Saturday 15 September 2012

இனிமேலும் இளையராஜா தான்!

'அது ஒரு கனாக்காலம்' படத்திற்கு பிறகு பாலுமகேந்திரா இயக்கி வரும் புதிய படத்திற்கு 'தலைமுறைகள்' என்று பெயரிட்டு இருக்கிறார்.

'தலைமுறைகள்' பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இளையராஜாவுடன் மீண்டும் இணைகிறார் பாலு மகேந்திரா.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

இது குறித்து பாலுமகேந்திரா தனது வலைப்பூவில் "மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் 'தலைமுறைகள்' என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை.

படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன். 78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது... 34 இனிய வருடங்கள்! இனியும் அப்படித்தான்.

இன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜா தான். அதில் மாற்றம் கிடையாது," என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment