அனுஷ்கா ஷூட்டிங்கில் பங்கேற்காததால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படம் தாமதமாகியுள்ளது. இதனால் அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் படக்குழுவினர். அருந்ததீ படம்மூலம் உச்சத்திற்கு சென்ற நடிகை அனுஷ்கா, இப்போது தமிழ், தெலுங்கில் நம்பர்-1 நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தமிழில் தற்போது விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த காலத்தில் ஷூட்டிங்கிற்கு சரியாக வந்து கொண்டு இருந்த அனுஷ்கா இப்போது சரியாக பங்கேற்பது இல்லை. இதனால் அலெக்ஸ் பாண்டியன் படம் தாமதமாகியுள்ளது.
இதுகுறித்து விசாரித்தபோது, இரண்டாம் உலகம் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதனால் கடைசிகட்ட காட்சிகளை முடிக்க கூடுதல் கால்ஷீட் வேண்டும் என்று டைரக்டர் செல்வராகவன், அனுஷ்காவிடம் கேட்டு கொண்டதால், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்தில் பங்கேற்கவில்லையாம். அனுஷ்காவால் தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி கொண்டு இருப்பதால், அவர் மீது ஏக கடுப்பில் இருக்கின்றனர் அலெக்ஸ் பாண்டியன் படக்குழுவினர்.
No comments:
Post a Comment