Saturday 23 June 2012

கஷ்டம் என்பதால் நடிக்க மறுத்த பாடகர் கார்த்திக்!

Acting is difficult says singer karthikபிரபல பாடகரான கார்த்திக் தற்போது இசையமைப்பாளராகவும் மாறியுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய் நடிக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் இசையமைப்பாளராகியுள்ள அவர், நீதானே என் பொன்வசந்தம், இரண்டாம் உலகம், மாற்றான் உட்பட பல படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். மேலும் தெலுங்கு படமான ஒக்கடினேவுக்கும் இசையமைக்கிறார். பாடகர், இசையமைப்பாளராக அவருக்கு நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால், அதனை வேண்டாம் என்று அவர் தட்டிக்கழித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், பாடகரான நான் இசையமைப்பாளராகியுள்னேன். எனக்கு நடிக்க தெரியாது. அது வேறொரு துறை. பாடுவது, இசையமைப்பது எனக்கு சுலபமானது. நடிப்பு கஷ்டமானது. அதனால் நிறைய நண்பர்கள் கேட்டும் நடிக்க மறுத்து விட்டேன், என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment