விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்க இருக்கும் படத்தில் அரவிந்த்சாமி நடிக்கப்போவதில்லை என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் அரவிந்த்சாமி கேட்ட சம்பளம்தானாம்.
அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் விஷ்ணுவர்த்தன். இந்த படத்தில் அஜீத்தும் அரவிந்த்சாமியும் இணைந்து நடிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகின. அரவிந்த் சாமியிடம் கதை சொன்ன உடன் திருப்தியடைந்த அவர் உடனே ஒகே சொல்லி விட்டாராம். ஆனால் அவர் கேட்ட சம்பளம்தான் இயக்குநரை மயக்கமடைய வைத்திருக்கிறது. ரெண்டுகோடி கேட்டதுதான் தாமதம் தலை தெறிக்க ஓடிய விஷ்ணுவர்த்தன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். இப்போது அரவிந்த்சாமிக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி நடித்துக்கொண்டிருக்கிறார். சம்பளம் இருபது லட்ச ரூபாய்தானாம்.
No comments:
Post a Comment