Thursday 7 June 2012

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!



'பையா'வில் தம்பி கார்த்தியுடன் கைகோர்த்த இயக்குனர் லிங்குசாமி, அடுத்து அண்ணன் சூர்யாவோடு வெள்ளித்திரையில் களமிறங்க முடிவு செய்துள்ளார்.
'பையா'வைத் தொடர்ந்து 'வேட்டை' ஆடிய லிங்குசாமி, அப்படத்தை இந்தியில் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதற்காக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன. ஆனால், இப்போது இந்தி படத்தை தள்ளிவைத்து விட்டாராம் லிங்குசாமி.


சூர்யாவிடம் லிங்குசாமி கதை சொல்ல, அது சூர்யாவுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். எனவே, 'மாற்றான்', 'சிங்கம் 2' விற்குப் பிறகு லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சூர்யா.

இப்போது, சூர்யாவுக்காக அந்த கதையை பட்டைதீட்டி வருகிறார் லிங்குசாமி. படத்தை அவரது 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனமே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தான் தயாரித்த ' வழக்கு எண்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றிப்பதாலும், தயாரிப்பில் இருக்கும் 'கும்கி' படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதாலும் சந்தோஷத்தில் இருக்கும் லிங்குசாமி, சுடச்சுட 'சண்டக்கோழி', 'ரன்' போல காதலும் ஆக்ஷனும் கலந்த திரைக்கதையை தயார் செய்து வருகிறாராம்
.

No comments:

Post a Comment