யோகியான அந்த மூன்றெழுத்து இயக்குனர், தற்போது இயக்கும் பகவான் படத்தில் ஜெயமான நடிகரை நடிக்க வைத்துள்ளார். இதுவரை காதல், கலாட்டாவென வலம் வந்த அந்த நடிகர் இப்படத்தில் இயக்குனர் அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை அளிக்கப் போவதாக சொல்லியிருந்தார்.
இதனால் கலங்கிப் போயிருந்த அந்த நடிகருக்கு, இடி இறங்குவதுபோல் ஒரு கடினமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அது வேறொன்றுமல்ல... இந்த படத்தில் ஜெய நடிகருக்கு திருநங்கை அவதாரத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் ஜெய நடிகர் கலங்கிவிடாமல் திருநங்கைகளிடம் நேரிடையாக சென்று அவர்களின் நடை, உடை, பாவனைகளை கற்று வருகிறாராம்.
சிறுத்தை நடிகர், தான் இதுவரை நடித்த எல்லா படங்களிலும் தான் நடித்த நடிப்பு பற்றி தனக்கு நெருங்கிய சக நடிகர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வாராம். எல்லோரும் அவரைப் பற்றி நல்ல கருத்துக்களை மட்டுமே கூறி வருகின்றனராம்.
ஆனால் இவரின் அபிமான தல நடிகர் மட்டுமே இவரின் நிறை குறைகளை சொல்லி திருப்தியான கருத்துக்களை சொல்வாராம். ஆகையால், தற்போது இவர் நடித்து வெளிவந்திருக்கும் படத்தில் தன் நடிப்பைப் பற்றி தல நடிகர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் சிறுத்தையாக சீறிய சகுனி.
அடி வாடி திமிரா’ பாடலில் முதல்முறையாக சூர்யா, ஜோதிகா மகள் தியா மேலும் படிக்க
ReplyDelete