Friday 8 June 2012

விஜயகாந்த் அழைப்பு? முருகதாஸ் திகைப்பு


பூபதி பாண்டியன் சொன்ன கதையை அப்படியே மூடி வைத்து அழகு பார்த்துக்A.R.Murugadossகொண்டிருக்கிறார் விஜயகாந்த். தனது மகனை தமிழ்சினிமா சிம்மாசனத்தில் உட்கார வைத்துவிட வேண்டும் என்று ஆசைப்படும் இந்த பாசக்கார அப்பாவின் கனவு, இன்னும் முதல் கட்டத்தையே தொட்டபாடில்லை. பிருந்தாவனம் என்ற படத்தின் ரீமேக் ரைட்சை வாங்கி வைத்ததோடு சரி. இன்னும் டைரக்டரை தேர்வு செய்கிற விஷயத்திலேயே முழு திருப்தி அடையாமல் தவித்துக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கிடையில் புதுக்கோட்டை இடைத் தேர்தல் வந்துவிட்டதால் அதில் பிஸியாகிவிட்டவர், பிரச்சாரத்திற்கு போவதற்கு முன் சில பெரிய இயக்குனர்களை சந்தித்திருக்கிறார். அவர்களிடம், என் பையனை வச்சு படம் பண்ண முடியுமா? என்று கேட்டாராம். வந்தவர்களில் சிலர் மட்டும் தலையாட்டியிருக்கிறார்கள். சிலரோ, நான் இப்போ ரொம்ப பிஸியா இருக்கேன். நேரம் கிடைக்கும்போது தம்பியை வைச்சு கண்டிப்பா எடுப்பேன் என்று அப்போதைக்கு ஒரு பதிலை கூறி சமாளித்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் ஏ.ஆர்.முருகதாஸ். அஜீத், விஜய், சூர்யா என்று சிங்கங்களுக்கு லகான் போட்டுக் கொண்டிருக்கும் இவரை எதற்காக விஜயகாந்த் அழைத்தார் என்பதுதான் இன்னும் புரியவில்லையாம் அவருக்கு!

No comments:

Post a Comment