Tuesday 9 October 2012

விஷாலை ஓரங்கட்டும் முன்னணி இயக்குனர்கள்!


அவன் இவன் படத்தில் பாலாவின் கைவண்ணத்தால் வித்தியாசமான பர்பாமென்சை வெளிப்படுத்தியிருந்தார் விஷால். அதன்காரணமாக அதுவரை அவரை ஒரு கல்லூரிப்பையன் என்று மட்டுமே நினைத்திருந்த இயக்குனர்கள், அவரை மனதில் கொண்டு வித்தியாசமான கோணங்களில் கதை பண்ணத் தொடங்கினர். ஆனால் அப்படி தன்னைத்தேடி வந்தவர்களின் முன்னணி இயக்குனர்களின் கதைகளை மட்டுமே ஓகே செய்து வைத்திருந்தார் அவர்.

இந்த நிலையில், வெடி படம் ஊத்திக்கொண்டதால், ஏறின வேகத்திலேயே விஷாலின் மார்க்கெட் இறக்கம் கண்டது. அதனால் சமர், மதகஜராஜா போன்ற படங்களில் தற்போது நடித்திருப்பவரை, அடுத்தடுத்து புக்பண்ணயிருந்த முன்னணி இயக்குனர்கள் விஷாலுக்காக ரெடி பண்ணி வைத்திருந்த ஸ்கிரிப்டுகளுடன் கார்த்தி, ஆர்யா போன்ற நடிகர்களை முற்றுகையிட்டு வருகின்றன. இதனால் மனசொடிந்து போயிருக்கிறார் விஷால். இதன்காரணமாக, அடுத்து தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் முழுமையாக காலூன்றவும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

No comments:

Post a Comment