Saturday 15 September 2012

அஜித்துடன் மீண்டும் ஜோடி சேரும் நயன்தாரா!


நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார். நாகார்ஜுனாவுடனும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார்.

பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமணம் முடிவாகி பிறகு ரத்தானது. இருவரும் பிரிந்து விட்டனர். சொந்த வாழ்க்கை அனுபவங்கள் பற்றி நயன்தாரா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

திரையுலகம் என்மேல் அன்பாக உள்ளது. ரஜினியுடன் ‘சந்திரமுகி’யில் நடித்தேன். அதன்மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. என்னை பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது என்னை பாதிக்கவில்லை.

நான் சினிமாவில் கடினமாக உழைக்கிறேன். அதிர்ஷ்டமும் என் பக்கம் இருக்கிறது. நான் பாதுகாப்பாகவே இருக்கிறேன். சினிமாவில் தினமும் நிறைய புதுப்புது விஷயங்களை சந்திக்கிறேன். தோல்விகளால் துவண்டு போக மாட்டேன். அனுபவங்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.

கஷ்டகாலங்களில் நண்பர்கள் என்னோடு இருந்தனர். சினிமாவில் நல்ல நடிகை என்ற பெயர் எடுப்பதே எனது நோக்கமாக உள்ளது. அதற்காக உழைக்கிறேன். பத்திரிகைகளில் செய்திகளையும் உலக விஷயங்களையும் விரும்பி படிக்கிறேன். அவதூறுகளையும், கிசுகிசுக்களையும் விரும்புவது இல்லை.

நான் அதிக சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இளம்பெண்கள் பணத்தை நல்லவிதமாக முதலீடு செய்ய வேண்டும். என்னை பொறுத்தவரை நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment