Monday 30 July 2012

துப்பாக்கி பிரச்சனையால் விஜய்,முருகதாஸ் கவலை.




        விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்பிற்கான சிக்கல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் படக்குழுவினர் கவலையடைந்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் படம் துப்பாக்கி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியில் விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்து வருவதாகவும், அதனால் துப்பாக்கி என்ற பெயரில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குனர் முருகதாஸ் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும், என்று கள்ளத்துப்பாக்கி தயாரிப்பாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு ஏற்கனவே இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 25ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையையும் நீட்டித்து உத்தரவிட்டார்.

துப்பாக்கி படத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தால் தொடர்ந்து படதலைப்பு தொடர்பான பிரச்னைக்கு ஒரு முடிவு எட்டப்படாததால் துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் உள்ளனர்.

No comments:

Post a Comment