தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், வேதிகா அதிகம் விரும்புவதெல்லாம், தமிழ் திரைப்படங்களைத் தான். தற்போது பாலாவின், "பரதேசி படத்தில் நடிப்பதன் மூலம், திரையுலகின் ஒட்டு மொத்த கவனத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ளார், தெலுங்கில், "பாவை என்ற படத்தில்,வேதிகாவின் நடிப்பை பார்த்து வியந்து, தன் படத்தில், அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார், பாலா. படத்தில், தனக்கு கனமான கதாபாத்திரம் என்பதால், படப்பிடிப்பின்போது, யாருடனும் அதிகம் பேசாமல், நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாராம். "பரதேசி படம், தனக்கு தேசிய விருதை பெற்றுத் தரும் என்பது; வேதிகாவின் நம்பிக்கை. அந்த நல்ல நாளுக்காக, அவர் காத்திருக்கிறார்.
No comments:
Post a Comment