கார்த்தி, அனுஷ்கா, மிலிந்த் சோமன் நடிப்பில் சுராஜ் இயக்கி வரும் படம் 'அலெக்ஸ் பாண்டியன்'. அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கும் 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை மலையாளத்திலும் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எப்போதுமே தங்களது படங்களை விளம்பரப்படுத்தும் வகையில் மிகவும் கவனம் செலுத்தும். தற்போது அந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட 'அட்டகத்தி' படம் இதற்கு ஒரு சான்று.
கார்த்தி நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தினை தெலுங்கில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தான் வெளியிட்டது. விளம்பரப்படுத்தும் வகையில் வித்தியாசப்படுத்தியதில் தெலுங்கில் அப்படம் வரவேற்பை பெற்றது. கார்த்திக்கு அங்கு பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது.
தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தினை தயாரித்து வரும் இந்நிறுவனம் படத்தினை மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறது. எப்போதுமே தமிழ்ப் படங்கள் அங்கு நேரடியாக தமிழில் வெளியாகும். இப்போது, தமிழ் தெரியாத மலையாள மக்களுக்காக 'அலெக்ஸ் பாண்டிய'னை டப்பிங் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறது.
மலையாள டிவி சேனல்கள் மூலம் படத்தினை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகிலும் முறையாக கால் பதிக்க இருக்கிறார் கார்த்தி.
No comments:
Post a Comment