Friday 27 July 2012

நான் ஈ இயக்குனர் படத்தில் நான் இல்லை. உதயநிதி ஸ்டாலின்




நான் ஈ' படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, இப்போது உலா வரும் செய்திகள் அனைத்திலும் இயக்குனர் ராஜமெளலியின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.


'நான் ஈ' படத்தினை அடுத்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நேரடி தமிழ்ப்படம் பண்ண ராஜமெளலி தயாராகி வருவதாகவும், அதில் உதயநிதியே நாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது " இச்செய்தியில் உண்மையில்லை. நான் ராஜமெளலி சாரை பார்த்து ஒரு வருடம் ஆகிறது.

இன்னும் 'நான் ஈ' படத்தினை நான் பார்க்கவே இல்லை. நான் வெளியிட்ட 'மஹாதீரா' படத்தின் டப்பிங் 'மாவீரன்' இசை வெளியீட்டு விழாவின் போது அவரைச் சந்தித்ததோடு சரி, அதற்கு பிறகு நான் அவரை பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை.

'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தினைத் தொடர்ந்து அடுத்த படம் என்ன என்று பலரும் கேட்கிறார்கள். சுந்தர்.சி சார் விஷால் படம் முடிந்தவுடன் எங்களது நிறுவனத்திற்கு படம் பண்ண இருக்கிறார்.

அக்கதை எனக்கு பிடித்திருந்தால், அதில் நாயகனாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது. எனக்கு சரியாக இருந்தால் மட்டுமே அக்கதையில் நடிப்பேன் இல்லையென்றால் தயாரிக்க மட்டுமே செய்வேன்.

எங்களது நிறுவனம் மூலம் அடுத்து 'நீர்ப்பறவை' வெளிவர இருக்கிறது. அப்படத்தினைத் தொடர்ந்து சுந்தர்.சி, சமுத்திரக்கனி, பிரபு சாலமன் இவர்களது அடுத்த படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. " என்று தெரிவித்தார்.

இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு செய்தி : ராஜமெளலி இயக்கும் அடுத்த தெலுங்கு படத்தின் நாயகன் பிரபாஸ்.

No comments:

Post a Comment