Wednesday 1 August 2012

இயக்குனர் ஆகிறார் நடிகை ரோஹினி!



Actress Rohini becomes director!          நடிகை ரோஹினி விரைவில் சினிமா ஒன்றை இயக்கவுள்ளார். வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவை விட்டு விலகியிருந்த ரோஹினிக்கு பல ஆண்டுகளாக சினிமாப்படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். இதையடுத்து ஒரு கதையை எழுதியிருக்கிறார். அப்பாவின் மீசை என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த கதையையே படமாக எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து அப்பாவின் மீசை கதையை டைரக்டர் சேரனிடம் சொல்லியிருக்கிறார்.

கதை சேரனுக்கு பிடித்து விட்டதால், உடனடியாக படமாக எடுக்கும் பணிகளை கவனிக்கும்படி ஆலோசனை கூறியிருக்கிறார். அதோடு படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் உறுதியளித்துள்ளார். படத்தில் நடிக்கப்போகும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

No comments:

Post a Comment