Friday 8 June 2012

வெங்கட்பிரபு இயக்கத்தில் சமந்தா…!

    வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் பிரியாணி படத்தின் ஹீரோயினாக சமந்தா நடிக்க இருக்கிறார்.


மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு தலைப்பாக பிரியாணி என்றும் கூடவே படத்தில் அடைமொழியாக ஏ வெங்கட்பிரபு டயட் என்றும் வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. இதற்காக சமீபத்தில் சோனா கொடுத்த விருந்து நிகழ்ச்சியைகூட தவிர்த்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது சட்டென்று சமந்தாவை தேர்வு செய்துள்ளாராம் வெங்கட்பிரபு என்று தகவல் வெளியாகி இருக்கிறது.


சமீபத்தில் சமந்தாவுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. அவர் தமிழில் நடித்து வெளிவந்தது இரண்டு படங்கள்தான் என்றாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இதுதவிர தமிழில் மணிரத்னத்தின் கடல், கவுதமின் நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய டைரக்டர்களும் சமந்தாவை மொய்க்க தொடங்கியுள்ளனர். விரைவில் தமிழில் நம்பர்-1 நடிகையாக சமந்தா வருவார் எனத்தெரிகிறது.

No comments:

Post a Comment