"சாருலதா படத்தில், ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ள பிரியாமணி, எந்த படத்திலும் இல்லாத அளவுக்கு, இந்தப் படத்தில் கடுமையாக உழைத்திருப்பதாக சொல்கிறார். "ஸ்பாட்டுக்கு வரும் முன்பே, நிறைய ஹோம் ஒர்க்; வந்த பிறகு, சளைக்காமல் நிறைய டேக் என்று, உடலை வருத்தி நடித்துள்ளேன் என்று சொல்லும் பிரியாமணி, இந்தப் படத்தில், தன் நடிப்புக்கு கட்டாயம் விருது கிடைக்கும் என, எதிர்பார்ப்பதாக கூறுகிறார். ஏற்கனவே, "பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி என்பது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment