Friday 24 August 2012

அனுஷ்காவின் ஒத்துழைப்பால் மகிழ்ந்த செல்வராகவன்.







ஜார்ஜியா நாட்டில் 'இரண்டாம் உலகம்' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா என படக்குழு கடந்த 40 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கி படப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அனுஷ்கா, படத்தில் தான் சம்பந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு தற்போது சென்னையில் கார்த்தியுடன் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.

'இரண்டாம் உலகம்' படப்பிடிப்பின் போது அனுஷ்காவின் அணுகுமுறை குறித்து படக்குழு பாராட்டி வருகிறது.

அனுஷ்கா இதுவரை எந்த ஒரு படத்திற்கும் தொடர்ச்சியாக 40 நாட்கள் தேதிகள் ஒதுக்கியது இல்லையாம். அதுமட்டுமன்றி ஜார்ஜியாவில் கடுமையான குளிர் இருந்தாலும், தனது பணிகளை எந்த புலம்பலும் இல்லாமல் நேர்த்தியாக முடித்து கொடுத்து இருக்கிறார் அனுஷ்கா.

பொதுவாக, கதாநாயகிகளை 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைப்பார்கள். சகல சௌகர்யங்களும் இருக்கும்.

ஜார்ஜியாவில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்தாத இடத்தை தேடிப் பிடித்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எனவே அந்த இடங்களில் பெரிய ஹோட்டலோ, வசதிகளோ இல்லாத நிலையிலும் எதைப் பற்றியும் குறை சொல்லாமல் தன் வேலையை முடித்துக் கொடுத்தாராம் அனுஷ்கா.

அனுஷ்காவின் ஒத்துழைப்பால் மகிழ்ந்த செல்வராகவன், 'இரண்டாம் உலகம்' படத்தில் அனுஷ்காவின் பணிகள் முடிந்தவுடன், அனுஷ்காவிற்கு FAREWELL பார்ட்டி கொடுத்தாராம்.

No comments:

Post a Comment