நயன்தாராவுக்காக மனைவியையே பிரபுதேவா விவாகரத்து செய்தது, பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்தே நயன்தாரா இந்துவுக்கு மாறியது என்று எல்லாமே குறுகிய காலத்திற்குள் ஒரு கனவு போல் நடந்தது. ஆனால் இத்தனையும் நடந்தேறிய பிறகு அவர்களுக்கிடையே பிரச்னை என்றொரு கல் விழுந்து அவர்களது காதல், கண்ணாடியாய் நொறுங்கிக்கிடக்கிறது.
இந்த நிலையில், பிரபுதேவா இந்தி படங்களை இயக்கிக்கொண்டிருக்க, நயன்தாராவோ தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒருவர் பற்றி ஒருவர் தங்களது அபிமானிகளிடம் காரசாரமாக புகார்களை அள்ளி இறைத்து வந்தபோதிலும், நேரில் சந்தித்துக்கொள்வதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு தெலுங்கு படப்பிடிப்புக்கு செல்ல சென்னை விமான நிலையத்துக்கு நயன்தாரா சென்றபோது, மும்பையிலிருந்து சென்னை வந்திறங்கிய பிரபுதேவாவும், அவரும் எதிரும் புதிருமாக சந்தித்துக்கொண்டனர். ஆனால் பிரபுதேவாவைவிட கடும் கோபத்தை முகத்தில் காண்பித்த நயன்தாரா, முகத்தை வேறு பக்கமாக திருப்பி வைத்தபடி அவரை கடந்து சென்று விமானத்தில் ஏறினாராம். சற்று தூரம் கடந்து வந்தபடி அவரை திரும்பி பார்த்தபடியே பிரபுதேவாவும் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.
No comments:
Post a Comment