Saturday 1 December 2012

சினிமாக்காரர்கள் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்- பூர்ணா

I will never marry an actor says poornaபரத்துக்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா. அதன்பிறகு துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தவர், கோடம்பாக்கம் கைவிரித்ததால் ஆந்திராவில் மையம் கொண்டார். போன வேகத்தில் துகிலுரிந்து படு சூடுகாட்டி நடித்து சில படங்களை கைப்பற்றினார். ஆனால் ஓரிரு படங்களிலேயே பூர்ணாவை துவைத்து பிழிந்து காய போட்டனர் ஆந்திரவாலாக்கள். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவுக்குள் வந்திருக்கிறார் பூர்ணா.

தற்போது ஜன்னல் ஓரம், தகராறு போன்ற படங்களில் நடிப்பவர், தமிழ் நாட்டில் தன்னை நல்ல புள்ளையாக காட்டிக்கொள்வதற்காக மீண்டும் போர்த்திக்கொண்டே நடித்து வருகிறார். இந்த நிலையில், ஆதி, நகுல் போன்ற நடிகர்களுடன் ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட பூர்ணா, மீண்டும் அவர்களுடனான நட்பை புதுப்பித்திருப்பதாக செய்தி பரவியுள்ளது.

ஆனால் இந்த செய்தியை பூர்ணாவின் காதோரம் கொண்டு சென்றால், எந்த நடிகர்களுடன் நான் நட்பு கொள்ளவில்லை என்கிறார். தமிழைப்போலவே நான் தெலுங்குக்கு சென்றபோதும் ஒரு நடிகருடன் எனக்கு காதல் இருப்பதாகவும், அவரையே நான் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த நடிகருடன் இதுவரை எனக்கு காதல் ஏற்படவில்லை. அதோடு நடிகர்களை நான் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று நினைத்ததுமில்லை. காரணம், நடிகர்களை திருமணம் செய்து கொண்டு நிம்மதியிழுந்த பல நடிகைகளின் வாழ்க்கையை நேரில் பார்த்திருக்கிறேன். அதனால் நடிகர்களை திருமணம் செய்து கொண்டு என் நிம்மதியை எந்த காரணம் கொண்டும் நான் கெடுத்துக்கொள்ளமாட்டேன். எதிர்காலத்தில், சினிமா வாசணையே இல்லாத பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மட்டும் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் பூர்ணா.

மீண்டும் தள்ளிப்போன விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ்!

Vishwaroopam Audio Release again postponedஎன்ன காரணத்தினாலோ தெரியவில்லை தொடர்ந்து தள்ளிக்கொண்டே போகிறது கமலின் விஸ்வரூபம் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா. நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்து இருக்கும் படம் விஸ்வரூபம். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாகியுள்ள இப்படத்தில் கமல் ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பயங்கரவாதத்தை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

முன்னதாக இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை கடந்த மாதம் அறிவித்து இருந்தார் கமல். சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பறந்து பறந்து ஆடியோவை வெளியிட திட்டமிருந்தார் கமல். ஆனால் மழையால் அதனை ரத்து செய்தார் கமல். பிறகு சென்னையில் மட்டும் வருகிற டிசம்பர் 2ம் தேதி ஆடியோவை வெளியிட இருந்தார் கமல். ஆனால் இப்போது அதுவும் ரத்தாகி டிசம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இந்த ஆடியோ விழா நடக்கிறது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

MPMK Audio Launch Live...

’சூப்பர்ஸ்டார்’ சந்தானம் - ரஜினி பதில்!




நகைச்சுவை நடிகர் சந்தானம் கையில் இப்போது கிட்டத்தட்ட 20 படங்கள் இருக்கிறது. சந்தானம் ஆர்யா இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மிகப்பெரிய ஹிட். இப்போது சந்தானம்-ஆர்யா இணைந்திருக்கும் படம் சேட்டை. கண்ணன் இயக்கும் சேட்டை படம் காமெடிக்கு முக்கியத்துவம் அளித்தே எடுக்கப்படுகிறது.



சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட போதிலும் எந்த பட்டப்பெயரும் வைத்துக்கொள்ளாத சந்தானத்திற்கு சேட்டை படக்குழு தங்களின் படத்தின் மூலம் ‘காமெடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டம் தரவிருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தை அவர் ஒருவருக்கே உரியது என்பதால் சந்தானம் ரஜினிக்கு ஃபோன் செய்து வைத்துக்கொள்ளவா? வேண்டாமா? எனக் கேட்டுள்ளார்.


சந்தானத்திற்கு ரஜினி “ வெரிகுட் வெரிகுட். ஆனால் சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தை என் பயரில் ரிஜஸ்டர் ஆகலையே” என்று நகைச்சுவையாக பதில் கூறினாராம்.

ஹீரோவாகிறார் விஜய் படத்தின் வில்லன்!



       பில்லா-2, துப்பாக்கி ஆகிய படங்களின் வில்லன் வித்யுத் ஜம்வால். தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இரண்டு படங்களும் முன்னணி நடிகர்களின் படம் என்பதால் வித்யுத்தின் நடிப்பு பெரும்பாலான ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறது. வித்யுத்தின் கட்டுமஸ்தான ஸ்டைலான தோற்றம் பெண் ரசிகைகளையும் கவரத் தவறவில்லை.

காக்க காக்க படத்தின் இந்தி ரீமேக்கில் வில்லன் கேரக்டரில் நடித்து சிறந்த அறிமுக நடிகர் விருதை வாங்கியுள்ள வித்யுத்துக்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் ஆதரவால் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வித்யுத் கால்ஷீட்டுக்காக காத்துக்கிடக்கின்றனராம். இரண்டே படங்களில் இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு பதிலளித்த வித்யுத் “நான் இரண்டே படங்களில் நடித்திருந்தாலும் இரண்டு சிற்நத மனிதர்களுடன் நடித்திருக்கிறேன்.

விஜய், அஜித் ஆகிய இருவரையும் உன்னிப்பாக கவனித்து நான் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். விஜய்யிடமிருந்து அமைதியின் முக்கியத்துவத்தையும், அஜித்திடமிருந்து பெண்களை எப்படி மதிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன். எனக்கு ஏற்ற கதையாக தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.

மனிஷா கொய்ராலாவிற்கு புற்றுநோய்!


Manisha koyralavirku cancer!பம்பாய், உயிரே, இந்தியன், ஆளவந்தான் மற்றும் தனுஷ் நடித்த மாப்பிள்ளை போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மனிஷா கொய்ராலா. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடந்து நேற்று மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, சில நாட்கள் மருத்துவமனையில் தங்கும் அவருக்கு சில மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்தி, தமிழ் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, நேபாளின் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர். விவாகரத்து பெற்ற 42 வயதான நடிகை மனிஷா, 1991-ம் ஆண்டு சௌதாகர் என்னும் இந்தித் திரைப்படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானார்.

விஜய் பட வாய்ப்பை தூக்கியெறிந்த அசின்!


Threw Asin film of the opportunity!


கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட் நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அங்குள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய்குமார் போன்ற பிரபல நடிகர்களை தனது பாக்கெட்டில் இருப்பதால், கோலிவுட் நடிகர்களெல்லாம் அவருக்கு ஹீரோவாகவே தெரியவில்லையாம். சமீபத்தில்கூட விஜய் படத்தை இயக்கும் தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அசினிடம் கால்சீட் கேட்டு மும்பைக்கு சென்றாராம். அப்போது துப்பாக்கிக்கு அப்புறம் விஜய் நடிக்கிற படத்தை நான்தான் டைரக்ட் பண்றேன். அந்த படத்துல நீங்க விஜய்யோட ஆக்ட்டு கொடுத்தா சூப்பரா இருக்கும்னு பீல் பண்றேன் என்று தனது பாணியில் அசினிடம் தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் கலந்து பொறிந்தாராம்.

ஆனால் அதை சுடச்சுட கேட்டுக்கொண்டிருந்த அசின், அவர் பக்கமா திரும்பி, இப்ப அக்சய்குமாரோட கில்லாடி 786 படத்துல நடிக்கிறேன். இதுக்கு அப்புறமா என்னோட நடிக்கிறதுக்கு இரண்டு பெருசு நடிகருங்க க்யூவுல நிக்கிறாங்க. இந்த நேரத்துல நான் கோலிவுட்டுக்கு வந்துட்டா பாவம் இங்க இவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க. அதனால் வேற ஏதாச்சும் நடிகைங்கள பாத்துக்கிங்க என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். அதையடுத்துதான் தனது ஆஸ்தான நாயகியான அமலாபாலை கமிட் பண்ணியிருக்கிறார் ஏ.எல்.விஜய்.

ஆனால் அசின் சொல்லி அனுப்பிய இந்த சேதியைக்கேட்டு தளபதி நடிகருதான ரொம்ப டென்சனாகி விட்டாராம். எங்கூட நடிச்சு வளர்ந்த நடிகை. எனக்கே டேக்கா கொடுக்குதா? ஏத்தம்னு ஒன்னு இருந்தா, இறக்கம்னு ஒன்று இல்லாமலா போகும். அப்ப பாத்துக்கிறேன் என்று அசின் பெயரை தனது டைரியில் குறிச்சி வைச்சிருக்கிறாராம்.

ஹன்சிகாவை அதிர வைத்த நயன்தாரா!



Nayanthara Breaking into Hansika!
     ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் ஹன்சிகாவின் மார்க்கெட் சூடுபிடித்தது. அதைத் தொடர்ந்து அனுஷ்கா, அஞ்சலிக்கு செல்லவிருந்த சில படங்கள்கூட ஹன்சிகா பக்கம் திரும்பின. இதனால் தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு இன்னும் சில ஆண்டுகளுக்கு தன்னை ஓரங்கட்ட எந்த நடிகையும் வர சான்ஸ் இல்லை என்றும் மிதப்பில் இருந்தார்.

இந்த நிலையில், ஹன்சிகாவுக்கு எதிர்பாராத பெரும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்து வரும் அவர், அடுத்தபடியாக ஆர்யாவுக்கு ஜோடியாக ராஜா ராணி படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஹன்சிகாவிடம்தான் பேசியிருக்கிறார்கள். கால்சீட் கொடுப்பதற்கு ஹன்சிகா தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஆர்யாவின் அதிரடி சிபாரிசினால் அப்படத்தை கைப்பற்றியிருக்கிறார் நயன்தாரா. இதைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த மேலும் சில படங்களும் இப்போது
நயன்தாரா பக்கம் திரும்பி நிற்கின்றன. இதனால் கைவசம் இருக்கும் படங்களோடு தன்னை டெபாசிட் இழக்க செய்து விடுவாரோ நயன்தாரா என்று கலங்கிப்போய் இருக்கிறார் ஹன்சிகா.

சட்டை காலறை தூக்கி விடும் விஜய்சேதுபதி!


Vijay Sethupathi have huge response after the success of pizzaதென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. இவர் பீட்சா படத்தின் வெற்றியால் பேசப்படும் நடிகராகியிருக்கிறார். வித்தியாசமான ஸ்கிரிப்ட், வித்தியாசமான ஹீரோ என்று அவரை உற்று நோக்குகிறது கோலிவுட். இதனால் பீட்சாவுக்குப்பிறகு சில முன்னணி இயக்குனர்களே அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் பல கதைகள் கேட்டு அதில் நலன் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை மட்டுமே ஓ.கே செய்து படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி விட்டார் விஜய்சேதுபதி.

மேலும், சூதுகவ்வும் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஒரு புதுமையான ஹீரோவாக நடிக்கிறேன். ஆனாலும் காமெடியும் இருக்கிறது. முக்கியமாக இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத கதைக்களமாக இருக்கும் என்று அப்படம் பற்றி சொல்லும் விஜய்சேதுபதி, இனி சுந்தரபாண்டியனில் நடித்தது போன்று வில்லனாக நடிக்க மாட்டாராம். பீட்சா தனக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்து விட்டதால் அந்த ட்ரேக்கிலேயே முழுவீச்சில் பயணிக்கப்போவதாக சொல்கிறார் விஜய்சேதுபதி.

இந்த நிலையில், ஒரு படத்தின் வெற்றியிலேயே 50 லட்சம் சம்பளம் கேட்டு காலரை தூக்கி விடுகிறார் விஜய்சேதுபதி என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவுகிறது. ஆனால் அவரிடம் இதுபற்றி கேட்டால், என்னைப்பற்றி இதுவரை கிசுகிசுக்களோ, வதந்தியோ வரவில்லையே என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி சிரிக்கிறார்.

அஜீத் ஜோடியானார் தமன்னா!!

Tamanna to pair with Ajith filmதற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடித்து வரும் அஜீத் அடுத்து நடிக்க இருக்கும் படத்தை இயக்குபவர் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. விஜயா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி தயாரிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத்துடன் இயக்குனர் சிவாவின் தம்பி பாலா, விதார்த், முனீஷ், சோஹில், என்ற இளம் நாயகர்களும் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு முன்பாக இந்த மாதத்துடன் நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா நிறைவு பெறுவதால் நாளை (டிசம்பர் 2ந்தேதி) பாடல் பதிவுடன் பணிகளை தொடங்கி விடுகிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் சிவா கூறும்போது "நாகிரெட்டி அவர்களின் நூற்றாண்டில் படம் துவங்குகிறது. அஜீத் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விஜயா புரொடக்ஷனின் பிரமாண்டம் இவற்றை மனதில் வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அஜீத்திடம் உள்ள மற்றொரு பரிமாணத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம்" என்றார்.

Friday 30 November 2012

தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்க ஆசைப் படுகிறேன்; சினேகா!



Wishes to be always in the Tamil film: Sneha!

விரும்புகிறேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புன்னகை இளவரசியாக ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் நடிகை சினேகா, சமீபத்தில் அவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார், அவர் பொன்னர் சங்கர் படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் வெளி வர உள்ள படம் ஹரிதாஸ், இந்த படம் குறித்தும் தினமலருக்கு சினேகா அளித்த பேட்டியில்,

நான் சினிமாவில் கிட்டத்தட்ட 69 படங்களில் நடித்துள்ளேன் , ஆனால் ஹரிதாஸ் படம் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம், என் படங்களில் எப்போதும் கிளாமர் இருக்காது, ரொம்ப எதார்த்தமான குடும்ப பாங்கான படங்கள் தான் நடித்துள்ளேன், அந்த வகையில் என் கேரக்டருக்கு பொருத்தமான ரொம்ப எதார்த்தமான படம் ஹரிதாஸ், படத்தில் டீச்சர் ரோல், அந்த சிறு வயது குழந்தையுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், இந்த படத்தில் நான் ஹீரோயின் அல்ல, கதை தான் எல்லாமே. நான் எப்போதும் என் படங்களுக்கு ஹோம் வொர்க் செய்து பார்க்கும் பழக்கம் இல்லை, இயக்குனர் ஸ்பாட்டில் என்ன சொல்கிறாரோ அதை புரிந்து கொண்டு அப்படியே வெளிப்படுத்துவேன், ஒன்னும் மைண்ட்ல வச்சிக்காம டைரக்டர் சொல்றதை கேட்டு செய்தாலே போதும்னு நினைப்பேன் , அதுவே நாம் நினைப்பதை அழகாக வெளிக்காட்ட முடியும், இந்த படமும் அப்படி தான் நடித்துள்ளேன்.

நான் நடித்த எத்தனையோ படங்களில் சில படங்கள் மனசை விட்டு அகலாது, விரும்புகிறேன், ஆட்டோகிராப், வசூல்ராஜா, பிரிவோம் சந்திப்போம், பார்த்திபன் கனவு, இப்படி எனக்கு பிடித்த படங்களின் வரிசையில் ஹரிதாஸ் படம் நிச்சயமாக இருக்கும். பொதுவா சினிமா ஹீரோயின்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனா அவங்க திரும்ப நடிக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்றாங்க. அண்ணி அக்கா இது மாறி ரோல்ஸ் பண்ண வச்சிடறாங்க, என்னை பொறுத்த வரை எந்த கதா பாத்திரம் சினேகா நடித்தா நல்லா
இருக்கும்னு டைரக்டர் முடிவு பண்ணி கேட்கிறார்களோ நிச்சயம் அந்த ரோலை நான் மிஸ் பண்ண மாட்டேன்,

கல்யாணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 4 கதை கேட்டிருக்கிறேன் அதில் ஒன்று மட்டும் ஒத்துகிட்டேன், எனக்கு ஸ்க்ரிப்ட் தான் முக்கியம் , அதன் பிறகு தான் மற்றவை, நான் இது வரை செய்த படங்கள் எனக்கு கெட்ட பெயரை தந்ததில்லை, இனிமேலும் அதை காப்பாற்றுவேன், மீடியாக்களில் நானும் பிரசன்னாவும் நிறைய பேசிட்டோம், அதனால் தான் இந்த தீபாவளிக்கு கூட யாருக்கும் பேட்டி ,பார்ட்டி என்று எதிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டோம் ,அப்பா அம்மா அக்கா அண்ணன் என்று கிட்டத்தட்ட 25 பேர் உள்ள எங்கள் குடும்பத்துடன் இந்த தீபாவளியை மகிழ்ச்சியோடு நானும் பிரசன்னாவும் கொண்டாடினோம் , தற்போது பிரசன்னா சென்னையில் ஒரு நாள் மற்றும் பிரியாணி படத்திலும் ஒரு தெலுகு படத்திலும் நடித்து வருகிறார்

என் எதிர் காலத்தை பற்றி நிறைய கனவு இருக்கு, நிறைய திட்டம் இருக்கு, எனக்கு காஸ்ட்யூம் டிசைன் ஆர்வம் இருக்கு, இன்டிரியர் வேலையும் ஆர்வம் உண்டு, நிச்சயம் விரைவில் சினிமாவில் இருந்து கொண்டு அதன் தொடர்பான சில வேளைகளில் ஈடுபட விரும்புகிறேன், விரைவில் அறிவிப்பேன். படம் எனக்கு வந்தாலும் வரலைனாலும் யாரையும் போய் வற்புறுத்த மாட்டேன், எனக்கு வரும் ரோல் நிச்சயம் எனக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கு, என்ன இருந்தாலும் நான் எப்போதும் சினிமாவில் இருக்கவே ஆசைப் படுறேன் என்று சொல்லி முடித்தார் சினேகா.

Thursday 29 November 2012

வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை- பாலா

Vedhika is not beauty says balaடைரக்டர் பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வேதிகா. அவரைப்பொறுத்தவரை இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்பதால் காடு, மலை, வெயில் என்று பாராமல் மாதக்கணக்கில் பாலாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார். கூடவே இந்த படத்தில் வேதிகாவின் இயல்பான நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதனால் பரதேசி தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை தரும் என்று மனசு நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறார் வேதிகா.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதையடுத்து நடந்த மிரஸ்மீட்டில், அழகான நடிகையான வேதிகாவை, இப்படி அசிங்கமான நடிகையாக்கி விட்டீர்களே? என்று கேள்விகள் எழுந்தபோது,கதாபாத்திரத்திற்கு மேட்சாக வேண்டும் என்பதற்காக அவரது உடம்பு முழுக்க கருப்பு வண்ணம் பூசி படமாக்கியிருக்கிறேன். மற்றபடி வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை. சுமாரான பொண்ணுதான் என்று பதில் சொன்னார் பாலா. ஆனால் அவரது எந்த யதார்த்தமான பதிலைக்கேட்டு அதுவரையில் தவுசண் வாட்ஸ் பல்பமாக பிரகாசித்த வேதிகாவின் முகம் திடீரென்று சுருங்கிப்போனது. தனியாக விட்டால் குலுங்கி குலுங்கி அழுதுவிடும் கண்டிசனில் மேடையில் அமர்ந்திருந்தார்.

சமுத்திரகனி-சசிகுமாரின் நட்பு டமால்!


Sasikumar - Samuthirakani friendship breakநட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் டைரக்டர் சமுத்திரகனி, சசிகுமார் ஆகிய இருவரும். சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரத்தில் வில்லனாக நடித்தார் சமுத்திரகனி. அதில் முளை விட்ட அவர்களது நட்பு, பின்னர் ஆலமரமாய் தழைத்தது. அதன்காரணமாக, பின்னர் சசிகுமாரை வைத்து நாடோடிகள் என்ற படத்தை இயக்கினார் சமுத்திரகனி, அப்படம் மெகா ஹிட்டாகவே அவர்களது நட்பு இன்னும் ஆழமானது. எங்களை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்கிற அளவுக்கு கொண்டாட்டம் கும்மாளம் என் பின்னி பெடலெடுத்து வந்தார்கள்.

இந்நிலையில், அதன்பிறகு சசிகுமார் இயக்கத்தில் ஈசன் படத்தில் நடித்த சமுத்திரகனி, போராளி என்ற படத்தையும் சசிகுமாரை வைத்து இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறவில்லை. இதனால் பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார் சசிகுமார். ஆனால் இது தெரிந்தும் அந்த படங்களுக்காக தனக்கு வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அடிக்கடி டார்ச்சர் கொடுத்தாராம் சமுத்திரகனி. இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட, அதன்பிறகு இருவருமே பேசிக்கொள்வதில்லையாம். நட்பில் விரிசல் ஏற்பட்டு, இப்போது தனித்தனியே பயணித்து வருகிறார்கள்.

ரஜினிக்கு அடுத்தபடியாக ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டில் இணைந்தார் விஜய்!!


Tamil film Thuppakki enters Rs 100 crore club தமிழ் சினிமா படங்களில் ரஜினியின் எந்திரன் படத்திற்கு பிறகு விஜய் நடித்த துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் துப்பாக்கி. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே புகைப்பிடிக்கும் காட்சிக்கு பிரச்னை, தலைப்பு பிரச்னை என்று பல பிரச்னைகளை சந்தித்து கடைசியாக தீபாவளிக்கு ரிலீசானது துப்பாக்கி படம்.

பொதுவாக விஜய் படம் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப்படம் விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல்படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. எதிர்பார்த்தபடியே துப்பாக்கி படமும் ரிலீசாகி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது. ரிலீஸ் ஆன முதல் வாரத்தில் மட்டும் சுமார் ரூ.50கோடி வசூலை அள்ளிய இப்படம் இப்போது ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்து சாதனை படைத்து இருக்கிறது.

இதுகுறித்து துப்பாக்கி படத்திற்கான இணையதளத்தில் டைரக்டர் முருகதாஸ் கூறியிருப்பதாவது, துப்பாக்கி படம் ரூ.100 கோடி வசூல் லிஸ்ட்டில் சேர்ந்திருக்கிறது. 10நாளில் இந்த வசூல் சாதனையை எட்டியுள்ளது. இதன்மூலம் இந்த பாக்ஸ் ஆபிஸ் லிஸ்ட்டில்‌ சேரும் 2வது தமிழ்படம் துப்பாக்கி என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுவரை ரஜினியின் எந்திரன் படம் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலான தமிழ்ப்படடம் என்று இருந்து வந்த நிலையில், இப்போது அந்த லிஸ்ட்டில் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜய்யின் துப்பாக்கி படமும் இணைந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறது. ‌மேலும் விஜய் நடிப்பில் இதுவரை வெளியான படங்களிலேயே துப்பாக்கி படம் தான் ரூ.100 கோடியை தாண்டி வசூல் ரீதியாக சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் ஆலோசனையை பின்பற்றும் அஜீத்!

Ajith following rajini adviceரஜினியை ஆன்மீகம் தொடங்கி பல விசயங்களிலும் பின்பற்றி வருபவர் அஜீத். அந்த வகையில், ரஜினி சொன்ன ஒரு ஆலோசனையையும் தற்போது கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார் அவர். அது என்னவென்றால், பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள கும்கி படத்தின் ஆடியோ விழாவில் பேசிய ரஜினி, இன்றைய நடிகர்கள் ஒரு படத்தை முடித்து அது வெளியான பிறகே அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்குகிறார்கள். அது சரியானதல்ல. காரணம், அந்த படம் ஒருவேளை தோல்வி அடைந்து விட்டால், அதன்பிறகு அவரை வைத்து படம் பண்ண படாதிபதிகள் தயங்குவார்கள். ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்து வந்தால், அதில் இரண்டு படம் தோல்வி என்றாலும், மூன்றாவதாக ஒரு படம் வெற்றி பெற்று காப்பாற்றி விடும். இதைத்தான் நான் முன்பு கடைபிடித்து வந்தேன். அதனால் இன்றைய நடிகர்களும் அதுபோன்று ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பது அவர்களுக்கு பாதுகாப்பு என்று பேசினார்.

அவரது வார்த்தைகளையும், அனுபவத்தையும் வேதவாக்காகக் கொண்டு சில நடிகர்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளனர். அதில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். பில்லா-2 வுக்கு முன்பு வரை ஒரு படம் முடிந்து திரைக்கு வந்த பிறகே அடுத்த படத்தில் நடித்து வந்தவர், இப்போது விஷ்ணுவர்தன் படத்தில் நடித்துக்கொண்டே, சிறுத்தை சிவா படத்தில் நடிக்கிறார். இதில் நடித்தபடியே அதற்கடுத்த படத்திலும் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். ஆக, ரஜினியின் அறிவுரையை முழுசாக பின்பற்றும் நடிகராக இருக்கிறார் அஜீத்.

பரதேசி ஹேர் ஸ்டைல்! அதர்வா ஆச்சர்யம்!!


Atharva praises about his herstyle in paradesiபரதேசி ஹேர் ஸ்டைலை பார்த்து ஆச்சர்யப்பட்டதாக அப்படத்தின் ஹீரோ நடிகர் அதர்வா கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பரதேசி ஹேர் ஸ்டைலுடன் நடமாடிக் கொண்டிருந்த அதர்வா, சூட்டிங் முடிந்த சூட்டோடு சூடாக, யூத் லுக்கிற்கு மாறியிருக்கிறார். பரதேசி படத்தில் அளிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல் தனக்கு ரொம்பவே ஆச்சர்யத்தை தந்ததாக கூறியிருக்கிறார் அதர்வா.

ஹேர் ஸ்டைல் குறித்து அதர்வா அளித்துள்ள பேட்டியில், பாலா சார் தன் படத்தில் நடிக்க கூப்பிடுறாருன்னு தெரிஞ்சதும் பயங்கர சந்தோஷமாகிட்டேன். எப்படியும் தலையில்தான் அவர் கை வைப்பார்னு தெரியும். நைட்டெல்லாம் கண்ணு முழிச்சு இன்டர்நெட்டில் சர்ச் பண்ணி விதவிதமா ஹேர் ஸ்டைல்களை டவுன்லோடு பண்ணிட்டு போயிருந்தேன். ஆனால் இன்டர்நெட் டேட்டாவுலேயே இல்லாதளவுக்கு ஒரு ஹேர் ஸ்டைலை எனக்கு வச்சுவிட்டுட்டார் பாலா சார். அதுமட்டுமில்ல. சின்ன வயசுல அப்பாவோடு டீ எஸ்டேட்டை சுத்தி பார்க்க போயிருக்கேன். அப்பல்லாம் உயரமான மேட்டிலேர்ந்து குதிக்கணும்னு தோணும். ஆனா அப்பா அனுமதிக்க மாட்டார். இந்த படத்தில் கமிட் ஆகி சூட்டிங் போனதும் பாலா சார் சொன்னது, அந்த மேட்லேர்ந்து நீ குதிக்கணும் என்றுதான். எனக்கு சின்ன வயசு ஞாபகமெல்லாம் வந்து விட்டது, என்று கூறியுள்ளார்.

மணிரத்னத்திற்கு கதை உருவாக்க தெரியாது! கோவை தம்பி


Kovai thambi slams maniratnamமணிரத்தனத்திற்கு கதை உருவாக்கத் தெரியாது; அவரால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று தயாரிப்பாளர் கோவை தம்பி கூறியுள்ளார். மணிரத்னம், கோவைத் தம்பி இடையேயான மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதயக் கோவில் நான் எடுத்த மோசமான படம். அந்த கதைக்குள் தெரியாமல் சிக்கிவிட்டேன் என்று மணிரத்னம் பேட்டி அளித்து இருந்தார். இதற்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கோவைத் தம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கோவை தம்பி அளித்துள்ள பேட்டியில், மணிரத்னம் ஸ்கூட்டரில் என் அலுவலகத்துக்கு வந்து வாய்ப்பு கேட்டார். நான் இதயக்கோவில் கதையை கொடுத்து இயக்கச் சொன்னேன். தற்போது 28 வருடத்துக்கு பிறகு அது மோசமான படம். அந்த கதைக்குள் சிக்கிக்கொண்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார். கதை பிடிக்காவிட்டால் அப்போதே மறுத்து இருக்கலாம். அந்த நேரம் அவர் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தார். மணிரத்னத்துக்கு ஷாட் எடுக்க அப்போது சரியாக தெரியவில்லை. செட் போட்டு பணம் எல்லாம் வீணானது. கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து கொடுத்தேன். எனக்கும் இளையராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவும் காரணமாக இருந்தார். இதயகோவில் படத்தை நன்றாக இயக்கி இருந்தால் எனக்கு நிறைய லாபம் கிடைத்து இருக்கும். 35 ரோலில் முடிக்க வேண்டிய படத்தை 70 ரோலுக்கு கொண்டு போய்விட்டார். இதனால் நிறைய நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு கதை உருவாக்க தெரியாது, என்று கூறியிருக்கிறார்.

மீண்டும் சிம்பு + கௌதம் மேனன் !


சிம்பு நடித்த படங்களில் பெஸ்ட் என்றவுடன் பலரும் முதலில் கூறும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'.

இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அப்படம். சிம்பு, த்ரிஷா நடித்த அப்படத்தினை இயக்கியிருந்தார் கெளதம் மேனன்.

'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை இயக்கி வரும் கெளதம் மேனன், அதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தினை இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், சூர்யா 'சிங்கம் 2' படத்தினை முடித்து விட்டு லிங்குசாமி இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். இதனால் கெளதம் மேனன் அடுத்து இயக்கும் படம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சிம்பு, கெளதம் மேனன் இருவருமே சமீபத்தில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' போன்ற இன்னொரு காதல் கதை வேண்டாம் என்று முடிவு செய்துள்ள கெளதம் மேனன், சிம்புவுக்கு ஏற்றவாறு ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து இருக்கிறாராம்.

ரெடியாகிறது முனி -3 !


நடன இயக்குனர் என்பதையும் தாண்டி 'முனி', 'காஞ்சனா' (முனி 2) என்ற ஹிட் படங்களை கொடுத்தவர் லாரன்ஸ்.

லாரன்ஸ், சரத்குமார், லட்சுமிராய் நடிப்பில் வெளியான 'காஞ்சனா' பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தினை இயக்கி தயாரித்தார் லாரன்ஸ். 'காஞ்சனா'வின் இந்தி ரீமேக்கில் யார் நடிப்பது என்று ஒரு போட்டியே நடைபெற்று வருகிறது.

'காஞ்சனா' படத்தினைத் தொடர்ந்து தெலுங்கில் பிரபாஸ் நடித்த REBEL என்ற படத்தினை இயக்கினார் லாரன்ஸ். அப்படம் படுதோல்வியை சந்தித்தது.

மீண்டும் தனது பழைய கூட்டணிக்கு திரும்பி இருக்கிறார் லாரன்ஸ். 'முனி' படத்தின் மூன்றாம் பாகத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் லாரன்ஸ்.

படத்தின் கதை, திரைக்கதை அனைத்தையும் முடித்து விட்டாராம் லாரன்ஸ். ரஜினி பிறந்த நாளைக்கு சிறப்பு ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இருக்கும் லாரன்ஸ். அப்பணிகள் முடிவடைந்த உடன் 'முனி 3' பணிகளில் ஈடுபடுவார் என்கிறது லாரன்ஸ் வட்டாரம்.

பொங்கல் பட ரேஸ்!


2013 பொங்கல் திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பல்வேறு படங்களை இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கார்த்தியின் 'அலெக்ஸ் பாண்டியன்', விஷால் நடிக்கும் 'மதகஜராஜா', ஜெயம் ரவியின் 'ஆதிபகவன்', ராம் இயக்கி நடிக்கும் 'தங்க மீன்கள்' உள்ளிட்ட படங்களை இப்போதே 'பொங்கல் வெளியீடு' என்று விளம்பரப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

இன்று காலை பேப்பர்களில் வந்த விளம்பரம், பொங்கல் படப் பட்டியலை இன்னும் பரபரப்பாக்கியிருக்கிறது.

கமல் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் 'விஸ்வரூபம்' படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என விளம்பரம் வந்திருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு டிசம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

மேலே சொன்ன படங்களைத் தாண்டி, பல படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. எந்தெந்த படங்கள் பொங்கல் ரேக்ளாவில் கலந்து கொள்ளும் என்பது போகப் போகத் தெரியும்!

படங்களை அடுக்கும் ஸ்டூடியோ க்ரீன் !


தமிழ் திரையுலகில் 2013ல் அதிக படங்களை வெளியிடும் நிறுவனமாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இருக்கும். இந்நிறுவனத்தினை நடத்தி வருகிறார் ஞானவேல்.

பல்வேறு படங்களை தயாரித்து வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம், மற்ற நிறுவனங்களின் படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது.

அந்நிறுவனம் வெளியிட மற்றும் தயாரித்து வரும் படங்களின் விவரம் :

'கும்கி' : பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடித்து இருக்கும் 'கும்கி' படத்தினை 'திருப்பதி பிரதர்ஸ்' தயாரித்து இருக்கிறது. அப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வாங்கி, டிசம்பர் 14ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்சார் செய்ய இருக்கிறார்கள்.

அலெக்ஸ் பாண்டியன் : சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்து இருக்கும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. இப்படத்தினை 2013 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். ரஜினி பிறந்த நாள் அன்று இசை வெளியீடு நடைபெற இருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா : பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், விமல் நடித்து இருக்கும் இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் வாங்கி விட்டது ஸ்டூடியோ க்ரீன். 2013 பிப்ரவரியில் வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

சிங்கம் 2 : ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்து வரும் 'சிங்கம் 2' படத்தை 2013 கோடை விடுமுறைக்கு வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தினை டிசம்பரில் இருந்தே விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பிரியாணி : வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வரும் 'பிரியாணி' படப்பிடிப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. இன்னும் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படவில்லை.

அழகுராஜா ஆல் இன் ஆல் : ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் நடிக்க இருக்கும் படம் இது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

'அட்டகத்தி' ரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் இந்நிறுவனம் தான் தயாரிக்கிறது. ஆனால் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கமல் ஆலோசனையில் 'கோச்சடையான்'!

ரஜினி பிறந்த நாள் அன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'கோச்சடையான்' அடுத்த ஆண்டு தான் வெளிவரும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

ஆனால், ரஜினி பிறந்த நாள் அன்று 'சிவாஜி 3D' படத்தினை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 'கோச்சடையான்' படத்தில் AURO 3D தொழில்நுட்பத்தினை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் வெளிவர இருக்கும் முழுமையான MOTION CAPTURE தொழில்நுட்ப திரைப்படம் 'கோச்சடையான்'. மற்ற படங்களில் சில காட்சிகள் தான் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

'விஸ்வரூபம்' படத்தின் AURO 3D தொழில்நுட்பத்தினை கேள்விப்பட்ட 'கோச்சடையான்' படக்குழு, கமலை சந்தித்து இதனைப் பற்றி பேசி இருக்கிறார்கள். அவரும் AURO 3D பற்றி விளக்கி, சில ஆலோசனைகளையும் வழங்கி இருக்கிறார்.

அது ஐடியா தாங்க!

அஜீத் - வெங்கட்பிரபு இணைப்பில் வெளிவந்த 'மங்காத்தா' இன்னும் செய்திகளில் வருவது, படத்திற்கான தாக்கத்தை தெரிவிக்கிறது.

'மங்காத்தா'வில் அஜீத்துடன், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்த இப்படம் வெளிவந்து பெரும் வரவேற்பு பெற்றது.

அப்படம் வெளிவந்து வரவேற்பு பெற்ற போது, இந்தி ரீமேக் குறித்து செய்திகள் வெளிவந்தன. வெங்கட்பிரபுவும் அஜீத் இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

உடனே அஜீத் மங்காத்தா இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் வெங்கட்பிரபு இச்செய்தியினை மறுத்து இருக்கிறார். மங்காத்தா இந்தி ரீமேக்கில் அர்ஜுன் வேடத்தில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தான் சொன்னேன்.. அது ஒரு ஐடியா மட்டுமே என்று டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

ரஜினி 12-12-12 !


ரஜினி பிறந்தநாளை இப்போதே அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாள் வருகிறது. இந்த வருடத்தில் ரஜினி பிறந்த நாள் என்பது ஸ்பெஷல்.. 12-12-12 அன்று வருகிறது.

அவரது ரசிகர்கள் " இந்தாண்டு ரஜினி பிறந்த நாள் என்பது கூடுதல் ஸ்பெஷல்.. 12+12+12=36, ரஜினி திரையுலகிற்கு வந்து 36 ஆண்டுகள் ஆகிறது.. 36ஐ திருப்பி போட்டால் 63 - ரஜினியின் வயது " என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்களுக்கு 12-12-12 இன்னொரு தீபாவளி தான் !

'தல'யும் ஏ.ஆர். முருகதாஸும்!

'துப்பாக்கி' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தினை இந்தியில் இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கோடம்பாக்கத்தில் மற்றொரு செய்தி பரபரவென பேசப்படுகிறது. விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா ஆகியோரது படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜீத்.

அஜீத் நடித்த 'தீனா' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா நடித்த 'கஜினி' படமே முதலில் அஜீத்தை வைத்து 'மிரட்டல்' என்ற பெயரில் பூஜைப் போடப்பட்டது தான்.

'துப்பாக்கி' படத்தினைப் பார்த்த அஜீத், விஜய் மற்றும் முருகதாஸை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

எனவே, எப்படியும் அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏ.ஆர்.முருகதாஸிடம் தனது நிறுவனத்திற்கு அஜீத் படத்தினை செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

இந்தி 'துப்பாக்கி' படத்தை முடித்ததும் இப்படத்துக்கான பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

'ஐ' ரோப்பா போறோம் !

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சீனாவில் நடந்தது. இப்போது படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி இருக்கிறார்கள்.

விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் 45 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சி ஆகியவற்றை மட்டுமே பிரம்மாண்டமாக எடுத்தாராம் ஷங்கர்.

சீனாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அங்கு Yuen Woo - Ping என்ற ஹாலிவுட் சண்டைக் காட்சி இயக்குனர் மூலம் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள். இவர் ஆஸ்கர் விருது வென்ற Crouching Tiger Hidden Dragon படத்திற்கு சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது ராயபுரம் மற்றும் எண்ணூர் ஏரியாக்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் ஷங்கர். 'ஐ' படத்தின் இரண்டாம் பாதியில் விக்ரம் சிக்ஸ் பேக்குடன் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் திரையில் வந்திராத இடங்களில் ஒரு பாடலை படமாக்க இருக்கிறார்களாம்.

ரஜினி பாராட்டிய பீட்சா !

திரைக்கதை ஒரு படத்தின் வெற்றியை பெருமளவு தீர்மானிக்கிறது என்பதற்கு 'பீட்சா' படமும் சாட்சி.

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியானது 'பீட்சா'. கார்த்திக் சுப்புராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கினார். உதயநிதி ஸ்டாலின் அப்படத்தினை வெளியிட்டார்.

'பீட்சா' படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமன்றி திரையுலகினர் பலரும் அப்படத்தினை வெகுவாக பாராட்டினார்கள். அப்படத்தினை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 'பீட்சா' படத்தினைப் பார்த்த ரஜினி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை அழைத்து " 'பீட்சா' படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. படக்குழுவினருக்கும், தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவியுங்கள்" என்று தெரிவித்து இருக்கிறார்.