Saturday 9 June 2012

தனுஷால் கலக்கமடையும் இயக்குனர்கள்?

       நண்பர்களை கைவிடாத ஒரே ஹீரோ என்று பெயரெடுத்தவர் தனுஷ்! வெற்றிமாறன், பூபதி பாண்டியன், மித்ரன் ஜவஹர் என்று ஒரே இயக்குனர்களோடு தனுஷ் திரும்பத்திரும்ப படம் பண்ணுவதற்குக் காரணம் இவர்கள் அனைவருமே தனுஷுக்கு நெருக்கமான நண்பர்கள்.

   குறிப்பாக வெற்றிமாறனும் தனுஷும் அவ்வளவு நெருக்கம் என்பதால் தான் தனுஷ் சொன்னதை கேட்டு வடசென்னை படத்தில் இருந்து சிம்புவை கழற்றி விட்டார் வெற்றிமாறன் என்கிறார்கள்.

தற்போது சிம்புவுக்கு தயார் செய்த அதே வடசென்னைக் கதையைத்தான் தனுஷுக்கு தலைப்பு மாற்றி எடுக்க இருக்கிறார்கள். வடசென்னை இல்லை என்று ஆனதற்கு, அந்தப் படத்தில் சிம்புவுடன் சேர்ந்து நடிப்பதாக இருந்த தெலுங்கு நடிகர் ராணா கடைசிநேரத்தில் கழண்று கொண்டதும் முக்கிய காரணமாம்! தற்போது ராணா விலகிக் கொண்டதிலும் ரஜினியின் தலையீடு இருந்தது என்கின்றன கோலிவுட் பட்சிகள்!

தனுஷின் சைலண்ட் ஆட்டத்தில் வடசென்னை கதைதான் இப்படி ஆனது என்றால், தற்போது இயக்குனர் சிம்புதேவனை தொங்க விட்டதுதான் அந்தோ பரிதாபம் என்கிறார்கள். முதலில் சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற ப்ரீயட் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் தனுஷ்! ஆனால் பரத் பாலா இயக்கத்தில் நடிக்க ஒப்புகொண்ட ‘ மரியான்’ படத்துக்குப் பிறகு நாம் படப்பிடிப்புக்கு கிளம்பலாம்!

மாரீசன், மரியான் ஆகிய தலைப்புகள் ஒன்று போலவே இருப்பதால் தலைப்பை மற்றும் மாற்றிக்கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்புவோம் என்றாராம். ஆனால் கடைசிநேரத்தில் நான் பீரியட் படம் பண்ண இது தருணம் இல்லை என்று நண்பர்கள் சொல்கிறார்கள் அதனால் எனக்கு வேறு நல்ல ஸ்கிரிப்ட் வரும்போது சொல்லுங்கள், அடுத்த ஆண்டு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்றாராம்!

இதனால் சிம்புதேவன் தனுஷ் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு, தனுஷ் பட இயக்குனர் என்ற கம்பீரத்தோடு திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்ததில் மண்னை அள்ளி போட்டு விட்டாராம்! இதனால் தற்போது சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேஷியின் இரண்டாம் பாகத்தை நம்பி இருகிறார் என்கிறார்கள்!

தற்போது தனுஷ் நடித்து வரும் ‘ராஞ்சனா’ ஹிந்தி படத்தைத் தொடர்ந்து அனுராக் காஷ்யாப் கம்பெனிக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க தனுஷ் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்

No comments:

Post a Comment