ஜீவா நடிப்பில் - மதன் கார்க்கி பாடல்கள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 'கோ' பாடல்களைத் தொடர்ந்து 'முகமூடி' பாடல்களும் வரவேற்பை பெற்று இருக்கின்றன.
'முகமூடி' படத்தில் மதன் கார்க்கி எழுதியுள்ள 'வாய மூடி சும்மா இருடா' என்ற பாடல் தற்போது அனைத்து எஃப்.எம் சேனல்களிலும் அடிக்கடி ஒலிபரப்பப்படுகிறது.
மதன் கார்க்கியும் 'கன்னம் சுருங்கிட நீயும், மீசை நரைத்திட நானும், வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ?' என்ற இப்பாடல் வரிகள் தனக்கு மிகவும் பிடித்தவை என்று தெரிவித்து இருக்கிறார்.
த்ரிஷா மற்றும் பல முன்னணி திரையுலக பிரபலங்களும் இப்பாடல் தங்களுக்கு மிகவும் பிடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அப்பாடல் வரிகள் இதோ :
வாய மூடி சும்மா இருடா!
ரோட்ட பாத்து நேரா நடடா!
கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா!
காதல் ஒரு வம்புடா!
கடிகாரம் தலைகீழாய் ஓடும் - இவன்
வரலாறு எதுவென்று தேடும்!
அடிவானில் பணியாது போகும் - இவன்
கடிவாளம் அணியாத மேகம்!
பல நிலவொளிகளில்
தலை குளித்திடும் போதும்
இவன் மனவெளிகளில்
கனவுகள் இல்லை ஏதும்.
காணாமலே
போனானடா!
ஏனென்று கேட்காதே போடா !
பார்வை ஒன்றில் காதல் கொண்டா,
எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்?
பேரே இல்லா பூவைக் கண்டா,
எந்தன் வேரெங்கும் பேரானந்தம்?
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ?
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ?
ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில்
ஏனிந்தக் காதல்?
நாளை என் காலைக்
கீற்றே நீ தானே!
கையில் தேநீரும் நீ தானடி!
வாசல் பூவோடு
பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீ தானடி!
கன்னம் சுருங்கிட நீயும்,
மீசை நரைத்திட நானும்,
வாழ்வின் கரைகளைக் காணும்
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும்
அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!
No comments:
Post a Comment