தடுமாற்றமான நிலையிலேயே இருக்கும் ஷாமிற்கு, அவரின் திறமையைக் காட்ட அருமையான சந்தர்ப்பம் எனவும், சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

கண் பார்வையற்றவராக மீண்டும் விக்ரம்


Vikram again act as blind"தாண்டவம் படத்தில் உளவுத்துறை அதிகாரி, கண்பார்வை இல்லாதவர் என, இரண்டு வேடங்களில் நடிக்கிறார், விக்ரம். இதில், அனுஷ்கா, எமிஜாக்சன், லட்சமிராய் என, மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். "ஏற்கனவே, "காசி படத்தில் கண் தெரியாதவராக நடிச்சுட்டீங்களே? தாண்டவம் படத்தில், என்ன வித்தியாசம் காட்றீங்க என, விக்ரமிடத்தில் கேட்டால், "காசிக்கும், தாண்டவத்துக்கும், அதிக வித்தியாசம் உள்ளது. "தாண்டவம்ல வரும் கண்பார்வை இல்லாத வேடத்துக்கு, அமெரிக்காவில் வாழும் டேனியல்கிஸ் என்பவரை, முன் மாதிரியாக எடுத்துக்கிட்டேன். அவர், எட்டு மாத குழந்தையா இருந்தபோதே, கண்பார்வை பறிபோயிடுச்சாம். ஆனால், அவரால் அந்த குறையே தெரியாமல், நன்றாக செயல்பட முடிகிறது. டேனியல்கிஸ், எனக்கு சில பயிற்சிகளை கற்றுத் தந்தார். இந்த படம், என்னோட நடிப்புக்கு சரியான தீனியா இருக்கும். அதே நேரத்துல, ஆக்ஷன் அசத்தலும் இருக்கும் என்றார்.

அமலாபாலின் அமெரிக்க அழகு சிகிச்சை


Amala Pauls america beauty treatmentசெதுக்கி வைத்த சிற்பம் போல இருக்கும் அமலாபாலுக்கு, நாளுக்கு நாள், தன் அழகு மங்கி வருவதாக தோன்றவே, உடனே அமெரிக்காவுக்குப் பறந்து, அழகு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். கோடம்பாக்கம் ஏரியாவில் இப்போது, இதுதான் பரபரப்பு பேச்சு. "இது நிஜமா? என, அமலாபாலிடம் கேட்டதற்கு, "அமெரிக்க தமிழ் சங்கத்தின் வெள்ளிவிழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டேன். அப்படியே, குடும்பத்தினருடன் சேர்ந்து, ஊர் சுற்றினேன்; உறவினர்கள் வீடுகளுக்கும் சென்றேன். அங்குள்ள ஒரு அழகு நிலையத்துக்குப் போய், என் கெட்-அப்பையும், ஹேர் ஸ்டைலையும் மாற்றினேன். இதைத் தான், இந்த மாதிரி கொளுத்திப் போட்டிருப்பாங்களோ...? என, ஆச்சர்யப்பட்டார் அமலா பால்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதா


CM jayalalitha honoured M.S.Vishwanathanஜெயா "டிவியின், 14ம் ஆண்டு விழாவும், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு பாராட்டு விழாவும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு "திரை இசை சக்கரவர்த்தி எனும் பட்டத்தை வழங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல்வர் பங்கேற்ற முதல் சினிமா விழா இதுவாகும்.

தமிழத் திரையுலகில் மெல்லிசை மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், டி.கே.ராமமூர்த்தியும். இருவரும் இணைந்தும், தனித் தனியாக பிரிந்தும் பல சாகாவரம் படைத்த பாடல்களைப் படைத்தனர். சென்னையில் நடந்த விழா ஒன்றில்தான் முதல் முறையாக மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் இந்த இசை மன்னர்களுக்கு வழங்கப்பட்டது. அதை வழங்கியவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆவார். அன்று முதல் இவர்கள் இருவரும் மெல்லிசை மன்னர் என்றும் மெல்லிசை மன்னர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மெல்லிசை மன்னருக்கு இதுவரை பத்ம விருதுகள் எதுவும் வழங்கப்படவில்லை. அந்த குறையை போக்கும்பொருட்டு ஜெயா டி.வி. சார்பில் ஒரு பட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஜெயா டி.வி. நேரடியாக மக்களிடம் போய் ஓட்டெடுப்பு நடத்தியது. அதில் "திரை இசை சக்கரவர்த்தி என்ற பெயரைத்தான் அதிகளவிலான மக்கள் ஓட்டளித்தனர். இதனையடுத்து அந்தபட்டத்தை அவருக்கு முதல்வர் வழங்கினார். மேலும் விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு, 60 பொற்காசுகள் கொண்ட, பொற்கிழியையும் ஜெயலலிதா வழங்கினார். பின்னர் மெல்லிசை மன்னர்கள் இருவரையும் வாழ்த்து பேசினார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

"கேடி பில்லா கில்லாடி ரங்கா தலைப்பு ஏன்...? பாண்டிராஜ்!!


Pandiraj replies why the name of kedi billa killadi ranga"பசங்க, வம்சம், மெரினா என, தன் படங்களுக்கு, சிக்கனமாக தலைப்பு வைத்துக் கொண்டிருந்த இயக்குனர் பாண்டிராஜ், தற்போது, "கேடி பில்லா கில்லாடி ரங்கா எனற நீளமான தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்த படத்தில், கேடி பில்லாவாக விமலும், கில்லாடி ரங்காவாக சிவ கார்த்திகேயனும் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடிகளாக, பிந்துமாதவி, ரெஜினா களம் இறங்கி உள்ளனர். "ரஜினியின் இரு படத் தலைப்புகளையும் ஒன்றாக்கி, டைட்டில் வச்சிருக்கீங்களே? என, இயக்குனர் பாண்டிராஜிடம் கேட்டால், "இப்பல்லாம், கலகலப்பான படங்கள் தான் ஹிட்டாகுது. இது ஒரு ஜாலியான படம். இதனால், இந்த தலைப்பு பொருத்தமாக இருக்கும் என, நம்புகிறேன். அதுவுமில்லாம, சுறுசுறுப்புக்கும், விறுவிறுப்புக்கும் பெயர் போன ரஜினி மீது, எனக்கொரு ஈர்ப்பு உள்ளது. அதனால், அவரோட படங்களின் தலைப்பை வைத்து, படம் பண்ணலாமேன்னு தான், இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன் என்கிறார்.

காமெடிக்கு மாறிய ஸ்ரீகாந்த்

Srikanth change his track to comedy"சாக்லெட் பாய் ரோலில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், திடீரென ஆக்ஷன் அவதாரம் எடுத்தார். அந்த படங்கள், அவருக்கு கை கொடுக்காததால், அவருக்கு பட வாய்ப்பு குறைந்துப் போனது. ஆகவே, "நண்பன் படத்தில் விஜய், ஜீவாவுடன், மூன்றாவது நாயகனாக நடித்தார். இந்த நிலையில், திடீரென காமெடிக்கு மாறியிருக்கும் ஸ்ரீகாந்த்,"பாகன் என்ற படத்தில், "புரோட்டா சூரியுடன் சேர்ந்து, காமெடியில் கலக்குகிறார். இதில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக, ஜனனி நடிக்கிறார்; அஸ்லம் இயக்குகிறார். "சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் எனக்கு, இந்த படம், மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். இதற்கு பிறகு, ரசிகர்கள் என்னை, காமெடி ஹீரோவாக ஏற்றுக் கொள்வர் என, அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் ஸ்ரீகாந்த்.

Wednesday 29 August 2012

3 பேர் அடங்கியாச்சு.. இன்னும் ஒருத்தர் அடங்கவில்லை!

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களுக்கு என்று தனியாக இணையதளம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்கள். பிரபுசாலமன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'சாட்டை' படத்தின் இசை வெளியீட்டு விழாவும், இணையதள தொடக்க விழாவும் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், அமீர், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மாதேஷ், ஜெயம் ராஜா, சீனு ராமசாமி, கௌதமன், ஜீவன், சந்தானபாரதி, ஹோசிமின் உள்ளிட்ட இயக்குநர் சங்க பொறுப்பாளர்கள், பிரபலங்கள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

அப்போது அமீர் பேசும்போது " ஒரு வருடத்திற்கு முன் நான், பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்கள் பொறுப்பிற்கு வந்தபோது, சங்கத்தில் இருந்தவர்களே "படம் எடுக்கறதை விட்டுவிட்டு சங்கம் அது இதுவென்று இவர்களால் தாக்கு முடியுமா? " எனக்கேட்டு போராட்டம் தர்ணா என்று எங்களுக்கு எதிராக எவ்வளவோ செய்தனர்.

அதில் மூன்று பேர் இன்று அடங்கியாயிற்று... இன்னும் ஒருவர் அடங்கியபாடில்லை... நான் 'ஆதிபகவன்' ஷூட்டிங்கில் இருந்தபோது உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறினார். நான் கூட 'வாழ்த்துக்கள்' என மெ‌ஸேஜ் அனுப்பினேன். அதை கூட அவர் மீடியாக்களிடம் பப்ளிசிட்டி பண்ணி பார்த்தார்.

அதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் இதோ சங்கத்திற்கு சொந்தமாக இடம், கட்டடம் கட்டியாயிற்று, அடுத்து இன்று புதிதாக www.tantis.org எனும் இணையதளமும் தொடங்கியாச்சு. அதில் இந்த 'சாட்டை' ஆடியோ விழா உள்ளிட்ட சினிமா விழாக்களை லைவ்வாக ஒளிப்பரப்பும் வெப் டி.வி.யும் ஆரம்பித்தாயிற்று. இதற்கு அடுத்து ஒரு டி.வி.சேனல் ஆரம்பிக்க இருக்கிறோம். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் எல்லாமும் முடியும் என்பதே என் எண்ணம்!

இயக்குனர் சங்கத் தேர்தலில் அடுத்து நான் நிற்கப்போவதில்லை... ஆனாலும் சங்கம் சிறப்பாக செயல்பட 24-மணி நேரமும் தன்னை அர்பணித்து கொண்டிருக்கும் எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டவர்களை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்தியாவிலேயே இயக்குனர் சங்கத்திற்கு என்று ஒரு வெப்சைட் இருப்பது இதுதான் முதல்முறை. அதுவே நமது சாதனை! சாதனைகள் தொடர, எதை எடுத்தாலும் குறை கூறுபவர்கள் அடங்கினாலே போதும் " என்று கூறினார்.

கமல் Vs சூர்யா!

'விஸ்வரூபம்' மற்றும் 'மாற்றான்' இரு படங்களுமே அக்டோபர் 12ம் தேதி வெளியீடு என்று அறிவித்து இருப்பது விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.

இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் 'விஸ்வரூபம்'. கமல், ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் பலர் நடித்த 'விஸ்வரூபம்' படத்தினை கமல் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இப்படத்தின் FIRST LOOK, டிரெய்லர் என அனைத்துமே ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதால் இப்படம் எப்போது வெளியாகும் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இப்போது ' விஸ்வரூபம்' அக்டோபர் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து இருக்கிறார்கள். விஸ்வரூபம் இசை அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

சூர்யா - கே.வி.ஆனந்த் இணைப்பில் 'அயன்' படத்தினைத் தொடர்ந்து உருவாகி இருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வேடத்தில் நடித்து இருக்கிறார். சூர்யா, காஜல், கே.வி.ஆனந்த், ஹாரிஸ் ஜெயராஜ் என ஒரு மெகா கூட்டணி இப்படத்தில் இணைந்து இருக்கிறது. பாடல்கள் வரவேற்பு, டிரெய்லருக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு என தொடர்ந்ததால் படம் அக்டோபர் 12ம் தேதி வெளியீடு என்று அறிவித்து இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

இரண்டுமே முக்கிய நாயகர்கள் நடித்த படம் என்பதால், ஒரு வார இடைவெளியில் வந்தால் நன்றாக இருக்கும் என்று விநியோகஸ்தர்கள் எண்ணம்.

இவ்விரண்டு படங்களுமே பிரம்மாண்ட தயாரிப்பு என்பதால் ஒரே சமயத்தில் இவ்விரண்டு படங்களுமே வந்தால் 1000 திரையரங்குகளுக்கு மேலாக வெளியாகும். ஆகையால் இரண்டு படங்களுமே ஒரே சமயத்தில் வெளிவரும் வாய்ப்பு குறைவு.

கமல் சூர்யாவிற்காக விட்டுக் கொடுக்கிறாரா அல்லது சூர்யா கமலுக்காக விட்டுக் கொடுக்கிறாரா என்பது தான் தற்போதைய கேள்வி. 'கும்கி' இசை வெளியீட்டு விழா கமல் வரும் வரை காத்திருந்து, அதற்கு பிறகு இசை வெளியீட்டு அரங்கில் நுழைந்தவர் சூர்யா. இந்த விஷயத்தில் எப்படி என்பது இனிமேல் தான் தெரியும்.

ஒரே தேதியில் வெளிவந்தால் தமிழில் கமலின் 'விஸ்வரூபம்' படத்துடனும், தெலுங்கில் பவன் கல்யாணின் 'cameraman ganga tho rambabu' படத்துடனும் போட்டியிடும் 'மாற்றான்'.

'ஏ' என்னப்பா இது!

அடல்ஸ் ஒன்லி படங்களை இனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது என Central Board for Film Certification (CBFC) முடிவு செய்துள்ளது.

சென்சாரால் 'A' வாங்கிய படங்களை தொலைக்காட்சியில் ஒளிப்பதிவு செய்ய வேண்டுமானால், ஆட்சேபிக்கத்தக்க காட்சிகள் நீக்கப்பட்டு 'தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தகுதியானது' என மீண்டும் சர்டிஃபிகேட் அளிக்கப்பட வேண்டும். அப்படித்தான் 'A' சர்டிஃபிகேட் படங்களை டிவியில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

சமீபமாக, பல படங்கள் 'A' முத்திரையுடன் வெளியாகின. அவற்றின் தொலைக்காட்சி உரிமையை விற்பதன் மூலம் தயாரிப்பாளர்கள் ஓரளவுக்கு தங்கள் பண வரவைக் கூட்டினார்கள். இப்போது CBFC எடுத்துள்ள முடிவால், பல தயாரிப்பாளர்கள் பதட்டத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி, படத்தை வாங்கிய தொலைக்காட்சி நிறுவனத்தினரும் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்களாம்.

அஜீத் நடித்த 'பில்லா 2 ' படத்தின் டிவி உரிமை சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இப்போது, CBFC-யின் அறிப்பால், இப்படத்தை எப்படி ஒளிபரப்புவார்கள் என்பது தெரியவில்லை.

CBFC இந்த கட்டுப்பாட்டை நீக்கும் நாளை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

7 ஆண்டுகளுக்குப் பின் ஜெயலலிதா கலந்து கொள்ளும் சினிமா விழாவில் கமல், ரஜினி.





இன்று மாலை நடக்கும் ஜெயா டிவி 14-ம் ஆண்டு விழா மற்றும் எம்எஸ் விஸ்வநாதனின் நினைத்தாலே இனிக்கும் இசை நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. விழாவில் ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாகத் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயன் கமல்ஹாஸன், இசைஞானி இளையராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விழா நடக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் பழைய தமிழ் சினிமாவை நினைவூட்டும் வகையில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

எம்எஸ் விஸ்வநாதனுடன் பணியாற்றிய கலைஞர்கள், நடிகைகள் பெரும்பாலானோர் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எம்எஸ் விஸ்வநாதன் - டி கே ராமமூர்த்தி இருவருக்கும் பொற்கிழி அளித்து கவுரவிக்கும் முதல்வர், பின்னர் விழா சிறப்புரை ஆற்றவிருக்கிறார். ஏகப்பட்ட பேரை பேச வைக்காமல், ரஜினி, கமல், இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் ஆகியோர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் பேசக் கூடும் என்று தெரிகிறது. இளையராஜா வருவசாக உறுதி கூறியிருந்தாலும், நாளை மறுநாள் அவரது இசை நிகழ்ச்சி இருப்பதால், வருவாரா என்பதில் சந்தேகம் உள்ளது.

ஜெயலலிதா முதல்வரான பிறகு ரஜினி, கமல் அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பதும் இதுவே முதல்முறை. அதற்கு முன்பு திரையுலகம் 2005-ல் நடத்திய விழாவில் ரஜினி, கமல் பங்கேற்று வாழ்த்தியது நினைவிருக்கலாம்.

முதல்வர் பங்கேற்கும் விழா என்பதால் கெடுபிடிகள் ஏக பலமாக உள்ளன. 5 மணி விழாவுக்கு 4 மணிக்கெல்லாம் இருக்கையில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்!

விஜய் - கவுதம் கூட்டணி முறிந்தது

Vijay - Gautham movie floppedகவுதம்மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில், விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால், தன்னிடம் படத்தின் முழுக்கதையையும் கவுதம்மேனன் சொல்லாததால், அதிருப்தியடைந்த விஜய், இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் கதை கேட்டு, அவரது இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து விட்டார். இந்த நிலையில், "யோஹன் படம் குறித்து இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த கவுதம்மேனன், விஜய் தன் படத்தில் நடிக்கவில்லை என்பதை, தற்போது உறுதிபடுத்தி உள்ளார். அதோடு, விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது, ஏ.எல்.விஜய் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ஆனார் வெற்றிமாறன்

Vetrimaran turn as a producerலிங்குசாமி, பிரபு சாலமன், ஏ.ஆர்.முருகதாஸ் வரிசையில் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். ஒரு இயக்குனர் ஒரு பெரிய ஹிட் கொடுத்துவிட்டால். அடுத்த படத்தில் அவருக்கு கோடியில் சம்பளம் கிடைத்து விடுகிறது. அடுத்த படமும் வெற்றி பெற்றுவிட்டால் கோடிகள் புரள ஆரம்பித்துவிடும். கோடியை பல கோடியாக்க தயாரிப்பாளராகிவிடுவார்கள். மேலே குறிப்பிட்ட இயக்குனர்கள் இந்த வகையினர்தான். இப்போது வெற்றிமாறன். கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி தனது உதவியாளர் மணிகண்டனை இயக்குனராக்கி விட்டார். பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் சித்தார்த் ஹீரோ. அஸ்ருத ஷெட்டி என்ற புதுமுகம் நடிக்கிறார். வெற்றிமாறனின் முதல் படமான பொல்லாதவன் ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனா நட்புக்காக நடிக்கிறார். கிட்டத்தட்ட படம் முடியும் தருவாய்க்கு வந்த பிறகுதான். தான் தயாரிப்பாளர் ஆனதை வெளியில் சொல்லியிருக்கிறார் வெற்றி மாறன்.

உடலை வருத்தி நடித்துள்ளேன்: பிரியாமணி

Priyamani works hardwork for charulatha"சாருலதா படத்தில், ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள பிரியாமணி, எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு, இந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்கிறார். "ஸ்பாட்டுக்கு வரும் முன்பே, நிறைய ஹோம் ஒர்க்; வந்த பிறகு, சளைக்காமல் நிறைய டேக் என்று, உடலை வருத்தி நடித்துள்ளேன் என்று சொல்லும் பிரியாமணி, இந்தப் படத்தில், தன் நடிப்புக்கு கட்டாயம் விருது கிடைக்கும் என, எதிர்பார்ப்பதாக கூறுகிறார். ஏற்கனவே, "பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி என்பது, குறிப்பிடத்தக்கது.

வேதிகாவுடன் காதல் இல்லை: அதர்வா

No love with vedika says atharva"பரதேசி படப்பிடிப்பு சமயங்களில், படத்தின் நாயகனான அதர்வாவும், வேதிகாவும், தனிமையில் அமர்ந்து, மணிக்கணக்கில் காதல் மொழி பேசியதாக செய்தி பரவியது. இதுபற்றி அதர்வாவிடம் கேட்டால், "நாங்கள் இருவரும், காதல் மொழி பேசவில்லை; கன்னட மொழியில் தான் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமே, கன்னடம் தாய்மொழி என்பதால், சந்தோஷமாக பேசி மகிழ்ந்தோம். ஆனால், கன்னட மொழி மற்றவர்களுக்கு புரியாததால், சிரித்து பேசியதை, காதல் என்று கருதிவிட்டனர் என்று சொல்லும் அதர்வா, தானும், வேதிகாவும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்கிறார்.

ஒரே கதையில் இரண்டு படங்கள்


Same Story in two filmsதமிழ் சினிமாவில் தலைப்புகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே கதைக்கும் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று தோன்றுகிறது. ஒருவார இடைவெளியில் வெளிவந்த நான் படத்தின் கதையும், 18 வயது படத்தின் கதையும் ஒன்றுதான். அம்மா, காம இச்சை அதிகமாகி கணவனை விட்டு இன்னொரு ஆணைத் தேடுகிறவர். இதை கண்டுபிடித்துவிடும் கணவன் தூக்கு மாட்டிக் கொண்டு சாகிறான். அப்பா மீது மிகுந்த பாசம் கொண்ட மகன் மனநோயாளியாகி, சைக்கோவாகி திரிகிறான். இதுதான் இரண்டு படத்தின் கதையும். நான் படத்தில் விஜய் ஆண்டனி அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். அதேபோல 18 வயது படத்தில் ஜான் அம்மாவையும், அவளது காதலனையும் கொல்கிறார். கொல்லும் விதம்தான் வெவ்வேறு. இரு படத்திலுமே ஹீரோக்கள் மனநோயாளியாக இருந்தாலும் நல்லவர்கள். என்னதான் கொலை செய்தாலும் நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பி தான் விரும்பியபடி டாக்டராகிவிடுகிறார். 18 வயது படத்தில் ஜானி தன் காதலியை கைபிடித்து விடுகிறார்.
இந்த கதை பஞ்சம் தொடருமா? நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விரைவில் அறிவிக்கிறார்கள் முகமூடி பார்ட்-2


UTV plans Mugamoodi part-2யு டிவி தயாரித்திருக்கும் படம் முகமூடி. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்துக்கு பிறகு முகமூடி பார்ட் 2 தயாரிக்க இப்போதே தயாராகி வருகிறார் யு டிவி அதிகாரி தனஞ்செயன். முகமூடி தயாரிப்பில் இருந்தபோது வில்லனாக நடிக்கும் நரேன் சம்பளம் உள்பட பலவற்றில் தனஞ்செயனுக்கும், இயக்குனர் மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காரசாரமாக மோதிக் கொண்டார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கும் அப்படி ஒரு நட்பு நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மூகமூடி பார்ட்-2 வரும் என்றே தெரிகிறது. இதனை தனஞ்செயன் வெளிப்படையாகவே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து விட்டார். அதிலும் ஜீவாவே ஹீரோ, ஹீரோயினும், வில்லனும் மாறுவார்கள். மிஷ்கினும் அடுத்து யு டிவிக்குதான் படம் இயக்குகிறேன் என்று சொல்லிவிட்டார். ஒருவேளை முகமூடி மக்களிடம் வரவேற்பு பெறாமல் போனால்... வேறொரு கதை ரெடியாக இருக்கிறதாம். அதைத் தொடங்கிவிடுவார்களாம். அந்த கதையில் நடிக்க ஜீவாவும் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆர்யாவுக்கு யோகா கிளாஸ் எடுத்த அனுஷ்கா!



Arya took a yoga class Anushka
யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட்டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதற்கென்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம். சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக்கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண்டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வராகவனும் அதற்கு தடைவிதிக்கவில்லையாம்.

ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் ஆர்யாவுக்கு ஸ்பாட்டில் வேலை என்பதால், அதுவரைக்கும் அனுஷ்கா யோகா செய்வதை வேடிக்கை பார்ப்பாராம. அப்போது யோகா செய்வதால் உடம்புக்கும், மனதுக்கும் கிடைக்கிற நற்பலன்கள் பற்றி அனுஷ்கா விளக்கியபோது ஆர்யாவுக்கும் யோகா மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாம். அதனால் அவ்வப்போது சின்னச்சின்ன யோக கலைகளை அவரிடம் பயிற்சி எடுத்திருக்கிறார். அதன் பலன் சிறப்பாக இருந்ததை உணர்ந்த ஆர்யா, அதன்பிறகு ஜிம்மிற்கு செல்வதை நிறுத்தி விட்டு, தினமும் அனுஷ்கா பாணியில் யோகாவை செய்யத்தொடங்கி விட்டாராம். சென்னை திரும்பியபிறகு அனுஷ்கா சொல்லித்தரும் யோகா சாதாரணமல்ல, அருமருந்து என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் ஆர்யா.

Monday 27 August 2012

பணம் வாங்காமல் நடித்தார் அஜீத்!



     நடிகர் அஜீத் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் விஷ்ணுவர்தன் படத்திற்காக அதிக நேரத்தை ஜிம்மில் செலவிடுகிறார். இதற்கிடையே அஜீத் நடிகை ஸ்ரீதேவி நடித்துக்கொண்டிருக்கும் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்ற செய்தி உலா வந்தது.
  அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில் அஜீத் மும்பை சென்று இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து நடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். அஜீத்தின் இந்த மும்பை விசிட் அவருக்கு ஒரு நட்சத்திர ரசிகரை கொடுத்துள்ளது. அந்த ரசிகர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான்.
இந்த ஷூட்டிங்கிற்காக மும்பை சென்ற அஜீத் ஒரு ரூபாய் கூட படக்குழுவிடமிருந்து வாங்கவில்லை. விமான செலவு, தங்கும் செலவு என அனைத்தையும் தனது சொந்த செலவிலேயே செய்து கொண்ட அஜீத் அந்த படத்தில் நடிப்பதற்காகக் கூட எந்த பணமும் வாங்கவில்லையாம்.

அஜீத்தின் இந்த நல்ல குணத்தைப் பார்த்ததும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அஜீத்தின் ரசிகராகிவிட்டிருக்கிறார். அஜீத்தின் கட்டுமஸ்தான உடலை விஷ்ணுவர்தன் படத்தில் பார்ப்பதற்கு முன்னரே ஸ்ரீதேவி நடிக்கும் படத்தில் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

ஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்!




     நகைச்சுவை நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தனது டைமிங் காமெடிகளால் துரிதமாக உயர்ந்த இடத்தை பிடித்தார். வாய்ப்புக்காக அவர் காத்திருந்தது போக, அவருக்காக வாய்ப்பு தினம் அவர் வீட்டில் காத்திருக்கிறது என்பது தான் கோடம்பாக்கத்து
தகவல்.

டஸன் படத்தை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்திலும் நடித்து வரும் சந்தானம் இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் ஐ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. சந்தானம் நடிக்க வேண்டிய காட்சிகளையும் தயார் செய்துவிட்டு சந்தானத்திற்காக காத்திருந்திருக்கிறார் ஷங்கர்.

சந்தானம் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக மற்ற காட்சிகளையும் நிறுத்தி வைத்ததால் ஏமாற்றமடைந்திருக்கிறார் ஷங்கர். சிறிது நேரம் கழித்து ஷங்கருக்கு ஃபோன் செய்த சந்தானம் “இங்க ஒரு ஷூட்டிங்க்ல மாட்டிக்கிட்டேன் வர முடியலண்ணே” என்று கூறினாராம். இந்த காட்சிகளையும் எடுக்க முடியாமல் மற்ற காட்சிகளையும் எடுக்க நேரமில்லாமல் ஷூட்டிஙை கேன்சல் செய்துவிட்டு ஸ்பாட்டிலிருந்து கிளம்பிவிட்டதாம் ஐ படக்குழு.

ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்புக்கொண்டதால் தான் சந்தானம் இப்படி அவதிப்படுகிறார். கூடிய சீக்கிரத்தில் “மாசத்துக்கு 31 நாள் தான், அதுல 40 நாள் நடிக்க சொன்னா எப்புடி முடியும்” என்ற காமெடி சந்தானம் நடிக்கும் படத்தில் வரும் என்பது ரசிகர்களின் கமெண்ட்.

என் படம் சிங்கிளா தான் வரணும் - ரஜினி!




 நடிகர் ரஜினி தனது மகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். கோச்சடையான் விரைவில் ரிலீஸாகவிருக்கும் சமயத்தில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ’சிவாஜி’ படத்தை 3D முறையில் மாற்றி வெளியிடுகிறது ஏ.வி.எம் நிறுவனம்.

சிவாஜி படம் ரிலீஸான போது பல ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுத்தது. எப்படியும் இந்த முறையும் சிவாஜி-3D படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை உணர்ந்த ரஜினி இந்த படத்தை தாமதமாகவோ அல்லது முடிந்த அளவிற்கு விரைவிலோ ரிலீஸ் செய்யும்படி கூறியிருக்கிறாராம்.

நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரின் படங்களும் தீபாவளிக்கு நெருக்கத்தில் ரிலீஸாகவிருப்பதால் தேவையில்லாமல் அந்த படங்களுடன் போட்டிபோட்டு அனைவரது லாபத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், விஜய் மற்றும் சூர்யாவை ஊக்குவிக்கும் விதத்திலும் தான் ரஜினி இந்த முடிவை எடுத்திருக்கிறார் ரஜினி என்கிறது கோடம்பாக்கம்.

ரஜினி ரசிகர் சசிகுமார்!


சசிகுமார் தயாரித்து, நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் 'சுந்தரபாண்டியன்'. அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி இருக்கிறார். லட்சுமி மேனன், விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் ஞாயிற்றுகிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. பத்திரிகையாளர் சந்திப்பில் சசிகுமார் பேசியது :

"எனது படங்களை பார்க்க சிலர் பயப்படுகிறார்கள் என்ற செய்திகள் உலா வருகின்றன. 'சுந்தர பாண்டியன்' படத்தினை பார்க்க பயப்பட வேண்டாம். இப்படத்தில் அடி‌தடி‌ இருக்‌கு. கா‌தல்‌ இருக்‌கு.. நட்‌பு‌ இருக்‌கு. மத்‌த படத்‌துலயெ‌ல்‌லா‌ம்‌ கதா‌நா‌யகி‌கள்‌தா‌ன்‌ என்‌னை‌ கா‌தலி‌ப்‌பா‌ங்‌க. இந்‌தப்‌ படத்‌துல நா‌ன்‌ கா‌தலி‌க்‌கி‌றே‌ன்‌. ஏன்‌ நா‌ன்‌‌ கா‌தலி‌க்‌க கூடா‌தா‌? என்‌ படத்‌துல நட்‌பு‌ இருக்‌கும்‌. கா‌தல்‌ இருக்‌கும்‌. ஆக்‌ஷன்‌ எல்‌லா‌ம்‌ கரெக்‌ட்‌டா‌ இருக்‌கும்‌ன்‌னு தெ‌ரி‌ந்‌து பெ‌ண்‌களி‌ல்‌ இருந்‌து ஆண்‌கள்‌ வரை‌க்‌கும்‌ வர்‌றா‌‌ங்‌க. இந்‌தப்‌ படத்‌துலயு‌ம்‌ அதே‌ மா‌தி‌ரி‌ எல்‌லா‌ம்‌ கலந்‌து இருக்‌கு.

எல்லா படத்திலும் தாடியுடன் தான் நடிக்கிறேன். தா‌டி‌ எடுத்‌து நடி‌க்‌கணும்‌னு ஆசை‌தா‌ன்‌. என் ஆசை, நான் இயக்கற படத்துல நிறைவேறும். நா‌ன்‌ டை‌ரக்‌ட்‌ பண்‌ணுகி‌ற படத்‌துல அப்‌படி‌ கே‌ரக்‌டர்‌ அமை‌ஞ்‌சி‌ருக்‌கு. நா‌ன்‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌த‌ 'சுப்‌பி‌ரமணி‌யபு‌ரம்'‌ படத்‌துல தா‌டி‌யோ‌ட நடி‌ச்‌சே‌ன்‌. அதுக்‌கு பி‌றகு 'நா‌டோ‌டி‌கள்'‌, 'போ‌ரா‌ளி'‌, மலை‌யா‌ளப்‌ படம்‌, இந்‌தப்‌ படம்‌ என எல்‌லா‌த்‌துலயு‌ம்‌ தா‌டி‌யோ‌ட நடி‌ச்‌சி‌ட்‌டே‌ன்‌. அடுத்‌து இரண்‌டு பு‌துமுக இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. அதி‌லும்‌ தா‌டி‌யோ‌ட நடி‌க்‌கி‌ற மா‌தி‌ரி‌ முடி‌வா‌ச்‌சு.

'சுந்தரபாண்டியன்' படத்தில் ரஜி‌னி‌ ரசி‌கரா‌ வருவே‌ன்‌. அதனா‌ல பா‌டல்‌ கா‌ட்‌சி‌யி‌ல்‌ அப்‌படி‌ தெ‌ரி‌வே‌ன்‌. இது இயக்‌குநர்‌ முடி‌வு‌ செ‌ய்‌து டா‌ன்‌ஸ்‌ மா‌ஸ்‌டர்‌ சொ‌ல்‌லி‌க்‌ கொ‌டுத்‌து நடி‌த்‌தது. நானாக எதுவும் முடிவு செய்யவில்லை. செ‌ப்‌டம்‌பர்‌ மா‌தம்‌ இப்படம் திரைக்கு வரும்.

என் கம்பெனி மூலமாக குறைந்தது 10 இயக்குனர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துவேன் என்று கூறி இருந்தேன். அந்‌த வரி‌சை‌யி‌ல 'பசங்‌க' பா‌ண்‌டி‌ரா‌ஜ்‌, இப்‌போ‌ பி‌ரபா‌கரன்‌ ஆகி‌யோ‌ரை‌ அறி‌முகப்‌படுத்‌துறே‌ன்‌. அடுத்‌து இரண்‌டு பு‌துமுக இயக்‌குநர்‌கள்‌ படங்‌களி‌ல்‌ நடி‌க்‌கி‌றே‌ன்‌. அடுத்‌து நா‌ன்‌ இயக்‌குவே‌ன்‌. அதற்‌‌கு பி‌றகும்‌ பு‌துமுக இயக்‌குநர்‌களி‌ன்‌ படங்‌களி‌ல்‌ நடி‌ப்‌பே‌ன்‌.

எனது அனைத்து படங்களிலும் சமுத்திரக்கனி இருப்பார் என்று சொல்ல முடியாது. மலை‌யா‌ளத்‌தி‌ல்‌ நா‌ன்‌ நடி‌த்‌த படத்‌தி‌ல்‌ கூட ஒரு கா‌ட்‌சி‌யி‌ல்‌ நடி‌த்‌தி‌ருந்‌தா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ நடி‌க்‌கவில்‌லை‌ என்‌றா‌லும்‌ அவரது குரல்‌ பே‌சி‌ இருக்‌கி‌றது. இது நா‌ங்‌களா‌ பே‌சி‌ எடுத்‌த முடி‌வு‌தா‌ன்‌. அவர்‌ இப்‌போ‌து 'சா‌ட்‌டை'‌ படத்‌தி‌ல்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌க்‌கி‌றா‌ர்‌.

எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன் "

எப்போ ரிலீஸ்?


பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு இடையே இருக்கும் படங்களை எந்தெந்த தேதிகளில் வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள் என்பது குறித்து சேகரித்த தகவல்கள் :

'சாருலதா' : பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்து இருக்கும் படம் இது. சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் 'மாற்றான்' படத்திற்கு முன்பே ஓட்டிப் பிறந்த இரட்டையர்களின் கதையை கூற இருக்கிறது ' சாருலதா'. இப்படத்தை செப்டம்பர் 7ம் தேதி வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'சுந்தர பாண்டியன்' : சசிகுமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு. உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரனை இயக்குனர் ஆக்கி இருக்கிறார் சசிகுமார். 'கும்கி' பட நாயகி லட்சுமி மேனன் நாயகியாக நடித்து இருக்கும் படம். 'கும்கி'க்கு முன்னரே இப்படம் வெளிவர இருக்கிறது. சசிகுமாருக்கு இப்படமும் வெற்றியைத் தரும் என நம்புகிறார்கள். இப்படத்தை செப்டம்பர் 14-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

'பீட்சா' : பீட்சா கடையில் வேலை செய்யும் இளைஞனுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார். FIRST LOOK TEASER-க்கு கிடைத்து இருக்கும் வரவேற்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருக்கும் என்கிறது படக்குழு. செப்டம்பர் 21-ல் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

'தாண்டவம்' : 'தெய்வத்திருமகள்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் இப்படத்தில், கண் தெரியாதவராக இருந்தாலும், ஒலியின் உதவியால் எதிரிகளை எதிர்கொண்டு வீழ்த்தும் வேடத்தில் விக்ரம் நடித்து இருக்கிறார். பாடல்களும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இப்படத்தை செப்டம்பர் 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

'விஸ்வரூபம்' : இந்தியாவில் அதிகப் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம். கமல், ஆண்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். கமல் நடித்து, தயாரித்து, இயக்கி இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. அக்.12 கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். காரணம், வெள்ளித்திரையில் 'விஸ்வரூபம்'.

'பரதேசி' : பாலா தயாரித்து, இயக்கி வெளிவர இருக்கும் படம். அதர்வாவின் நடிப்பில் வெளிவர இருக்கிறது. பாலா இயக்கத்தில் மிகக் குறைந்த நாட்களில் உருவாகி இருக்கும் படம் இது. அதர்வாவுக்கு ஜோடியாக வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். நாயகன் என்ன வேடத்தில் நடிக்கிறார் இருக்கிறார் என்பதே இன்னும் வெளியிடப்படவில்லை. இதுவே படத்திற்கு ஏக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தை அக்.19 அன்று வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

'மாற்றான்' : 'அயன்' கூட்டணியில் வெளிவர இருக்கும் படம். இதுவரை சூர்யா நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் வெளிவர இருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா, காஜல் அகர்வால், கே.வி.ஆனந்த, ஹாரிஸ் ஜெயராஜ் என ஒரு மெகா கூட்டணி இப்படத்தில் இருக்கிறது. பாடல்கள், FIRST LOOK என இணையத்தில் எதிர்ப்பார்ப்பை கூட்டி இருக்கும் இப்படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

தீபாவளி அன்று விஜய் நடிக்கும் 'துப்பாக்கி', சிம்பு நடிப்பில் 'வாலு' ஆகிய படங்கள் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கார்த்தி நடித்து வரும் 'அலெக்ஸ் பாண்டியன்', ரஜினியின் 'கோச்சடையான்' ஆகிய படங்களின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் எப்போது வெளிவரும் என்பது இதுவரை தெரியவில்லை.

ரீமேக்காத ராஜா!


சல்மான் கான் நடிப்பில் வெளியான 3 நாட்களில் 100 கோடி வசூலைத் தாண்டிய படம் 'EK THA TIGER'. இந்தி திரையுலகின் வசூல் சாதனையை வெகு நாட்களாக தக்கவைத்து கொண்டிருக்கும் '3 இடியட்ஸ்' படத்தின் சாதனையை கண்டிப்பாக EK THA TIGER படம் முறியடிக்கும் என்று கூறி வருகிறார்கள்.

'EK THA TIGER' படத்தின் இந்த சாதனையால் பல்வேறு மொழிகளின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு போட்டி போட்டு வருகிறார்கள். தமிழ் ரீமேக் உரிமையை ஜெயம் கம்பெனி வாங்கி இருப்பதாகவும், விஜய் நடிக்க ஜெயம் ராஜா இப்படத்தினை ரீமேக் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இச்செய்தி குறித்து விசாரித்த போது " EK THA TIGER படத்தின் தமிழ் உரிமையை ஜெயம் கம்பெனி நிறுவனம் வாங்கவில்லை.

ஜெயம் ராஜா இயக்கத்தில், விஜய் நடிக்க இப்படம் உருவாக இருக்கிறது என்ற செய்தியிலும் உண்மையில்லை. ஜெயம் ராஜா தனது அடுத்த படத்திற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஜெயம் ராஜா இயக்கும் முதல் நேரடி தமிழ் படமாக இப்படம் அமையும். பல்வேறு முன்னணி நாயகர்களிடம் பேசி வருகிறோம். அது போலவே இந்தியில் 'ரமணா' ரீமேக்கையும் ஜெயம் ராஜா இயக்கவில்லை.

அடுத்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு ஆரம்பத்தில் தொடங்குவார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க இருக்கிறது " என்று தெரிவித்தார்கள்
.

எல்லா பெருமையும் எஸ்.ஏ.சி-க்கு தான்! : ஷங்கர்


தமிழில் விஜயகாந்த், இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்தில் கமல்ஹாசன், தெலுங்கில் சிரஞ்சீவி என நட்சத்திர பிரபலங்கள் நடித்து வெளியான எல்லா மொழிகளிலும் வெற்றி பெற்றது எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சட்டம் ஒரு இருட்டறை'. இப்படம் மீண்டும் தமிழில் ரீமேக்காகிறது.

இம்முறை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பு மற்றும் இயக்கம் மேற்பார்வை ஆகியவற்றை மட்டும் மேற்கொள்கிறார். ரீமேக் படத்தினை 'இயக்குகிறார் சினேஹா பிரிட்டோ. ரீ‌மாசென், பியா, பிந்துமாதவி, 'ஆச்சர்யங்கள்' பட நாயகன் தமன்குமார், சின்னத்திரை நகைச்சுவையாளர் மகேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

'சட்டம் ஒரு இருட்டறை' படக்குழுவையும், FIRST LOOK-ஐயும் இயக்குனர் ஷங்கர் பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவர் பேசியது :

"நான் பெரிதாக எதுவும் சாதித்ததாக எனக்கு என்றுமே தோன்றியது கிடையாது. அப்படி நான் ஏதாவது சாதித்திருக்கிறேன் என நீங்கள் யாராவது கருதினால் அந்த பெருமை மொத்தமும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அவர்களையே சாரும். காரணம் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவர்களிடம் உதவியாளராக சேருவதற்கு முன் ஒருசில மேடை நாடகங்களில் நடித்தபடி நாடக நடிகராக இருந்த நான், மிகுந்த சோம்‌பேறியாகவும் இருந்தேன்.

அவரிடம் நடிக்க வாய்ப்பு கேட்டு தான் சென்றேன். ஆனாலும் உதவி இயக்குநர் ஆகிவிட்டேன். எஸ்.ஏ.சி. அவர்களிடம்தான் சுறுசுறுப்பு என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன். அதேமாதிரி ஒழுக்கம், நேரம் தவறாமை, திட்டமிடல் உள்ளிட்டவைகளையும் அவரிடம் கற்றுகொண்டு தான் இன்று ஒரு இயக்குநராக உங்கள் முன் நிற்கிறேன்.

என்னை மாதிரி ஏராளமானவர்களை வளர்த்துவிட்டவர் இயக்குநர் எஸ்.ஏ.சி. அவரிடமிருந்து புதிதாக வந்திருக்கும் இளம் பெண் இயக்குநர் சினேகா பிரிட்டோவும், இந்த படமும், இதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களும், பணிபுரிந்திருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் " என்று தெரிவித்தார்.

அவ்விழாவில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது " ஷங்கரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். அன்றும் சரி, இன்றும் சரி, சொன்னால் சொன்னபடி நடந்து கொள்வார். ஒரு படவிழா, நீங்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றேன். என்ன விழா, ஏதுவிழா என்று எதுவும் கேட்காமல் சொன்ன நேரத்திற்கு இங்கு வந்துவிட்டார். அதுதான் ஷங்கர்.

அவர் என்னிடம் உதவியாளராக இருந்து என்ன கற்றுக் கொண்டாரோ எனக்கு தெரியாது... ஆனால் அவரிடம் இத்தனை பிஸியிலும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் திறமை என்னை வியக்க வைக்கும் விஷயமாகும். இன்று கூட எங்கோ உள்ள பெருங்குடியில் ஷூட்டிங்கில் இருந்தவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார்.

'சட்டம் ஒரு இருட்டறை' பழைய படத்தில் குடும்பத்திற்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை சொல்லி இருந்தேன். இதில் காதலுக்காக ஒரு இளைஞனின் போராட்டத்தை இன்றைய ரசிகர்களின் ரசனைக்கேற்ப பிரமாண்டமாக சொல்ல வேண்டும் என்றார் என் பேத்தி சினேகா பிரிட்டோ. அதற்காகத்தான் இந்த அறிமுக விழாவிற்கு பிரமாண்ட இயக்குநர் ஷங்கரை அழைத்திருந்தேன்" என்றார்
.

நான் பெரிய சோம்பேறி. சினிமாவில் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஷங்கர்




    விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம் 1981-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமன்குமார், ரீமா சென், பிந்து மாதவி பியா நடிக்க மீண்டும் ரீமேக் ஆகிறது.
வடபழனியில் நடந்த இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் பங்கேற்று பேசியதாவது:-

சினிமாவில் நான் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. அப்படி சாதித்ததாக யாரேனும் கருதினால் அந்த பெருமை எஸ்.ஏ.சந்திரசேகரையே சாரும். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக சேரும் முன் நாடக நடிகராக இருந்தேன். சில மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நான் பெரிய சோம்பேறி.
எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டுப் போனேன். ஆனால் அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து விட்டேன். சுறுசுறுப்பு, ஒழுக்கம் , நேரம் தவறாமை அனைத்தையும் அவரிடம்தான் கற்றேன். என்னை போல் பல இயக்குனர்களை எஸ்.ஏ. சந்திரசேகரன் வளர்த்து விட்டுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் விமலாராணி, படத்தின் இயக்குனர் சினேஹா பிரிட்டோ மற்றும் தமன்குமார், ரீமாசென், பிந்து மாதவி பங்கேற்றனர்.

ஏதேனும் ஒரு படத்தில் தாடி இல்லாமல் நடிப்பேன். சசிகுமார்



இயக்குனர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் சுந்தரபாண்டியன், இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார்.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இரு பாடல்களை நிருபர்களுக்கு திரையிட்டு காட்டி சசிகுமார் அளித்த பேட்டி வருமாறு:-

ஒரு பெண்ணை மீட்கிற கதையே சுந்தரபாண்டியன், ஆக்ஷன், காதல், நட்பு போன்றவையும் படத்தில் இருக்கும். இதில் நான் ரஜினி ரசிகனாக வருகிறேன். எனவே படத்தில் சில சீன்களில் அவரை பின்பற்றி நடித்துள்ளேன்.

இந்த படத்திலும் தாடி மீசையுடன் வருகிறேன். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் இருந்து தாடி எனக்கு ஒரு அடையாளமாகிவிட்டது. ஏதேனும் ஒரு படத்தில் தாடி இல்லாமல் நடிப்பேன். அடுத்த வருடம் மீண்டும் படங்கள் இயக்குவேன். பத்து புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி படங்கள் தயாரிப்பது என் திட்டமாக உள்ளது. தற்போது இரு புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தி விட்டேன்.‘சுந்தரபாண்டியன்’ பட தலைப்புக்கு சர்ச்சை எதுவும் இல்லை. ஏற்கனவே இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி, இனிகோ, பிரபாகரன், சூரி, அப்புக்குட்டி மற்றும் இசையமைப்பாளர் ரகுநந்தன், ஆகியோரும் பங்கேற்று பேசினர்.

விஜய் படத்தை இயக்கவில்லை : ராஜா விளக்கம்



  

விஜய் நடிக்கும் படத்தை இயக்கவில்லை என்றார் இயக்குனர் ராஜா. ‘ஜெயம், ‘தில்லாலங்கடி, ‘சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜய் நடித்த ‘வேலாயுதம் படத்தை இயக்கினார் ராஜா. சல்மான்கான் இந்தியில் நடித்து திரைக்கு வந்திருக்கும் ‘ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பதாகவும் இதை ராஜா இயக்க உள்ளதாகவும் கோலிவுட்டில் பேசப்படுகிறது. இது குறித்து ராஜா கூறியதாவது: சல்மான்கான் நடித்துள்ள இந்தி படத்தின் ரீமேக் உரிமையை எனது தந்தை மோகன் வாங்கி இருக்கிறார்.
அப்படத்தில் விஜய் நடிக்க நான் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படத்தின் உரிமையை என் தந்தை வாங்கவில்லை. நான் இயக்கவும் இல்லை. தற்போது அக்ஷய் குமார் நடிக்கும் இந்தி படம் ஒன்றை நான் இயக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் தயாரிக்க உள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு ஸ்கிரிப்ட் ஒன்றையும் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். இதில் எந்த படத்தை முதலில் தொடங்குவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

‘வேலாயுதம்' படத்தை விஜய் நடிக்க இயக்கினேன். எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. இருவரும் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறோம். அவருடன் சேர்ந்து படம் உருவாக்க எண்ணி உள்ளோம். அடுத்த வருட இறுதியில் அப்படம் தொடங்கப்படும். இவ்வாறு ராஜா கூறினார்.

அஜித் ஆட்டம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்!


அ‌ஜீத்தின் புதிய படத்தின் ஷூட்டிங் மும்பை, பெங்களூரு என்று இரு இடங்களிலும் தடைபட்டது. காரணம் மழையும், ரசிகர்களும். இந்த இடைவெளியில் ஜிம்மில் தொப்பையை கரைத்த அ‌ஜீத் படப்பிடிப்புக்கு கிளம்ப ஆர்வமாக இருக்கிறார். இந்தமுறை எக்ஸ்ட்ரா முன்னெச்சரிக்கையுடன் கிளம்புகிறார்கள்.

விஷ்ணுவர்தன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் மும்பையில் தொடங்குகிறது. மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். அ‌ஜீத்துடன் ஆர்யா, நயன்தாராவும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அ‌ஜீத்தின் தொப்பையில்லா கெட்டப் பார்த்து குஷியில் இருக்கும் ரசிகர்கள் அடுத்து எதிர்பார்ப்பது, படத்தின் பெயரை. விஷ்ணுவர்தனும் டீமும் நல்ல கேச்சிங்கான தமிழ்ப் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

“தல அஜித்” தின் புதிய அவதாரம்


தல ரசிகா்கள் மத்தியில் பட்டைய கிளப்பிக்கொண்டிருக்கும் தலயின் புதிய படம்

செப்டம்பர் ,அக்டோபர் மாதங்களில் திரைக்கு வரும் தமிழின் பிரம்மாண்ட படங்கள்




தமிழ் சினிமாவில் நிறைய எதிர்பார்ப்புகளை கொண்ட திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளிவரவிருக்கின்றன. பெரிய ஹீரோக்களின் படங்களும் திரைக்கு வரவிருப்பதால் இப்படங்கள் வெளியாகும் தேதிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.



நமக்குத் தெரிந்த தகவலின்படி அப்படங்கள் வெளியாகும் தேதிகளை யூகங்களின் அடிப்படையில் இங்கே குறிப்பிட்டுள்ளோம். அவை வருமாறு,
நடிகை பிரியாமணி ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக நடித்திருக்கும் படம் ‘சாருலதா’. இப்படத்தை பொன்.குமரன் என்பவர் இயக்குகிறார். சூர்யாவின் ‘மாற்றான்’ படத்திற்கு இணையாக போட்டி போடும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தை செப்டம்பர் 7-ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நடிக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’. இப்படத்தை சசிகுமாரின் உதவியாளர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றியைத் தரும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை செப்டம்பர் 14-ல் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
பீட்சா கடையில் வேலை செய்யும் இளைஞனுக்கு ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் படம் ‘பீட்சா’. இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர். புதுமுக இயக்குனர் கார்த்தி இயக்குகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகி இருப்பதால் வரும் செப்டம்பர் 21-ல் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விக்ரம், அனுஷ்கா நடிப்பில் விஜய் இயக்கி வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கு பிறகு, மூன்று பேரும் மறுபடியும் கைகோர்த்திருக்கும் படம் ‘தாண்டவம்’. இப்படத்தில் பல காட்சிகள் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளன. இசை வெளியீட்டை சமீபத்தில் முடித்திருக்கும் இந்த படத்தினை வரும் செப்டம்பர் 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘விஸ்வரூபம்’. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்ட இப்படத்தை கமல்ஹாசனே இயக்கியிருக்கிறார். ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலரே பிரம்மாண்டமாக இருந்த பட்சத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது. இப்படத்தை அக்.12-ல் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

பாலா இயக்கத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா நடிக்கும் படம் ‘பரதேசி’. பாலா படங்களிலேயே மிகக் குறைந்த நாளில் முடிக்கப்பட்ட படம் என பெயர் பெற்றிருக்கிறது. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வேதிகா, தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ளனர். பாலா படத்தில் நடிக்கும் ஹீரோ எப்பொழுதும் அவருடைய உண்மையான தோற்றத்தில் நடிப்பதில்லை. அதுபோல் இப்படத்தில் நடிக்கும் அதர்வாவின் தோற்றம் என்னவென்றே அறிய முடியவில்லை. ஆகவே, அவரது தோற்றம் எப்படியிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்.19-ல் வெளியிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படமும், சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படமும், கார்த்தி நடிப்பில் சுராஜ் இயக்கும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ படத்தையும் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்கு பெருந்தன்மையுடன் சிபாரிசு செய்த தனுஷ்.


        மெரினா, 3 படங்களில் செகண்ட் ஹீரோ ரேஞ்சில் இருந்த சிவகார்த்திகேயன், "மனம் கொத்திப் பறவையில் ஹீரோவாகி விட்டார். இப்போது, அவரை ஹீரோ சான்ஸ் துரத்துகிறது.

தனுஷ், தற்போது ஒரு இளமை துள்ளும் காதல் கதையை படமாக தயாரிக்கிறார். இப்படத்தை, "ஆடுகளம் படத்தில், இயக்குனர் வெற்றி மாறனிடம் அசோசியேட்டாக வேலை செய்த, செந்தில் நாதன் இயக்குகிறார்.

இந்தக் கதையில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தால் பொருத்தமாக இருக்குமென அபிப்ராயப்பட்டதோடு, அவரே போனில் தொடர்பு கொண்டு சிவகார்த்திகேயனை ஒப்பந்தமும் செய்துவிட்டார். "3 படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சிறிய நட்பை வைத்து, நண்பனை தூக்கிவிட நினைக்கும் தனுஷின் பெருந்தன்மையை நினைத்து, சிலாகிக்கிறார் சிவகார்த்திகேயன்.

நான் செய்த தில்லு முல்லுகள். கார்த்தி



      தில்லு முல்லு" படத்தின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்ற நடிகர் கார்த்தி பேசுகையில், ரஜினி சார் நடித்த "தில்லு முல்லு" ரிலீஸ் ஆனபோது நான் ஆயா கையை பிடித்து கொண்டு ஸ்கூலுக்கு போய்கிட்டிருந்தேன். அதனால படத்தை அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாம போச்சு.

அதன்பிறகு யு.எஸ்.-ல படிச்சுகிட்டிருந்தப்போ லோன்லியா பீல் பண்றப்போவெல்லாம் டெய்லி ஒரு மணி நேரமாவது இப்படத்தை டி.வி.டி.யில் பார்க்காமல் தூங் போகமாட்டேன். அந்த அளவிற்கு அதில் தேங்காய் சீனிவாசனும், ரஜினிசாரும் ‌காமெடியில் பிச்சு உதறியிருப்பாங்க. அப்போ தியேட்டர்ல பார்க்க முடியாத வருத்தத்தை இந்த தில்லு முல்லு, சிவா நடிப்புல தீர்த்து வச்சிடுங்குறது என் நம்பிக்கை.

வாலி, எம்.எஸ்.வி., யுவன் கூட்டணியில் ஒரு புதிய காக்டெயில் மிக்ஸாக இருக்கும் இந்த "தில்லு முல்லுங்கறது என் எதிர்பார்ப்பு. அதற்காக இயக்குநர் பத்ரி, புது புரடியூசர் வேந்தர் மூவிஸ் எஸ்.மதன் எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன். மற்றபடி என்னோட சின்ன வயது தில்லு முல்லு என்று பெரிசா சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. ஏன்னா அவ்வளவு கட்டுப்பாடாக எங்களை வளர்த்துட்டாங்க...

எங்க போனாலும் சிவக்குமார் பையனுக்கு இங்கு என்ன வேலை? என்று கேள்வி வந்துடும். அந்த பயம் வேற, அதையும் மீறி நான் செய்த "தில்லு முல்லுன்னா நான் அடிக்கடி ஸ்கூலை கட் பண்ணிட்டு ஸ்கூலுக்கு பின்னாடி இருக்கிற பீச்சுல குளிச்சதுதான் என்று சுவாரஸ்யமாக பேசி சென்றார் நடிகர் கார்த்தி!

மனமுடைந்து அழுத அனுஷ்காவுக்கு சமாதானம் செய்த கார்த்தி.


இரண்டாம் உலகம்' படத்தினை முடித்து விட்டு அனுஷ்கா திரும்பி இருப்பதால் 'அலெக்ஸ் பாண்டியன்' படக்குழுவினர் வேகமாக படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

ஆனால், அனுஷ்காவால் மறுபடியும் 'அலெக்ஸ் பாண்டியன்' படக்குழுவிற்கு பிரச்னை வந்திருக்கிறது.

'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்புக்கு வந்த அனுஷ்கா, தனக்கு மேக்கப் போட கூடவே ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ளார். அவர் மேக்கப் சங்கத்தில் உறுப்பினர் இல்லையாம். "மேக்கப்பிற்கு என்று நாங்கள் இருக்கும் போது எப்படி அனுஷ்கா மட்டும் தனியாக ஒரு பெண்ணை அழைத்து வரலாம்" என்று மேக்கப் யூனியன் ஆட்கள் கோபமாகி விட்டார்கள்.

இதனால் மேக்கப் யூனியனைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் 'அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பிற்கு சென்று அனுஷ்காவிற்கு மேக்கப் போடும் பெண்ணை வெளியேறச் சொல்லி இருக்கிறார்கள். மேலும் அனுஷ்காவையும் திட்டி இருக்கிறார்கள்.

இதனால் மனமுடைந்த அனுஷ்கா அழுதுகொண்டே அந்த இடத்தினை விட்டுச் சென்று விட்டாராம். நிலைமை மோசமடைவதை உணர்ந்த கார்த்தி, இவ்விஷயத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்து இருக்கிறார்.

மேலும் அனுஷ்காவிற்கு மேக்கப் போட்ட பெண் வெளியேறிய பிற்கு தான் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்து இருக்கிறது.